என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓசூர் லாட்ஜில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்தியவர் கைது
- இளம்பெண்களை வைத்து விபசாரம் நடைபெறுவதாக ஓசூர் டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- மசாஜ் சென்டர் என்ற பெயரில் இளம்பெண்களை வைத்து விபசார தொழில் செய்து வந்தது போலீசார் சோதனையில் தெரியவந்தது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள லாட்ஜியில் மசாஜ் சென்டர் ஒன்று இயங்கி வருவதாகவும், ஆயுர்வேத மசாஜ் என்ற பெயரில் அங்கு இளம்பெண்களை வைத்து விபசாரம் நடைபெறுவதாக ஓசூர் டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினார்கள்.
அதில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் இளம்பெண்களை வைத்து விபசார தொழில் செய்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து இளம்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக ஓசூர் முனீஸ்வர் நகர் பகுதியை சேர்ந்த ரதினா(எ) ரத்தினவேணி (35) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
Next Story






