search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Unemployment"

    • வேலையில்லா திண்டாட்டத்தை மத்திய அரசால் மட்டும் சரிசெய்ய முடியாது
    • அனைத்து சமூக, பொருளாதார பிரச்சனைக்கும் அரசு மட்டும் தீர்வு காண வேண்டும் என எதிர்பார்ப்பது தவறானது

    வேலையில்லா திண்டாட்டத்தை மத்திய அரசால் மட்டும் சரிசெய்ய முடியாது. அனைத்து சமூக, பொருளாதார பிரச்சனைக்கும் அரசு மட்டும் தீர்வு காண வேண்டும் என எதிர்பார்ப்பது தவறானது. தனியார் நிறுவனங்கள் தான் பணியமர்த்தலை செய்ய வேண்டும். தனியார் துறையில் வேலைவாய்ப்புகளை பெருக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    அனந்த நாகேஸ்வரனின் கருத்துக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

    "சிறு குறு தொழில் முனைவோருக்கு பதிலாக பெரிய முதலாளிகளுக்கு சலுகை கொடுப்பதிலேயே ஆர்வம் காட்டிக் கொண்டிருந்தால் வேலைவாய்ப்பின்மையை எப்போதுமே சரிசெய்ய முடியாது" என்று பதிவிட்டுள்ளார். 

    • "பணமதிப்பிழப்பு" மற்றும் "சரக்கு மற்றும் சேவை வரி" (GST) சிறு தொழில்களை அழித்து விட்டது
    • வேலைவாய்ப்பின்மை பாகிஸ்தானில் 12 சதவீதம்; இந்தியாவில் 23 சதவீதம் என்றார் ராகுல்

    "இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை" (பாரத் ஜோடோ நியாய் யாத்ரா) எனும் பெயரில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

    அதன் ஒரு பகுதியாக, மத்திய பிரதேச மாநிலத்தின், குவாலியர் (Gwalior) நகரில், ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.

    தனது உரையில், ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்தார்.

    அப்போது அவர் தெரிவித்ததாவது:

    "பணமதிப்பிழப்பு நடவடிக்கை" (demonetization) மற்றும் "சரக்கு மற்றும் சேவை வரி" (GST) ஆகியவை சிறு மற்றும் குறு தொழில்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்.

    இந்தியாவின் சிறு மற்றும் குறு தொழில்களை மோடி அடியோடு அழித்து விட்டார்.

    கடந்த 40 வருடங்களில் இல்லாத அளவு இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை தலைவிரித்தாடுகிறது.

    பாகிஸ்தானை விட 2 மடங்கு வேலைவாய்ப்பின்மை இந்தியாவில் நிலவுகிறது. இங்கு 23 சதவீதம்; அங்கு 12 சதவீதம்தான்.

    வங்காள தேசம் மற்றும் பூடான் ஆகிய நாடுகளை விட அதிகமாக வேலையில்லாத இளைஞர்கள் இங்கு உள்ளனர்.

    இவையனைத்திற்கும் பிரதமர் மோடிதான் காரணம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    குவாலியரில், இந்திய ராணுவத்தின் "அக்னிவீர்" (Agniveer) திட்டத்தில் இணைந்த வீரர்களுடனும், முன்னாள் ராணுவ வீரர்களுடனும் ராகுல் காந்தி கலந்துரையாடினார்.

    பொருளாதார ஏற்றத்தாழ்வு, சமூக அநீதி மற்றும் விவசாயிகளுக்கும் இளைஞர்களுக்கும் எதிராக நடக்கும் அநீதி ஆகிய தீமைகளுக்கு எதிராக போராடும் விதமாகவும், நாடு முழுவதும் பரப்பப்படும் வெறுப்புணர்ச்சிக்கு எதிராகவும் தனது யாத்திரையின் பெயரில் "நியாய்" எனும் வார்த்தை சேர்க்கப்பட்டதாக ராகுல் காந்தி கூறினார்.

    • முதலில் ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியே வருவது ஒரு கனவாக இருக்கிறது.
    • இரட்டை என்ஜின் அரசு என்பது வேலையில்லாதவர்களுக்கு இரட்டை அடி.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறி இருப்பதாவது:-

    உத்தரபிரதேசத்தில் மூன்றில் ஒரு பங்கு இளைஞர்கள் வேலையில்லாத் திண்டாட்டத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 1½ லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் பட்டதாரிகள், முதுநிலைப் பட்டதாரிகள், முனைவர் பட்டம் பெற்றவர்கள் குறைந்த பட்சத் தகுதியுள்ள பதவிகளுக்குக்கூட வரிசையில் நிற்கின்றனர்.

    முதலில் ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியே வருவது ஒரு கனவாக இருக்கிறது.

    ஆட்சேர்ப்பு முடிந்தாலும் கூட கேள்விதாள் கசிந்து விடுகிறது. தேர்வுகள் நடந்தாலும் கூட அதன் முடிவு தெரியாது. நீண்ட காத்திருப்புக்கு பிறகு முடிவு வந்தாலும் பணியில் சேர்வதுதை உறுதி செய்வதற்காக அடிக்கடி கோர்ட்டுக்கு செல்ல வேண்டும்.

    ராணுவத்தில் இருந்து ரயில்வே மற்றும் கல்வியில் இருந்து காவல்துறை வரை ஆட்சேர்ப்புக்காக பல ஆண்டுகளாக காத்திருந்த லட்சக்கணக்கான மாணவர்கள் வயது முதிர்ந்தவர்களாக மாறியுள்ளனர். இந்த விரக்தியின் பிரமைக்குள் சிக்கிய மாணவன் மன உளைச்சலுக்கு ஆளாகி உடைந்து போகிறார். இவையனைத்தும் மன உளைச்சலுக்கு ஆளாகி, அவர் தனது கோரிக்கைகளை முன்வைத்து வீதியில் இறங்கும் போது, காவல்துறையினரிடம் இருந்து தடியடிகளைப் பெறுகிறார். ஒரு மாணவனுக்கு, வேலை என்பது வெறும் வருமான ஆதாரமாக இல்லாமல், அவனது குடும்பத்தின் வாழ்க்கையை மாற்றும் கனவாகவும் இருக்கிறது, இந்தக் கனவு தகர்க்கப்படுவதால், ஒட்டுமொத்த குடும்பத்தின் நம்பிக்கையும் சிதறடிக்கப்படுகிறது.இரட்டை என்ஜின் அரசு என்பது வேலையில்லா தவர்களுக்கு இரட்டை அடி.

    காங்கிரசின் கொள்கைகள் இளைஞர்களின் கனவுகளுக்கு நீதி வழங்கும். அவர்களின் தவத்தை வீண் போக விடமாட்டோம் என்று கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அமெரிக்காவில் 2022 இறுதியில் இருந்தே ஆட்குறைப்பு தொடங்கியது
    • 50 சதவீத ஊதிய குறைப்புக்கு முன்வந்தாலும் பணி கிடைப்பது கடினமாக உள்ளது

    கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக அமெரிக்காவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப மற்றும் மென்பொருள் நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.

    2022 இறுதியில் தொடங்கி, டெஸ்லா, எக்ஸ், மெட்டா, கூகுள், அமேசான், மைக்ரோசாப்ட் உட்பட பல நிறுவனங்கள் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களை நீக்கின.

    உலகெங்கும் இருந்து அந்நிறுவனங்களில் பணியாற்ற சென்ற ஊழியர்களுக்கு வேறு வேலை கிடைக்காததால் விசா காலம் நிறைவடைந்து அமெரிக்காவில் இருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது.

    இந்தியாவிலிருந்தும் அவ்வாறு பணியாற்ற சென்று ஆட்குறைப்பு நடவடிக்கையில் பணியிழந்தவர்களில் பலர் மீண்டும் தாயகம் திரும்பினர்.

    ஆனால், அவர்களுக்கு புது சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    2023ல் இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப மற்றும் மென்பொருள் நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையை தொடங்கி விட்டன.

    இங்கு பணியிழக்கும் ஊழியர்கள் ஊதியம் குறைந்தாலும், வேறு வேலை கிடைத்தால் போதும் எனும் முடிவில் கிடைக்கும் நிறுவனங்களில் உடனடியாக பணியில் சேர்கின்றனர்.

    அமெரிக்காவிலிருந்து வரும் இந்திய ஊழியர்கள் பெற்ற ஊதியத்துடன் ஒப்பிட்டால் இங்கு பணியில் இருப்பவர்களுக்கும், வேலையிழப்பினால் குறைந்த சம்பளத்தில் வேலைக்கு வருபவர்களுக்கும் நிறுவனங்கள் வழங்க வேண்டிய ஊதியம் மிகக் குறைவு.

    எனவே, அங்கிருந்து வருபவர்களுக்கு தகுதி இருந்தும் வேலை கிடைப்பது கடினமாக உள்ளது.

    அமெரிக்காவுடன் ஒப்பிட்டால் தகவல் தொழில்நுட்ப துறையில் காலியிடங்கள் மிக குறைவாக உள்ளதாகவும், ஒரே பணிக்கு 100க்கும் மேற்பட்ட திறமை வாய்ந்த ஊழியர்கள் விண்ணப்பிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளதாகவும் மனிதவள நிபுணர்கள் தெரிவித்தனர்.

    சுமார் 50 சதவீதம் வரை ஊதியத்தை குறைத்து கொள்ள அவர்கள் முன்வந்தாலும், மீண்டும் பணி கிடைப்பதே கடினமாகி வருகிறது.

    அங்கும் வேலை இழந்து, இங்கும் வேலை கிடைக்காமல், பல வருட சேமிப்புகளும் நாளுக்கு நாள் கரைந்து அவர்களின் நிலை நலிவடைந்து வருகிறது.

    2024-ஆம் வருடத்திலும் உலகளாவிய பொருளாதார மந்தநிலை நீடித்தால், மேலும் பல சாஃப்ட்வேர் துறை ஊழியர்கள் பணி இழக்கும் அபாயம் ஏற்படலாம் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

    • அங்கு பட்டம் முடித்தவர்களுக்கு லட்சக்கணக்கில் ஊதியம் கிடைத்து வந்தது
    • 14 மணி நேரம் வேலை செய்தாலும் போதிய வருவாய் ஈட்ட வழியின்றி தவிக்கின்றனர்

    அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள முன்னணி பல்கலைக்கழகங்களை சேர்ந்த கல்லூரிகளில் பட்டம் படித்தவர்களுக்கு உலகின் பல முன்னணி நிறுவனங்களில் லட்சக்கணக்கில் சம்பளம் தரும் வேலைவாய்ப்புகள் கிடைத்து வந்ததனால் அதிக பொருட்செலவையும் பொருட்படுத்தாமல் கல்வி பயில பல இந்திய மாணவ மாணவியர்கள் ஆண்டுதோறும் அங்கு செல்வது வழக்கம்.

    ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களிலிருந்து மட்டும் ஆண்டுதோறும் சுமார் 20 ஆயிரம் மாணவ மாணவியர்கள் கனடாவில் படித்து பட்டம் பெற்று, அங்கேயே வேலை வாய்ப்புகளை பெற செல்கிறார்கள். இவர்கள் பெரும்பாலும் "ஸ்டெம்" (STEM) எனப்படும் விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய துறைகளிலும், வணிக நிர்வாக மேலாண்மை (MBA) துறையிலும் பட்டம் பெற அங்குள்ள பல்கலைக்கழகங்களில் சேர்பவர்கள்.

    இந்நிலையில், கனடாவின் தேசிய புள்ளிவிவர மையம் (National Statistical Agency) மேற்கொண்ட ஒரு ஆய்வின்படி கடந்த ஜனவரி மாதத்திலிருந்தே கனடாவில் வேலை வாய்ப்பு 61.8 சதவீதம் எனும் அளவிற்கு குறைந்துள்ளதாக தெரிகிறது. மேலும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு மிக அதிகம் பேர் வேலை இழந்துள்ளனர்.

    இதன் காரணமாக அங்கு படிக்க சென்ற மாணவர்கள், "ஆட் ஜாப்ஸ்" (odd-jobs) எனப்படும் அதிக திறன் தேவைப்படாத, அதிக ஊதியம் வழங்காத சாதாரண வேலைகளை செய்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக தெரிய வந்துள்ளது.

    தற்போது பட்டம் முடித்த பல இந்திய மாணவர்களுக்கு கனடாவில் உணவகங்கள், மின்னணு சாதன விற்பனை நிலையங்கள், மொபைல் விற்பனை கடைகள், அங்காடிகள் உள்ளிட்ட இடங்களில் குறைந்த வருமானத்தில் வேலை பார்த்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அவர்களில் பலர் ஒரு நாளைக்கு 14 மணி நேரம் வரை வேலை செய்தாலும் வாடகை, உணவு மற்றும் இதர செலவுகளுக்கு போதுமான வருவாய் ஈட்ட முடியாமல் தவிக்கின்றனர்.

    கடும் குளிர் பிரதேச நாடான கனடாவில் வேலைவாய்ப்புகள் குறைவதாலும், பட்டம் பெற பெரும் பணம் செலவழித்து வந்து விட்டதாலும், நாடு முழுவதுமே வேலைவாய்ப்புகள் குறைவதாலும் அவர்கள் இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    • இலங்கை கடற்படையின் அத்துமீறலை கண்டித்து இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதென முடிவு செய்தனர்.
    • ராமேசுவரம் பகுதியில் மட்டும் ரூ.2 கோடி முதல் ரூ.3 கோடி வரை வர்த்தகம் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    ராமேசுவரம்:

    வங்கக்கடலில் மீன் பிடிக்க செல்லும் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, நாகை உள்ளிட்ட தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். எல்லை தாண்டி வந்ததாக கூறி மீனவர்களின் படகுகளையும், மீனவர்களையும் சிறைப்பிடித்து செல்லும் சம்பவம் சமீப காலமாக அதிகரித்துள்ளது.

    அவ்வாறு சிறைப்பிடிக்கப்படும் மீனவர்கள் இலங்கை கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு அங்குள்ள சிறையில் அடைக்கப்படுகிறார்கள். மத்திய, மாநில அரசுகளின் பேச்சுவார்த்தை அடிப்படையில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டபோதிலும், மீனவர்களின் படகுகளை இலங்கை நாட்டுடமையாக்கி வருகிறது.

    இதனால் விடுதலையானபோதும், வெறும் கையுடன் தாயகம் திரும்பும் மீனவர்கள் வாழ்வாதாரம் இழந்து மாற்று தொழிலை தேடி வருகிறார்கள். இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என்ற கோரிக்கை பன்னெடுங்காலமாக நீடித்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் ராமேசுவரத்தில் இருந்து ராமேசுவரம், தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த 1,800-க்கும் மேற்பட்ட மீனவர்கள் 420 விசைப்படகுகளில் மீன்துறை அலுவலக அனுமதியுடன் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    அவர்கள் இந்திய கடல் எல்லையான கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு அருகே வலைகளை விரித்து மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி பாலா, கிரீம்ஸ் ஆகியோருக்கு சொந்தமான படகுகளில் சென்ற 15 மீனவர்களை சிறைப்பிடித்தனர்.

    அவர்கள் பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த மீன்களையும் அபகரித்துக் கொண்டதோடு, மீனவர்களை காங்கேசன்துறை முகாம் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதற்கிடையே மீன்பிடி தடை காலம் முடிந்து ஒரு மாதம் ஆவதற்குள் இரண்டு முறை மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவம் சக மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காலம் காலமாய் நடக்கும் இதுபோன்ற இலங்கை கடற்படையின் அத்துமீறலை கண்டித்து இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதென முடிவு செய்தனர்.

    அதன்படி இன்று ராமேசுவரம், தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த 820 விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதன் காரணமாக 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலையிழந்து உள்ளனர்.

    அதேபோல் மீன்பிடி தொழிலை சார்ந்த ஐஸ் பேக்டரிகள், மீன்கூடை தூக்கும் தொழிலாளர்கள், டீசல் விநியோக நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் என சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியின்றி வீடுகளுக்குள் முடங்கினர்.

    இன்று ஒருநாள் மீனவர்கள் வேலைநிறுத்தம் காரணமாக ராமேசுவரம் பகுதியில் மட்டும் ரூ.2 கோடி முதல் ரூ.3 கோடி வரை வர்த்தகம் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    • தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் செய்திகுறிப்பு வெளியிட்டுள்ளது.
    • வேலையின்மை விகிதம் அதிகம் இருப்பதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

    புதுடெல்லி :

    தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தனியார் நிறுவனம் நடத்திய ஒரு ஆய்வின் அடிப்படையில், 2022-ம் ஆண்டு டிசம்பரில் நாட்டில் வேலையின்மை விகிதம் அதிகம் இருப்பதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. பல தனியார் நிறுவனங்கள் தங்களது சொந்த முறைகளின் அடிப்படையில் ஆய்வுகளை நடத்துகின்றன. அவை பொதுவாக அறிவியல் அல்லது சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிமுறைகளின் அடிப்படையில் இல்லை. மேலும், இந்த நிறுவனங்கள் பயன்படுத்தும் முறையானது, பொதுவாக சார்புநிலையைக் கொண்டுள்ளது. இத்தகைய ஆய்வுமுடிவுகள் கவனமாக பயன்படுத்தப்பட வேண்டும்.

    ''வேலைவாய்ப்பு-வேலையின்மை'' பற்றிய அதிகாரப்பூர்வ தரவுகள், காலமுறை தொழிலாளர் குழு கணக்கெடுப்பின் அடிப்படையில் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தால் வெளியிடப்படுகிறது. சமீபத்திய வருடாந்திர அறிக்கை, 2020-ம் ஆண்டு ஜூலை முதல், 2021-ம் ஆண்டு ஜூன் வரையிலான காலத்துக்கு உரியது.

    2022-ம் ஆண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டு அறிக்கை நகர்ப்புறங்களுக்கான புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தால் வெளியிடப்பட்டது.

    இந்த அறிக்கைகளின்படி, 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கான வேலை வாய்ப்பு விகிதம் 2022-ம் ஆண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் 44.5 சதவீதமாக இருந்தது. 2019-ம் ஆண்டில் இது 43.4 சதவீதமாக இருந்தது.

    வேலையின்மை விகிதம் 2022-ம் ஆண்டின் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் 7.2 சதவீதமாகவும், 2019-ல் அதே காலக்கட்டத்தில் 8.3 சதவீதமாகவும் இருந்தது. எனவே, காலமுறை தொழிலாளர்குழு கணக்கெடுப்பின் தரவுகள், கொரோனா காலத்துக்கு முந்தைய நிலையைவிட உயர்ந்த மட்டத்தில் உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • உத்தரபிரதேசத்தில் ‘சி’ பிரிவு வேலைகளுக்கு 37 லட்சம் பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள்.
    • 40 ஆயிரம் அக்னிவீரர்கள் பணியிடங்களுக்கு 35 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

    புதுடெல்லி

    நாட்டின் வேலையில்லா திண்டாட்ட பிரச்சினைக்கு மத்திய பா.ஜ.க. அரசையும், அதன் கொள்கைகளையும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் தொடர்ந்து சாடி வருகிறது.

    அந்தக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் இது தொடர்பாக டுவிட்டரில் பதிவுகளை வெளியிட்டுள்ளார்.

    அவற்றில் அவர் கூறி இருப்பதாவது:-

    உத்தரபிரதேச மாநிலத்தில 'சி' பிரிவு வேலைகளுக்கு 37 லட்சம் பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள். 40 ஆயிரம் அக்னிவீரர்கள் பணியிடங்களுக்கு 35 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். வேலையில்லாத இளைஞர்களின் வேதனைக்குரலை அரசு காது கொடுத்து கேட்கிறதா?

    நாங்கள் நம்பிக்கையற்ற நிலையில் உள்ளோம். எங்களுக்கு வேறு வழியில்லை.

    கடந்த 8 ஆண்டு கால மத்திய அரசின் பாரம்பரியமாக வேலையில்லா திண்டாட்டம் உள்ளது. வேலையில்லா திண்டாட்டத்தின் அளவு 8 சதவீதமாம். இது குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது.

    செப்டம்பர் மாதத்திற்கான மத்திய நிதி அமைச்சக ஆய்வு அறிக்கை, வேலையில்லா திண்டாட்டம் பற்றி ஒரு வார்த்தைகூட குறிப்பிடவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களுக்கு 3 ஆண்டுகள் உதவித்தொகை வழங்கப்படுவதாக விருதுநகர் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • இதற்கான விண்ணப்பத்தினை WWW.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கல்வித் தகுதியினை பதிவு செய்து வேலைவாய்ப்பிற்காக காத்துக் கொண்டிருக்கும் பதிவுதாரர்களுக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். இந்த திட்டத்தின்படி தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு 45 வயது மிகாமலும், இதர வகுப்பினர் 40 வயது மிகாமலும் இருக்க வேண்டும். தினசரி பள்ளி, கல்லூரி சென்று பயில்பவராக இருக்க கூடாது. சுய தொழில் செய்பவராகவோ இருக்க கூடாது. தங்களது பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கினை தொடங்கி இருக்க வேண்டும்.

    பொது பதிவுதாரர்களுக்கு கல்வித் தகுதியினை பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவடைந்திருக்க வேண்டும்.

    குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். 10-ம் வகுப்பு தோல்வியுற்றோர் ரூ.200, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர் ரூ.300, பிளஸ்-2 மற்றும் பட்டயப்படிப்பு ரூ.400, பட்டப்படிப்பு ரூ.600 என்ற அளவில் மாதந்தோறும் உதவித் தொகை வழங்கப்படும்.

    இதற்கான விண்ணப்பத்தினை பொது பதிவு தாரர்கள் நேரிலோ, இந்த அலுவலகத்தில் பெற்றோ அல்லது WWW.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து வருவாய் ஆய்வாளரிடம் கையொப்பம் பெற்று வேலைவாய்ப்பு அடையாள அட்டை, அனைத்து அசல் சான்றுகள், ஆதார் அட்டை, குடும்ப அட்டை மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்குப்புத்தகம் ஆகியவற்றுடன் அலுவலக வேலைநாளில் விண்ணப்பத்தினை விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அளிக்க வேண்டும்.

    அனைத்துப் பிரிவு மாற்றுத்திறனாளி பதிவுதாரர்களுக்கு கல்வித் தகுதியினை பதிவு செய்து ஓராண்டு நிறைவடைந்திருந்தால் போதுமானது. மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். உதவித் தொகை பெற்றால் வேலைவாய்ப்பு எந்தவிதத்திலும் பாதிக்கப்படாது.

    மேற்கண்ட உதவித் தொகை காலாண்டு தோறும் கணக்கீடு செய்து நேரடியாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பெரும்பாலானவர்களுக்கு 100 நாட்கள் வேலை உத்தரவாதம் செய்யவில்லை.
    • நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், எவ்வித வருமானமும் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

    மடத்துக்குளம்,

    மடத்துக்குளம் ஒன்றிய பி.டி.ஓ., விடம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், தாலுகா செயலாளர் ஆறுமுகம் உள்ளிட்டோர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    ஊராட்சியில் கடந்த சில மாதங்களாக தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், தொழிலாளர்களுக்கு வேலை வழங்கப்படவில்லை. கடந்த நிதியாண்டிலும் பெரும்பாலானவர்களுக்கு 100 நாட்கள் வேலை உத்தரவாதம் செய்யவில்லை.

    நடப்பு நிதியாண்டிலும் வேலை மறுக்கப்பட்டு வருகிறது.இதனால் திட்ட சம்பளத்தைவாழ்வாதாரமாக கொண்டுள்ள நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், எவ்வித வருமானமும் இல்லாமல் தவித்து வருகின்றனர். இது குறித்து ஆய்வு செய்து, திட்ட விதிகளின்படி, தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலை வழங்க வேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் முந்தைய கணக்கெடுப்பின்படி 2.2 சதவீதமாக இருந்த வேலை வாய்ப்பின்மை தற்போது 7.6 சதவீதமாக அதிகரித்து உள்ளது. #Unemployment
    புதுடெல்லி:

    மத்திய அரசு அமைப்பான தேசிய மாதிரி கணக்கெடுப்பு அமைப்பு நாட்டில் தற்போது நிலவும் வேலை வாய்ப்பின்மை பற்றி புதிதாக கணக்கெடுப்பு நடத்தி உள்ளது.

    இதற்கு முன்பு 2011-12-ல் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டு இருந்தது. இப்போது 6 ஆண்டுக்கு பிறகு 2017-18 நிதி ஆண்டில் கணிப்பு நடத்தப்பட்டு இருக்கிறது.

    இதில் தேசிய அளவிலும் ஒவ்வொரு மாநில அளவிலும் வேலை வாய்ப்பின்மை மிகவும் அதிகரித்து இருப்பது தெரிய வந்துள்ளது.

    தேசிய அளவில் 6 ஆண்டுக்கு முன்பு வேலை வாய்ப்பின்மை 2.3 சதவீதமாக இருந்தது. அது தற்போது 6.1 சதவீதமாக அதிகரித்து உள்ளது.



    தமிழ்நாட்டில் முந்தைய கணக்கெடுப்பின்படி வேலை வாய்ப்பின்மை 2.2 சதவீதமாக இருந்தது. அது தற்போது 7.6 சதவீதமாக அதிகரித்து உள்ளது. அதாவது முந்தைய அளவை விட 5.4 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.

    நாட்டிலேயே அதிக பட்சமாக கேரள மாநிலத்தில் தான் வேலை வாய்ப்பின்மை மிக அதிகமாக உள்ளது.

    அங்கு 6 ஆண்டுக்கு முன்பு இதன் சதவீதம் 6.7 ஆக இருந்தது. இப்போது 11.4 சதவீதமாக அதிகரித்து இருக்கிறது.

    அதற்கு அடுத்த இடத்தில் அரியானா உள்ளது. அங்கு 2.8 சதவீதமாக இருந்த வேலை வாய்ப்பின்மை இப்போது 8.6 சதவீதமாக அதிகரித்து உள்ளது.

    வேலைவாய்ப்பின்மை அதிகம் இல்லாத மாநிலங்களில் சத்தீஸ்கர் முதலிடத்தில் இருக்கிறது. அங்கு 1.5 சதவீதமாக இருந்த வேலை வாய்ப்பின்மை இப்போது 3.3 சதவீதமாக இருக்கிறது.

    அதேபோல மராட்டிய மாநிலத்தில் 1.0 சதவீதமாக இருந்த வேலை வாய்ப்பின்மை இப்போது 4.5 சதவீதமாக இருக்கிறது. #Unemployment
    ×