என் மலர்

    நீங்கள் தேடியது "strike"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஜெயங்கொண்டம் அருகே குடிநீர் வினியோகம் செய்யப்படாததை கண்டித்து பெண்கள் மறியலில் ஈடுபட்டனர்
    • மறியல் காரணமாக அப்பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே விருத்தாச்சலம்-கும்பகோணம் வரை சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் கல்லாத்தூர் மெயின் ரோட்டு தெருவில் உள்ள குடிநீர் குழாய் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் கடந்த சில மாதங்களாக அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதையடுத்து அப்பகுதி பெண்கள் தொலைதூரம் சென்று குடங்களில் தண்ணீர் பிடித்து பயன்படுத்தி வருகிறார்கள். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் காலிக்குடங்களுடன் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் சப்-இன்ஸ்பெக்டர் நடேசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், சமாதானம் அடைந்த பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தொழிற்பேட்டையில் உள்ள சிறு, குறு நிறுவனங்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
    • பீக் ஹவர்ஸ் நேரங்களில் கூடுதல் மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது

    நெல்லை:

    தமிழகம் முழுவதும் நிலை மின் கட்டண உயர்வை திரும்ப பெற கோரி சிறு,குறு தொழிலாளர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    நெல்லை மாவட்டம்

    நெல்லை மாவட்டத்தில் பேட்டை தொழிற்பேட்டை யில் உள்ள சிறு, குறு நிறுவனங்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    இதேபோல் மாவட்டம் முழுவதும் 200 சிறு,குறு தொழிற்சாலைகள் இயங்க வில்லை. இதனால் சுமார் ரூ.10 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நெல்லை மாவட்ட சிறு,குறு தொழிற்சங்க துணைத் தலைவர் சுந்தரேசன் கூறும்போது, கடந்த ஆண்டை விட தற்போது நிலை கட்டணம் 410 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.மேலும் ' பீக் ஹவர்ஸ்' நேரங்களில் கூடுதல் மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் எங்களது வாழ்வா தாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

    திரும்ப பெற வேண்டும்

    நிலை கட்டணத்தை திருப்பபெறகோரி தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் தொழிற்சாலைகள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் 3 லட்சம் தொழிளார்கள் பாதிக்கப்பட்டுள்னர் என்றார்.

    இதேபோல் தூத்துக்குடி மாவட்டத்திலும் 500 சிறு,குறு தொழிற்சாலைகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கும் பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப் பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தமிழகத்தில் தொழில் நிறுவனங்களுக்கு சுமார் 430 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ள மின்சாரக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.
    • பீக் ஹவர் மின் கட்டணம் உயர்வை ரத்து செய்ய வேண்டும்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்க தலைவர் கோஸ்டல் இளங்கோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    430 சதவீதம் உயர்வு

    தமிழகத்தில் தொழில் நிறுவனங்களுக்கு சுமார் 430 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ள மின்சாரக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். பீக் ஹவர் மின் கட்டணம் உயர்வை ரத்து செய்ய வேண்டும்.

    சோலார் மேற்கூரை கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். வெல்டிங் உள்ளிட்ட மின் இணைப்பு களுக்கு டேரிப் மாற்றம் செய்து தர வேண்டும்.

    மல்டி இயர் டேரிப் கட்டணத்தை ரத்து செய்து குறைந்தபட்சம் 2 ஆண்டுகளுக்கு மின் கட்டணம் உயர்வை கைவிட வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி நாளை 25-ந் தேதி தமிழகம் முழுவதும் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு தமிழ்நாடு மின் நுகர்வோர் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

    இதற்கு நாமக்கல் மாவட்ட சிறு, குறுந்தொ ழில்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

    கடையடைப்பு

    இதையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் நாளை நடைபெறும் வேலை நிறுத்த போராட்டத்தில் சுமார் 2,500-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் கலந்துகொண்டு கடை யடைப்பு செய்ய உள்ளனர்.

    நாமக்கல் மாவட்ட பாடி பில்டர்கள் சங்கம், கண்ணாடி கடை அசோசி யேசன், சேகோ பேக்டரி உரிமையாளர்கள் சங்கம், தேங்காய் நார் உற்பத்தியாளர்கள் சங்கம் உள்ளிட்ட சுமார் 2,500 சிறு, குறந்தொழில்கள் சங்கத்தினர் தங்கள் நிறுவனங்களை நாளை ஒரு நாள் மூடி வைத்து போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

    இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திருப்பூர்,கோவை மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட ஓ.இ.மில்கள் இயங்கி வருகின்றன.
    • மின் நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்யப்படவுள்ளது

    மங்கலம்,செப்.24-

    திருப்பூர், கோவை மாவட்ட சிறு ஓ.இ.ஸ்பின்னிங் மில் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ரகுபதி கூறுகையில்,

    திருப்பூர்,கோவை மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட ஓ.இ.மில்கள் இயங்கி வருகின்றன. ஒரு நாளைக்கு ரூ.25கோடி மதிப்பிலான நூல்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த 12 மாதங்களுக்கு முன்பு உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி நாளை 25-ந்தேதி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழ்நாடு தொழில்முறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்யப்படவுள்ளது.

    இந்த ஒருநாள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் திருப்பூர்,கோவை மாவட்ட ஓ.இ.ஸ்பின்னிங் மில் சங்கம் ஆதரவு தெரிவித்து வேலை நிறுத்தப்போராட்டத்தில் பங்கேற்கிறது.

    தமிழக முதல்வர் ஓ.இ. மில்களுக்கு உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை திரும்ப பெற்று, தமிழகம் முழுவதும் உள்ள சிறு ஓ.இ.மில் நூற்பாலைகளை பாதுகாத்திட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பொதுப்பாதையை தனிநபர் அடைப்பதாக கூறி அகரம்சிகூர் அருகே குடியிருப்புவாசிகள் சாலை மறியல்
    • சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

    அகரம்சீகூர்,

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், மங்களமேடு அருகே உள்ள வடக்கலூர் காலனி தெருவை சேர்ந்தவர் தியாகராஜன் மகன் இளையராஜா(வயது 30). இவர் தனதுக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டி உள்ளார். இந்த வீட்டின் பக்கத்தில் உள்ள காலி இடத்தின் வழியாக இவரது வீட்டின் பின் பகுதியில் சுமார் 8 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்கள் தங்களது வீட்டிற்கு சென்றுவர பொதுபாதையாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது இளையராஜா வசிக்கும் வீடு அவருக்கு போதிய அளவில் இல்லை என்பதால் வீட்டை விரிவு படுத்துவதற்காக பணிகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.வீட்டை விரிவுபடுத்தினால் 8 குடும்பத்தினர் வசித்து வரும் வீடுகளுக்கு சென்ற வர பாதை வசதி இருக்காது. இதன் காரணமாக அவர்கள் வடக்கலூர்-வேப்பூர் சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மங்களமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சாலை மறியல் போராட்டத்தால் அரை மணி நேரத்திற்கும் மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மத்திய மற்றும் மகாராஷ்டிர அரசுகளின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து வெங்காய வியாபாரிகள் போராட்டத்தை தள்ளிவைத்தனர்.
    • விவசாயிகள் ஏலத்திற்காக கொண்டு வந்த வெங்காய மூட்டைகள் சந்தைகளில் தேங்கி கிடந்தன.

    மும்பை:

    நாட்டில் வெங்காய பற்றாக்குறையை சமாளிக்க, அதன் ஏற்றுமதிக்கு 40 சதவீத வரியை மத்திய அரசு கடந்த மாதம் விதித்தது. இதற்கு வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள வெங்காய சந்தைகளில் ஏலம் நிறுத்தப்பட்டது. இந்த மாவட்டத்தில் உள்ள லசல்காவ் சந்தை இந்திய அளவில் பெரிய வெங்காய சந்தையாகும்.

    மத்திய மற்றும் மகாராஷ்டிர அரசுகளின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து வெங்காய வியாபாரிகள் போராட்டத்தை தள்ளிவைத்தனர். இந்த நிலையில் இதுவரை தங்களது கோரிக்கை நிறைவேறாததை கண்டித்து நாசிக் மாவட்ட சந்தைகளில் வெங்காய ஏலம் நேற்று முன்தினம் மீண்டும் நிறுத்தப்பட்டது. இந்த போராட்டம் 2-வது நாளாக நேற்றும் நீடித்தது. இதனால் விவசாயிகள் ஏலத்திற்காக கொண்டு வந்த வெங்காய மூட்டைகள் சந்தைகளில் தேங்கி கிடந்தன.

    வியாபாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக வெங்காய வினியோகம் பாதிக்கப்பட்டு சில்லறை கடைகளில் விலை உயர்வு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் நாசிக் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், அனைத்து விவசாய விளைபொருள் சந்தை குழுக்களுக்கு (ஏ.பி.எம்.சி) உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அதில், வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் வியாபாரிகளின் லைசென்ஸ் ரத்து அல்லது இடைநீக்கம் செய்யப்படும் என்று எச்சரித்து உள்ளார்.

    இதுபற்றி நாசிக் மாவட்ட பொறுப்பு மந்திரி அப்துல் சத்தார் கூறுகையில், "20-ந் தேதி நடத்திய பேச்சுவார்த்தையில் வியாபாரிகள் மற்றும் தரகர்கள் பிடிவாதமாக இருந்தனர். இதன் காரணமாக உடனடி சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தகாத வார்த்தையால் திட்டிய ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
    • பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் அருகே செங்குணம் காலனி தெருவை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 46). இவர் செங்குணம் கிராம ஊராட்சியில் செயலாளராக பணி புரிந்து வருகிறார். கோவிந்தன் நேற்று மாலை பெரம்பலூர்-அரியலூர் நெடுஞ்சாலையில் அருமடல் பிரிவு சாலையில் உள்ள மளிகை கடை அருகே மது அருந்தி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

    இதனை கண்ட மளிகை கடையின் உரிமையாளரின் மனைவி கோவிந்தனை வேறு இடத்துக்கு சென்று மது அருந்துமாறு கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த கோவிந்தன் அந்த பெண்ணை தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண் இது குறித்து அக்கம், பக்கத்தில் வசிப்பவர்களிடம் கூறினார்.

    சாலை மறியல் பெண்ணை திட்டிய ஊராட்சி செயலாளர் கோவிந்தன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செங்குணம் கிராம ஊராட்சிக்குட்பட்ட முத்து நகர், முல்லை நகரை சோ்ந்த பொதுமக்கள் பெரம்பலூர்-அரியலூா் நெடுஞ்சாலையில் அருமடல் பிரிவு சாலை அருகே சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அந்தப்பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனர். அப்போது இது தொடர்பாக ஊராட்சி செயலாளர் மீது போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்று கூறியதை தொடர்ந்து அவா்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் மறியல் போராட்டம் நடந்தது.
    • விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.

    கடலூர்:

    வடலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. பண்ருட்டி சாலை ெரயில்வே கேட் அருகே உள்ள ஸ்டேட் பாங்க் எதிரே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மறியல் போராட்டம் குறிஞ்சிப்பாடி வட்டச் செயலாளர் ஹரி கிருஷ்ணன் தலைமையில் நடந்தது.

    இந்த போராட்டத்தில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். பெட்ரோல் ,டீசல் விலையை குறைக்க வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். இந்தி திணிப்பை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பியும் துண்டு பிரசுரங்களை வழங்கியும் மறியல் செய்தனர். இதில் ராஜேந்திரன், சுப்பிரமணி, பன்னீர்செல்வம், ராஜி உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் போலீசார் அவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்கு அனுப்பி வைத்தனர். நெய்வேலி டி.எஸ்.பி.ராஜ்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஒன்றிய பணி மேற்பார்வையாளர்களுக்கு மதிப்பீடு உச்சவரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும்.
    • கணினி உதவியாளர்களுக்கு பணிவரன் முறைப்படுத்த வேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழி, கொள்ளிடத்தில் ஊரக வளர்ச்சித்துறையினர் ஆர்ப்பாட்டத்தால் நேற்று ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.

    ஊரக வளர்ச்சித் துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை உள்ளிட்ட அரசு ஊழியர்க ளுக்கு வழங்கப்படும் அனைத்து உரிமைகளையும் ஊராட்சி செயலாளர்களுக்கு வழங்க வேண்டும், சட்டமன்ற விதிகளை உடனே வெளியிட வேண்டும், கணினி உதவியாளர்கள் அனைவருக்கும் பணிவரன் முறைப்படுத்த வேண்டும், வரையறுக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட ஊதியத்தினை மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியாக வழங்க வேண்டும், அனைத்து நிலை பதிவு உயர்வுகளையும் உரிய காலத்தில் வழங்க வேண்டும், ஒன்றிய பணி மேற்பார்வையாளர்களுக்கு மதிப்பீடு உச்சவரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும்,

    ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் மீது மேற்கொள்ள ப்படும் ஒழுங்கு நடவடிக்கை களை கைவிட வேண்டும், அரசாணை எண் 54 திருத்தம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை முதல் வேலை நிறுத்த போராட்டம் செய்வ தாக அறிவித்திருந்தனர்.

    அதன்படி நேற்று சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள், கணினி உதவியாளர்கள் உள்ளிட்டோர் பணிக்கு வராததால் அன்றாட ஊராட்சி ஒன்றிய பணிகள் பாதிக்கப்பட்டது.

    இதேபோல் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்திலும் அலுவல ர்கள்,ஊழியர்கள் பணிக்கு வராததால் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சிவகங்கையில் அனைத்து கட்சி சார்பில் கடையடைப்பு-ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • ரெயில் நிலையத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சிவகங்கை

    சிவகங்கையில் அனைத்து கட்சி நிர்வாகிகள் கூட்டம் நகர்மன்றத் தலைவர் துரை ஆனந்த் தலைமையில் நடந்தது. இதில் பல்வேறு அரசியல் கட்சியினர், வர்த்தக சங்க பிரதிநிதிகள், பொதுநல அமைப்பினர், கவுன்சி லர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை மாவட்டத்தில் ரெயில்வே கோரிக்கைகள் தொடர்பாக 30 ஆண்டு களாக மனு கொடுத்தும் ரெயில்வே நிர்வாகம் அதனை நிறைவேற்ற செவி சாய்க்காமல் உள்ளது. மாவட்டத்தின் தலைநகராக உள்ள சிவகங்கையை கடந்து செல்லும் 11 ரெயில் களில் ஒரு சிலவற்றை தவிர மற்ற ரெயில்கள் நிலையத் தில் நிறுத்தப்படுவதில்லை. இதனால் வெளியூர்களுக்கு செல்லும் பொதுமக்கள் கடும் அவதியடைகின்றனர்.

    சிவகங்கை ரெயில் நிலையத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். காரைக்குடி வரை மட்டும் இயக்கப்பட்டு வரும் பல்லவன் ரெயிலை சிவகங்கை, மானாமதுரை வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தியும் ரெயில்வே நிர்வாகம் கண்டு கொள்ள வில்லை.

    இதை கண்டித்தும், ரெயில்வே தொடர்பான கோரிக்கை களை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும், சிவகங்கை நகரில் வருகிற 23-ந்தே தி சனி க்கி ழமை அனை த்துக் கட்சி சார்பில் கடை யடைப்பு போராட்டம், ரெயில் மறியல் நடத்துவது என ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்ப ட்டது. இதற்கு வர்த்தக சங்கத்தினர், வியா பாரிகள், பொது மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram