என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Strike"

    ஆலைகள் மூடப்பட்டதால் ரூ.500 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது என கம்பி மத்தாப்பு தயாரிப்பாளர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.
    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சாத்தூர், வெம்பக்கோட்டை பகுதியில் 1,070 பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் நாக்பூர் உரிமம் பெற்ற ஸ்பார்க்ளர் எனப்படும் கம்பி மத்தாப்பு உற்பத்தி ஆலைகள் 100 இயங்கி வருகின்றன. கம்பி மத்தாப்பு எலக்ட்ரிக், கலர், கிரீன், ரெட் என 4 விதமான மத்தாப்புகள் தயாரிக்கப்படுகின்றது.

    இதில் ரெட் தவிர மற்ற மூன்றும் பேரியம் நைட்ரேட் பயன்படுத்திதான் தயாரிக்க முடியும். பட்டாசு தயாரிப்பில் பேரியம் நைட்ரேட் பயன்படுத்தக்கூடாது என சுப்ரீம் கோர்ட் இடைக்காலத் தீர்ப்பு அளித்துள்ளது.

    கம்பி மத்தாப்பு ஆலைகளில் ரெட் எனப்படும் மத்தாப்பு மட்டுமே தயாரிக்கப்பட்டது. இதனை தயாரிக்க ஸ்ட்ரான்சியம் நைட்ரேட் என்ற சிவப்பு உப்பு பயன்படுத்தப்பட்டது. இதில் 2 சதவீதம் பேரியம் நைட்ரேட் கலந்து இருப்பதாக கூறி மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் கம்பி மத்தாப்பு ஆலைகளில் ஆய்வு செய்து உரிமத்தை ரத்து செய்தனர் .

    இதனால் விரக்தி அடைந்த கம்பி மத்தாப்பு தயாரிப்பாளர்கள் ஏப்ரல் 2-ந்தேதி முதல் ஆலைகளை மூடினர். 45 நாட்களுக்கு மேலாகியும் கம்பி மத்தாப்பு ஆலைகள் இயங்கவில்லை. இந்த தொடர் வேலைநிறுத்தம் காரணமாக ரூ.500 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து கம்பி மத்தாப்பு தயாரிப்பாளர்கள் கூறுகையில், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி பட்டாசு தயாரிப்பில் பேரியம் நைட்ரேட் பயன்படுத்தக்கூடாது . கம்பி மத்தாப்பு தயாரிப்பில் பேரியம் நைட்ரேட் பயன்படுத்தக்கூடாது என எந்த இடத்திலும் கூறவில்லை.

    சிவப்பு உப்பை பயன்படுத்தி ஒரு வகை மத்தாப்பு மட்டும் தயாரித்தாலும், பெசோ அதிகாரிகள் ஆலையின் உரிமைத்தை ரத்து செய்கின்றனர். இந்தியாவில் 95 சதவீதம் பட்டாசுகள் சிவகாசியில் உற்பத்தி செய்யப்படுகின்றது. ஆனால் கம்பி மத்தாப்பு உற்பத்தி தடை செய்யப்பட்டுள்ளது .

    ஆனால் ஜார்கண்ட், மகாராஷ்டிரா, அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் எந்தவித கெடுபிடி இல்லாமல் கம்பி மத்தாப்பு உற்பத்தி செய்யப்படுகின்றது.

    இதனால் சிவகாசி பட்டாசு வியாபாரிகள் வெளிமாநிலங்களில் கம்பி மத்தாப்புக்கு ஆர்டர் கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆலைகள் மூடப்பட்டதால் ரூ.500 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது என கம்பி மத்தாப்பு தயாரிப்பாளர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.
    தூய்மை பணியாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக, மாநகரின் பல்வேறு இடங்களில் குப்பை அகற்றும் பணி நேற்று முதல் நடக்கவில்லை.
    மதுரை:

    மதுரை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் மற்றும் பொறியியல் பிரிவு பணியாளர்கள் பல்வேறு கோரிக்ககைளை வலியுறுத்தி வந்த நிலையில் நேற்று காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினார்கள்.

    மாநகராட்சி பொறியியல் பிரிவு தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு சுகாதார பணியாளர்கள் முன்னேற்ற சங்கம், துப்புரவு தொழிலாளர்கள் மேம்பாட்டு சங்கம் ஆகிய 3 சங்கங்களின் ‘தினக்கூலி தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும், நிரந்தர பணியாளர்களுக்கு 7-வது ஊதியக்குழு பணப்பலன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட 28 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை தொடங்கினர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை மற்றும் பொறியியல் பிரிவு பணியாளர்கள் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே மேலவாசலில் உள்ள தூய்மை பணியாளர் குடியிருப்பு வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏற்கனவே நடந்த 3 கட்ட பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததையடுத்து காலவரையற்ற போராட்டத்தை தொடங்கினர்.

    அவர்களிடம் நேற்றும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அதிலும் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் தூய்மை மற்றும் பொறியியல் பிரிவு பணியாளர்களின் போராட்டம் இன்று 2-வது நாளாக நீடித்தது. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் நேற்றை போன்றே இன்றும் மேலவாசலில் உள்ள தூய்மை பணியாளர் குடியிருப்பு வளாகத்தில் மொத்தமாக அமர்ந்திருந்தனர்.

    இந்த போராட்டத்தில் மாநகராட்சி தொழிலாளர் சங்க மாவட்ட பொது செயலாளர் பாலசுப்பிரமணியன், தலைவர் மீனாட்சிசுந்தரம், பொருளாளர் கருப்பசாமி, தமிழ்நாடு சுகாதார பணியாளர் முன்னேற்ற சங்க மாநில பொதுச்செயலாளர் அம்சராஜ், மாநகர துப்புரவு தொழிலாளர் மேம்பாட்டு தொழிற்சங்க நிர்வாகி பூமிநாதன் உள்பட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றனர்.

    மதுரை மாநகராட்சியில் மொத்தம் 100 வார்டுகள் உள்ளன. 17 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். மாநகராட்சி பகுதியில் நாள் ஒன்றுக்கு 7 ஆயிரம் டன் குப்பைகள் அகற்றப்பட்டு வந்தன. இந்த நிலையில் தூய்மை பணியாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக, மாநகரின் பல்வேறு இடங்களில் குப்பை அகற்றும் பணி நேற்று முதல் நடக்கவில்லை.

    மதுரை மாநகரம் முழுவதும் குப்பை தொட்டிகள் நிரம்பி வழிகின்றன. குப்பை தொட்டிகள் இருக்கும் பகுதி முழுவதுமாக குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. மாநகர பகுதியில் எங்கு பார்த்தாலும் குப்பை கூளமாக காட்சியளிக்கிறது. மேலும் பல இடங்களில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு சாலைகளில் கழிவு நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    இதனால் மாநகர பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. குப்பைகள் தேங்கி கிடக்கும் இடத்தில் கடும் துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால் தூய்மை மற்றும் பொறியியல் பிரிவு பணயாளர்களின் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரும் நடவடிக்கைகளில் மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இதன் ஒரு பகுதியாக மேயர் இந்திராணி அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், ‘மதுரை மாநகராட்சியுடன் சமீ பத்தில் இணைக்கப்பட்ட கிராம பஞ்சாயத்துகளில் வேலை பார்க்கும் தூய்மை பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படும். ஏழாவது ஊதியக்குழுவின் நிலுவைத் தொகை வழங்கப்படும். கருணை அடிப்படையில் பணிநியமனம் தரப்படும். மாநகராட்சி பணியாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் மாநகர அதிகாரிகள் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது. 

    நெல்லையில் பெட்ரோலிய டீலர்கள் சங்கத்தினர் ஒரு நாள் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    நெல்லை:

    நெல்லை ஊருடையார்புரத்தில் 2 பெட்ரோலிய நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்களுக்கு பெட்ரோல், டீசல் அனுப்பப்பட்டு வருகிறது.

    தினமும் இங்கிருந்து 200 லாரிகளில் 20 லட்சம் லிட்டர் பெட்ரோல், டீசல்கள் கொண்டு செல்லப்படுகிறது.

    இந்நிலையில் தங்களது கமிஷன் தொகை கடந்த 2017-ம் ஆண்டுக்கு பின்னர் உயர்த்தப்படவில்லை என கூறி இன்று கொள்முதல் நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்திற்கு பெட்ரோலிய டீலர் அசோசி யேசன் சங்க தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.

    மாநில செயற்குழு உறுப்பினர் நம்பிசாமி, மாவட்ட நிர்வாகிகள் கண்ணன், இளங்கோ, உத்தண்ட ராமன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அப்போது அவர்கள் கூறியதாவது:-

    தினமும் நெல்லையில் இருந்து 5 மாவட்டங்களுக்கு 20 லட்சம் லிட்டர் பெட்ரோல், டீசல் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

    கடந்த 2017-க்கு பிறகு இரு மடங்கு பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. ஆனால் டீலர்களுக்கான கமிஷன் தொகை உயர்த்தப்ப–டாமல் அப்படியே உள்ளது.

    பெட்ரோல் லிட்டருக்கு 2.25 பைசாவும், டீசலுக்கு 1.85 பைசாவும் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு சேவை வரியை 3 மடங்கு உயர்த்தி உள்ளது. ஆனால் எங்களுக்கு கமிஷன் தொகை உயர்த்தப்பட வில்லை.

    எனவே டீலருக்கான கமிஷன் தொகையை உடனே உயர்த்தி வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    கொள்முதல் நிறுத்த போராட்டம் காரணமாக நெல்லை ஸ்ரீபுரத்தில் 200 லாரிகள் சாலையில் இன்று வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தது.
    சேலம் மாவட்டத்தில் கூட்டுறவு வங்கி பணியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவித்துள்ளனர்.
    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கூட்டுறவு வங்கி பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர்.
     
    தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சேலம் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் ஏழை, எளிய விவசாயிகளுக்கு தொடர்ந்து பயிர் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்கள் அரசு வழிகாட்டுதல் படி வழங்கப்படுகிறது. 
     
    இந்த நிலையில் பயிர் கடன்கள் தள்ளுபடி செய்து அரசு உத்தரவிட்டது. 
    அதன்படி கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்கள் பரிந்துரை செய்தனர். சில கடன்கள் தள்ளுபடிக்கு பொருந்தாது என சரிபார்ப்பு அலுவலர்களால் அறிக்கை சமர்பிக்கப்பட்டது. 

    தற்போது பணி ஓய்வு பெற உள்ள மற்றும் பணிபுரிந்து வரும் பல ஊழியர்களுக்கு, பயிர் கடன் தள்ளுபடி திட்டத்தில் விதிமீறல் என்ற குற்றச்சாட்டு ஆணை வழங்கப்பட்டு உள்ளது. 

    இதனால் பணியாளர்கள் மன உளைச்சலுடன் பணிபுரிந்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஊழியர்கள் மீதான நடவடிக்கைகளை ரத்து செய்ய வலியுறுத்தி நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    • தூத்துக்குடி தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் செல்வகுமார் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
    • ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களின் காத்திருப்பு போராட்டத்தை வாபஸ் பெற்று பணிக்கு திரும்பினர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் என்.டி.பி.எல். அனல்மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யு) சார்பில் கடந்த 2 நாட்களாக அனல்மின் நிலையம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதைத்தொடர்ந்து தூத்துக்குடி தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் செல்வகுமார் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. சி.ஐ.டி.யு. சார்பில் நிர்வாகிகள் ரசல், பேச்சுமுத்து, அப்பாத்துரை, கணபதிசுரேஷ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    பேச்சுவார்த்தையில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகள் உடனடியாக செய்து கொடுக்கவும், ஓய்வூதியம் தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நடந்து வருவதால் அது தொடர்பாக பின்னர் முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    இதில் உடன்பாடு ஏற்பட்டதால் ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களின் காத்திருப்பு போராட்டத்தை வாபஸ் பெற்று பணிக்கு திரும்பினர்.

    • 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டுள்ளனர்
    • 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களை நடத்தினர்.

    கோவை:

    கோவை மாநகராட்சியில் பணியாற்றி வரும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இந்நிலையில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனிடையே தூய்மை பணியாளர்களின் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தால் 2 நாட்களில் மட்டும் 1000 ஆயிரம் டன் குப்பைகள் தேக்கம் அடைந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் குப்பை தொட்டிகள் பல இடங்களில் நிரம்பி குப்பைகள் தேக்கத்தால் துர்நாற்றம் வீசியது. பின்னர் மாநகராட்சி கமிஷனர் பிரதாப் மற்றும் கலெக்டர் சமீரன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து கடந்த 4-ந் தேதி முதல் மீண்டும் பணிக்கு சென்றனர்.

    ஆனால் பேச்சுவார்த்தை யில் கூறியதை போன்று கோவை மாநகராட்சியின் மாமன்ற கூட்டத்தில் தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியா கவில்லை. தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. இதனை அடுத்து தீபாவளி முடிந்த அடுத்த நாள் அதாவாது இன்று (25-ந் தேதி) முதல் மீண்டும் தொடர் வேலை நிறுத்தப்போரா ட்டத்தில் ஈடுபட போவதாக தூய்மை பணியாளர்கள் அறிவித்தனர். இதனை அடுத்து ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் இன்று முதல் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதுகுறித்து தூய்மை பணியாளர் சங்கத்தினர் கூறியதாவது:-

    கடந்த அக்டோபர் 2-ந் தேதி காந்தி ஜெயந்தி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டோம். இந்த போராட்டத்தில் மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி, கோவை அரசு ஆஸ்பத்திரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பணியாற்றக்கூடிய தூய்மை பணியாளர்கள் பங்கேற்றனர்.

    பின்னர் பேச்சுவார்த்தை யில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. ஆனால் பேச்சுவார்த்தையில் கூறியதை போன்று மாமன்ற கூட்டத்தில் எந்த அறிவிப்பும், தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. இதனால் இன்று முதல் மீண்டும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இதில் 3 ஆயிரம் ஒப்பந்த தூய்மைப்பணியாளர்கள் மட்டுமல்லாது ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிரந்தர பணியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

    4 ஆண்டுகளாக போராடி கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவை மாவட்ட கலெக்டர் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு மாநகராட்சியில் ரூ.721, பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு ரூ.529, நகராட்சியில் ரூ.606, ஊராட்சியில் ரூ.529 என ஊதிய உயர்வு அறிவித்தார்.

    பேரூராட்சி, நகராட்சி களில் இந்த கூலி வழங்கப்பட்ட நிலையில் மாநகராட்சியில் இதுவரை வழங்கப்படாமல் உள்ளது. இதற்கான அரசாணை வெளியிட்ட நிலையில் கூட தற்போது வரை வழங்கவில்லை. எனவே உரிய நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். அதுவரை தூய்மை பணியாளர்கள் காலை வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்.

    • மேட்டூர்நகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் கடந்த மாத சம்பளத் தொகையை வழங்கவில்லை என கடந்த 17-ந் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
    • 3 நாட்களாக நடைபெற்று வந்த வேலை நிறுத்தம் நேற்று முடிவுக்கு வந்தது.

    மேட்டூர்:

    மேட்டூர்நகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களாக சுமார் 100 பேர் பணியாற்றி வருகிறார்கள்.

    இவர்களுக்கு கடந்த மாத சம்பளத் தொகையை வழங்கவில்லை என கடந்த 17-ந் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த வேலை நிறுத்தம் நேற்று முடிவுக்கு வந்தது. அவர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு சம்பளத்தொகை வழங்கப்–பட்டபதை அடுத்து இன்று காலை முதல் அனைவரும் பணிக்கு திரும்பினார்கள்.

    • மேட்டூர் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் 100க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்று வருகின்றனர்.
    • சம்பளத்தை உரிய நேரத்தில் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த 2 நாட்களாக மேட்டூர் பஸ் நிலையம் பகுதியில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேட்டூர்:

    மேட்டூர் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் 100க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்று வருகின்றனர். இவர்களுக்கான சம்பளத்தை உரிய நேரத்தில் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த 2 நாட்களாக மேட்டூர் பஸ் நிலையம் பகுதியில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பளம் வழங்க இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • நகராட்சியில் சுமார் 100 ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
    • இவர்களுக்கு கடந்த மாதத்திற்கான சம்பளத்தொகை வழங்கப்படவில்லை என தெரிகிறது.

    மேட்டூர்:

    மேட்டூர் நகராட்சியில் சுமார் 100 ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு கடந்த மாதத்திற்கான சம்பளத்தொகை வழங்கப்படவில்லை என தெரிகிறது. இதனை கண்டித்து நேற்று காலை மேட்டூர் பஸ் நிலையம் பகுதியில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக நகராட்சியின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கி உள்ளது. இந்நிலையில், 2-வது நாளாக இன்றும் வேலை நிறுத்த போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். 

    • குப்பைகள் வாராமல் தேங்கி உள்ளது
    • போனஸ் வழங்க வலியுறுத்தல்

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகராட்சியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    இவர்கள் இன்று காலை திடீரென வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த வேலை நிறுத்தத்தால் அரக்கோணம் பல்வேறு பகுதிகளில் குப்பைகள் வாராமல் ஆங்காங்கே தேங்கி கிடக்கின்றது.

    இதனால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் துர்நாற்றம் மிகுதியால் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கேட்டபோது:-

    அரக்கோணம் நகராட்சி தங்களுக்கு சம்பளத்தை குறித்த நேரத்தில் வழங்குவதில்லை இதுகுறித்து அதிகாரியிடம் பலமுறை தெரிவித்தும் மெத்தன போக்கை கடைபிடித்து வருகிறார்கள்.

    சம்பளம் காலதாமதம் வருவதால் தங்கள் குடும்பத்தை நடத்த சிரமமாய் இருப்பதாகவும் மேலும் தங்களுக்கு தீபாவளி பண்டிகை நெருங்கி நிலையில் போனஸ் வழங்க வேண்டும்.

    தாங்கள் வேலை செய்வதற்கு தேவையான உபகரணங்கள் வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

    • மேட்டூர் நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு கடந்த மாதத்திற்கான சம்பளத் தொகை இன்று வரை வழங்கப்படவில்லை என தெரிகிறது.
    • இதையடுத்து நகராட்சி ஒப்பந்த தொழிலாளர்கள் இன்று காலை திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    மேட்டூர்:

    மேட்டூர் நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு கடந்த மாதத்திற்கான சம்பளத் தொகை இன்று வரை வழங்கப்படவில்லை என தெரிகிறது. இதையடுத்து நகராட்சி ஒப்பந்த தொழிலாளர்கள் இன்று காலை திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    மேட்டூர் பஸ் நிலையம் பகுதியில் அமர்ந்து வேலை புறக்கணிப்பை மேற்கொண்டு வருகிறார்கள். இதனால் நகரின் பல்வேறு இடங்களிலும் குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கியுள்ளது.

    குறிப்பாக, கடந்த சில வாரங்களாகவே மழை பெய்து வருவதால் மழை நீரில் குப்பைகள் அடித்துச் செல்லப்பட்டு ஆங்காங்கே சாலைகளில் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு குள்ளாகி உள்ளனர்.

    • 3 மாதமாக ஊதியம் வழங்காததை கண்டித்தும், குறைந்தபட்ச திபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தியும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்
    • 8 அமைப்புகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

    கோவை

    கோவை காட்டூரில் உள்ள தேசிய பஞ்சாலை அலுவலகம் முன்பு பஞ்சாலை தொழிலாளர்கள் சங்கத்தினர் 3 மாதமாக ஊதியம் வழங்காததை கண்டித்தும், குறைந்தபட்ச திபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தியும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த போராட்டத்தில், சி.ஐ.டி.யு., ஹெச் எம் எஸ்., எம்.எல் எப்., ஐ.என்.டி.யு.சி., என்.டி.எல்.எப்., அம்பேத்கர் யூனியன், ஏ.டி.பி., ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட 8 அமைப்புகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

    போராட்டத்தில் எச்.எம்.எஸ்சை சேர்ந்த டி.எஸ்.ராஜாமணி, மனோகரன், சி.ஐ.டி.யு. பத்மநாபன், பிரான்ஸிஸ் சேவியர், ஏ.டி.பி. கோபால், தேவராஜ், ஐ.என்.டி.யு.சி. பாலசுந்தரம், வெங்கடசாமி, எம்.எல்.எப். மு.தியாகராஜன், கோவிந்தசாமி, ஏ.ஐ.டி.யு.சி பொன்ராஜ், செல்வராஜ், டாக்டர்.அம்பேத்கார் யூனியன் நீலமேகம், எல்.டி.எல்.எப் ரங்கசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

    போராட்டம் குறித்து தேசிய பஞ்சாலையை காப்பாற்றுங்கள் ஒருங்கிணைப்பாளர் கூறியதாவது:-

    தேசிய பஞ்சாலை கழகத்திற்கு சொந்தமாக இந்தியா முழுவதும் 13 மாநிலங்களில் 23 ஆலைகள் இயங்கி வந்தன. கொரோனா கால விதிவிலக்கு கொடுக்கப்பட்ட பிறகும் என்.டி.சி ஆலைகள் சட்டவி ரோதமாக வேண்டுமென்றே இயக்கப்படவில்லை.

    பாதி ஊதியம் மட்டும் கொடுத்து வந்தார்கள். முழு ஊதியம் கொடுக்க வேண்டும். அதுவரை மில்லை ஓட்டுகிற வரை ஆலைகளை இயக்க வேண்டும் என்று கூறினோம்.

    கடந்த 10 மாதங்களாக பணி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பணிக்கொடை வழங்கப்படவில்லை. பாதி ஊதியமும் 3 மாதமாக கொடுக்கப்படவில்லை. கடந்த 3 ஆண்டுகளில் குறந்தபட்ச ஊதியம் வழங்கப்படவில்லை.

    தேசிய பஞ்சாலை கழகத்துக்கு ரூ.1 லட்சம் கோடி உள்ளது. நிலம் விற்ற பணம் ரூ.2 ஆயிரம் கோடி வரவேண்டி உள்ளது. அதிகாரிகள் முயற்சி எடுக்க வேண்டும். கடந்த 29 மாதங்களாக தொழிலாளர்கள் எண்ணற்ற துன்பங்களை அனுபவிக்கிறார்கள்.

    கல்விக்கட்டணம் செலுத்த முடியவில்லை, இ.எம்.ஐ உள்ளிட்ட எந்தவித கட்டணமும் செலுத்த முடியவில்லை. இதனால் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகிறோம்.

    கேரளா, கர்நாடகா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத் கொல்கத்தா உள்ளிட்ட மாநிலங்களிலும் இந்த போராட்டம் நடைபெறுகிறது. சரியான முடிவு வரும் வரை கலைந்து செல்ல மாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×