search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேலைநிறுத்தம்"

    • சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களின் உறவினர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக புறப்பட்டனர்.
    • மீனவ சங்க பிரதிநிதிகளுடன் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    ராமேசுவரம்:

    இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தியும், அவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதே கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 3-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்திலும் படகுகளில் கறுப்பு கொடி கட்டியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மீனவர்களை விடுவிக்க இன்று காலை ஏராளமான மீனவர்களும், சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களின் உறவினர்களும் மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக புறப்பட்டனர்.

    ராமேசுவரத்தில் உள்ள மீன்பிடி துறைமுகம் மற்றும் மீன்வளத்துறை அலுவலகத்தில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக புறப்பட்டனர். மத்திய-மாநில அரசுகள் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை விரைந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மீனவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

    இந்நிலையில் ராமேசுவரம் மீனவர்களின் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக மீனவ சங்க பிரதிநிதிகள் அறிவித்துள்ளனர்.

    மீனவ சங்க பிரதிநிதிகளுடன் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் மீனவர்கள் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், பிடிக்கப்பட்ட படகுகளையும் மீட்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக மாவட்ட கலெக்டர் உத்தரவாதம் அளித்ததை அடுத்து, மீனவர்களின் நடைபயண போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    எனினும், திட்டமிட்டபடி கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிப்பதாகவும் மீனவர் சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

    • ராமேசுவரத்தில் உள்ள மீன்பிடி துறைமுகம் மற்றும் மீன்வளத்துறை அலுவலகத்தில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக புறப்பட்டனர்.
    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சதீஷ் தலைமையில் ஏராளமான போலீசார் அந்தப்பகுதியில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 4-ந்தேதி ஏராளமான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அப்போது ராமேசுவரத்தை சேர்ந்த 23 மீனவர்களையும், 2 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்களை இலங்கைக்கு கொண்டு சென்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்தனர்.

    இந்த நிலையில் கடந்த வாரத்தில் 20 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். அதில் 2 படகு ஓட்டுநர்களுக்கு 6 மாத சிறை தண்டனையும், 2-வது முறையாக கைது செய்யப்பட்ட மீனவர் ஒருவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும் இலங்கை நீதிமன்றம் வழங்கியது. இதனை கண்டித்து இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தியும், அவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். 

    இதே கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 3-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்திலும் படகுகளில் கறுப்பு கொடி கட்டியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி கச்சத்தீவு, புனித அந்தோணியார் ஆலய திருவிழா புறக்கணிப்பு போராட்டத்திலும் இன்று (செவ்வாய்க்கிழமை) ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர். மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தை நோக்கி பேரணியில் ஈடுபடப்போவதாகவும் அறிவித்திருந்தனர்.

    இதையொட்டி இன்று காலை ஏராளமான மீனவர்களும், சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களின் உறவினர்களும் மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக புறப்பட்டனர். ராமேசுவரத்தில் உள்ள மீன்பிடி துறைமுகம் மற்றும் மீன்வளத்துறை அலுவலகத்தில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக புறப்பட்டனர். மத்திய-மாநில அரசுகள் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை விரைந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மீனவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சதீஷ் தலைமையில் ஏராளமான போலீசார் அந்தப்பகுதியில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. துணை சூப்பிரண்டு உமாதேவி உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மீனவர்களின் பேரணி காரணமாக ராமேசுவரம், ராமநாதபுரம் பகுதிகளில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.

    • உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சுற்றுச்சூழலை பாதுகாப்பவர்கள் பசுமை பட்டாசுகளை தயாரிக்கலாம் என பட்டாசு ஆலை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
    • பேரியம் நைட்ரேட் மற்றும் சரவெடிக்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக 50 சதவீதம் வரை பட்டாசுகள் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை, தாயில்பட்டி, ஏழாயிரம் பண்ணை, துலுக்கன்குறிச்சி, செவல்பட்டி, பனையடிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1,100-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உரிய அனுமதி பெற்று இயங்கி வருகின்றன. இதில் வெம்பக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் பெரும்பாலான பட்டாசு ஆலைகள் மாவட்ட வருவாய் அலுவலரின் அனுமதி பெற்று சரவெடிகள் மட்டுமே தயாரிக்கப்படுகிறது.

    இங்கு சரவெடிகளை தவிர வேறு வகை பட்டாசுகள் தயாரிக்க அனுமதி கிடையாது. மேலும் சரவெடிகளுக்கு மாற்றாக வேறு பட்டாசுகள் தயாரிக்கவும், அதில் பயன்படுத்தப்படும் மூலப்பொருளான பேரியம் நைட்ரேட்டுக்கு பதிலாக மாற்று வழியை இதுவரை சுப்ரீம் கோர்ட்டோ, மத்திய அரசோ பட்டாசு ஆலைகளுக்கு தெரிவிக்காததால் பட்டாசு ஆலை உரிமையாளர்களிடம் இது குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    கடந்த 2018-ல் உச்சநீதிமன்றத்தில் பட்டாசு வெடிப்பதால் ஒலி மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக கூறி பட்டாசு உற்பத்திக்கு தடை விதிக்க வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பேரியம் நைட்ரேட்டை பயன்படுத்தவும், அதன் மூலம் சரவெடி தயாரிக்கவும் உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

    உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சுற்றுச்சூழலை பாதுகாப்பவர்கள் பசுமை பட்டாசுகளை தயாரிக்கலாம் என பட்டாசு ஆலை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இது தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர்களுக்கு உரிய பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. மத்திய சுற்றுச்சுழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம், தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் கழகம், மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை ஆகியவற்றுக்கும் கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதன் தொடர்ச்சியாக சிவகாசி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பசுமை பட்டாசு மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. பேரியம் நைட்ரேட் மற்றும் சரவெடிக்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக 50 சதவீதம் வரை பட்டாசுகள் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

    இதனால் ஏராளமான பட்டாசு தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். மேலும் பட்டாசு ஆலைகள் உற்பத்தியை தொடங்காமல் உள்ளதால் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் காப்பாற்றப்பட வேண்டும் என வலியுறுத்தி வெம்பக்கோட்டை பகுதியில் உள்ள தமிழன் பட்டாசு மற்றும் கேப்வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் ஆலோசனை நடத்தப்பட்டது.

    கூட்டத்தில் தலைவர் கணேசன், செயலாளர் மணிகண்டன் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மத்திய, மாநில, அரசுகள் பேரியம் நைட்ரேட் பயன்படுத்தி சரவெடி பட்டாசு தயாரிக்க அனுமதி வழங்க வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என அறிவித்துள்ளனர்.

    அதன்படி இன்று முதல் பட்டாசு உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலையிழந்து உள்ளனர். எனவே தாமதிக்காமல் அரசு பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    • ராமேஸ்வரம் மீனவர்கள் பலவேறு கட்ட போராட்டங்களை நேற்று முதல் நடத்தி வருகின்றனர்.
    • 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    அறந்தாங்கி:

    ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் 23 பேர் மற்றும் அவர்கள் சென்ற 2 விசைப்படகுகளை எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சிறை பிடித்துச் சென்றனர்.

    அதனை தொடர்ந்து 23 மீனவர்களை விடுவிக்க கோரி மத்திய மாநில அரசுகளின் பரிந்துரையால் 21 மீனவர்களை விடுவித்த இலங்கை அரசு, படகை இயக்கிய ஓட்டுனருக்கு ஓராண்டு சிறை தண்டனையும், அதில் 2-வது முறையாக கைது செய்யப்பட்ட மீனவருக்கு 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.

    இதனை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் பலவேறு கட்ட போராட்டங்களை நேற்று முதல் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் ராமேஸ்வரம் மீனவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் புதுக்கோட்டை மாவட்ட கோட்டைப்பட்டினம், ஜெகதாபட்டினம் விசைப்படகு மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    போராட்டத்தில் இலங்கை அரசு தமிழக மீனவர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்திருப்பதைக் கண்டித்தும், அதனை திரும்பப்பெற வேண்டும் எனவும், இதுவரை சிறைபிடிக்கப்பட்ட விசைப்படகுகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்து ஈடுபட்டு வருகின்றனர். வேலைநிறுத்தப் போராட்டத்தால் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இதனிடையே ராமநாதபுரத்தில் மீனவர்கள் நாளை தங்களது ரேசன் கார்டுகளை ஒப்படைத்து போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இந்த போராட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களும் பங்கேற்க உள்ளதாக தெரிவித்தனர்.

    • பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் 26-ந்தேதி முதல் திட்டமிட்டபடி காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஜாக்டோ ஜியோ அமைப்பினர் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    சென்னை:

    பழைய ஓய்வு ஊதியம் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வருகிற 26-ந்தேதி முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர்.

    இதுதொடர்பாக பேச்சுவார்த்தை அமைச்சர் எ.வ.வேலு அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் 26-ந்தேதி முதல் திட்டமிட்டபடி காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அடையாள வேலைநிறுத்தம் நாளை (பிப்.15) நடைபெறும் என்றும் ஜாக்டோ ஜியோ அறிவித்து இருந்தது.

    இந்நிலையில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நாளை நடத்த இருந்த ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஜாக்டோ ஜியோ அமைப்பினர் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • கடந்த சில ஆண்டுகளாக ஹாலோ பிளாக் தயாரிக்கும் மூலப்பொருட்கள் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
    • ஹாலோ பிளாக் கற்களின் விலையை கணிசமாக உயர்த்த வேண்டிய நிலை உள்ளது.

    கோபி:

    தமிழகம் முழுவதும் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஹாலோ பிளாக் தயாரிப்பு நிறுவனங்கள் இயங்கி வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் கோபி, நம்பியூர் ஆகிய தாலுகாவில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட ஹாலோ பிளாக் நிறுவனங்கள் நாள்தோறும் 2 லட்சத்து 50 ஆயிரம் ஹாலோ பிளாக் கற்களை உற்பத்தி செய்து ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கட்டுமான பணிக்காக லாரிகள் மூலம் அனுப்பி வைக்கின்றனர்.

    இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக ஹாலோ பிளாக் தயாரிக்கும் மூலப்பொருட்கள் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 100 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்து உள்ளது.

    கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ஒரு யூனிட் கிரஷர் மண் 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு ரூ.4 ஆயிரத்து 200 ஆக உயர்ந்துள்ளது. இதனால் ஹாலோ பிளாக் கற்களின் விலையை கணிசமாக உயர்த்த வேண்டிய நிலை உள்ளது.

    6 அங்குல அளவுள்ள ஒரு ஹாலோ பிளாக் கல் தற்போது 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் நிலையில் மூலப்பொருள் விலை உயர்வு காரணமாக 40 முதல் 45 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டால் மட்டுமே இழப்புகளை சமாளிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

    அவ்வாறு விலையை உயர்த்தினால் 3 மாவட்டங்களிலும் கட்டுமான தொழில் முழுமையாக பாதிக்கப்படும் என்பதோடு கட்டிடத்தின் மதிப்பீட்டில் கூடுதலாக 20 முதல் 30 சதவீதம் செலவு அதிகரிக்கும். இதனால் கட்டிட உரிமையாளர்கள் முதல் கட்டுமான தொழிலில் ஈடுபட்டு உள்ளவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனால் ஹாலோ பிளாக் கற்கள் தயாரிப்பதற்கான மூலப் பொருளாக உள்ள கிரஷர் மண், ஜல்லி, சிமெண்டு போன்றவற்றின் விலையை கட்டுப்படுத்த வலியுறுத்தி ஈரோடு மாவட்டத்தில் கோபி, நம்பியூர் தாலுகாவில் உள்ள 100-க்கும் மேற்பட்ட ஹாலோ பிளாக் உற்பத்தியாளர்கள் 3 நாள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை நேற்று முன்தினம் தொடங்கியுள்ளனர்.

    மேலும் இவர்கள் கோபியில் லாரிகளை நிறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஹலோ பிளாக்கல் உற்பத்தியாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் இன்று 3-வது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது.

    வேலை நிறுத்தம் போராட்டம் காரணமாக நாள் ஒன்றுக்கு ஒரு கோடி மதிப்பிலான ஹாலோ பிளாக் கற்கள் உற்பத்தி முடங்கிப் போய் உள்ளது என்று நிர்வாகிகள் தெரிவித்தனர். இதன் காரணமாக கட்டுமான தொழில் கடுமையாக பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • லுப்தான்சா ஏர்லைன்ஸ் விமான நிறுவன ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரி இன்று திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
    • சென்னையில் இருந்து அமெரிக்கா, கனடா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல வேண்டிய லுப்தாப்சா விமான பயணிகளும் தவிப்புக்கு உள்ளாகினர்.

    ஜெர்மனியின் மிகப்பெரிய விமான நிறுவனமான லுப்தான்சா ஐரோப்பாவில் 2-வது பெரிய விமான நிறுவனமாக திகழ்கிறது.

    லுப்தான்சா விமான நிறுவன கிளைகளில் சுமார் 25 ஆயிரம் பேர் பணிபுரிகிறார்கள். ஜெர்மனி நாட்டில் பிராங்க்பர்ட், முனிச் பகுதிகளில் லுப்தான்சா விமான நிறுவனங்களின் முக்கிய அலுவலகங்கள் உள்ளன.

    அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் லுப்தான்சா கிளைகள் செயல்பட்டு வருகின்றன. பல நாடுகளுக்கும் விமான சேவைகள் நடந்து வருகிறது.

    இந்நிலையில் ஜெர்மனியில் உள்ள லுப்தான்சா ஏர்லைன்ஸ் விமான நிறுவன ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரி இன்று திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் 1000 விமான சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளன.

    இந்த வேலை நிறுத்தத்தால் ஜெர்மனியில் இருந்து சென்னை வரும் விமானங்களும், சென்னையில் இருந்து ஜெர்மனி செல்லும் விமானங்களும் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன.

    சென்னையில் இருந்து அமெரிக்கா, கனடா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல வேண்டிய லுப்தாப்சா விமான பயணிகளும் தவிப்புக்கு உள்ளாகினர். ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் 1 லட்சம் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

    இந்த போராட்டம் இன்று காலை 7 மணிக்கு ஜெர்மனியில் தொடங்கியது. 27 மணி நேரம் இந்த போராட்டம் நீடிக்கும். நாளை (வெள்ளிக்கிழமை) காலை 7:10 மணிக்கு போராட்டம் முடிவடையும் என விமான தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளாத நிலையில், போராட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து முன் எடுத்து செல்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
    • வருகிற 26-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தினை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அமிர்த குமார், பீட்டர் அந்தோணிசாமி, கே.கணேசன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசில் பணிபுரிந்து வரும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்களின் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டன.

    அதன் பிறகும் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளாத நிலையில் போராட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து முன் எடுத்து செல்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    காணொலி வாயிலாக நடைபெற்ற கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதில் வருகிற 15-ந்தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் நடத்துவது, அதே நாளில் வட்டக் கிளைகளில் காலை 10 மணிக்கு தொடங்கி கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

    மேலும் வருகிற 26-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தினை நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

    இந்த 2 போராட்டங்களையும் மிகவும் வலுவாக நடத்திடும் வகையில் நாளை (வெள்ளிக்கிழமை) கூட்டமைப்பின் சார்பில் மாவட்ட மையங்களில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தினை நடத்துவது எனவும், வருகிற 12-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை 3 நாட்கள் தலைமை செயலகம் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலங்கள், பள்ளி, கல்லூரிகள் மற்றும் உள்ளாட்சி அலுவலகங்களில் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற மறுத்து வரும் அரசின் நிலைப்பாடு குறித்து விரிவான பிரசாரங்கள் மேற்கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.

    • சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    • 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ராமேசுவரம் மீனவர்கள் 23 பேருடன் இரண்டு விசைப்படகை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இலங்கையில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ராமேசுவரம் மீனவர்களை வருகிற 14-ந்தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்ட னர். அவர்களின் 2 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

    மத்திய, மாநில அரசுகள் உறுதியான முடிவெடுத்து, தமிழக மீனவர்கள் சிறைப் பிடிப்பு சம்பவங்களுக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என்றும் மீனவ சங்கங்களும், மீனவர்களின் உறவினர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

    இந்நிலையில் 23 மீனவர்கள் சிறைப்பிடிப்பை கண்டித்து இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் போராட்டம் நடத்த மீனவர்கள் முடிவெடுத்தனர். அதன்படி மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. இதன் காரணமாக 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

    இதனால் மீன்பிடி தொழிலை நம்பியுள்ள ஏராளமானோர் இன்று வேலையிழந்துள்ளனர்.

    • போராட்டம் நகரங்கள் மட்டுமின்றி கிராமங்களிலும் மறியல், முழு அடைப்பு உள்ளிட்ட பல வடிவங்களில் நடைபெற உள்ளது.
    • போராட்டத்துக்கு ஆதரவு கேட்டு வீடு வீடாக துண்டு பிரசுரங்கள், வினியோகிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

    சென்னை:

    பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தனியார் மயமாக்கலை கைவிட வேண்டும், குறைந்தபட்ச ஊதியத்தை அதிகப்படுத்தி வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் அனைத்தும் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

    வருகிற 16-ந்தேதி நடைபெறும் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் விவசாய தொழிலாளர்கள் போக்குவரத்து தொழிலாளர்கள், தபால் தொலை தொடர்புதுறை, ரெயில்வே, மின்வாரியம், தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள தொழிற்சங்கத்தினர் பங்கெடுக்க உள்ளனர்.

    இந்த போராட்டம் நகரங்கள் மட்டுமின்றி கிராமங்களிலும் மறியல், முழு அடைப்பு உள்ளிட்ட பல வடிவங்களில் நடைபெற உள்ளது. போராட்டத்தை முன்னெடுக்க தொழிற்சங்கங்கள் பல்வேறு கட்டங்களாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    போராட்டத்துக்கு ஆதரவு கேட்டு வீடு வீடாக துண்டு பிரசுரங்கள், வினியோகிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் தமிழ்நாட்டில் போக்குவரத்து கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்கங்களும் இந்த போராட்டத்தில் பங்கு பெற முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

    இதற்கான ஆலோசனைக்கூட்டம் சென்னை தொ.மு.ச. தலைமையகத்தில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் தொ.மு.ச., சி.ஐ.டி.யு.சி., ஏ.ஐ.டி.யு.சி., எச்.எம்.எஸ்., ஐ.என்.டி.யு.சி., டி.டி.எஸ்.எப். உள்பட 9 சங்கங்கள் சார்பில் அதன் நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆலோசித்தனர்.

    இதில் மத்திய அரசை கண்டித்து அகில இந்திய அளவில் பிப்ரவரி 16-ந் தேதி நடைபெற உள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தையும், மறியல் போராட்டத்தையும் வெற்றிகரமாக நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

    இதுபற்றி சி.ஐ.டி.யு. தொழிற்சங்க செயலாளர் சவுந்தரராஜன் கூறுகையில், "மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்தும் தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியமாக ரூ.26 ஆயிரத்தை நிர்ணயிக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கையை வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் நடைபெறும் இந்த போராட்டத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் முழுமையாக பங்கேற்க உள்ளது.

    இதனால் 16-ந்தேதி போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும்போது பஸ் போக்குவரத்து பாதிக்கப்படும்.

    அன்றைய தினம் தொழிலாளர்கள் 'ஸ்டிரைக்கில்' பங்கேற்கும்போது அதே நாளில் மறியல் போராட்டங்களும் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    போக்குவரத்து தொழிற்சங்கங்களும் இந்த போராட்டத்தில் ஈடுபடுவதால் பஸ்கள் ஓடுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், "அத்தியாவசிய சேவை பணியில் போக்குவரத்து வருவதால் பஸ்களை இயக்க அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்" என்றார்.

    ஆனால் நடைமுறையில் அன்றைய தினம் பாதியளவு பஸ்கள் தான் ஓடும் என தெரிகிறது.

    • வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது.
    • தீர்ப்பின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நகர்வு இருக்கும் என தகவல்.

    போக்குவரத்துத் தொழிலாளர்களின் 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி இன்று (வெள்ளிக்கிழமை) 4-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    இந்தப் பேச்சுவார்த்தையில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், போக்குவரத்து கழகங்களின் இயக்குனர்கள், போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில், போக்குவரத்து தொழிற்சங்கத்தினருடன் மீண்டும் பிப்ரவரி 7ம் தேதி பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    மேலும், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என இன்று நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    வரும் பிப்ரவரி 6ம் தேதி உச்சநீதிமன்ற தீர்ப்பு வரவுள்ள நிலையில், தீர்ப்பின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நகர்வு இருக்கும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் உத்தரவாதம் அளித்துள்ளனர்.

    தற்போதைய நிலையில் மீண்டும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட வேண்டிய அவசியம் இல்லை என தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

    பிப்ரவரி 7ம் தேதி நடைபெறும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும் தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

    • ஜனவரி 19-ந்தேதி வரை வேலை நிறுத்தத்தை ஒத்திவைப்பதாக கோர்ட்டில் தொழிற்சங்கங்கள் தெரிவித்தன.
    • அதன்படி இந்த பேச்சுவார்த்தை அம்பத்தூர் மங்களாபுரத்தில் உள்ள தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பிற்பகல் தொடங்கியது.

    சென்னை:

    போக்குவரத்துத் தொழிலாளர்களின் 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., அண்ணா தொழிற்சங்கப் பேரவை உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்த நோட்டீசை வழங்கி இருந்தனர்.

    இது தொடர்பான சமரச பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததையடுத்து கடந்த 9, 10 ஆகிய தேதிகளில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பான வழக்கில் பொதுமக்கள் நலன் கருதி நிபந்தனையுடன் ஜனவரி 19-ந்தேதி வரை வேலை நிறுத்தத்தை ஒத்திவைப்பதாக கோர்ட்டில் தொழிற்சங்கங்கள் தெரிவித்தன.


    இதையடுத்து இன்று (வெள்ளிக்கிழமை) 4-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு வரும்படி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் மற்றும் போக்குவரத்துக் கழகங்களுக்கு தொழிலாளர் நலத்துறை அழைப்பு விடுத்து இருந்தது.

    அதன்படி இந்த பேச்சுவார்த்தை அம்பத்தூர் மங்களாபுரத்தில் உள்ள தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பிற்பகல் தொடங்கியது.

    இந்தப் பேச்சுவார்த்தையில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், போக்குவரத்து கழகங்களின் இயக்குனர்கள், போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

    ×