search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேலைவாய்ப்பின்மை"

    • வேலையில்லா திண்டாட்டத்தை மத்திய அரசால் மட்டும் சரிசெய்ய முடியாது
    • அனைத்து சமூக, பொருளாதார பிரச்சனைக்கும் அரசு மட்டும் தீர்வு காண வேண்டும் என எதிர்பார்ப்பது தவறானது

    வேலையில்லா திண்டாட்டத்தை மத்திய அரசால் மட்டும் சரிசெய்ய முடியாது. அனைத்து சமூக, பொருளாதார பிரச்சனைக்கும் அரசு மட்டும் தீர்வு காண வேண்டும் என எதிர்பார்ப்பது தவறானது. தனியார் நிறுவனங்கள் தான் பணியமர்த்தலை செய்ய வேண்டும். தனியார் துறையில் வேலைவாய்ப்புகளை பெருக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    அனந்த நாகேஸ்வரனின் கருத்துக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

    "சிறு குறு தொழில் முனைவோருக்கு பதிலாக பெரிய முதலாளிகளுக்கு சலுகை கொடுப்பதிலேயே ஆர்வம் காட்டிக் கொண்டிருந்தால் வேலைவாய்ப்பின்மையை எப்போதுமே சரிசெய்ய முடியாது" என்று பதிவிட்டுள்ளார். 

    • "பணமதிப்பிழப்பு" மற்றும் "சரக்கு மற்றும் சேவை வரி" (GST) சிறு தொழில்களை அழித்து விட்டது
    • வேலைவாய்ப்பின்மை பாகிஸ்தானில் 12 சதவீதம்; இந்தியாவில் 23 சதவீதம் என்றார் ராகுல்

    "இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை" (பாரத் ஜோடோ நியாய் யாத்ரா) எனும் பெயரில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

    அதன் ஒரு பகுதியாக, மத்திய பிரதேச மாநிலத்தின், குவாலியர் (Gwalior) நகரில், ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.

    தனது உரையில், ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்தார்.

    அப்போது அவர் தெரிவித்ததாவது:

    "பணமதிப்பிழப்பு நடவடிக்கை" (demonetization) மற்றும் "சரக்கு மற்றும் சேவை வரி" (GST) ஆகியவை சிறு மற்றும் குறு தொழில்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்.

    இந்தியாவின் சிறு மற்றும் குறு தொழில்களை மோடி அடியோடு அழித்து விட்டார்.

    கடந்த 40 வருடங்களில் இல்லாத அளவு இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை தலைவிரித்தாடுகிறது.

    பாகிஸ்தானை விட 2 மடங்கு வேலைவாய்ப்பின்மை இந்தியாவில் நிலவுகிறது. இங்கு 23 சதவீதம்; அங்கு 12 சதவீதம்தான்.

    வங்காள தேசம் மற்றும் பூடான் ஆகிய நாடுகளை விட அதிகமாக வேலையில்லாத இளைஞர்கள் இங்கு உள்ளனர்.

    இவையனைத்திற்கும் பிரதமர் மோடிதான் காரணம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    குவாலியரில், இந்திய ராணுவத்தின் "அக்னிவீர்" (Agniveer) திட்டத்தில் இணைந்த வீரர்களுடனும், முன்னாள் ராணுவ வீரர்களுடனும் ராகுல் காந்தி கலந்துரையாடினார்.

    பொருளாதார ஏற்றத்தாழ்வு, சமூக அநீதி மற்றும் விவசாயிகளுக்கும் இளைஞர்களுக்கும் எதிராக நடக்கும் அநீதி ஆகிய தீமைகளுக்கு எதிராக போராடும் விதமாகவும், நாடு முழுவதும் பரப்பப்படும் வெறுப்புணர்ச்சிக்கு எதிராகவும் தனது யாத்திரையின் பெயரில் "நியாய்" எனும் வார்த்தை சேர்க்கப்பட்டதாக ராகுல் காந்தி கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அமெரிக்காவில் 2022 இறுதியில் இருந்தே ஆட்குறைப்பு தொடங்கியது
    • 50 சதவீத ஊதிய குறைப்புக்கு முன்வந்தாலும் பணி கிடைப்பது கடினமாக உள்ளது

    கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக அமெரிக்காவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப மற்றும் மென்பொருள் நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.

    2022 இறுதியில் தொடங்கி, டெஸ்லா, எக்ஸ், மெட்டா, கூகுள், அமேசான், மைக்ரோசாப்ட் உட்பட பல நிறுவனங்கள் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களை நீக்கின.

    உலகெங்கும் இருந்து அந்நிறுவனங்களில் பணியாற்ற சென்ற ஊழியர்களுக்கு வேறு வேலை கிடைக்காததால் விசா காலம் நிறைவடைந்து அமெரிக்காவில் இருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது.

    இந்தியாவிலிருந்தும் அவ்வாறு பணியாற்ற சென்று ஆட்குறைப்பு நடவடிக்கையில் பணியிழந்தவர்களில் பலர் மீண்டும் தாயகம் திரும்பினர்.

    ஆனால், அவர்களுக்கு புது சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    2023ல் இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப மற்றும் மென்பொருள் நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையை தொடங்கி விட்டன.

    இங்கு பணியிழக்கும் ஊழியர்கள் ஊதியம் குறைந்தாலும், வேறு வேலை கிடைத்தால் போதும் எனும் முடிவில் கிடைக்கும் நிறுவனங்களில் உடனடியாக பணியில் சேர்கின்றனர்.

    அமெரிக்காவிலிருந்து வரும் இந்திய ஊழியர்கள் பெற்ற ஊதியத்துடன் ஒப்பிட்டால் இங்கு பணியில் இருப்பவர்களுக்கும், வேலையிழப்பினால் குறைந்த சம்பளத்தில் வேலைக்கு வருபவர்களுக்கும் நிறுவனங்கள் வழங்க வேண்டிய ஊதியம் மிகக் குறைவு.

    எனவே, அங்கிருந்து வருபவர்களுக்கு தகுதி இருந்தும் வேலை கிடைப்பது கடினமாக உள்ளது.

    அமெரிக்காவுடன் ஒப்பிட்டால் தகவல் தொழில்நுட்ப துறையில் காலியிடங்கள் மிக குறைவாக உள்ளதாகவும், ஒரே பணிக்கு 100க்கும் மேற்பட்ட திறமை வாய்ந்த ஊழியர்கள் விண்ணப்பிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளதாகவும் மனிதவள நிபுணர்கள் தெரிவித்தனர்.

    சுமார் 50 சதவீதம் வரை ஊதியத்தை குறைத்து கொள்ள அவர்கள் முன்வந்தாலும், மீண்டும் பணி கிடைப்பதே கடினமாகி வருகிறது.

    அங்கும் வேலை இழந்து, இங்கும் வேலை கிடைக்காமல், பல வருட சேமிப்புகளும் நாளுக்கு நாள் கரைந்து அவர்களின் நிலை நலிவடைந்து வருகிறது.

    2024-ஆம் வருடத்திலும் உலகளாவிய பொருளாதார மந்தநிலை நீடித்தால், மேலும் பல சாஃப்ட்வேர் துறை ஊழியர்கள் பணி இழக்கும் அபாயம் ஏற்படலாம் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

    • அங்கு பட்டம் முடித்தவர்களுக்கு லட்சக்கணக்கில் ஊதியம் கிடைத்து வந்தது
    • 14 மணி நேரம் வேலை செய்தாலும் போதிய வருவாய் ஈட்ட வழியின்றி தவிக்கின்றனர்

    அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள முன்னணி பல்கலைக்கழகங்களை சேர்ந்த கல்லூரிகளில் பட்டம் படித்தவர்களுக்கு உலகின் பல முன்னணி நிறுவனங்களில் லட்சக்கணக்கில் சம்பளம் தரும் வேலைவாய்ப்புகள் கிடைத்து வந்ததனால் அதிக பொருட்செலவையும் பொருட்படுத்தாமல் கல்வி பயில பல இந்திய மாணவ மாணவியர்கள் ஆண்டுதோறும் அங்கு செல்வது வழக்கம்.

    ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களிலிருந்து மட்டும் ஆண்டுதோறும் சுமார் 20 ஆயிரம் மாணவ மாணவியர்கள் கனடாவில் படித்து பட்டம் பெற்று, அங்கேயே வேலை வாய்ப்புகளை பெற செல்கிறார்கள். இவர்கள் பெரும்பாலும் "ஸ்டெம்" (STEM) எனப்படும் விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய துறைகளிலும், வணிக நிர்வாக மேலாண்மை (MBA) துறையிலும் பட்டம் பெற அங்குள்ள பல்கலைக்கழகங்களில் சேர்பவர்கள்.

    இந்நிலையில், கனடாவின் தேசிய புள்ளிவிவர மையம் (National Statistical Agency) மேற்கொண்ட ஒரு ஆய்வின்படி கடந்த ஜனவரி மாதத்திலிருந்தே கனடாவில் வேலை வாய்ப்பு 61.8 சதவீதம் எனும் அளவிற்கு குறைந்துள்ளதாக தெரிகிறது. மேலும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு மிக அதிகம் பேர் வேலை இழந்துள்ளனர்.

    இதன் காரணமாக அங்கு படிக்க சென்ற மாணவர்கள், "ஆட் ஜாப்ஸ்" (odd-jobs) எனப்படும் அதிக திறன் தேவைப்படாத, அதிக ஊதியம் வழங்காத சாதாரண வேலைகளை செய்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக தெரிய வந்துள்ளது.

    தற்போது பட்டம் முடித்த பல இந்திய மாணவர்களுக்கு கனடாவில் உணவகங்கள், மின்னணு சாதன விற்பனை நிலையங்கள், மொபைல் விற்பனை கடைகள், அங்காடிகள் உள்ளிட்ட இடங்களில் குறைந்த வருமானத்தில் வேலை பார்த்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அவர்களில் பலர் ஒரு நாளைக்கு 14 மணி நேரம் வரை வேலை செய்தாலும் வாடகை, உணவு மற்றும் இதர செலவுகளுக்கு போதுமான வருவாய் ஈட்ட முடியாமல் தவிக்கின்றனர்.

    கடும் குளிர் பிரதேச நாடான கனடாவில் வேலைவாய்ப்புகள் குறைவதாலும், பட்டம் பெற பெரும் பணம் செலவழித்து வந்து விட்டதாலும், நாடு முழுவதுமே வேலைவாய்ப்புகள் குறைவதாலும் அவர்கள் இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    • சீனாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2-வது காலாண்டில் 6.3 சதவீதமாக உள்ளது
    • 16 முதல் 24 வயதிலான இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மை ஜூன் மாதம் அதிகரிப்பு

    சீனாவின் இரண்டாவது காலண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பின்மை குறித்த அதிகாரபூர்வமான அறிக்கையை அந்நாடு வெளியிட்டிருக்கிறது. இதன்படி, உள்நாட்டு உற்பத்தி 6.3% என உயர்ந்திருந்தாலும் பொருளாதார வல்லுனர்கள் எதிர்பார்த்திருந்ததை விட இது குறைவு என தெரிகிறது.

    அதே சமயம் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பின்மை ஒரு புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது. ஜூன் மாதத்திற்கான 16 வயதிலிருந்து 24 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பின்மை 21.3 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்றும், அனைவருக்குமான வேலைவாய்ப்பின்மை நகரங்களில் ஜூன் மாதம் 5.2 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டிருக்கிறது.

    "சீனா ஒரு சிக்கலான புவிசார் அரசியல் பின்னணியில் மாறி வரும் பன்னாட்டு பொருளாதார சூழலை சந்தித்து வருகிறது என்றும் வேலைவாய்ப்பின்மை இன்னும் உயரலாம்; ஆனால் ஆகஸ்ட மாதத்திற்கு பிறகு குறையும்" என சீனாவின் தேசிய புள்ளிவிவர ஆணையத்தின் செய்தித்தொடர்பாளர் ஃபூ லிங்ஹுய் தெரிவித்தார்.

    சீனாவின் குறைந்து வரும் வேலைவாய்ப்பின்மை குறித்து கடந்த மே மாதம் கோல்ட்மேன் சேக்ஸ் நிறுவனம் வெளியிட்டிருந்த அறிக்கையில் கோவிட் காலத்திற்கு முன்பு 10% என இருந்த வேலைவாய்ப்பின்மை ஜூன் மாதம் 20.4% என இரட்டிப்பானதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இளைஞர்களுக்கு குறைந்தளவே அனுபவம் இருப்பதால், பொருளாதார சுழற்சிகள் நடைபெறும் போதெல்லாம் வேலைவாய்ப்பின்மையில் அவர்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள். கல்லூரிகளிலிருந்து பெறும் திறமைகளுக்கும், தொழில்துறைக்கு தேவைப்படும் திறனுக்கும் பெருமளவில் வித்தியாசம் இருப்பதுதான் அடிப்படை காரணமாக அந்த அறிக்கை தெரிவித்திருந்தது குறிப்பத்தக்கது.

    சீன பொருளாதாரத்திற்கு இளைஞர்களின் பங்களிப்பு மிக அவசியம் என அந்நாடு கருதுவதால் கல்லூரி படிப்பை முடித்து வெளிவரும் இளைஞர்களுக்கு ராணுவம் உட்பட அரசாங்க நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைக்க பல வழிமுறைகளை உறுதி செய்துள்ளது.

    இவ்வருடம் கிட்டத்தட்ட 1 கோடிக்கும் மேல் (11.58 மில்லியன்) கல்லூரி படிப்பை முடிக்கும் பட்டதாரிகள் வேலைவாய்ப்பை தேடி வெளிவர போகிறார்கள் என்பதால் பொருளாதார வல்லுனர்கள் சீனா இந்த நிலையை எதிர்கொள்ள எடுக்க போகும் நடவடிக்கைகளையும் அது எந்தளவிற்கு பயனளிக்கிறது என்பதையும் கூர்ந்து கவனிக்கின்றனர்.

    ×