search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழிலாளர்கள்"

    • நியாயமான முறையில் தரமான சேலை நெய்யும் பல லட்சம் விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
    • ஆன்லைன் மூலம் நடக்கும் விற்பனைகளுக்கு வரைமுறை ஏற்படுத்திடவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சேலம் மாவட்டம், இடங்கண சாலை, தாரமங்கலம், மகுடஞ்சாவடி, நகரம். ஒன்றியம் சுற்றுவட்டார பகுதிகளில் விசைத்தறி தொழிலாளர்கள் பல லட்சம் பேர் வேலை செய்து வாழ்ந்து வருகின்றனர். தரமற்ற சூரத் சேலைகள் விற்பனையினாலும், வெளி மாநிலங்களில் இருந்து கள்ளச் சந்தை மூலம் சேலைகள் விற்பனைக்கு வந்ததாலும், எந்த ஒழுங்குமுறையும் இல்லாமல் ஆன்லைனில் சேலை விற்பனை செய்வதாலும், நியாயமான முறையில் தரமான சேலை நெய்யும் பல லட்சம் விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. தமிழக அரசு இதனை கவனத்தில் கொண்டு தரமற்ற சூரத் சேலைகள் விற்பனையாவதை தடுத்து, கள்ள சந்தைகள் மூலம் விற்பனை செய்வதை தடுத்திடவும், ஆன்லைன் மூலம் நடக்கும் விற்பனைகளுக்கு வரைமுறை ஏற்படுத்திடவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் இப்பகுதியில் சேலை நெசவு விசைத்தறி தொழிலாளர்களுக்கு விரைவாக சங்கம் அமைத்துக் கொடுத்து. சங்கங்கள் மூலம் சேலைகள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்து, தரமான சேலைகளை வாங்குவதற்கு பொது மக்களிடையே விழிப்புணர்வு செய்து, லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட விசைத்தறி தொழிலாளர்களுக்கு தே.மு.தி.க.வின் சார்பாக ஆதரவு குரல் என்றைக்கும் இருக்கும். அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்காத வண்ணம் உடனடியாக அரசு கவனம் செலுத்தி அவர்களுடைய உழைப்பில் உருவாகும் அந்த சேலை, வேட்டி போன்ற துணிகளுக்கு உரிய விலை கிடைக்க தமிழக அரசு துணை நிற்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சுற்றுச்சூழலை பாதுகாப்பவர்கள் பசுமை பட்டாசுகளை தயாரிக்கலாம் என பட்டாசு ஆலை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
    • பேரியம் நைட்ரேட் மற்றும் சரவெடிக்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக 50 சதவீதம் வரை பட்டாசுகள் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை, தாயில்பட்டி, ஏழாயிரம் பண்ணை, துலுக்கன்குறிச்சி, செவல்பட்டி, பனையடிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1,100-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உரிய அனுமதி பெற்று இயங்கி வருகின்றன. இதில் வெம்பக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் பெரும்பாலான பட்டாசு ஆலைகள் மாவட்ட வருவாய் அலுவலரின் அனுமதி பெற்று சரவெடிகள் மட்டுமே தயாரிக்கப்படுகிறது.

    இங்கு சரவெடிகளை தவிர வேறு வகை பட்டாசுகள் தயாரிக்க அனுமதி கிடையாது. மேலும் சரவெடிகளுக்கு மாற்றாக வேறு பட்டாசுகள் தயாரிக்கவும், அதில் பயன்படுத்தப்படும் மூலப்பொருளான பேரியம் நைட்ரேட்டுக்கு பதிலாக மாற்று வழியை இதுவரை சுப்ரீம் கோர்ட்டோ, மத்திய அரசோ பட்டாசு ஆலைகளுக்கு தெரிவிக்காததால் பட்டாசு ஆலை உரிமையாளர்களிடம் இது குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    கடந்த 2018-ல் உச்சநீதிமன்றத்தில் பட்டாசு வெடிப்பதால் ஒலி மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக கூறி பட்டாசு உற்பத்திக்கு தடை விதிக்க வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பேரியம் நைட்ரேட்டை பயன்படுத்தவும், அதன் மூலம் சரவெடி தயாரிக்கவும் உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

    உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சுற்றுச்சூழலை பாதுகாப்பவர்கள் பசுமை பட்டாசுகளை தயாரிக்கலாம் என பட்டாசு ஆலை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இது தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர்களுக்கு உரிய பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. மத்திய சுற்றுச்சுழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம், தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் கழகம், மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை ஆகியவற்றுக்கும் கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதன் தொடர்ச்சியாக சிவகாசி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பசுமை பட்டாசு மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. பேரியம் நைட்ரேட் மற்றும் சரவெடிக்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக 50 சதவீதம் வரை பட்டாசுகள் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

    இதனால் ஏராளமான பட்டாசு தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். மேலும் பட்டாசு ஆலைகள் உற்பத்தியை தொடங்காமல் உள்ளதால் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் காப்பாற்றப்பட வேண்டும் என வலியுறுத்தி வெம்பக்கோட்டை பகுதியில் உள்ள தமிழன் பட்டாசு மற்றும் கேப்வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் ஆலோசனை நடத்தப்பட்டது.

    கூட்டத்தில் தலைவர் கணேசன், செயலாளர் மணிகண்டன் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மத்திய, மாநில, அரசுகள் பேரியம் நைட்ரேட் பயன்படுத்தி சரவெடி பட்டாசு தயாரிக்க அனுமதி வழங்க வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என அறிவித்துள்ளனர்.

    அதன்படி இன்று முதல் பட்டாசு உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலையிழந்து உள்ளனர். எனவே தாமதிக்காமல் அரசு பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    • இன்னமும் 65 மீட்டர் தூரத்துக்கு மலை உச்சியில் இருந்து துளை போட வேண்டியது உள்ளது.
    • மேலும் 4 இடங்களில் இருந்து 41 தொழிலாளர்கள் சிக்கி உள்ள சுரங்கப்பாதை நோக்கி துளை போடும் பணிகள் நடந்து வருகின்றன.

    உத்தரகாசி:

    உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்தரகாசி மாவட்டத்தின் சில்க்யாரா மலை பகுதியில் 4.50 கிலோ மீட்டர் தூரத்துக்கு மலைக்கு கீழ் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து வந்தது.

    கடந்த 12-ந்தேதி தீபாவளி தினத்தன்று காலை சுரங்கப்பாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. 70 மீட்டர் தூரத்துக்கு இடிந்ததால் சுரங்கப் பாதையின் மையப் பகுதிக்குள் 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.

    அவர்களை மீட்க 70 மீட்டர் இடிபாடுகளுக்குள் குழாய்களை செலுத்தி மீட்கும் பணி நடந்தது. முதல் தடவை நடந்த முயற்சியில் எந்திரம் பழுது அடைந்ததால் அதிநவீன ஆகர் எந்திரம் கொண்டு வரப்பட்டு துளையிட்டு குழாய் அமைக்கும் பணி நடந்தது.

    47 மீட்டர் தூரத்துக்கு துளையிட்டு குழாய் அமைக்கப்பட்ட நிலையில் ஆகர் எந்திரத்தின் துளையிடும் பிளேடுகள் வெடித்து சிதறி நொறுங்கி போனதால் மீட்பு பணிகளில் முடக்கம் ஏற்பட்டது. இதையடுத்து மலை உச்சியில் இருந்து துளை போட்டு 41 தொழிலாளர்களை மீட்க முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி மலை உச்சியில் சாலை அமைக்கப்பட்டு நவீன எந்திரம் கொண்டு செல்லப்பட்டது. 2 இடங்களில் இருந்து துளை போட முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று காலை மலை உச்சியில் இருந்து செங்குத்தாக சுரங்கப்பாதை நோக்கி துளையிடும் பணிகள் நடந்து வருகின்றன.

    அப்படி துளையிடும் பகுதியில் 700 மி.மீட்டர் சுற்றளவு கொண்ட இரும்பு குழாய்களை உள்ளே செலுத்தும் பணிகளும் நடந்து வருகிறது. இன்று காலை வரை 22 மீட்டர் தூரத்துக்கு மலை உச்சியில் இருந்து செங்குத்தாக துளை போடப்பட்டு உள்ளது.

    இன்னமும் 65 மீட்டர் தூரத்துக்கு மலை உச்சியில் இருந்து துளை போட வேண்டியது உள்ளது. இன்னும் 4 நாட்கள் அதற்கு தேவைப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் பக்க வாட்டில் கிடைமட்டமாக துளை போடும் பணியில் சிக்கி இருந்த ஆகர் எந்திரத்தை அகற்றும் பணிகள் நடந்து வந்தன. இன்று காலை அந்த எந்திரம் முழு மையாக அகற்றப்பட்டது. இதையடுத்து அந்த பாதையில் ஆட்கள் மூலம் துளையிடும் பணி தொடங்கி உள்ளது.

    இதுவரை ஆகர் எந்திரம் மூலம் 47 மீட்டருக்கு துளையிட்டு குழாய் பொறுத்தப்பட்டு இருப்பதால் அந்த குழாய் வழியாக 2 வீரர்கள் உள்ளே சென்று தொடர்ந்து அங்கு தோண்டும் பணியை மேற்கொண்டுள்ளனர். ஒரு வீரர் துளையிடும் பணியை மேற்கொள்வார். மற்றொருவர் அந்த இடிபாடு கழிவுகளை வெளியில் அள்ளும் பணியில் ஈடுபடுவார்.

    இப்படி ஆட்கள் மூலம் துளைபோடும் பணி சுமார் 10 முதல் 12 மீட்டர் தூரத்துக்கு செய்ய வேண்டி உள்ளது. இந்த ஆட்கள் மூலம் துளைபோடும் பணியை செய்ய சுமார் 36 மணி நேரம் ஆகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே மேலும் 4 இடங்களில் இருந்து 41 தொழிலாளர்கள் சிக்கி உள்ள சுரங்கப்பாதை நோக்கி துளை போடும் பணிகள் நடந்து வருகின்றன. மொத்தம் 6 விதமாக துளை போடப்பட்டு குழாய்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. எந்த பாதையில் முதலில் பணிகள் நிறைவு பெறுகிறதோ அதன் வழியாக 41 தொழிலாளர்களும் மீட்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே 41 தொழிலாளர்கள் சிக்கி சில்க்யாரா மலை பகுதியில் இன்று முதல் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. இன்று பிறபகல் முதல் அங்கு மழை பெய்யவும் வாய்ப்பு இருப்பதாக வானிலை இலாகா எச்சரித்துள்ளது. இதனால் மீட்பு பணிகளில் தாமதம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதை தவிர்க்க மாற்று ஏற்பாடுகளை மீட்பு குழுவினர் செய்து வருகிறார்கள்.

    • முன்னோடி நிறுவனமான பி.ஆர்.டி. நிறுவனம் தயாரித்த ஜி.டி.-5 என்ற நவீன வசதிகள் கொண்ட ரிக்கை பயன்படுத்துகின்றனர்.
    • தொழிலாளர்கள் எவ்வாறு இருக்கிறார்கள்? என்று கண்டறிய கேமரா மற்றும் ஆக்சிஜன் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் கொடுக்கப்பட்டு வருகிறது.

    உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் இந்தியா-சீனா எல்லைப்பகுதியில் சாலை அமைக்க கடந்த 12-ந்தேதி சுரங்கப்பாதை தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் 41 பேர் சுரங்கப்பாதையில் சரிவு ஏற்பட்டதால் உள்ளே சிக்கிக்கொண்டனர்.

    11 நாட்களாக அவர்களை மீட்கும் பணிகள் தீவரமாக நடந்து வருகிறது. பல்வேறு தொழில் நுட்பங்கள் பயன்படுத்தி மீட்பு பணி நடந்து வருகிறது. எண்டோஸ்கோபி கேமரா மூலம் 41 தொழிலாளர்களும் உயிருடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    இந்த சூழலில் தொழிலாளர்களை பத்திரமாக மீட்கும் முயற்சியில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த தரணி ஜியோ டெக் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்த நிறுவனம் இம்மாதிரியான பணிகளில் நிபுணத்துவம் பெற்ற வல்லுனர்களை கொண்டது ஆகும்.

    இவர்களது முயற்சியால் தான் தொழிலாளர்கள் பத்திரமாக இருப்பது கண்டறியப்பட்டது. தற்போது இடிபாடுகளை அகற்றும் பணியில் இந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இதற்கு அவர்கள் ரிக் தயாரிப்பில் முன்னோடி நிறுவனமான பி.ஆர்.டி. நிறுவனம் தயாரித்த ஜி.டி.-5 என்ற நவீன வசதிகள் கொண்ட ரிக்கை பயன்படுத்துகின்றனர்.

    இந்த ரிக் மிகவும் நவீனமானது. 360 டிகிரியிலும் சுழலும் வசதி கொண்டது. அதனால் கீழே, மேலே, பக்கவாட்டு என எந்த நிலையிலும் துளையிடும் திறன் கொண்டது. 6 அங்குல விட்டத்துடன் பாறைகளை உடைத்து 80 மீட்டர் துளை ஏற்படுத்தும் வலிமை கொண்டது. மேலும் துளையிடும்போதே துளையில் குழாயை சொருகும் வசதி உள்ளது.

    இது குறித்து பி.ஆர்டி. நிறுவன மேலாண் இயக்குநர் பரந்தாமன், தரணி ஜியோடெக் நிறுவனத்தின் மேலாளர் இயக்குநர் ஜெயவேல் ஆகியோர் கூறியதாவது:-

    உத்தரகாசியில் சுரங்கத்தில் தொழிலாளர்களை மீட்கும் முயற்சிக்கு தரணி ஜியோடெக் நிறுவனத்தை அரசு அணுகியது. சுரங்கம் அமைத்தல், அணை கட்டுதல், சாலை அமைத்தல் போன்ற பணிகளுக்கு நவீன தொழில் நுட்பங்களை தரணி ஜியோடெக் நிறுவனம் கடந்த 25 வருடங்களாக அளித்து வருகிறது.

    அதேபோல் தொழிலாளர்களை மீட்கும் சவாலான முயற்சியில் பி.ஆர்.டி.யின் ஜிடி-5 ரிக் பயன்படுத்தப்படுகிறது. 6 இன்ச் அகலத்தில் சுமார் 110 அடி ஆழத்தில் துளையமைத்து அதன் மூலம் சிமெண்ட்ரி டெக்னாலஜியை கொண்டு துளை அமைத்து செல்லும்போது கேசிங் பைப்பையும் உடன் அனுப்பி அதன் மூலம் எந்த சரிவு ஏற்படாமல் ஆழத்தில் சிக்கி இருந்தவர்களை எட்டும் வகையில் செய்தோம்.

    இதனால் சுரங்கப்பாதைக்குள் சிக்கி இருப்பவர்கள் பாதுகாப்பாக இருப்பதையும் அவர்களை மாற்று தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மீட்க முடியும் என்ற நம்பிக்கையும் ஏற்படுத்தி கொடுத்தது. இதற்கான துளையிடும் எந்திரம் வெளிநாடுகளில் இறக்குமதி செய்தால் ரூ.2 கோடி ஆகும் என்கிற நிலையில் திருச்செங்கோட்டில் உள்ள பி.ஆர்.டி. நிறுவனம் இதனை 85 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்கிறது.

    சிமெண்ட்ரி சிஸ்டம் என்ற ஒரு சிஸ்டத்தை நாங்கள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து வைத்திருந்தோம். இந்த சிமெண்ட்ரி சிஸ்டத்தில் துளையிடும்போது உடன் செல்லும் கேஸிங் பைப் ட்ரில்லரை வெளியில் எடுக்கும் போது துளைக்குள்ளேயே நின்றுவிடும் தொழில்நுட்பமாகும். இந்த சுரங்கப்பாதையில் 6 இன்ஞ் துளை அமைத்து பணியை மேற்கொள்ளும் போது முதல் முறையாக இரும்பு ராடு ஒன்று குறுக்கிட்டதால் தோல்வி கண்டோம். 2-வது முறை ஒரு தடங்கல் ஏற்பட்டு 3-வது முறையாக வெற்றி பெற்றோம்.

    இதன் மூலம் தான் தற்போது சுரங்க பாதைக்குள் சிக்கியிருக்கிற தொழிலாளர்கள் எவ்வாறு இருக்கிறார்கள்? என்று கண்டறிய கேமரா மற்றும் ஆக்சிஜன் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் கொடுக்கப்பட்டு வருகிறது. உணவு, மருந்து, குடிநீர் ஆகியவையும் இதன் மூலம் வழங்கப்படுகிறது. எங்களுக்கு இந்த எந்திரம் இருந்ததால் தான் இந்த பணியை நாங்கள் செய்ய முடிந்தது. இந்த எந்திரத்தை உருவாக்கிய பி. ஆர். டி நிறுவனத்தை பாராட்டுகிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்.

    • ஓய்வூதியத்தை அரசே பொறுப்பேற்று வழங்க வேண்டும்.
    • 15-வது ஊதிய ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை தொடங்கி புதிய சம்பளம் வழங்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அரசு போக்குவரத்துக் கழகங்கள் தனது சேவையில் 50 ஆண்டுகால பொன்விழாவை கண்டுள்ளது.

    போக்குவரத்து தொழிலாளர்கள் பணி ஓய்வு பெற்று சுமார் 90 ஆயிரம் பேர் உள்ளனர்.

    இவர்களுக்கு அரசு பொறுப்பேற்று வழங்கும் ஓய்வூதியம் கிடையாது. பிஎப் டிரஸ்ட் மூலம் வழங்கப்படும் ஓய்வூதியத்தை தான் பெற்று வருகின்றனர்.

    இவர்களின் ஓய்வூதியத்தை அரசே பொறுப்பே ற்று வழங்க வேண்டும்.

    பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 15- வது ஊதிய ஒப்ப ந்தம் குறித்து பேச்சுவார்த்தை தொடங்கி புதிய சம்பளம் வழங்க வேண்டும்.

    ஓட்டுனர், நடத்துனர், தொழில்நுட்ப பணியாளர் உள்ளிட்ட காலி பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (வியாழக்கிழமை) மாநிலந்தழுவிய தொடர் முழக்க போராட்டம் திருச்சி போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன்பு நடைபெறுகிறது.

    இந்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திட கும்பகோணம், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, நாகப்பட்டினம் ஆகிய கழகங்களில் பணிபுரிந்து வரும் அனைத்து தொழிலாளர்களும், ஓய்வு பெற்ற அனைத்து ஓய்வூதியர்களும் கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 41 தொழிலாளர்களும் சிக்கியுள்ள சுரங்கத்துக்குள் அதிர்ஷ்டவசமாக மின் இணைப்பும், குடிநீர் இணைப்பும் உள்ளது.
    • இன்று 9-வது நாளாக மீட்பு பணிகள் முழு வீச்சில் நடக்கிறது.

    உத்தரகாசி:

    உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்தரகாசி பகுதியில் பிரம்மகால்-யமுனோத்திரி நெடுஞ்சாலையில் சில்க் யாரா-தண்டல்கான் பகுதிகளுக்கு இடையே மலைக்கு கீழ் நீண்ட சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    உத்தரகாண்ட் மாநிலத்தின் ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு எளிதான போக்குவரத்து வசதிக்காக இந்த சுரங்கப்பாதையை கடந்த சில ஆண்டுகளாக அமைத்து வருகிறார்கள்.

    கடந்த 12-ந்தேதி சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருந்தபோது அதன் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதனால் 41 தொழிலாளர்கள் சுரங்கப் பாதைக்குள் சிக்கிக் கொண்டனர். சுரங்கம் தோண்ட வேண்டிய மலை பகுதிக்கு கீழும் ஏற்கனவே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ள பகுதிக்கு இடையில் அவர்கள் சிக்கி தவித்து வருகிறார்கள்.

    அவர்களை மீட்க பேரிடர் மீட்பு குழுவினர் கடந்த 8 நாட்களாக போராடி வருகிறார்கள். முதலில் 3 அடி சுற்றளவு கொண்ட குழாய்களை உள்ளே செலுத்தி 41 தொழிலாளர்களையும் அதன் வழியாக மீட்கலாம் என்று ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அதற்கு வெற்றி கிடைக்கவில்லை.

    இதையடுத்து டெல்லியில் இருந்து அமெரிக்காவில் தயாரான அதிநவீன எந்திரம் விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது. அந்த எந்திரம் சுரங்கப்பாதைக்குள் மண் சரிந்து விழுந்துள்ள 70 மீட்டர் தூரத்தில் 24 மீட்டர் தூரத்துக்கு தோண்டியது. அதற்கு பிறகு மலைப்பகுதியில் குறிப்பாக சுரங்கப்பாதை மேல் அதிர்வுகள் ஏற்பட்டதால் ஒட்டுமொத்த சுரங்கப்பாதையும் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டது.

    இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் அமெரிக்க எந்திரம் மூலம் சுரங்கம் தோண்டும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. இதற்கிடையே சுரங்கப்பாதைக்குள் சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு தொடர்ந்து சிறிய குழாய் வழியே உலர் பழங்கள், உணவு வகைகள், ஆக்சிஜன் காற்று அனுப்பப்பட்டு வருகின்றன.

    41 தொழிலாளர்களும் சிக்கியுள்ள சுரங்கத்துக்குள் அதிர்ஷ்டவசமாக மின் இணைப்பும், குடிநீர் இணைப்பும் உள்ளது. இதனால் தொழிலாளர்கள் சற்று தைரியமான மனநிலையுடன் வெளியில் இருப்பவர்களுடன் பேசி வருகிறார்கள். 41 தொழிலாளர்கள் எத்தகைய நிலையில் இருக்கிறார்கள் என்பதை சிறிய ரக டிரோன் மூலம் கண்காணித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் 41 தொழிலாளர்களையும் மீட்க சுரங்கப்பாதை மேல் பகுதியில் மலை உச்சியில் இருந்து துளையிட்டு மீட்பு பணிகளை செய்யலாமா? என்று ஆலோசிக்கப்பட்டது. இந்த பணிகள் செய்வதற்கு எந்திரங்களை எடுத்து செல்ல மலை மீது சுமார் ஆயிரம் மீட்டர் தூரத்துக்கு சாலை அமைக்க வேண்டும். அந்த பணிகள் நேற்று நடந்தது.

    கடந்த 2015-ம் ஆண்டு இதுபோல் நடந்த ஒரு விபத்தில் மலை உச்சியில் இருந்து துளையிட்டு பணியாளர்கள் மீட்கப்பட்டனர். அதே தொழில்நுட்பத்தை கையாள முடிவு செய்து மலையில் சாலை அமைக்கும் பணியை எல்லைப்படை வீரர்கள் தொடங்கி உள்ளனர். இன்றும் மலையில் சாலை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    இதற்கிடையே 41 தொழிலாளர்களை மீட்பதற்கு 5 முன்னணி நிறுவனங்கள் களத்தில் குதித்து உள்ளன. எண்ணெய் மற்றும் இயற்கை வாயு நிறுவனம் (ஓ.எம்.சி.) சட்லஜ் நதி வாரியம் ரெயில் நிறுவனம், தேசிய நெடுஞ்சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம், தெக்ரி டெக்ரோ டெவலப் மெண்ட் கார்ப்பரேஷன் ஆகிய 5 நிறுவனங்களும் 5 விதமான திட்டங்களுடன் மீட்பு பணியில் தங்களது நிறுவனங்களை இறக்கி விட்டுள்ளன.

    இவர்களுக்கு பேரிடர் மீட்பு குழு மற்றும் எல்லைப் பாதுகாப்பு படை வீரரக்ள் துணையாக இருந்து பணிகளை தொடங்கி உள்ளனர். சட்லஜ் நதி நீர் நிறுவனத்தினர் மலை உச்சியில் இருந்து சுரங்கப்பாதையை இணைக்கும் துளையை போடுவதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

    இந்த நிலையில் மற்ற நிறுவனங்கள் மூலமாகவும் சுரங்கப்பாதைக்குள் இருக்கும் 41 தொழிலாளர்கள் இருக்கும் பகுதியை இணைக்க 3 இடங்களில் துளை போட முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான பணிகளும் நடந்து வருகின்றன. இப்படி பல்வேறு வகைகளிலும் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.

    இன்று 9-வது நாளாக மீட்பு பணிகள் முழு வீச்சில் நடக்கிறது. இன்று தொடங்கி இருக்கும் பணிகளில் திட்டமிட்ட வெற்றி கிடைத்தால் இன்னும் 2 தினங்களில் 41 தொழிலாளர்களையும் மீட்க முடியும் என்று மத்திய-மாநில அரசு அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    இன்று காலை பிரதமர் மோடி மீட்பு குழு உயர் அதிகாரிகளை போனில் தொடர்பு கொண்டு பேசினார். மீட்பு பணிகள் எப்படி நடந்து கொண்டிருக்கிறது என்பதை கேட்டறிந்தார்.

    • மீட்பு பணி தொடர்பாக உயர்மட்ட ஆலோசனை குழு கூட்டம் நடத்தப்பட்டது.
    • சிலர் சுரங்கப்பாதைக்குள் சிக்கியுள்ள தங்களது உறவினர்களிடம் அவ்வப்போது செல்போனில் பேசி வருகிறார்கள்.

    உத்தரகாசி:

    உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் சில்க்யாரா- தண்டல்கான் இடையே சுமார் 4.5 கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்பட்டு வரும் சுரங்கப்பாதையின் ஒரு பகுதி கடந்த 12-ந்தேதி இடிந்து விழுந்தது. இதில் 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்கள் ஆக்சிஜன் குறைந்த சூழ்நிலையில் அதற்குள் தவித்து வருகிறார்கள்.

    சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. தொழிலாளர்கள் வெளியே வருவதற்காக இடிந்து விழுந்த பகுதிக்குள் துளையிட்டு குழாய்களை செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக அமெரிக் காவில் தயாரிக்கப்பட்ட எந்திரம் பயன்படுத்தப்பட்டது.

    நேற்று பிற்பகலில் அந்த எந்திரம் மூலம் துளையிட்டு 5-வது குழாயை செலுத்தும் பணி நடைபெற்றது. அப்போது சுரங்கப்பாதைக்குள் ஒரு பலத்த விரிசல் சத்தம் கேட்டது. இந்த இடையூறு காரணமாக மீட்பு பணி நிறுத்தப்பட்டது.

    இதற்கிடையே மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து மற்றொரு அதிக சக்தி வாய்ந்த துளையிடும் எந்திரம் விமானம் மூலம் சுரங்கப பாதை பகுதிக்கு நேற்று கொண்டு வரப்பட்டது. அதன் மூலம் துளியிடும் பணிக்கு மீட்பு படையினர் தயாராகி வருகிறார்கள். இதற்காக மலை உச்சியில் இருந்து செங்குத்தாக துளைபோட முயற்சி செய்து வருகிறார்கள்.

    சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணியில் நிபுணர்கள் குழுவுடன் பிரமதர் அலுவலகத்தின் அதிகாரிகள் குழுவும் இணைந்துள்ளனர். இது தொடர்பாக பிரதமரின் முன்னாள் ஆலோசகர் பாஸ்கர் குல்பே கூறுகையில், 'தொழிலாளர்களை மீட்க நிபுணர்களுடன் இணைந்து 5 திட்டங்களை வகுத்துள்ளோம். ஒரே வழியில் மட்டும் முயற்சி செய்யாமல் 5 திட்டங்களையும் ஒரே நேரத்தில் செயல்படுத்தி மீட்பு பணிகளில் ஈடுபட வேண்டும் என்பதில் நிபுணர்கள் அனைவரும் ஒருமித்த கருத்துடன் உள்ளனர்.

    மீட்பு படையினரின் ஒருங்கிணைந்த முயற்சியால் தொழிலாளர்கள் இன்னும் 4 அல்லது 5 நாட்களில் மீட்கப்படுவார்கள். ஆனால் கடவுள் போதுமான அளவில் கருணை காட்டினால், அவர்கள் அதற்கு முன்பே மீட்கப்படுவார்கள்' என்றார்.

    இதன் அடிப்படையில் மீட்பு பணி தொடர்பாக உயர்மட்ட ஆலோசனை குழு கூட்டம் நடத்தப்பட்டது. அதில் தொழிலாளர்களை மீட்பதற்கான 5 திட்டங்கள் தொடர்பாக அவர்கள் கலந்தாலோசித்தனர்.

    இதற்கிடையே சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களின் உறவினர்கள் மீட்பு பணி நடைபெறும் இடத்தில் சுரங்கப்பாதைக்கு வெளியே தொடர்ந்து வேதனையுடன் காத்திருக்கிறார்கள். அதில் சிலர் சுரங்கப்பாதைக்குள் சிக்கியுள்ள தங்களது உறவினர்களிடம் அவ்வப்போது செல்போனில் பேசி வருகிறார்கள்.

    சுரங்கப்பாதைக்குள் சிக்கியுள்ள தொழிலாளர்கள் முன்பு இருந்ததை விட தற்போது மிகவும் சோர்வாக இருப்பதாகவும், அவர்கள் உடல்நிலை மோசமடைந்து வருவதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

    • சுரங்கப்பாதையின் மேற்பகுதியில் அடுத்தடுத்து மண்ணில் விரிசல் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
    • 41 தொழிலாளர்களும் நல்ல மனநிலை மற்றும் நல்ல உடல்நலத்துடன்இருப்பார்களா? என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    உத்தரகாசி:

    உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் பிரம்மகால்-யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சில்க்யாரா, தண்டல்கான் பகுதிகளுக்கு இடையே சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    சுரங்கப் பாதையின் நடுப்பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மண் சரிந்து விபத்து ஏற்பட்டது. அதில் 41 தொழிலாளா்கள் சுரங்கத்தின் நடுவில் சிக்கிக் கொண்டனா்.

    அவா்களை மீட்கும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் மற்றும் பேரிடா் மீட்புக் குழுவினா் சுமார் 200 பேர் ஈடுபட்டுள்ளனா். முன்னதாக இடிபாடுகளில் துளையிட்டு பெரிய இரும்புக் குழாக்களைச் செலுத்தி, அவற்றின் வழியே தொழிலாளா்களை வெளியே மீட்டு வர திட்டமிடப்பட்டது. ஆனால் துளையிடும் எந்திரம் சரிவர வேலை செய்யவில்லை.

    இதையடுத்து வேறு எந்திரம் மூலம் சுரங்கத்தில் ஏற்பட்டுள்ள பாறை சரிவை துளையிட முடிவு செய்யப்பட்டது. அதன்படி டெல்லியில் இருந்து இந்திய விமானப் படையின் சி-130 ஹொ்குலிஸ் விமானத்தின் மூலமாக விபத்துப் பகுதிக்கு 25 டன் அளவிலான அமெரிக்காவில் தயாரான அதி நவீன கனரக எந்திரம் கடந்த 15-ந் தேதி கொண்டு செல்லப்பட்டது.

    இந்த எந்திரம் ஒரு மணி நேரத்தில் 6 மீட்டர் தூரத்துக்கு பாறைகளில் துளையிடும் ஆற்றல் கொண்டது. இந்த நவீன எந்திரம் மூலம் சுரங்கப்பாதையின் இடிபாடுகளில் துளையிடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது.

    சுரங்கப் பாதையின் நடுப்பகுதியில் சரிந்து விழுந்துள்ள பாறை கலந்த மண் பகுதி சுமார் 70 மீட்டர் தூரத்துக்கு உள்ளது. அந்த 70 மீட்டர் தூரத்தையும் நவீன எந்திரம் மூலம் துளையிட்டு சென்றால்தான் 41 தொழிலாளர்களையும் மீட்க முடியும்.

    தொழிலாளர்கள் சிக்கி இருக்கும் பகுதிக்குள் தொடர்ந்து ஆக்சிஜன் மற்றும் உணவு பொருட்கள் அனுப்பப்பட்டு வருகிறது. இதற்கிடையே நவீன எந்திரம் மூலம் நேற்று காலை தொடங்கிய துளையிடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதனால் 24 மீட்டர் தூரத்துக்கு அந்த எந்திரம் துளையிட்டு இருந்தது.

    அதன் பிறகு பாறைகளில் மிகவும் வலுவான பகுதி இருந்ததால் துளையிடும் பணியில் சற்று தாமதம் ஏற்பட்டது. இன்னும் பாதிக்கு மேற்பட்ட தொலைவுக்கு துளையிட வேண்டியது உள்ளது.

    இதற்கிடையே 41 தொழிலாளர்கள் சிக்கியுள்ள சுரங்கப்பாதையில் உலோகப்பகுதி ஒன்று உள்ளது. இந்த உலோகப் பகுதியை வெட்டி அகற்றினால் தான் சுரங்கப் பாதையில் துளையிடும் பணியை தொடர முடியும். எனவே அந்த உலோக பகுதியை கட்டர் மூலம் வெட்டி அகற்றுவதற்காக பணிகள் நடந்தன.

    நேற்று அந்த பணிகள் நடந்து கொண்டிருந்த போது சுரங்க பாதை இடிந்து விழுவதை போன்று பயங்கர சத்தம் கேட்டது. இதனால் மீட்பு குழுவினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனடியாக மீட்பு பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. நேற்று மாலை 4 மணிக்கு நிறுத்தப்பட்ட மீட்பு பணிகள் இன்று மதியம் வரை தொடங்கவில்லை.

    சுரங்கப்பாதையின் மேற்பகுதியில் அடுத்தடுத்து மண்ணில் விரிசல் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சுரங்கப் பாதைக்குள் இடிபாடுகளை நவீன எந்திரங்கள் மூலம் அகற்றும்போது கடுமையாக அதிர்வு ஏற்படுவதாக தெரிய வந்துள்ளது.

    இந்த அதிர்வு காரணமாக சுரங்கப்பாதை ஓட்டுமொத்தமாக இடிந்து விழுந்துவிடுமோ? என்ற அச்சம் எழுந்துள்ளது. இதையடுத்து சுரங்கப்பாதையின் மேல் இருந்து துளைபோட்டு 41 தொழிலாளர்களை மீட்கலாமா? என்று ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

    சுரங்கப்பாதை மீட்பு பணிகளில் அடுத்தடுத்து இடையூறு ஏற்படுவதால் 41 பேரையும் திட்டமிட்டப் படி மீட்பதில் சிக்கல் நீடிக்கிறது. இந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) 7-வது நாளாக 41 தொழிலாளர்களையும் மீட்கும் பணி நடக்குமா? என்று கேள்விக்குறி நீடிக்கிறது.

    சுமார் 150 மணி நேரம் கடந்துவிட்டதால் சுரங்கப் பாதைக்குள் சிக்கி இருக்கும் 41 தொழிலாளர்களும் நல்ல மனநிலை மற்றும் நல்ல உடல்நலத்துடன்இருப்பார்களா? என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    • கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • கட்டுமான தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகை போனசாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் தாசில்தார் அலுவலகம் முன்பாக சேலம் ஜில்லா கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேட்டூர் வட்டாரத் தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.

    கட்டுமான தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகை போனசாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். கட்டுமான நல வாரிய கூட்டம் முடிவின்படி ஓய்வூதியம் ரூ.2 ஆயிரத்திற்கான அரசாணை வெளியிட வேண்டும். பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதில் ஓய்வூயம் வழங்க வேண்டும். கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். மாவட்டம் தோறும் அரசு மணல் குவா ரிகளை அமைத்து மணல் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 50-க்கும் மேற்பட்ட கட்டிட தொழிலாளர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் சங்க நிர்வாகிகள் இளங்கோ, கருப்பண்ணன், மோகன், கோவிந்தராஜ், தேவி, செல்வ கணபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நீடாமங்கலத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு 1000 டன் நெல் அரவைக்காக நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.
    • நெல் மூட்டைகளை சரக்கு ரெயிலின் 21 பெட்டிகளில் ஏற்றினர்.

    வலங்கைமான்:

    திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு ஆயிரம் டன் நெல் அரவைக்காக நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. முன்னதாக நீடாமங்கலம், மன்னார்குடி ஆகிய தாலுகாக்களில் இயங்கி வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட ஆயிரம் டன் எடை கொண்ட சன்னரக நெல் 78 லாரிகளில் நீடாமங்கலம் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.

    பின்னர் சுமைதூக்கும் தொழிலாளர்கள் நெல் மூட்டைகளை சரக்கு ரெயிலின் 21 பெட்டிகளில் ஏற்றினர். இதனைத் தொடர்ந்து நெல் மூட்டைகளுடன் சரக்கு ரெயில் திருவண்ணாமலைக்கு புறப்பட்டு சென்றது.

    • விடுப்பு எடுக்காமல் பணியாற்றிய 976 தொழிலாளர்களுக்கு பரிசு-சான்றிதழ் வழங்கப்பட்டது.
    • முடிவில் மனித வள மேம்பாட்டு துறை துணை பொது மேலாளர் ரங்கராஜ் நன்றி கூறினார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையத்தில் ராம்கோ குரூப் டெக்ஸ்டைல்ஸ் டிவிசன் தி ராமராஜூ சர்ஜிகல் காட்டன் மில்ஸ், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ், சுதர்சனம் பேப்ரிக்ஸ், மற்றும் தரம் டெக்ஸ்டைல்ஸ் ஆகிய தொழிற்சாலைகளில் பணி புரியும் தொழிலா ளர்களுக்கான 42-வது ஆண்டு விஜயதசமி விளையாட்டு விழா நிகழ்ச்சிகள் ஆலையின் வளாகத்தில் நடைபெற்றது.

    விழாவிற்கு ராம்கோ குரூப் சேர்மன் பி.ஆர்.வெங்கட்ராமராஜா தலைமை தாங்கினார்.

    மில்களின் மேனேஜிங் டைரக்டர்கள் என்.ஆர்.கே.ராம்குமார் ராஜா, நளினா ராமலட்சுமி, ஸ்ரீகண்டன் ராஜா, பி.ஜே. ராம்குமார் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முதன்மை நிதிநிலை அதிகாரி விஜய்கோபால் வரவேற்றார். விழாவில் ஏ.ஐ.டி.யு.சி, எச்.எம்.எஸ், ஐ.என்.டி.யு.சி தொழிற்சங்கங்களின் தலைவர்கள் தொழிலாளர்களுக்கு கிடைத்து வரும் பல்வேறு நீண்ட கால சலுகைகள் பற்றி பேசினர்.

    விழாவில் ராம்கோ குரூப் சேர்மன் பி.ஆர்.வெங்கட்ராம ராஜா பேசுகையில், தொழி லாளர்கள் அர்ப்பணிப்பு கலந்த உணர்வோடு பணிபுரிந்து வருவதால் இந்த நிறுவனம் 83 வருடம் இளமையா னதாகவும் மற்றும். உத்வேகம் கலந்த நிறுவனமாகவும் திகழ்கிறது என கூறினார்.

    பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

    கடந்த ஆண்டில் ஆலையில் சிறந்த முறையில் பணியாற்றி 15 முதல் 35 வருடம் சர்வீஸ் பூர்த்தி செய்த தொழிலாளர்கள், சென்ற ஆண்டில் சிறப்பாக பணியாற்றிய தொழிலாளர்கள், தொடர்ந்து விடுப்பு எடுக்காமல் பணியாற்றிய தொழிலாளர்கள், சென்ற ஆண்டில் 295 நாட்களுக்கு மேல் பணியாற்றிய தொழிலாளர்கள் என சுமார் 976 தொழி லாளர்களுக்கு ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    விழாவில் ராம்கோ குரூப் டெக்ஸ்டைல் டிவிசன் பிரசிடெண்ட் மோகன் ரங்கன், மூத்த பொது மேலாளர் சந்தோஷ், பொது மேலாளர் சுந்தர்ராஜ், நிர்வாகஅதிகாரிகள், அலுவலர்கள் ஊழியர்கள் தொழிற்சங்க பிரதிநிதிகள் தொழிலாளர்கள் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

    முடிவில் மனித வள மேம்பாட்டு துறை துணை பொது மேலாளர் ரங்கராஜ் நன்றி கூறினார்.

    • அமைப்புசாரா தொழிலாளர்கள் ஆன்லைனில் பதிவு செய்யலாம்.
    • தொழிலாளர்கள் தாங்களாகவே விவரங்களை htts://eshram.gov.in இணைய தளத்தில் பதிவு செய்யலாம்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மாநில அரசின் பல்வேறு வகையான நலத்திட்டங்க ளின் கீழ் பதிவு செய்துள்ள தொழிலாளர்கள் மற்றும் 370 வகையான அமைப்பு சாரா தொழிலாளர்கள் தங்களின் விவரங்களை பொதுசேவை மையங்களி லும், இ-சேவை மையங்க ளிலும் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. தொழிலாளர்கள் தாங்களா கவே விவரங்களை htts://eshram.gov.in இணைய தளத்தில் பதிவு செய்யலாம்.

    கட்டுமான தொழிலா ளர்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், வீட்டு பணியாளர்கள், விவசாய தொழிலாளர்கள், குத்தகை தாரர்கள், பேக்கிங் செய்வோர், தச்சர்கள், கல்குவாரி தொழிலாளர்கள், மர ஆலை தொழிலாளர்கள், கூலி தொழிலாளர்கள், முடி திருத்துவோர், தெரு வியாபாரிகள், சிறு வியா பாரிகள், அங்கன்வாடி பணியாளர்கள், ேதாட்ட தொழிலாளர்கள், பால் வியாபாரிகள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் போன்ற வர்களின் விவரங்கள் இந்த தளத்தில் பதிவு செய்யப் பட்டு வருகிறது.

    இதில் 16 முதல் 59 வயதுடைய தொழிலாளர்கள் தங்களது விவரங்களை கட்டணமின்றி பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்த பின்னர் அவர்களுக்கு 12 இலக்க எண் கொண்ட அடையாள அட்டை வழங்கப்படும். அவர்கள் வேலை காரணங்களுக்காகவோ, அல்லது வேறு காரணங்களுக்காகவோ புலம் ெபயர்ந்தாலும் அர சின் சலுகைகளை பெற இந்த அடையாள அட்டையை பயன்படுத்தி கொள்ளலாம். தற்போது வரை சிவகங்கை மாவட்டத் தில் 2 லட்சத்து 35 ஆயிரத்து 88 அமைப்புசாரா தொழி லாளர்கள் பதிவு செய்து உள்ளனர்.

    தரவு தளத்தில் பதிவு செய்யப்பட்ட தொழிலா ளர்களின் 31.3.2022-க்கு முன்பாக விபத்தில் உயிர் இழந்த தொழிலாளர்களுக்கு ரூ.2 லட்சம், விபத்தில் கை, கால்களை இழந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் கருணை தொகையாக வழங்கப்பட உள்ளது.

    சிவகங்கை மாவட்டத்தில் தரவுதளத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களில் 31.3.2022-க்குள் விபத்தி னால் உயிரிழந்திருந்தாலோ அல்லது ஊனமடைந்திருந்தா லோ அந்த தொழிலாளர்கள் அல்லது வாரிசுதாரர்கள் சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் (அம லாக்கம்) அலுவலகத்தை அணுகி கருணை தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×