search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    35 வட மாநில பெண் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு
    X

    35 வட மாநில பெண் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு

    • சேலம் மாவட்டம் தலை வாசல் அருகே மணிவிழுந்தானில் ஒரு நூற்பாலை உள்ளது.
    • பெண் ெதாழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும்படி அதிகாரிகளிடம் கூறி கதறி அழுதனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் தலை வாசல் அருகே மணிவிழுந்தானில் ஒரு நூற்பாலை உள்ளது. இங்கு உள்ளூர் மட்டு மின்றி வடமாநில தொழி லாளர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் பணி புரிகின்றனர். வடமாநில பெண் தொழிலாளர்கள் சிலர், பெண்கள் பாது காப்புக்கான தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு, பணி கடினமாக உள்ளது. ஆலையில் இருக்க விரும்பமில்லை என புகார் கூறியுள்ளனர்.

    இதையடுத்து சேலம் மாவட்ட சமூக நலத்துறை உத்தரவுப்படி வரு வாய்த்துறை அதிகாரிகள் விரைந்து சென்று நூற்பாலையில் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு பணியாற்றி வந்த ஜார்கண்ட், சத்தீஸ்கர், ஓடிசா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பெண் ெதாழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும்படி அதிகாரிகளிடம் கூறி கதறி அழுதனர்.

    இதையடுத்து 35 பெண் தொழிலாளர்களை மீட்டு மருத்துவ பரிசோதனை செய்தனர். பின்னர் அவர்க ளுக்கான கூலி, கருணைத் தொகை தலா ரூ.10 ஆயிரம் வழங்கினர். இதையடுத்து அவர்கள் சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    Next Story
    ×