search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை"

    • "பணமதிப்பிழப்பு" மற்றும் "சரக்கு மற்றும் சேவை வரி" (GST) சிறு தொழில்களை அழித்து விட்டது
    • வேலைவாய்ப்பின்மை பாகிஸ்தானில் 12 சதவீதம்; இந்தியாவில் 23 சதவீதம் என்றார் ராகுல்

    "இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை" (பாரத் ஜோடோ நியாய் யாத்ரா) எனும் பெயரில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

    அதன் ஒரு பகுதியாக, மத்திய பிரதேச மாநிலத்தின், குவாலியர் (Gwalior) நகரில், ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.

    தனது உரையில், ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்தார்.

    அப்போது அவர் தெரிவித்ததாவது:

    "பணமதிப்பிழப்பு நடவடிக்கை" (demonetization) மற்றும் "சரக்கு மற்றும் சேவை வரி" (GST) ஆகியவை சிறு மற்றும் குறு தொழில்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்.

    இந்தியாவின் சிறு மற்றும் குறு தொழில்களை மோடி அடியோடு அழித்து விட்டார்.

    கடந்த 40 வருடங்களில் இல்லாத அளவு இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை தலைவிரித்தாடுகிறது.

    பாகிஸ்தானை விட 2 மடங்கு வேலைவாய்ப்பின்மை இந்தியாவில் நிலவுகிறது. இங்கு 23 சதவீதம்; அங்கு 12 சதவீதம்தான்.

    வங்காள தேசம் மற்றும் பூடான் ஆகிய நாடுகளை விட அதிகமாக வேலையில்லாத இளைஞர்கள் இங்கு உள்ளனர்.

    இவையனைத்திற்கும் பிரதமர் மோடிதான் காரணம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    குவாலியரில், இந்திய ராணுவத்தின் "அக்னிவீர்" (Agniveer) திட்டத்தில் இணைந்த வீரர்களுடனும், முன்னாள் ராணுவ வீரர்களுடனும் ராகுல் காந்தி கலந்துரையாடினார்.

    பொருளாதார ஏற்றத்தாழ்வு, சமூக அநீதி மற்றும் விவசாயிகளுக்கும் இளைஞர்களுக்கும் எதிராக நடக்கும் அநீதி ஆகிய தீமைகளுக்கு எதிராக போராடும் விதமாகவும், நாடு முழுவதும் பரப்பப்படும் வெறுப்புணர்ச்சிக்கு எதிராகவும் தனது யாத்திரையின் பெயரில் "நியாய்" எனும் வார்த்தை சேர்க்கப்பட்டதாக ராகுல் காந்தி கூறினார்.

    • உ.பி.யின் அலிகாரில் இன்று நடந்த இந்திய ஒற்றுமை யாத்திரையில் பிரியங்கா பங்கேற்றார்.
    • இந்த யாத்திரையில் லோக்தளம் கட்சி தொண்டர்களும் பங்கேற்றனர். 

    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலம் அலிகாரில் உள்ள ஜமால்பூரில் நடந்த இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையில் ராகுல் காந்தியுடன் பிரியங்கா காந்தி இன்று கலந்து கொண்டார். இதில் லோக்தளம் கட்சி தொண்டர்களும் பங்கேற்றனர். 

    இந்த யாத்திரை அம்ரோஹா, சம்பல், புலந்த்சாஹர், அலிகார், ஹத்ராஸ் மற்றும் ஆக்ரா வழியாக பதேபூர் சிக்ரி செல்கிறது. இதில் ராகுல் காந்தியுடன் திறந்த ஜீப்பில் அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் அமர்ந்து கொண்டு தொண்டர்களைப் பார்த்து உற்சாகமாக கையசைத்தவாறு சென்றார். அப்போது பிரியங்கா காந்தி பேசியதாவது:

    பா.ஜ.க. 10 ஆண்டாக ஆட்சியில் உள்ளது. ஜி20 மாநாடு போன்ற பல பெரிய நிகழ்வுகள் நடந்தன. இதுபோன்ற நிகழ்வுகளால் நாட்டின் மரியாதை கூடுகிறது என எல்லோரும் சொன்னார்கள். நாங்கள் கூட ஒப்புக்கொள்கிறோம்.

    நாட்டின் மரியாதையில் இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் தொடர்பில்லையா? இளைஞர்களுக்கு வேலை இல்லை, விவசாயிகள் இன்னும் சாலையில் அமர்ந்திருக்கிறார்கள். பணவீக்கம் நாட்டு மக்களுக்கு சுமையாக இருக்கிறது. இதை எல்லாம் நான் சுட்டிக்காட்டி கேள்வி கேட்க விரும்புகிறேன் என தெரிவித்தார்.

    காங்கிரஸ், சமாஜ்வாதி இடையேயான தொகுதி பங்கீடு முடிந்துள்ள நிலையில், யாத்திரை நிகழ்ச்சியில் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, இன்று கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். இந்த யாத்திரை இந்தியா கூட்டணி ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையில் அமைந்தது.

    இன்று மாலை ஆக்ராவில் நடைபெற உள்ள யாத்திரையில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பங்கேற்க உள்ளார்.

    ×