search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெஸ்லா"

    • டெஸ்லா நிறுவன சி.இ.ஓ.வான எலான் மஸ்க் வரும் 22ம் தேதி இந்தியா வருகிறார்.
    • இந்திய வருகையின் போது பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்.

    புதுடெல்லி:

    பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான எக்ஸ் வலைதளத்தின் உரிமையாளராகவும், டெஸ்லா நிறுவனத்தின் சி.இ.ஓ. ஆகவும் இருந்து வருபவர் எலான் மஸ்க். இவர் உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்று வருகிறார்.

    இந்நிலையில், எலான் மஸ்க் வரும் 22-ம் தேதி இந்தியாவுக்கு வருகை தர உள்ளதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

    அவரது இந்திய வருகையின் போது பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளார்.

    இந்தியாவில் புதிய முதலீடுகள் மற்றும் புதிய தொழிற்சாலைகள் அமைப்பது குறித்து விவாதிக்க உள்ளார் என தெரிவித்துள்ளது.

    • சியோமி SU7 மாடல் மே மாதம் விற்பனைக்கு வருகிறது.
    • 900 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும்.

    சியோமி நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் வாகனம் - SU7 மாடலை அறிமுகம் செய்தது. ஆன்லைன் நேரலையில் சியோமி தலைமை செயல் அதிகாரி லெய் ஜூன் புதிய எலெக்ட்ரிக் கார் மாடலை அறிவித்தார். அறிமுகத்தின் போது புதிய SU7 மாடலை டெஸ்லா மாடல் 3 காருடன் நேரடியாக ஒப்பிட்டார். இதோடு, சியோமி SU7 மாடல் சீன சந்தையில் மே மாதம் விற்பனைக்கு வரும் என்று அறிவித்துள்ளார்.

    புதிய சியோமி SU7 மாடலில் டூயல் மோட்டார்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை இணைந்து 637 ஹெச்.பி. பவர், 838 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளன. பயனர்கள் தேர்வு செய்யும் வேரியண்டிற்கு ஏற்ப சியோமி SU7 மாடல் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 900 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என்று சியோமி தெரிவித்துள்ளது.

     


    இந்த எலெக்ட்ரிக் கார் மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 2.78 நொடிகளில் எட்டிவிடும். மேலும் மணிக்கு அதிகபட்சம் 265 கிலோமீட்டர்கள் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. ஐந்து மீட்டர்கள் நீளமாக உள்ள சியோமி SU7 2 மீட்டர்கள் அகலம், 3 மீட்டர்கள் வீல்பஸ் கொண்டிருக்கிறது. இந்த கார் மொத்தத்தில் ஒன்பது விதமான நிறங்களில் கிடைக்கும்.

    புதிய எலெக்ட்ரிக் கார் அம்சங்களில் - வாட்டர் டிராப் ஹெட்லைட்கள், ஹாலோ டெயில் லைட்கள், ஆக்டிவ் ரியர் ஸ்பாயிலர், ஃபுளோயிங் கர்வ், மறைக்கப்பட்ட நிலையில் கதவுகளின் கைப்பிடிகள் உள்ளிட்டவை குறிப்பிடத்தக்க அம்சங்களாக உள்ளன. இந்த எலெக்ட்ரிக் கார் சியோமியின் ஹைப்பர் ஒ.எஸ். கொண்டிருக்கிறது.

    இதை கொண்டு பயனர்கள் தங்களது சியோமி ஸ்மார்ட்போன், டேப்லெட் மற்றும் இதர சாதனங்களை காருடன் இணைத்துக் கொள்ள முடியும். இந்த காரில் ராப்-அரவுண்ட் காக்பிட், பல்வேறு ஸ்கிரீன்கள், டிரைவர் அசிஸ்டன்ஸ் அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    சியோமி SU7 பேஸ் மாடலில் 73.6 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்படுகிறது. இது முழு சார்ஜ் செய்தால் 700 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என்று தெரிகிறது. இந்த வேரியண்ட் மணிக்கு அதிகபட்சம் 210 கிலோமீட்டர்கள் வேகத்தில் செல்லும். இதன் விலை சீன சந்தையில் 2 லட்சத்து 15 ஆயிரத்து 900 யுவான்கள், இந்திய மதிப்பில் ரூ. 24 லட்சத்து 90 ஆயிரத்து 413 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இந்த காரின் டாப் என்ட் வேரியண்டில் 101 கிலோவாட் ஹவர் பேட்டரி உள்ளது. இதை முழு சார்ஜ் செய்தால் 900 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும். இதன் விலை 2 லட்சத்து 99 ஆயிரத்து 900 யுவான்கள், இந்திய மதிப்பில் ரூ. 34 லட்சத்து 59 ஆயிரத்து 356 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அமெரிக்காவில் 2022 இறுதியில் இருந்தே ஆட்குறைப்பு தொடங்கியது
    • 50 சதவீத ஊதிய குறைப்புக்கு முன்வந்தாலும் பணி கிடைப்பது கடினமாக உள்ளது

    கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக அமெரிக்காவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப மற்றும் மென்பொருள் நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.

    2022 இறுதியில் தொடங்கி, டெஸ்லா, எக்ஸ், மெட்டா, கூகுள், அமேசான், மைக்ரோசாப்ட் உட்பட பல நிறுவனங்கள் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களை நீக்கின.

    உலகெங்கும் இருந்து அந்நிறுவனங்களில் பணியாற்ற சென்ற ஊழியர்களுக்கு வேறு வேலை கிடைக்காததால் விசா காலம் நிறைவடைந்து அமெரிக்காவில் இருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது.

    இந்தியாவிலிருந்தும் அவ்வாறு பணியாற்ற சென்று ஆட்குறைப்பு நடவடிக்கையில் பணியிழந்தவர்களில் பலர் மீண்டும் தாயகம் திரும்பினர்.

    ஆனால், அவர்களுக்கு புது சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    2023ல் இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப மற்றும் மென்பொருள் நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையை தொடங்கி விட்டன.

    இங்கு பணியிழக்கும் ஊழியர்கள் ஊதியம் குறைந்தாலும், வேறு வேலை கிடைத்தால் போதும் எனும் முடிவில் கிடைக்கும் நிறுவனங்களில் உடனடியாக பணியில் சேர்கின்றனர்.

    அமெரிக்காவிலிருந்து வரும் இந்திய ஊழியர்கள் பெற்ற ஊதியத்துடன் ஒப்பிட்டால் இங்கு பணியில் இருப்பவர்களுக்கும், வேலையிழப்பினால் குறைந்த சம்பளத்தில் வேலைக்கு வருபவர்களுக்கும் நிறுவனங்கள் வழங்க வேண்டிய ஊதியம் மிகக் குறைவு.

    எனவே, அங்கிருந்து வருபவர்களுக்கு தகுதி இருந்தும் வேலை கிடைப்பது கடினமாக உள்ளது.

    அமெரிக்காவுடன் ஒப்பிட்டால் தகவல் தொழில்நுட்ப துறையில் காலியிடங்கள் மிக குறைவாக உள்ளதாகவும், ஒரே பணிக்கு 100க்கும் மேற்பட்ட திறமை வாய்ந்த ஊழியர்கள் விண்ணப்பிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளதாகவும் மனிதவள நிபுணர்கள் தெரிவித்தனர்.

    சுமார் 50 சதவீதம் வரை ஊதியத்தை குறைத்து கொள்ள அவர்கள் முன்வந்தாலும், மீண்டும் பணி கிடைப்பதே கடினமாகி வருகிறது.

    அங்கும் வேலை இழந்து, இங்கும் வேலை கிடைக்காமல், பல வருட சேமிப்புகளும் நாளுக்கு நாள் கரைந்து அவர்களின் நிலை நலிவடைந்து வருகிறது.

    2024-ஆம் வருடத்திலும் உலகளாவிய பொருளாதார மந்தநிலை நீடித்தால், மேலும் பல சாஃப்ட்வேர் துறை ஊழியர்கள் பணி இழக்கும் அபாயம் ஏற்படலாம் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

    • சீனா அரசின் தொழில்துறையின் வளர்ச்சிக்காக குறிப்பிடத்தக்க நிதி ஒரு முக்கியம் காரணம்.
    • பி.ஒய்.டி-ன் வளர்ச்சிக்கு அதன் அடிப்படை வணிகமான பேட்டரிகள் காரணமாக இருக்கலாம்.

    சீனாவின் பி.ஒய்.டி, முதல் முறையாக உலகின் சிறந்த மின்சார-வாகன உற்பத்தியாளரான எலோன் மஸ்க்கின் டெஸ்லாவை முந்தி முதலிடத்தை பிடித்தது.

    சீனாவை சார்ந்த பி.ஒய்.டி நிறுவனம் முதல் முறையாக உலகின் அதிகம் விற்பனையாகும் மின்சார வாகன உற்பத்தியாளரான எலோன் மஸ்கின் டெஸ்லாவை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளது. இதற்கு சீனா அரசின் தொழில்துறையின் வளர்ச்சிக்காக குறிப்பிடத்தக்க நிதி ஒரு முக்கியம் காரணம். 

    கடந்த ஆண்டின் இறுதியில் அமெரிக்கா குழுமம் 4,84,000 வாகனங்களை வழங்கியுள்ளது, ஆய்வாளர்களால் கணிக்கப்பட்டுள்ள 473,000 வாகனங்களை விட அதிகமாக இருந்தது. ஆனாலும் பி.ஒய்.டி அதே நேரத்தில் 5,26,000 பேட்டரி வாகன விற்பனையை பதிவு செய்து முதலிடத்தை தக்கவைக்க கொண்டது.

    டெஸ்லா 1.8 மில்லியன் ஆட்டோமொபைல்களை விற்றது. பி.ஒய்.டி 1.58 மில்லியன் மின்சார வாகனங்களை வழங்கியது. இந்த சாதனையானது, மின்சார வாகனத் துறையை மேம்படுத்த உதவுவதில் நிறுவனம் கொண்ட முயற்சி. பி.ஒய்.டி நிறுவனம், நுகர்வோரை சீனாவின் குறைந்த விலை மின்சார வாகனங்களை வாங்க தூண்டியது. 

    நிருபர்களின் கூற்றுப்படி, பி.ஒய்.டி-ன் வளர்ச்சிக்கு அதன் அடிப்படை வணிகமான பேட்டரிகள் காரணமாக இருக்கலாம். அவை மின்சார வாகனத்தின் மிகவும் விலையுயர்ந்த கூறுகளில் ஒன்று. பி.ஒய்.டி-ன் போட்டியாளர்கள் பலர் மூன்றாம் தரப்பு பேட்டரி தயாரிப்பாளர்களை சார்ந்துள்ளனர்.

    ஆனால் பி.ஒய்.டி நிறுவனம் தானே பேட்டரி தயாரிப்பதால் இந்த சாதனை பெற்றுள்ளது என்று கூறப்படுகிறது.

    • ஹெச்1-பி விசா நடைமுறை இந்தியர்களுக்கு பெரிதும் பயனளித்தது
    • கள்ளத்தனமாக வருபவர்களுக்கு வசதி செய்திருக்கிறோம் என்கிறார் மஸ்க்

    சட்டவிரோதமாக அமெரிக்காவிற்கு உள்ளே நுழைபவர்களை தடுக்க எல்லைகளை பலப்படுவது உள்ளிட்ட பல முயற்சிகளை அந்நாட்டு அரசு எடுத்து வருகிறது. அதே போல், சட்டரீதியாக அனுமதி பெற்று அங்கு கல்வி பயிலவும், பணியாற்றவும் வருபவர்களின் எண்ணிக்கையையும் குறைக்க முடிவு செய்து பல கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது.

    உலகின் பல நாடுகளிலிருந்து அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களில் பணியாற்ற விரும்புபவர்களுக்கு, குடியுரிமை இல்லாமல், அயல்நாட்டு பணியாளராக மட்டுமே நீண்ட காலம் அமெரிக்காவில் பணி புரிய வாய்ப்பளித்து வருவது ஹெச்1-பி விசா (H1-B visa) நடைமுறை.

    இது இந்தியாவில் மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான ஊழியர்களுக்கு மிகவும் பயனளித்து வந்தது.

    ஹெச்1-பி விசா எண்ணிக்கைக்கும் அரசு உச்சபட்ச அளவை நிர்ணயித்துள்ளது.

    கடந்த 2020 ஜூலை மாதம், அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புது விசா வழங்கலை தற்காலிகமாக நிறுத்தி வைத்தார்.

    தற்போதைய ஜோ பைடன் அரசு விசா வழங்கலில் கட்டுப்பாடுகளை தளர்த்தவில்லை.

    இந்நிலையில், சுமார் 7 லட்சத்திற்கும் மேல் திறமை வாய்ந்த பணியாளர்கள் அமெரிக்காவிற்கு வர காத்திருக்கும் நிலையில், 85 ஆயிரத்திற்கு மேல் ஹெச்1-பி விசா வழங்கப்படாது என உச்சவரம்பை அமெரிக்கா நிர்ணயித்துள்ள தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

    அதே போன்று, முன்னாள் அதிபர்கள் டொனால்ட் டிரம்ப் மற்றும் பராக் ஒபாமா ஆகியோரின் ஆட்சிகளிலும் தற்போது ஜோ பைடனின் ஆட்சியிலும் சட்டவிரோதமாக உள்ளே நுழைபவர்களின் எண்ணிக்கை குறித்து ஒப்பிட்டு தகவல் வெளியானது.

    அதன்படி, கடந்த ஆட்சிகளில் 98,000 என இருந்த சட்டவிரோதமாக உள்ளே நுழைவோரின் எண்ணிக்கை தற்போதைய அதிபர் பைடன் காலத்தில் 2,42,000 என உயர்ந்துள்ளது.

    இந்த விவரங்களை ஒப்பிட்டு உலகின் நம்பர் 1 கோடீசுவரரும் டெஸ்லா, எக்ஸ், ஸ்பேஸ்எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவருமான எலான் மஸ்க், தனது அதிகாரபூர்வ எக்ஸ் சமூக வலைதள கணக்கில் விமர்சித்துள்ளார்.

    அதில் மஸ்க் தெரிவித்திருப்பதாவது:

    திருட்டுத்தனமாகவும், சட்டவிரோதமாகவும் அமெரிக்காவிற்கு உள்ளே நுழைவது மிக எளிதாக உள்ளது. ஆனால், சட்டரீதியாக உள்ளே நுழைய விரும்புபவர்களுக்கு அது மிக கடினமாக்கப்பட்டுள்ளது.

    நாம் சட்டபூர்வ வழிமுறைகளை கடினமாக்கி, சட்டவிரோத வழிகளை எளிதாக்கி விட்டோம்.

    இது அசல் பைத்தியக்காரத்தனம்.

    பைடனின் நிர்வாகம் கள்ளத்தனமாக வருபவர்களுக்குத்தான் வசதி செய்து கொடுத்துள்ளது என தரவுகள் உறுதிபடுத்தி உள்ளன.

    இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


    • அமெரிக்காவை தவிர, சீனாவிலும் ஜெர்மனியிலும் டெஸ்லா உற்பத்தி செய்து வருகிறது
    • தொடக்கத்தில் பிஒய்டி, பேட்டரி தயாரிப்பில் மட்டுமே ஈடுபட்டு வந்தது

    கடந்த 2003ல், அமெரிக்காவை சேர்ந்த உலகின் நம்பர் 1 கோடீசுவரரான எலான் மஸ்க் (Elon Musk), தொடங்கிய பேட்டரி கார் நிறுவனம், டெஸ்லா (Tesla).

    அமெரிக்காவில் பெருமளவு உற்பத்தி ஆனாலும், பெருகி வரும் வாடிக்கையாளர்களின் தேவைக்காக, இந்நிறுவனம் கார் உற்பத்தியை சீனாவிலும், ஜெர்மனியிலும் நடத்தி வருகிறது.


    2023 வருட மூன்றாம் காலாண்டில் மட்டும் 4,30,488 மின்னணு கார்களை உற்பத்தி செய்தது.

    கார்கள் விற்பனை மூலம் 2022-ஆம் வருட வருமானமாக டெஸ்லா, $81,462 பில்லியன் அமெரிக்க டாலர் ஈட்டியது.

    இந்நிலையில், சீனாவின் ஷென்சன் (Shenzen) பகுதியை சேர்ந்த மற்றொரு முன்னணி மின்னணு கார் தயாரிப்பு நிறுவனமான பிஒய்டி (BYD), உலகளவில் முதல் இடத்தை பிடிக்க உள்ளது.

    பிஒய்டி, 2023-ஆம் ஆண்டின் கடைசி 3 மாதங்களில் 5,26,000 கார்களை தயாரித்துள்ளது. 2023 முழு ஆண்டில் 3 மில்லியன் கார்களுக்கு மேல் உற்பத்தி செய்துள்ளது.

    1995ல் சீனாவின் ஷென்சன் பகுதியில் வேங் சுவான் ஃபு (Wang Chuanfu) என்பவர் தொடங்கிய பிஒய்டி, முதலில் ஸ்மார்ட்போன், மடிக்கணினி உட்பட பல மின்னணு சாதனங்களுக்கு பேட்டரி தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தது. விலை உயர்ந்த ஜப்பானிய பேட்டரிகளை விற்பனையில் முந்திய பிஒய்டி பிறகு கார் தயாரிப்பிலும் கால் பதித்தது.


    ஒரு மின்னணு கார் அல்லது இரு சக்கர வாகனத்திற்கு முக்கிய பாகமாக கருதப்படுவது அதனை இயக்கும் பேட்டரிதான். பேட்டரி தயாரிக்கும் தொழிலில் மிகுந்த அனுபவம் உள்ள நிறுவனம் என்பதாலும், தங்கள் பேட்டரியை வைத்தே தங்கள் கார்களை தயாரிப்பதால் பெருமளவு செலவினங்கள் குறைவதால், விலை குறைவான கார்களை பிஒய்டி-யால் தயாரிக்க முடிகிறது. குறைந்த செலவில் லாபம் ஈட்டி, அதிவேகமாக கார்களை பிஒய்டி தயாரிக்க இது முக்கிய காரணம் என நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    பல வருடங்களாக பேட்டரி கார் தயாரிப்பில் முதல் இடத்தை தக்க வைத்து கொண்டுள்ள டெஸ்லா, போட்டியை எவ்வாறு சமாளிக்க போகிறது என பொருளாதார நிபுணர்கள் கவனித்து வருகின்றனர்.

    • டெஸ்லா ஒப்பந்தத்தில் கையெழுத்திட இருப்பதாக கூறப்பட்டது.
    • இது மிட்-சைஸ் கிராஸ்ஒவர் எஸ்.யு.வி. ஆகும்.

    எலான் மஸ்க்-இன் எலெக்ட்ரிக் கார் உற்பத்தி செய்யும் நிறுவனமான டெஸ்லா தனது குறைந்த விலை எலெக்ட்ரிக் கார் மாடலை ஜெர்மனி நாட்டில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த எலெக்ட்ரிக் கார் இரண்டு கதவுகளை கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதுதவிர இந்த குறைந்த விலை எலெக்ட்ரிக் கார் ஜெர்மனியை தொடர்ந்து இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

    இந்திய சந்தையில் டெஸ்லா களமிறங்குவது குறித்து எலான் மஸ்க் சார்பில் அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கப்படவில்லை. எனினும், இந்நிறுவனம் தனது மாடல்களில் சிலவற்றை அடுத்த ஆண்டு முதல் இந்தியாவில் இறக்குமதி செய்யலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. எனினும், இதுபற்றிய தகவல்கள் ரகசியமாகவே உள்ளன.

    கடந்த 2020 ஆண்டு டெஸ்லா அறிமுகம் செய்த எலெக்ட்ரிக் கார் "மாடல் Y" சற்றே குறைந்த விலை பிரிவுக்கு ஏற்றதாக இருக்கும் என்று தெரிகிறது. இது மிட்-சைஸ் கிராஸ்ஒவர் எஸ்.யு.வி. ஆகும். இந்த எலெக்ட்ரிக் கார் மாடல் 3 செடான் உருவாக்கப்பட்ட பிளாட்ஃபார்மை தழுவி டிசைன் செய்யப்பட்டு இருந்தது.

    முன்னதாக வெளியான தகவல்களில் இந்திய அரசாங்கத்துடன் டெஸ்லா ஒப்பந்தத்தில் கையெழுத்திட இருப்பதாக கூறப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் டெஸ்லா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் கார்களை இந்தியாவுக்கு இறக்குமதி செய்து, அதன்பிறகு இரண்டு ஆண்டுகளுக்குள் உற்பத்தி ஆலையை கட்டமைக்க இருப்பதாக கூறப்பட்டது. இது தொடர்பான அறிவிப்பு அடுத்த ஆண்டு துவக்கத்தில் வெளியாகும் என்றும் கூறப்பட்டது.

    • 2022ல் டுவிட்டரை எலான் மஸ்க் விலைக்கு வாங்கினார்
    • ராக்கெட் வெடித்து சிதறும் செய்தியையே கேட்டு கொண்டவன் நான் என்றார் மஸ்க்

    பன்னாட்டு நிறுவனங்களில், தலைமை பொறுப்பில் உள்ளவரில் தொடங்கி கடைநிலை பொறுப்பில் உள்ளவர்கள் வரை அனைத்து ஊழியர்களும் பங்கு பெறும் "ஆல் ஹேண்ட்ஸ் மீட்" (all-hands meet) எனப்படும் சந்திப்பு கூட்டங்கள் அவ்வப்போது நடைபெறுவது வழக்கம்.

    இச்சந்திப்புகளில் நிறுவனங்களின் செயல் திட்டங்கள், வழிமுறைகள், எதிர்கால லட்சியங்கள் மற்றும் அவ்வப்போது திடீரென எழும் சிக்கல்கள் ஆகியவை உள்ளிட்ட அனைத்தும் அலசப்படும்.

    உலகின் நம்பர் 1. பணக்காரரான எலான் மஸ்க், புகழ் பெற்ற உரையாடல்களுக்கான இணையவழி சமூக வலைதளமான டுவிட்டர் (Twitter) நிறுவனத்தை 2022ல் விலைக்கு வாங்கினார். அந்நிறுவனத்தின் பெயரை 'எக்ஸ்' (X) என மாற்றி பல அதிரடி முடிவுகளை எடுத்து வரும் மஸ்க், தனது ஊழியர்களுடன் "ஆல் ஹேண்ட்ஸ் மீட்" ஒன்றை நடத்தினார். அந்த சந்திப்பில் மஸ்க் பல ஆச்சரியமான வழிமுறைகளை வலியுறுத்தியுள்ளார்.

    அந்த சந்திப்பில் மஸ்க் பேசியதாவது:

    நான் ஒரு விஷயத்தை வெளிப்படையாக கூற விரும்புகிறேன். இனி வரும் காலங்களில் எந்த சந்திப்புகளிலும், நிறுவனம் சம்பந்தபட்ட ஒரு கெட்ட செய்தியையாவது பணியாளர்கள் தெரிவிக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட கெட்ட செய்தியை கூட கூறலாம். நல்ல செய்தியை மெதுவாகவும் தாமதமாகவும் கூறுங்கள்; ஆனால், கெட்ட செய்தியை உரக்க, உடனடியாக, பல முறை கூறுங்கள். எனது 'ஸ்பேஸ்எக்ஸ்' நிறுவனத்தில் விண்வெளிக்கு ராக்கெட் அனுப்பும் போது அவை பல முறை தோல்வியுற்ற செய்தியையே நான் கேட்டு கொண்டவன். ஒரு ராக்கெட் வெடித்து சிதறுவதை விட கெட்ட செய்தியை இது போன்ற நிறுவனங்கள் தந்து விட முடியாது. உங்களுக்குள்ளேயே நடைபெறும் சந்திப்புகளிலும் கூட இதை ஒரு வழிமுறையாக பின்பற்றுங்கள். எனது 'டெஸ்லா' மற்றும் 'ஸ்பேஸ்எக்ஸ்' நிறுவனங்களில் அனைத்து ஊழியர்களும் சந்திப்புகளில் முதலில் கெட்ட செய்தியைத்தான் பகிர்ந்து கொள்வார்கள். அங்கெல்லாம் இந்த வழிமுறை கடைபிடிக்கப்படுகிறது. அதே போல் இங்கும் நடைமுறைப்படுத்துங்கள்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    அதிரடி முடிவுகளுக்கு பெயர் பெற்ற மஸ்கின் வியப்பூட்டும் இந்த உத்தரவு சமூக வலைதளங்களில் பெரிதும் விவாதிக்கப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உலகளாவிய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் டெஸ்லா நிறுவனம் பெரும் புரட்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
    • முன்னதாக டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அமெரிக்காவை சேர்ந்த முன்னணி எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளரான டெஸ்லா இந்திய சந்தையில் களமிறங்குவதற்கு சமீபத்தில் தான் மீண்டும் விருப்பம் தெரிவித்து இருந்தது. தற்போது இதன் தொடர்ச்சியாக டெஸ்லா நிறுவனம் இந்திய சந்தையில் களமிறங்குவதற்கான அடுத்த முயற்சியாக மும்பையில் அலுவலகம் ஒன்றை லீசுக்கு எடுத்திருக்கிறது.

    டெஸ்லா இந்தியா மோட்டார் & எனர்ஜி பிரைவேட் லிமிடெட் பெயரில் லீசுக்கு எடுக்கப்பட்டு இருக்கும் புதிய அலுவலகம் பூனேவின் பன்ஷில் பிஸ்னஸ் பார்க்-இல் அமைந்து இருக்கிறது. இந்த அலுவலகத்திற்கு மாத வாடகை மட்டும் ரூ. 11 லட்சத்து 65 ஆயிரம் என்று கூறப்படுகிறது. கட்டிடத்தின் முதல் தளத்தில் உள்ள 5 ஆயிரத்து 850 சதுர அடி பரப்பளவு கொண்ட பகுதியில் டெஸ்லா இந்தியா அலுவலகம் உருவாகிறது.

     

    வாடகை ஒப்பந்தம் அக்டோபர் 1-ம் தேதி துவங்குகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு இந்த அலுவலகத்துக்கான இடம் லீசுக்கு எடுக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு சென்றிருந்த சமயத்தில் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது டெஸ்லாவை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்கான இறுதிக்கட்ட பணிகளில் கவனம் செலுத்துவதாக அவர் தெரிவித்து இருந்தார்.

    உலகளாவிய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் டெஸ்லா நிறுவனம் பெரும் புரட்சியை ஏற்படுத்தி இருக்கிறது. வழக்கமான பெட்ரோல், டீசல் என்ஜின் கொண்ட கார்களுக்கு மாற்றாக எலெக்ட்ரிக் கார்களை பயனர்கள் மத்தியில் கொண்டு சேர்த்ததில் டெஸ்லா நிறுவனம் பெரும் பங்காற்றி இருக்கிறது.

    • செயற்கை நுண்ணறிவு மாநாட்டின் தொடக்க விழாவில் வீடியோ கான்பரன்சிங் மூலம் மஸ்க் பேசினார்.
    • டெஸ்லா நிறுவனம் ஷாங்காயில் இரண்டாவது பெரிய தொழிற்சாலையை கட்டுவதாக கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தது.

    டெஸ்லா நிறுவனம், இந்த ஆண்டின் பிற்பகுதியில் டிரைவர் இல்லாத தானியங்கி வாகனங்களை அறிமுகம் செய்ய வாய்ப்பு உள்ளதாக அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இந்த வாகனம், டெஸ்லா நீண்ட காலமாக அடைய துடிக்கும் ஒரு சாதனை முயற்சி ஆகும்.

    "டெஸ்லாவின் தற்போதைய நிலையில், மனித மேற்பார்வையின்றி முழு தானியங்கி வாகனத்தை உருவாக்கும் தொழில்நுட்பத்திற்கு மிக நெருக்கமாக நாங்கள் இருக்கிறோம். இந்த தொழில்நுட்பத்தின் மேம்பட்ட இரண்டு நிலைகளை இந்த ஆண்டின் பிற்பகுதியில் நாங்கள் முழுமையாக அடைந்து விடுவோம். ஒருவேளை நீங்கள் நான்கு அல்லது ஐந்து என்று அதனை அழைக்கலாம்" என ஷாங்காயில் நடைபெற்ற ஒரு செயற்கை நுண்ணறிவு மாநாட்டின் தொடக்க விழாவில் வீடியோ கான்பரன்சிங் மூலம் மஸ்க் பேசினார்.

    இந்த தொழில்நுட்பத்தை அடைந்து விட முடியும் என இதற்குமுன்னர் பல தேதிகளை எலான் மஸ்க் அறிவித்திருந்தார்; ஆனால் அந்த இலக்கை அடைய முடியவில்லை. அந்த கணிப்புகளில் தவறு நடந்ததை தற்போது ஒப்புக்கொண்டார்.

    டெஸ்லாவின் "ஓட்டுநர்-உதவி தொழில்நுட்பம்" அமெரிக்காவில் ஒழுங்குமுறை ஆய்வுகளுக்கு உட்படுத்த வேண்டிய கட்டாயத்தை தூண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    சீனா உலகின் மிகப்பெரிய மின்சார வாகன சந்தையாகும். டெஸ்லா நிறுவனம் ஷாங்காயில் இரண்டாவது பெரிய தொழிற்சாலையை கட்டுவதாக கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தது.

    மே மாதம் சீனாவிற்கு சென்றதைத் தொடர்ந்து, தற்பொது ஷாங்காயில் நடந்த உலக செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் மஸ்க் பங்கேற்றிருப்பது, சீனாவுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணுவதற்கான முயற்சியைக் காட்டுகிறது.

    உலகின் மிகப்பெரிய கார் சந்தையான சீனாவில், கார் விற்பனையில் நான்கில் ஒரு பங்கு மின்சார வாகனங்கள் ஆகும். இந்த ஆண்டு, டெஸ்லா தனது முதல் காலாண்டிற்கான வருவாயில் வீழ்ச்சியை சந்தித்தது. இதனால் மற்ற வாகன உற்பத்தியாளர்களின் போட்டியை எதிர்கொள்ளும் வகையில் விலைக்குறைப்புகளை மேற்கொள்கிறது.

    • கடந்த டிசம்பர் மாதம் அர்னால்ட் உலகின் முன்னணி பணக்காரர் என்ற அந்தஸ்தை பெற்றார்.
    • எலான் மஸ்க்-ன் மொத்த சொத்து மதிப்பு 192.3 பில்லியன் டாலர்கள் ஆகும்.

    டெஸ்லா இன்க் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் மீண்டும் உலகின் முதல் பணக்காரர் என்ற அந்தஸ்த்தை பெற்று இருக்கிறார். இவர் பெர்னார்டு அர்னால்டை பின்னுக்குத் தள்ளி மீண்டும் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி இருக்கிறார்.

    மே 31-ம் தேதி அர்னால்டு LVMH பங்குகள் 2.6 சதவீதம் வரை சரிந்ததை தொடர்ந்து, பணக்காரர்கள் பட்டியலில் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. பிரெஞ்சு வியாபாரியான 74 வயது பெர்னார்ட் மற்றும் எலான் மஸ்க் இடையே உலகின் பணக்காரர் யார் என்பதில், இந்த ஆண்டு துவங்கியதில் இருந்தே கடும் போட்டி நிலவி வந்தது.

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அர்னால்ட் எலான் மஸ்க்-ஐ கடந்து உலகின் முன்னணி பணக்காரர் என்ற அந்தஸ்தை பெற்றார். தொழில்நுட்ப துறையில் பெரும் சரிவு நிலை நிலவி வந்த போது, அர்னால்ட் உலகின் முதல் பணக்காரர் ஆனார். லூயிஸ் விட்டன், ஃபெண்டி மற்றும் ஹெனசி போன்ற பிராண்டுகளை நிறுவியவர் அர்னால்ட்.

    கடந்த ஏப்ரல் மாதம் துவங்கியதில் இருந்தே, LVMH பங்குகள் பத்து சதவீதம் வரை சரிவடைந்து வருகின்றன. ஒரு கட்டத்தில் அர்னால்ட் சொத்து மதிப்பு ஒரே நாளில் 11 பில்லியன் டாலர்கள் வரை சரிந்தது.

    மறுபக்கம் எலான் மஸ்க் இந்த ஆண்டு 55.3 பில்லியன் டாலர்களை ஈட்டியிருக்கிறார். இதில் பெரும்பாலான வருவாய் டெஸ்லா நிறுவனத்தில் இருந்து கிடைத்தவை ஆகும். ஆஸ்டினை சேர்ந்த எலான் மஸ்க்-ன் மொத்த சொத்து மதிப்பு 192.3 பில்லியன் டாலர்களாக மதிப்பிடப்பட்டு இருக்கிறது. அர்னால்ட்-ன் சொத்து மதிப்பு 186.6 பில்லியன் டாலர்கள் ஆகும். 

    தவறான தகவல்களை வெளியிட்டு பங்கு சந்தையில் குழப்பம் ஏற்படுத்தியதற்காக டெஸ்லா நிறுவனத்திற்கு ரூ.290 கோடி அபராதம் விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #Tesla #ElonMusk
    வாஷிங்டன் :

    அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா எலக்ட்ரிக் கார்கள் வடிவமைப்பு, உற்பத்தி, விற்பனை என அனைத்திலும் உலகளவில் முன்னிலை வகித்து வருகிறது. மேலும், ஸ்பேஸ் எக்ஸ் எனும் நிறுவனம் நாசாவிற்கு போட்டியாக விண்வெளியில் பல்வேறு ஆராய்சிகளையும் செய்து வருகிறது.

    இதற்கிடையே டெஸ்லா நிறுவனத்தை முழுவதும் தனதாக்கிக்கொள்ள போவதாக கடந்த ஆகஸ்ட் மாதம் 7-ம் தேதி அதன் தலைவர் எலன் மஸ்க் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

    அதில், பங்குதாரர்களிடமிருந்து, அனைத்து பங்குகளையும் தானே திரும்பப் பெற்றுக் கொண்டு நிறுவனத்தை முழுவதும் தனதாக்கிக்கொள்ள முடிவு செய்துள்ளதாகவும், முதலீட்டாளர்கள் ஒன்று நிறுவனத்திலேயே தொடரலாம் அல்லது ஒரு பங்குக்கு தலா 420 டாலர்களை பெற்றுக்கொண்டு விற்றுவிடலாம் என்றும் அறிவித்திருந்தார்.
    அவரது இந்த முடிவு அந்நிறுவனத்தின் இயக்குனர்கள், முதலீட்டாளர்கள் மட்டுமின்றி பொதுமக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தனது முடிவுக்கு பின்னர் கிடைத்த எதிர்மறையான கருத்துக்களை அடுத்து டெஸ்லா நிறுவனத்தின் அனைத்து தரப்பினரிடமும் எலான் மஸ்க் கடந்த ஒரு வார காலமாக ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் நிறுவனத்தை முழுவதுமாக வாங்கும் முடிவை கைவிடுவதாக அறிவித்தார்.

    இதற்கிடையே, எலான் மஸ்க் பங்குச்சந்தை மோசடியில் ஈடுபட முயன்றதாக, அவர் மீது மன்ஹாட்டனில் உள்ள நீதிமன்றத்தில் அமெரிக்க பங்கு மற்றும் பரிவர்த்தனை கழகம் வழக்கு தொடர்ந்தது.

    பங்குகளை திரும்ப வாங்குவதற்காக தன்னிடம் உள்ள நிதி ஆதாரங்கள் என்னென்ன என்பது குறித்த விவரங்களை தெரிவிக்கமல் எலான் மஸ்க் வெளியிட்ட அறிவிப்பினால் பங்கு சந்தையில் குழப்பம் மற்றும் முதலீட்டாலர்களிடையே அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது என வழக்கில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்நிலையில், டெஸ்லா நிறுவனத்திற்கு 40 மில்லியன் அமெரிக்க டாலர்(ரூ.290 கோடி) தொகையை நீதிமன்றம் அபராதமாக விதித்துள்ளது. இந்த தொகையை செலுத்த எலன் மஸ்க்கும் ஒப்புக்கொண்டுள்ளார்.



    மேலும், அடுத்த 45 நாட்களுக்குள் டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து மஸ்க் விலக வேண்டும் எனவும், அடுத்த 3 ஆண்டுகளுக்கு அவர் நிறுவனத்தின் தலைவராக இருக்க கூடாது எனவும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

    ஆனால், நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக தொடர்வதற்கு தடை ஏதும் இல்லை. இரண்டு இயக்குனர்களை நியமித்து தலைவர் பொறுப்பை கவனித்துக்கொள்ளலாம் என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதனால், டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து விலக எலன் மஸ்க் முடிவு செய்துள்ளார். சமீபத்தில் ஜப்பானை சேர்ந்த தொழிலதிபரை  நிலவுக்கு அனுப்பும் திட்டத்தை பற்றி எலன் மஸ்கின் மற்றொரு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. #Tesla #ElonMusk
    ×