search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூகுள்"

    • இந்த ஸ்மார்ட்போன் இதே பெயரில் தான் விற்பனைக்கு வரும்.
    • இந்த ஸ்மார்ட்போன் கொமெட் என்ற பெயரில் உருவாக்கப்படுகிறது.

    கூகுள் நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பிக்சல் 9 ப்ரோ போல்டு எனும் பெயரில் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இதே பெயரில் தான் விற்பனைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.

    இது தொடர்பாக வெளியாகி இருக்கும் தகவல்களில் கூகுள் நிறுவனம் 2024 ஆண்டு வெளியாகும் பிக்சல் சாதனங்களின் பெயரை மாற்ற இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதன்படி பிக்சல் 9 மாடல் டோகே எனும் குறியீட்டு பெயரிலும், பிக்சல் 9 ப்ரோ கைமேன் என்ற பெயரிலும், பிக்சல் 9 ப்ரோ XL மாடல் கொமோடோ என்ற பெயரிலும் பிக்சல் 9 ப்ரோ போல்டு மாடல் கொமெட் என்ற பெயரிலும் உருவாக்கப்படுகிறது.

    முன்னதாக கொமெட் பெயரில் உருவாக்கப்படும் ஸ்மார்ட்போன் பிக்சல் போல்டு 2 எனும் பெயரில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டது. தற்போது இந்த சாதனம் பிக்சல் 9 ப்ரோ போல்டு பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. எனினும், இது தொடர்பாக இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை.

    பெயரிடும் வழக்கத்தை கூகுள் மாற்றும் பட்சத்தில், அந்நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பிக்சல் 9 சீரிசில் இணைக்கப்படும். இது சாத்தியமாகும் படச்த்தில் பிக்சல் போல்டபில் சாதனங்களில் குறிப்பிடத்தக்க மாற்றமாக அமையும். 

    • சிக்னல்களை கொண்டு காணாமல் போன சாதனங்களை கண்டறியும்.
    • தேர்வு செய்யப்பட்ட சாதனங்களிலும் இந்த அம்சம் உள்ளது.

    கூகுள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஃபைண்ட் மை டிவைஸ் அப்டேட் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த அப்டேட் ஆப்பிளின் ஃபைண்ட் மை டிவைஸ் வழங்குவதை போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது.

    புது அப்டேட் மூலம் ஆண்ட்ராய்டு பயனர்கள் தங்களின் காணாமல் போன சாதனங்களை எளிதில் கண்டறிய முடியும். குறிப்பிட்ட சாதனம் ஆஃப்லைனில் இருந்தாலும் இந்த அம்சம் சீராக இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்பிள் ஃபைண்ட் மை டிவைஸ் போன்றே, கூகுளின் அப்டேட் செய்யப்பட்ட ஃபைண்ட் மை டிவைஸ் சேவையும் ப்ளூடூத் சிக்னல்களை கொண்டு காணாமல் போன சாதனங்களை கண்டறியும்.

    இதன் மூலம் அருகாமையில் உள்ள ஆண்ட்ராய்டு சாதனங்களில் இண்டர்நெட் இணைப்பு இல்லை என்றாலும், கண்டறிய முடியும். தற்போது இந்த அம்சம் ஆண்ட்ராய்டு 9 மற்றும் அதற்கு பின் வெளியான வெர்ஷன்களில் வழங்கப்பட்டு இருக்கிறது.

    கூடுதலாக பிக்சல் 8, பிக்சல் 8 ப்ரோ என தேர்வு செய்யப்பட்ட சாதனங்களிலும் இந்த அம்சம் உள்ளது. மேலும், காணாமல் போன சாதனம் தொலைந்து போனாலும் அதனை ஃபைண்ட் மை டிவைஸ் மூலம் கண்டுபிடித்துவிட முடியும்.

    புதிய ஃபைண்ட் மை டிவைஸ் நெட்வொர்க்கின் நோக்கம் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு தான் என்று கூகுள் குறிப்பிட்டுள்ளது. காணாமல் போன சாதனங்களின் லொகேஷன் முழுமையாக என்க்ரிப்ட் செய்யப்பட்டு விடும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. இதன் மூலம் கூகுள் மற்றும் இதரானவர்கள் லொகேஷன் விவரங்களை இயக்க முடியாது.

    • பிக்சல் மாடல்களின் உற்பத்தியை துவங்க கூகுள் நிறுவனம் திட்டம்.
    • கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தெரிவித்து இருந்தது.

    கூகுள் நிறுவனம் பிக்சல் ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களிடம், பிக்சல் மாடல் உற்பத்தியை இந்தியாவில் துவங்க வலியுறுத்தி இருக்கிறது. முடிந்தவரையில், அடுத்த காலாண்டிற்குள் பிக்சல் மாடல்களின் உற்பத்தியை துவங்க கூகுள் நிறுவனம் உற்பத்தியாளர்களிடம் தெரிவித்துள்ளது.

    இந்த ஆண்டு மட்டும் 10 மில்லியன் பிக்சல் ஸ்மார்ட்போன்களை ஏற்றுமதி செய்ய கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. முன்னதாக பிக்சல் 8 பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களின் உற்பத்தி இந்தியாவில் துவங்கும் என்றும் இவை 2023 முதல் கிடைக்கும் என்றும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தெரிவித்து இருந்தது.

     


    இவ்வாறு செய்வதன் மூலம் கூகுள் நிறுவனம் தனது சாதனங்கள் உற்பத்தியை சீனா மட்டுமின்றி இதர சந்தைகளிலும் விரிவுப்படுத்த முடியும். வரும் வாரங்களில் டாப் என்ட் பிக்சல் 8 ப்ரோ மாடலை உற்பத்தி செய்வதற்கான ப்ரோடக்ஷன் லைனை உருவாக்கவும், இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் உற்பத்தி பணிகளை துவக்கவும் கூகுள் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.

    • ஐஐடி சென்னை மாணவரான அரவிந்த் ஸ்ரீனிவாஸ், 3 பேருடன் உருவாக்கியது பெர்ப்லெக்சிடி
    • 300 சதவீதம் ஊதிய உயர்வு ஆச்சரியம் அளிப்பதாக அரவிந்த் ஸ்ரீனிவாஸ் தெரிவித்தார்

    இணையவழி உள்ளடக்க தேடலில் உலகின் முன்னணி தேடல் இயந்திரம் (search engine) அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கும் கூகுள் நிறுவனத்தின் "கூகுள் தேடல் இயந்திரம்".

    கடந்த 2022 இறுதியில் தோன்றிய "ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜன்ஸ்" (Artificial Intelligence) எனும் "செயற்கை நுண்ணறிவு" தொழில்நுட்பம், கூகுள் நிறுவன தேடல் இயந்திரத்திற்கு சவாலாக இருந்து வருகிறது.

    செயற்கை நுண்ணறிவு துறையில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ள சென்னை இந்திய தொழில்நுட்ப கழகத்தின் (IIT) முன்னாள் மாணவரான அரவிந்த் ஸ்ரீனிவாஸ் மற்றும் 3 பேர் இணைந்து 2022ல் உருவாக்கிய நிறுவனம், பெர்ப்லெக்சிடி. இந்நிறுவனத்தின் தேடல் இயந்திரம், "பெர்ப்லெக்சிடி ஏஐ" (Perplexity AI).

    பெர்ப்லெக்சிடி நிறுவனத்தில் பணியாற்ற கூகுள் நிறுவன "தேடல்" (search) பிரிவை சேர்ந்த ஊழியர் ஒருவர், கூகுள் மேலதிகாரிகளிடம் தனது ராஜினாமாவை சமர்ப்பித்தார்.

    ஆனால், அந்த ஊழியருக்கு கூகுள், அவர் வாங்கி வரும் ஊதியத்தை விட 300 சதவீதம் அதிகம் வழங்கி அவரை தங்களுடனேயே தக்க வைத்து கொண்டது.


    ஒரு பேட்டியில் இந்த தகவலை பகிர்ந்து கொண்ட அரவிந்த் ஸ்ரீனிவாஸ் மேலும் கூறியதாவது:

    செயற்கை நுண்ணறிவு துறையில் இல்லாமல் தேடல் துறை பணியாளராக இருந்தும் எங்களிடம் பணியாற்ற விரும்பிய நபரை கூகுள் மிக அதிக தொகையை ஈடாக தந்து, தக்க வைத்து கொண்டது.

    இது மிகவும் ஆச்சரியத்தை அளிக்கிறது.

    பணிநீக்கங்களை பொறுத்தவரையில் மென்பொருள் தொழில்நுட்ப மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் அதிக ஊதியம் பெறும் ஊழியர்கள்தான் குறி வைக்கப்படுவதாக தெரிகிறது.

    இவ்வாறு அரவிந்த் தெரிவித்தார்.

    கடந்த 2023 ஜனவரி மாதம் சுமார் 12 ஆயிரம் ஊழியர்களையும், சில தினங்களுக்கு முன் 1000 ஊழியர்களையும் கூகுள் நீக்க போவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

    இப்பின்னணியில், 300 சதவீத ஊதிய உயர்வு அளித்து ஒருவரை தங்களுடனேயே தக்க வைத்து கொண்ட செய்தியை சமூக வலைதளங்களில் பயனர்கள் சுவாரஸ்யமாக விவாதிக்கின்றனர்.

    • பிக்சல் 8 ஸ்மார்ட்போன் மூன்று நிறங்களில் விற்பனை செய்யப்பட்டது.
    • பிக்சல் ஸ்மார்ட்போன்கள் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் கிடைக்கிறது.

    கூகுள் நிறுவனம் தனது பிக்சல் 8 சீரிஸ்- பிக்சல் 8 மற்றும் பிக்சல் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்களை கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் அறிமுகம் செய்தது. பிக்சல் 8 ஸ்மார்ட்போன் அப்சிடியன், ஹசல் மற்றும் ரோஸ் போன்ற நிறங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பிக்சல் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் அப்சிடியன், பே மற்றும் போர்சிலைன் நிறங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

    இந்த நிலையில், பிக்சல் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் முற்றிலும் புதிய மின்ட் நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக பிக்சல் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் லெமன்கிராஸ் நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இவைதவிர இந்த ஸ்மார்ட்போன் கிளாஸ் பாடி மற்றும் கிளாசி ஃபினிஷ் கொண்டிருக்கிறது.

     


    புதிய பிக்சல் 8 சீரிஸ் மின்ட் நிற வேரியன்ட் கூகுள் ஸ்டோரில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிற வேரியன்ட் 128 ஜி.பி. வடிவில் மட்டுமே கிடைக்கிறது. இந்தியாவில் கூகுள் இந்தியா ஆன்லைன் ஸ்டோர் இருக்கும் பட்சத்திலும், கூகுள் தனது பிக்சல் ஸ்மார்ட்போன்களை ப்ளிப்கார்ட் வலைதளத்தில் மட்டுமே விற்பனை செய்கிறது. 

    • பிக்சல் 9 மாடலில் ஃபிளாட் எட்ஜ் டிசைன் வழங்கப்படுகிறது.
    • அக்டோபர் மாத வாக்கில் அறிமுகமாகலாம்.

    கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 8 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி சில மாதங்களே ஆகியுள்ளது. இந்த நிலையில், பிக்சல் 9 ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாக துவங்கிவிட்டன. அதில், புதிய பிக்சல் 9 ஸ்மார்ட்போன் எப்படி காட்சியளிக்கும் என தெரியவந்துள்ளது.

    தற்போது லீக் ஆகி இருக்கும் ரெண்டர்களின் படி கூகுள் பிக்சல் 9 ஸ்மார்ட்போன் புளூ நிறத்தில் கிடைக்கும் என்றும் இதன் பின்புறம் மூன்று கேமரா சென்சார்கள் வழங்கப்படும் என்று தெரிகிறது. புதிய மாடலில் கேமரா மாட்யுல் டிசைனை கூகுள் மாற்றலாம் என்று கூறப்படுகிறது. இத்துடன் பிக்சல் 9 மாடலில் ஃபிளாட் எட்ஜ் டிசைன், பன்ச் ஹோல் செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.


     

    புதிய ரெண்டர்களின் படி பிக்சல் 9 மாடலின் டிசைன் ஐபோன் 15 போன்றே காட்சியளிக்கும் என தெரிகிறது. இந்த மாடலில் ரிடிசைன் செய்யப்பட்ட கேமரா மாட்யுல், மூன்று சென்சார்கள் மற்றும் எல்.இ.டி. ஃபிளாஷ் வழங்கப்படுகிறது. கூகுள் நிறுவனம் தனது பிக்சல் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அக்டோபர் மாத வாக்கில் அறிமுகம் செய்யும் என தெரிகிறது.

    புதிய பிக்சல் 9 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 ஒ.எஸ். மற்றும் கூகுள் நிறுவத்தின் டென்சார் G4 பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. பிக்சல் 9 ஸ்மார்ட்போனில் 6.1 இன்ச் ஸ்கிரீன் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    • 2023 ஜனவரி மாதம் கூகுள் 12 ஆயிரம் ஊழியர்களை நீக்கியது
    • 2024 ஜனவரி மாதம் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்களை நீக்கியது

    கலிபோர்னியாவை தலைமையகமாக கொண்டு இயங்கி வரும் உலகின் முன்னணி பன்னாட்டு இணையதள மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனம், கூகுள்.

    2015 அக்டோபர் மாதம் கூகுளின் தலைமை செயல் அதிகாரியாக இந்தியாவை சேர்ந்த சுந்தர் பிச்சை (51) நியமிக்கப்பட்டார்.

    2023 ஜனவரி மாதம், கூகுள் நிறுவனம் சர்வதேச அளவில் தனது ஊழியர்களில் 12,000 (6 சதவீதம்) பேரை பணிநீக்கம் செய்தது.

    "இந்த பணிநீக்க நடவடிக்கை மிகப்பெரியது என்றாலும் நிறுவன வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது" என்று சுந்தர் பிச்சை அப்போது தெரிவித்திருந்தார்.

    2024 ஜனவரி மாதம், மீண்டும் நூற்றுக்கணக்கான பணியாளர்களை கூகுள் பணிநீக்கம் செய்தது.

    சமீபத்திய பணிநீக்க நடவடிக்கையைத் தொடர்ந்து, 2024 ஆண்டிற்கான திட்டங்கள் குறித்து சுந்தர் பிச்சை ஊழியர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது:

    கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்.

    நமது லட்சியங்கள் மிக பெரியவை. நமது முன்னுரிமைகளும் அதிகம். இத்தகைய ஒரு இலக்கு உள்ள போது நாம் பெரிய கடினமான முக்கிய முடிவுகளை எடுத்தாகத்தான் வேண்டும்.

    சில பணிகள் தேவைப்படாது; தேவைப்படாதவை நீக்கப்படும். ஆனால், அதன் எண்ணிக்கை கடந்த வருடம் போல் அதிகம் இருக்காது.

    இந்த நடவடிக்கைகள் நிறுவனத்தின் செயல்பாட்டை அதிகரிக்கும் வகையில் பல்வேறு துறைகளில் நிலவும் அடுக்குகளை (layers) நீக்குவதற்காக எடுக்கப்படுகிறது. சில ஊழியர்களுக்கு இவை முன்னரே அறிவிக்கப்பட்டு விட்டன.

    சில பணிக்குழுக்களில் ஆண்டு முழுவதும் பணிகளின் அவசியம் குறித்து ஆராயப்பட்டு வரும். அவ்வப்போது சில பணிகள் தேவையற்று போகலாம்.

    இவ்வாறு சுந்தர் தெரிவித்துள்ளார்.

    தனது சுற்றறிக்கையில் எங்குமே "லே ஆஃப்" அல்லது "ஜாப் கட்ஸ்" எனும் பணிநீக்கத்தை குறிக்கும் வார்த்தைகளை சுந்தர் பிச்சை பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தியாவில், புத்தாண்டு முதல் 2 வாரங்களிலேயே 45க்கும் மேற்பட்ட ஐடி தொழில்நுட்பம் மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் 7500க்கும் மேற்பட்ட பணியாளர்களை அதிரடியாக நீக்கிய நிலையில், இது  தொடர்ந்தால் தங்கள் எதிர்காலம் என்னவாகும் என மென்பொருள் துறை ஊழியர்கள் கவலையில் உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அமெரிக்காவில் 2022 இறுதியில் இருந்தே ஆட்குறைப்பு தொடங்கியது
    • 50 சதவீத ஊதிய குறைப்புக்கு முன்வந்தாலும் பணி கிடைப்பது கடினமாக உள்ளது

    கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக அமெரிக்காவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப மற்றும் மென்பொருள் நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.

    2022 இறுதியில் தொடங்கி, டெஸ்லா, எக்ஸ், மெட்டா, கூகுள், அமேசான், மைக்ரோசாப்ட் உட்பட பல நிறுவனங்கள் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களை நீக்கின.

    உலகெங்கும் இருந்து அந்நிறுவனங்களில் பணியாற்ற சென்ற ஊழியர்களுக்கு வேறு வேலை கிடைக்காததால் விசா காலம் நிறைவடைந்து அமெரிக்காவில் இருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது.

    இந்தியாவிலிருந்தும் அவ்வாறு பணியாற்ற சென்று ஆட்குறைப்பு நடவடிக்கையில் பணியிழந்தவர்களில் பலர் மீண்டும் தாயகம் திரும்பினர்.

    ஆனால், அவர்களுக்கு புது சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    2023ல் இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப மற்றும் மென்பொருள் நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையை தொடங்கி விட்டன.

    இங்கு பணியிழக்கும் ஊழியர்கள் ஊதியம் குறைந்தாலும், வேறு வேலை கிடைத்தால் போதும் எனும் முடிவில் கிடைக்கும் நிறுவனங்களில் உடனடியாக பணியில் சேர்கின்றனர்.

    அமெரிக்காவிலிருந்து வரும் இந்திய ஊழியர்கள் பெற்ற ஊதியத்துடன் ஒப்பிட்டால் இங்கு பணியில் இருப்பவர்களுக்கும், வேலையிழப்பினால் குறைந்த சம்பளத்தில் வேலைக்கு வருபவர்களுக்கும் நிறுவனங்கள் வழங்க வேண்டிய ஊதியம் மிகக் குறைவு.

    எனவே, அங்கிருந்து வருபவர்களுக்கு தகுதி இருந்தும் வேலை கிடைப்பது கடினமாக உள்ளது.

    அமெரிக்காவுடன் ஒப்பிட்டால் தகவல் தொழில்நுட்ப துறையில் காலியிடங்கள் மிக குறைவாக உள்ளதாகவும், ஒரே பணிக்கு 100க்கும் மேற்பட்ட திறமை வாய்ந்த ஊழியர்கள் விண்ணப்பிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளதாகவும் மனிதவள நிபுணர்கள் தெரிவித்தனர்.

    சுமார் 50 சதவீதம் வரை ஊதியத்தை குறைத்து கொள்ள அவர்கள் முன்வந்தாலும், மீண்டும் பணி கிடைப்பதே கடினமாகி வருகிறது.

    அங்கும் வேலை இழந்து, இங்கும் வேலை கிடைக்காமல், பல வருட சேமிப்புகளும் நாளுக்கு நாள் கரைந்து அவர்களின் நிலை நலிவடைந்து வருகிறது.

    2024-ஆம் வருடத்திலும் உலகளாவிய பொருளாதார மந்தநிலை நீடித்தால், மேலும் பல சாஃப்ட்வேர் துறை ஊழியர்கள் பணி இழக்கும் அபாயம் ஏற்படலாம் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

    • கூகுள் டூடுலில் இரண்டரை நிமிட யூடியூப் வீடியோ வெளியிடப்பட்டது.
    • கேம்பிரிட்ஜ் டிரினிட்டி கல்லூரியில் முனைவர் பட்டம் பெற்றார்.

    ஸ்டீபன் ஹாக்கிங் என்ற ஒரு பெயர் உலகில் மிகவும் பிரபலமான பெயர்களில் ஒன்றாகும். அவரது பெயர் பொதுவாக சக்கர நாற்காலியில் இருக்கும் ஒரு நபரின் படங்களுடன் நினைவுப்படுத்தப்படுகிறது. ஆனாலும் அவரின் சாதனைகளை எண்ணிபார்க்கும் போது அவரின் இயக்கமின்மை அவரை ஒருபோதும் நிறுத்தவில்லை என்பது புரியும்.

    ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் இரண்டாம் உலகப் போரின்போது இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டில் ஜனவரி 8, 1942 இல் பிறந்தார். அண்டவியல், கோட்பாட்டு இயற்பியல் துறைகளில், குறிப்பாக கருந்துளைகள் மற்றும் பிரபஞ்சத்தின் தோற்றம் ஆகியவற்றில் அவர் செய்த அற்புதமான பணிகளுக்காக அவர் பரவலாக அங்கீகரிக்கப்பட்டார்.


     

    ஹாக்கிங்கிற்கு 21 வயதில் ஒரு அரிய நரம்பியல் நோய் இருப்பது கண்டறியப்பட்டது. இது அவரது உடலை படிப்படியாக செயலிழக்கச் செய்தது. உடலை கிட்டத்தட்ட உடலை அசைக்க முடியாத அளவுக்கு அவரது உடல்நிலை மோசமடைந்தது. இருந்தபோதிலும், அவர் தனது கல்விப் பணியைத் தொடர்ந்தார். ஆக்ஸ்போர்டில் உள்ள பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டமும்,கேம்பிரிட்ஜ் டிரினிட்டி கல்லூரியில் இருந்து முனைவர் பட்டமும் பெற்றார்.

    பிக் பேங் கோட்பாட்டின் மூலம் பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றிய நமது புரிதலுக்கு ஹாக்கிங் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தார். அவரது அறிவியல் சாதனைகளுக்கு மேலதிகமாக, ஹாக்கிங் ஒரு சிறந்த எழுத்தாளர் மற்றும் அறிவியலின் தொடர்பாளராகவும் இருந்தார்.

     


    அவர் எழுதிய பல்வேறு புத்தகங்கள் விற்பனையில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளன. அறிவியல் மற்றும் சமூகத்தில் ஹாக்கிங்கின் தாக்கம் அளப்பரியது. அவர் தனது வாழ்நாள் முழுவதும் பல விருதுகளையும் கௌரவங்களையும் பெற்றார். அவர் ராயல் சமுதாயத்தின் (சொசைட்டி) சக உறுப்பினராகவும், பல மதிப்புமிக்க அறிவியல் நிறுவனங்களின் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

    ஹாக்கிங் தனது 76வது வயதில் மார்ச் 14, 2018 அன்று காலமானார். ஸ்டீபன் ஹாக்கிங்கின் 80வது பிறந்தநாளை முன்னிட்டு, கூகுள் டூடுலில் இரண்டரை நிமிட யூடியூப் வீடியோவை வெளியிட்டது. அதில் கணினியால் உருவாக்கப்பட்ட அவரது குரல் இடம்பெற்றிருக்கிறது.



    • முன்னணி கால்பந்து வீரர்களும் இடம்பெறவில்லை.
    • விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரும் இடம்பிடிக்கவில்லை

    உலகின் முன்னணி தேடுப்பொறி சேவை வழங்கும் நிறுவனம் கூகுள். உலகளவில் 2023 ஆண்டு அதிகம் தேடப்பட்ட விளையாட்டு வீரர்களின் டாப் 10 பட்டியலை வெளியிட்டு உள்ளது. இந்த பட்டியலில் அதிசயிக்கும் வகையில் கிரிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி போன்ற முன்னணி கால்பந்து வீரர்கள் இடம்பெறவில்லை.

    இதுதவிர இந்திய கிரிக்கெட் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரும் டாப் 10 பட்டியலில் இடம்பிடிக்கவில்லை. ஆனாலும் உலகளவில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு வீரர்களின் டாப் 10 பட்டியலில் ஒரேயொரு இந்திய வீரர் இடம்பிடித்துள்ளார்.

     


    வளர்ந்து வரும் இந்திய கிரிக்கெட் வீரரான சுப்மன் கில் தனது அசாத்திய ஃபார்ம் மூலம் இந்திய அணியில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். அந்த வகையில், உலகளவில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு வீரர்கள் பட்டியலில் சுப்மன் கில் ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளார். இந்த பட்டியலில் எட்டாவது இடத்தில் நியூசிலாந்து அணியின் ரச்சின் ரவீந்திரா இடம்பெற்றுள்ளார்.

    அதிகம் தேடப்பட்ட விளையாட்டு வீரர்கள் டாப் 10 பட்டியல்:

    1 - டமர் ஹேம்லின்

    2 - கிலியன் எம்பாப்பே

    3 - டிராவிஸ் கெல்ஸ்

    4 - ஜா மொரண்ட்

    5 - ஹேரி கேன்

    6 - நோவக் ஜோகோவிக்

    7 - கார்லோஸ் அல்காரஸ்

    8 - ரச்சின் ரவீந்திரா

    9 - சுப்மன் கில்

    10 - கைரி இர்விங்

    • இந்திய அணியின் கேப்டனாக இருந்தபோதும், ஐபிஎல் அணியின் கேப்டனாக இருந்தபோதும் முதன்மையான கோப்பைகளை வென்று கொடுத்ததில்லை.
    • ரொனால்டோ- மெஸ்சி இடையிலான போட்டி கால்பந்து விளையாட்டில் மிகப்பெரியதாக பார்க்கப்பட்டது.

    இணைய தளத்தில் மிகப்பெரிய தேடும் மையமாக கூகுள் அமைந்துள்ளது. கூகுள் பக்கத்தில் தேடினால், கிடைக்காதது ஏதும் கிடையாது எனலாம். இணைய தளம் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு சந்தேகம் என்றால் உடனடியாக நினைவுக்கு வருவதாக கூகுள்தான்.

    இவ்வளவு புகழ் வாய்ந்த கூகுள் நிறுவனம், தங்களது தேடும் பக்கத்தில் கடந்த 25 வருடத்தில் அதிகமாக தேடப்பட்ட கிரிக்கெட் வீரர், விளையாட்டு வீரர் யார் என்பதை தெரிவித்துள்ளத.

    இந்திய கிரிக்கெட் அணியின் சச்சின் தெண்டுல்கர், எம்எஸ் தோனி, ரோகித் சர்மா உள்ளிட்ட முன்னணி வீரர்களை பட்டியல் இருந்தாலும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக சர்வதேச சதங்கள் (50) அடித்த விராட் கோலிதான் நம்பர் ஒன் இடத்தில் உள்ளார்.

    விராட் கோலி இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக உள்ளார். கேப்டனாக இருந்துள்ளார். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். இந்திய அணியின் கேப்டனாக இருந்தபோதும், ஐபிஎல் அணியின் கேப்டனாக இருந்தபோதும் முதன்மையான கோப்பைகளை வென்று கொடுத்ததில்லை. இருந்த போதிலும் கூகுளில் தேடும் நபர்களில் நம்பர் ஒன்னாக திகழ்கிறார். இவர் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பத்திக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

    ஆனால் விளையாட்டு வீரர்கள் பட்டியலில் விராட் கோலிக்கு முதல் இடம் கிடைக்கவில்லை. போர்ச்சுக்கல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ திகழ்ந்து வருகிறார். 38 வயதாகும் கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது சவுதி அரேபியாவின் அல்-நகர் கிளப்பில் விளையாடி வருகிறார். 38 வயது ஆனாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து வருகிறார்.

    ரொனால்டோ- மெஸ்சி இடையிலான போட்டி கால்பந்து விளையாட்டில் மிகப்பெரியதாக பார்க்கப்பட்டது. ரொனல்டோ ரியால் மாட்ரிக் அணிக்காகவும், மெஸ்சி பார்சிலோனா அணிக்காகவும் விளையாடிய காலம் கால்பந்து விளையாட்டின் பொற்காலம் எனலாம்.

    ரொனால்டோ மாஸ்செஸ்டர் யுனைடெட், ரியல் மாட்ரிக் அணிகளுக்காக விளையாடிய 15 வருட காலத்தில் ஜாம்பவானாக திகழ்ந்தார் என்றால் அது மிகையாகாது.

    • கூகுள் மெசேஜஸ் செயலியில் புதிய அம்சம்.
    • புதிய அம்சம் பீட்டா வெர்ஷனில் வழங்கப்பட்டுள்ளது.

    கூகுள் நிறுவனம் தனது மெசேஜஸ் ஆப்-ஐ வாட்ஸ்அப், சிக்னல் போன்ற குறுந்தகவல் செயலிகளுக்கு போட்டியாக மாற்றும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. கூகுளின் மெசேஜஸ் செயலியில் ஆர்.சி.எஸ். எனப்படும் ரிச் கம்யூனிகேஷன் சர்வீசஸ் வசதி உள்ளது. மற்ற குறுந்தகவல் செயலிகளுடனான போட்டியை வலுப்படுத்தும் நோக்கில் கூகுள் நிறுவனம் மெசேஜஸ் செயலியில் புதிய வசதியை வழங்கி உள்ளது.

    மெசேஜஸ் செயலியில் எமோஜி ரியாக்ஷன்ஸ் அம்சம், யூடியூப் வீடியோக்களை மெசேஜஸ் செயலியில் இருந்தபடி பார்க்கும் வசதி என ஏராளமான அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த வரிசையில் மெசேஜஸ் செயலியில் ஏற்கனவே வழங்கப்பட்டு இருக்கும் "வாய்ஸ் நோட்ஸ்" (Voice Notes) அம்சத்தில் புதிய வசதி சேர்க்கப்பட்டு இருக்கிறது.

    கோப்புப்படம்

    கோப்புப்படம்

    இந்த அம்சம் கொண்டு பயனர்கள் சிறிய வாய்ஸ் நோட்-ஐ ரெக்கார்டு செய்து அதனை மெசேஜஸ் ஆப் மூலம் மற்றவர்களுக்கு அனுப்ப முடியும். தற்போது வெளியாகி இருக்கும் புதிய அம்சம் கொண்டு பயனர்கள் வாய்ஸ் நோட் ரெக்கார்டு செய்யும் போது வெளிப்புற சத்தத்தை தவிர்க்க முடியும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    அதன்படி கூகுள் மெசேஜஸ் செயலியின் வாய்ஸ் நோட் அம்சத்தில் நாய்ஸ் கேன்சலேஷன் (Noise Cancellation) வசதி சேர்க்கப்படுகிறது. முதற்கட்டமாக இந்த வசதி கூகுள் மெசேஜஸ் செயலியின் பீட்டா வெர்ஷனில் வழங்கப்பட்டு இருக்கிறது. இதற்காக செயலியில் நாய்ஸ் கேன்சலேஷன் பெயரில் பிரத்யேக பட்டன் வழங்கப்பட்டுள்ளது.

    இதை பயன்படுத்தும் போது வாய்ஸ் நோட்-களில் வெளிப்புற சத்தம் எதுவும் பதிவாகாது. வாய்ஸ் நோட்-இல் வழங்கப்படும் புதிய நாய்ஸ் கேன்சலேஷன் அம்சம் தற்போது டெஸ்டிங் கட்டத்திலேயே உள்ளது. அந்த வகையில், இந்த அம்சம் செயலியின் எதிர்கால அப்டேட்களில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

    ×