search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "India alliance"

    • பா.ஜ.க. அதிகபட்சமாக 200 இடங்களில் வெற்றி என்ற அளவுடன் கட்டுப்படுத்தப்படும்.
    • நமது மத வழக்கங்களாகட்டும் அல்லது உணவுப் பழக்கவழக்கங்களாகட்டும். அனைத்திலும் பா.ஜ.க.வினர் தலையிடுகின்றனர்.

    கல்யாணி:

    மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டம், கல்யாணி பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று மேற்கு வங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி பேசியதாவது:-

    சந்தேஷ்காளி விவகாரத்தில் பா.ஜ.க.வினரும் பிரதமரும் பொய்யான தகவல்களைப் பரப்புகின்றனர். உத்தரவாத மன்னர் (மோடி) மேற்கு வங்காளத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கிறார்.

    தற்போது பல்வேறு வீடியோக்கள் வெளியாகி உண்மை வெளிவரத் தொடங்கியுள்ள நிலையில் அந்தக் காட்சிகளைக் காட்ட வேண்டாம் என்று பா.ஜ.க.வினர் தொலைக்காட்சி சேனல்களை கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.

    பாராளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி 295 முதல் 315 வரையிலான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றும். பா.ஜ.க. அதிகபட்சமாக 200 இடங்களில் வெற்றி என்ற அளவுடன் கட்டுப்படுத்தப்படும். இந்த பாராளுமன்றத் தேர்தலில் 3-வது முறையாக பிரதமர் மோடி ஆட்சிக்கு வர மாட்டார் என்பதே எங்களின் ஒரே உத்தரவாதமாகும்.

    மேற்கு வங்காளத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை அமல்படுத்த விட மாட்டோம்.

    நமது மத வழக்கங்களாகட்டும் அல்லது உணவுப் பழக்கவழக்கங்களாகட்டும். அனைத்திலும் பா.ஜ.க.வினர் தலையிடுகின்றனர். இதை ஏற்க முடியாது. இது நீண்ட காலத்துக்குத் தொடர முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தேர்தலுக்கு பிறகு இந்தியா கூட்டணி ஆட்சி அமைவது உறுதி என்கிற நம்பிக்கை நாளுக்கு நாள் வலிமை பெற்று வருகிறது.
    • இந்தியாவின் எதிர்காலம் ஒளிமயமாக அமைய இந்தியா கூட்டணி வெற்றி பெறுவது உறுதியாகி இருக்கிறது.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஓய்வு பெற்ற நீதிபதிகள் மதன் பி. லோகூர், அஜித் பி.ஷா மற்றும் மூத்த பத்திரிகையாளர் என். ராம் ஆகியோர் பாராளுமன்றத் தேர்தலின் முக்கிய பிரச்சனைகள் குறித்து பொது தளத்தில் விவாதம் நடத்த பிரதமர் மோடிக்கும், ராகுல் காந்திக்கும் அழைப்பு விடுத்து கடிதம் எழுதினர்.

    இந்த கடிதம் கிடைத்தவுடனே அழைப்பை ஏற்றுக் கொண்ட ராகுல்காந்தி, பிரதமர் மோடியுடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த தயார் என நேற்று முன்தினம் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்தார். இந்நிலையில் இதுவரை பிரதமர் நரேந்திர மோடியிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.

    அத்தகைய விவாதத்தை நடத்துவதற்கு நரேந்திர மோடிக்கு துணிவில்லை என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மடியில் கனம் இருப்பதால் ராகுல்காந்தியுடன் விவாதிக்க நரேந்திர மோடி தயாராக இல்லை.

    விலைவாசி உயர்வு, வரலாறு காணாத வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை மறுப்பு, பணமதிப்பு நீக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்பு, கொரோனா தொற்றினால் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழப்பு, பொருளாதார பாதிப்பு, மோடியின் சலுகையினால் அதானி, அம்பானி சொத்து குவிப்பு, ஏழை, எளியவர்களின் வாழ்வாதாரம் இழப்பு, மாநில உரிமைகள் பறிப்பு போன்ற நடவடிக்கைகள் காரணமாக நரேந்திர மோடி திரும்ப ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பு கடுகளவு கூட இல்லை என்று அறிவார்ந்த அரசியல் வல்லுநர்களும், பாரபட்சமற்ற தேர்தல் கணிப்பாளர்களும் நாள்தோறும் கருத்துகளை கூறி வருகிறார்கள்.

    இதனால் பதற்றமும், அச்சமும் அடைந்த பிரதமர் மோடியும், பா.ஜ.க.வினரும் மத ரீதியாக மக்களை பிளவுபடுத்தி, அச்சுறுத்தி வெற்றி பெற்று விடலாம் என்கிற கனவை நாளுக்கு நாள் ராகுல்காந்தி தகர்த்து வருகிறார்.

    இதன்மூலம் தேர்தலுக்கு பிறகு இந்தியா கூட்டணி ஆட்சி அமைவது உறுதி என்கிற நம்பிக்கை நாளுக்கு நாள் வலிமை பெற்று வருகிறது. இந்தியாவின் எதிர்காலம் ஒளிமயமாக அமைய இந்தியா கூட்டணி வெற்றி பெறுவது உறுதியாகி இருக்கிறது. இந்த பின்னணியில் தான் ராகுல்காந்தியோடு நேருக்கு நேர் விவாதிக்க பிரதமர் மோடி அஞ்சி பின் வாங்குவதில் வியப்பொன்றும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • தமிழகத்தில் தி.மு.க. -காங்கிரஸ் கூட்டணி 40 தொகுதிகளையும் கைப்பற்றி முழுமையான வெற்றி பெறும். அதற்கு காரணம் கூட்டணி வலிமை.
    • ஆக்கப்பூர்வமான உத்தரவாதங்கள் எதையும் அவர்களால் மக்களுக்கு கொடுக்க முடியவில்லை.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் மூத்த தலைவரான கே.எஸ்.அழகிரி தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது பற்றி கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. -காங்கிரஸ் கூட்டணி 40 தொகுதிகளையும் கைப்பற்றி முழுமையான வெற்றி பெறும். அதற்கு காரணம் கூட்டணி வலிமை.

    ராகுல், மு.க.ஸ்டாலின் மிகவும் வெற்றிகரமாக தேர்தல் பணியை முன்னெடுத்தார்கள். மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வரும் பெண்களுக்கு மாதம் ரூ.1000, பஸ்களில் இலவச பயணம், கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டத்தின் சம்பள உயர்வு ஆகியவையும் ராகுல் அறிவித்துள்ள பெண்களுக்கு ரூ.1 லட்சம் போன்ற திட்டங்கள் பெண்களை வெகுவாக கவர்ந்துள்ளன. 99 சதவீத பெண்கள் ஆதரவு இந்த கூட்டணிக்குத்தான் கிடைக்கும் என்பதை மறுக்க முடியுமா?

    எதிர்கட்சிகள் சிதறி கிடக்கின்றன. ஆக்கப்பூர்வமான உத்தரவாதங்கள் எதையும் அவர்களால் மக்களுக்கு கொடுக்க முடியவில்லை.

    பா.ஜனதாவால் வேரூன்ற முடியவில்லை. பிரதமர் மோடி பிரிவினை வாத அரசியலை கையில் எடுத்துள்ளார். மக்களை ஒற்றுமை படுத்துபவராக இல்லை.

    தமிழக மக்கள் கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள். ஒரு போதும் மத வெறியர்களாக மாறமாட்டார்கள். அது எந்த மதமாக இருந்தாலும் சரி.

    அதற்கு காரணம் இந்த மண்வாசனை அப்படிப்பட்டது.

    பிரதமர் மோடியும், அமித்ஷாவும் பா.ஜனதா தனது கணக்கை தமிழ் நாட்டில் இருந்து தொடங்கும் என்று கூறி வருகிறார்கள். அவர்களின் நம்பிக்கை நிச்சயம் பலிக்கும். பா.ஜனதாவின் நாடு தழுவிய தோல்வி கணக்கை இங்கிருந்துதான் தொடங்குவார்கள்.

    அதற்கு கோவை தொகுதி ஒரு சாட்சி. அந்த தொகுதியில் பா.ஜனதாவுக்கு பூத்தில் அமர கூட ஆட்கள் இல்லை. அதனால்தான் தோல்வியை உணர்ந்து ஒரு லட்சம் ஓட்டுக்களை காணவில்லை என்றார்கள். வாக்காளர்களின் பெயர் சேர்க்க, சரி பார்க்க எவ்வளேவா அவகாசம் கொடுத்தும் ஒரு லட்சம் பெயர்கள் விடுபட்டது என்பது எப்படி சாத்தியம்?

    கோவையில் அண்ணாமலையின் தோல்வி எழுதி வைக்கப்பட்டது. அதில் எந்த மாற்றமும் இல்லை. தேர்தல் முடிவுக்கு பிறகு பா.ஜனதா தனது நிலையை உணர்ந்து கொள்ளும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 4-வது கட்டத் தேர்தல் 10 மாநிலங்களில் வருகிற 13-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.
    • மஹாராஷ்டிராவில் பிரியங்கா காந்தி கலந்து கொண்ட தேர்தல் பிரசாரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

    பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, கடந்த மாதம் 19-ந் தேதி 102 தொகுதிகளுக்கும், 26-ந்தேதி 89 தொகுதிகளுக்கும் மே 7-ம் தேதி 93 தொகுதிகளுக்கும் முதல் 3 கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடத்தி முடிக்கப்பட்டது.

    இதனையடுத்து 4-வது கட்டத் தேர்தல் 10 மாநிலங்களில் வருகிற 13-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. அன்று 96 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரம் இன்றுடன் முடிவடைந்தது.

    இந்நிலையில், மஹாராஷ்டிராவில் பிரியங்கா காந்தி கலந்து கொண்ட தேர்தல் பிரசாரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். அது தொடர்பான வீடியோவை பிரியங்கா காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    அந்த வீடியோவை பகிர்ந்துள்ள ராகுல்காந்தி, "மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், ஹரியானா, பீகார் என நாடு முழுவதும் இந்தியா கூட்டணியின் புயல் வீசுகிறது. மீண்டும் சொல்கிறேன் ஜூன் 4 ஆம் தேதிக்கு பிறகு நரேந்திர மோடி பிரதமராக இருக்க மாட்டார்" என்று பதிவிட்டுள்ளார்.

    • ஜார்கண்ட் என்ற அடையாளத்தின் இருப்புக்காக நாங்கள் கடுமையாக போராடி வருகிறோம்.
    • எனது வாழ்க்கையில் ஒரு புதிய சவாலை ஏற்க தயாராக இருப்பதாக உணர்கிறேன்.

    ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்-மந்திரியும், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி செயல் தலைவருமான ஹேமந்த் சோரனை சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கடந்த ஜனவரி 31-ந்தேதி அமலாக்கத்துறை கைது செய்தது. இதையடுத்து கட்சி நடவடிக்கைகளை ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் கவனித்து வருகிறார்.அவர் இந்தியா கூட்டணி பொதுக்கூட்டத்திலும் கலந்து கொண்டார்.

    இந்த நிலையில் கல்பனா சோரன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கேள்வி:-கடந்த 2 மாதங்களாக உங்கள் அரசியல் பயணம் எப்படி இருந்தது?

    பதில்:-எனது கணவர் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை கடந்த ஜனவரி 31-ந்தேதி கைது செய்த பிறகு எனது வாழ்க்கை முற்றிலும் மாறிவிட்டது.ஏனென்றால் இது திடீரென்று நடந்தது. எனக்கு இடையூறுகளை ஏற்படுத்தியது.ஆனால் அனைத்து தடைகளையும் கடந்து தற்போது தேர்தல் பரபரப்பில் இருந்து வருகிறோம். ஜார்கண்ட் என்ற அடையாளத்தின் இருப்புக்காக நாங்கள் கடுமையாக போராடி வருகிறோம்.

    கேள்வி:-உங்களது கணவரின் அண்ணன் மனைவி சீதா சோரன் ஜே.எம்.எம். கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் சேர எடுத்த முடிவை எப்படி பார்க்கிறீர்கள்?

    பதில்:-அவர் எடுத்த முடிவு ஊடகங்கள் மூலம் எங்களுக்கு தெரிந்தது. இது எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எனது கணவருக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கையால் நான் ஏற்கனவே உடைந்து போயிருந்தேன். அதிலிருந்து வெளியே வர சிறிது நேரம் பிடித்தது. அந்த முடிவு அவருடைய தனிப்பட்டது என்று நம்புகிறேன். அதை நான் மதிக்கிறேன்.

    கேள்வி:-ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டால், என்ன செய்வது என்று அவருடன் விவாதித்தீர்களா?

    பதில்:-ஹேமந்த் பற்றி மிகவும் கவலைப்பட்டேன். நான் சட்ட நடவடிக்கைகளை கவனித்துக் கொண்டிருந்தேன். குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் அவரவர் சொந்தப் பொறுப்பில் ஈடுபட்டிருந்தனர். எனவே ஒரு மனைவியாகவும், ஒரு மனிதனாகவும் குடும்பம், கட்சி, தொண்டர்களுக்காக துணை நிற்பது எனது தனிப்பட்ட கடமை என்று நான் நினைத்தேன். எனது பிறந்த நாளான மார்ச் 3-ந்தேதி அன்று ஏற்பட்ட சூழ்நிலை மற்றும் பொறுப்பின் காரணமாக மாமனார், மாமியார் ஆசியுடன் தீவிர அரசியலில் இறங்கினேன்.

    கேள்வி:-உங்கள் கணவர் கைது செய்யப்பட்டதற்கு யார் காரணம் என்று நினைக்கிறீர்கள்?

    பதில்:-ஹேமந்த் கைது தொடர்பான நிலம் அவரது பெயரில் உள்ளதா என அதிகாரிகள் சோதித்திருக்க வேண்டும். அவரது பெயரில் ஒரு பேப்பர் கூட இல்லை.இந்தக் கேள்வி ஏன் ஹேமந்த்திடம் கேட்கப்படுகிறது என்று கேட்க விரும்புகிறேன். நிலம் தங்களுக்கே சொந்தம் என்று தற்போதும் கூறும் நில உரிமையாளர்களிடம் ஏன் கேள்வியை கேட்கவில்லை. நில உரிமையாளரும் குற்றம் சாட்டப்பட்டுஉள்ளாரா என்பது பெரிய கேள்வியாக இருக்கிறது.

    கேள்வி:-ஹேமந்த் சோரன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையைப் பார்க்கும் போது, ஊழலுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

    பதில்:-எங்களது உரிமையை பெற்று தருமாறு மத்திய அரசிடம் கேட்கிறோம். மத்திய அமைச்சகத்தால் முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட சர்னா மதக் குறியீட்டை நாங்கள் கேட்கிறோம்.ஆனால் அது மறுக்கப்படுகிறது. அதுவும் ஊழல்தான். நான் ஊழலுக்கு முற்றிலும் எதிரானவள். ஆனால் மத்திய அரசு ஜார்கண்ட்டை வளர்ப்பு மகன் போல நடத்துகிறது. அதுவும் ஊழல்தான். நாங்கள் ஏமாற்றப் பட்டதாக உணர்கிறோம். இதனால்தான் மத்திய அரசின் மாற்றாந்தாய் போக்குக்கு எதிராக முதல்வராக இருந்து ஹேமந்த் குரல் எழுப்பினார்.

    கேள்வி:-ஜார்கண்ட்டின் வருங்கால முதல்-மந்திரியிடம் பேசுகிறோம் என்று கூறலாமா?

    பதில்:-இப்போதே இல்லை.எனது மாமனார் சிபு சோரன், கணவர் ஹேமந்த், கட்சித் தொண்டர்களின் எண்ணங்கள், லட்சியங்களில் இருந்து நான் இன்னும் கற்றுக் கொண்டிருக்கிறேன். தொண்டர்கள் என்னைப் பார்க்கும்போது அவர்கள் மிகவும் உற்சாகமாக உணர்கிறார்கள்.

    கேள்வி:-கட்சியினர் உங்கள் பெயரை முன்மொழிந்தால் முதல்-மந்திரி பொறுப்பை ஏற்க தயாரா?

    பதில்:-மக்கள் என்னை ஒரு போர்வீராங்கனையாக ஆக்கியுள்ளனர். நான் ஒரு போராட்ட குணம் படைந்தவள் என்பதால் அந்த வார்த்தையை விரும்புகிறேன். எனது வாழ்க்கையில் ஒரு புதிய சவாலை ஏற்க தயாராக இருப்பதாக உணர்கிறேன். நான் அதை செய்ய விரும்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நீங்கள் நம்பாத ஒரு ஆச்சரியமான விஷயத்தைச் சொல்கிறேன். இந்த முறை நாட்டில் புதிதாக ஒன்று நடக்கப் போகிறது.
    • தற்போது அனைத்து பிராந்திய கட்சிகளும் பலமாக உள்ளன. அவர்கள் ஒரு சக்தியாக வெளிப்படுவார்கள்.

    தெலுங்கான மாநில முன்னாள் முதல்வரும், பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவருமான கே. சந்திரசேகர ராவ் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்திருந்தார்.

    அப்போது சந்திரசேகர ராவ் கூறியதாவது:-

    நீங்கள் நம்பாத ஒரு ஆச்சரியமான விஷயத்தைச் சொல்கிறேன். இந்த முறை நாட்டில் புதிதாக ஒன்று நடக்கப் போகிறது. தற்போது அனைத்து பிராந்திய கட்சிகளும் பலமாக உள்ளன. அவர்கள் ஒரு சக்தியாக வெளிப்படுவார்கள். இது என்டிஏ அல்லது இந்தியா கூட்டணியை ஆதரிக்கும் பிராந்திய கட்சிகள் அல்ல. அது போன்று நடக்காது. பா.ஜனதா தலைமையிலான என்டிஏ அல்லது காங்கிரஸ் தலைமையலான இந்தியா கூட்டணி பிராந்தியக் கட்சிகளின் குழுவுக்கு ஆதரவளிக்க வேண்டும். இது ஒரு தலைகீழ் விஷயமாக இருக்கும். நீங்கள் அதை பார்ப்பீர்கள்.

    தெலுங்கானாவில் கடந்த முறை 17 தொகுதிகளில் 9 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த முறை இரண்டு இலக்க எண் இடங்களில் வெற்றி பெறுவோம்.

    தெலுங்கானா மாநிலத்தில் பெண்களுக்கு இலவச பேருந்து டிக்கெட் மட்டுமே காங்கிரஸ் அளித்த வாக்குறுதியில் நிறைவேற்றியுள்ளது. அதுவும் பெரிய நகைச்சுவையாகிவிட்டது. பெண்கள் பேருந்துகளிலும், ஆட்டோ ஓட்டுநர்கள் சாலைகளிலும் (போராட்டம்) போராடுகிறார்கள். இதனால் மக்கள் மிகவும் கோபத்தில் உள்ளனர். எனது ஆட்சியில் மிகுந்த நம்பிக்கையைப் பெற்ற விவசாய சமூகமும் கடும் கோபத்தில் உள்ளது. இது மக்களவை தேர்தலில் எதிரொலிக்கும் என நினைக்கிறேன்.

    கடந்த முறை 4 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், மக்களவை தேர்தலில் தெலுங்கானாவில் பா.ஜ.,வுக்கு ஒன்று அல்லது எதுவுமே கிடைக்காது.

    இவ்வாறு சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.

    • மோடி இந்தியாவின் பிரதமராகமாட்டார் என்பதை எழுத்துப்பூர்வ உறுதியாக அளிக்கிறேன்.
    • எந்த டெம்போ, என்ன வகையான பணத்தை அதானி அனுப்பினார் என்பது மோடிக்கு தெரியும்.

    காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களையும், இந்தியா கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து காங்கிரஸ் கட்சி எம்.பி. ராகுல் காந்தி தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    உத்தர பிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் நேரடியாக களம் இறங்கியுள்ளார். அவரை ஆதரித்து ராகுல் காந்தி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

    அப்போது ராகுல் காந்தி கூறியதாவது:-

    நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராகமாட்டார். அவரது பிரதமர் காலம் முடிந்தது. இதை எழுத்துப்பூர்வ உறுதியாக நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.

    கடந்த 10 ஆண்டுகளாக நீங்கள் பார்த்தீர்கள் என்றால், பிரதமர் மோடி அதானி மற்றும் அம்பானி பெயரை உச்சரித்தது கிடையாது. தற்போது அவர்களால் மோடியை காப்பாற்ற முடியும் என அவர் நினைக்கிறார்.

    இந்தியா கூட்டணி என்னை சூழ்ந்து சுற்றி வளைத்துள்ளது. நான் தோற்றுக் கொண்டு வருகிறேன். என்னை காப்பாற்றுங்கள். அதானி- அம்பானி ஜி என்னை காப்பாற்றுங்கள் என மோடி, அவரது தொழில் அதிபர் நண்பர்களிடம் கூறும் நிலையில் மோடி இருக்கிறார் என்பதுபோல் ராகுல் காந்தி கிண்டல் செய்தார்.

    ஆகவே எந்த டெம்போ, என்ன வகையான பணத்தை அதானி அனுப்பினார் என்பது மோடிக்கு தெரியும். டெம்போ குறித்த தனிப்பட்ட அனுபவம் மோடிக்கு உள்ளது.

    உத்தர பிரசேதத்தில் நீங்கள் பார்க்க போகிறீர்கள்... இந்தியா கூட்டணி என்ன புயல் வந்து கொண்டிருக்கிறது. இங்கு பா.ஜனதா மிகப்பெரிய தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நான் உங்களுக்கு எழுத்துப்பூர்வ உறுதியாக தருகிறேன். இந்தியாவில் மாற்றம் நிகழப் போகிறது. மக்கள் முடிவு செய்துவிட்டனர். உ.பி.யில் மாற்றம் நிகழும் என மக்கள் முடிவு செய்திருந்தனர்.

    இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

    • தேர்தல் முடிவை உலக நாடுகளே எதிர்பார்த்து காத்துள்ளன.
    • சூதாட்ட பண பரிமாற்றம் நடந்து வருகிறது.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல்.கிரிக்கெட் சூதாட்டம் ஒரு புறம் களை கட்டி இருந்தாலும் மறுபுறம் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு? என்பது தொடர்பான சூதாட்டமும் தற்போது இணையதளத்தை கலக்கி வருகின்றன.

    இந்த பாராளுமன்ற தேர்தலில் மத்தியில் 3- வது முறையாக பாரதீயஜனதா கட்சி ஆட்சி அமைக்குமா? அல்லது எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ள இந்தியா கூட்டணி வெற்றி பெறுமா? என்ற பரபரப்பு எகிறி உள்ளது. பாராளுமன்ற தேர்தல் முடிவை இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகளே எதிர்பார்த்து காத்துள்ளன.

    பாராளுமன்ற தேர்தலுக்கான 7 கட்ட வாக்குப்பதிவுகள் தொடர்ச்சியாக நடந்து வரும் சூழ்நிலையில் இணையதளத்தில் சூதாட்டமும் களை கட்டி உள்ளது. இதற்காக தனி செயலிகள் மற்றும் இணையதளங்கள் முளைத்து உள்ளது. பெரும்பாலானவை இந்தியாவை தாண்டி மற்ற நாடுகளில் இருந்து இந்த இணையதளங்கள் இயங்கி வருகின்றன.

    இதில் 2024 பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெறும், ஒவ்வொரு கட்சிக்கும் எத்தனை இடங்கள் கிடைக்கும், வேட்பாளர்கள் எத்தனை ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள் என்பது போன்ற சூதாட்டம் நடந்து வருகிறது.

    இதைத்தவிர தொகுதி வாரியாகவும் சூதாட்டம் நடத்தப்படுகிறது. குறிப்பிட்ட தொகுதிகளில் எந்த கட்சி வெற்றி பெறும், எந்த வேட்பாளர்கள் வெல்வார்கள் என இப்படி பல்வேறு வகைகளில் சூதாட்டம் நடக்கிறது. இந்த சூதாட்டம் பயனாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    குறைந்தது 100 ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை போட்டி போட்டுக்கொண்டு பலர் பணத்தை கட்டி வருகின்றனர். யு.பி.ஐ மூலமாகவும், வங்கி கணக்குகள் மூலமாகவும் இந்த சூதாட்ட பண பரிமாற்றம் நடந்து வருகிறது. வரும் நாட்களில் இந்த சூதாட்டம் மேலும் சூடு பிடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலின் போதும் இது போன்ற இணையதள சூதாட்டங்கள் நடந்தது. ஆனால் அதை விட தற்போது அதிகளவில் இந்த சூதாட்டம் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • மத நல்லிணக்கத்தில் நம்பிக்கையுள்ள இந்தியா கூட்டணி வெற்றி பெறுவது உறுதி.
    • ஒவ்வொரு கட்டத்திலும் காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்து முறியடித்து வருகிறது.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்கள் போல் இருக்கிறார்கள் என்று கூறியதாக ஒரு கருத்தை வைத்துக்கொண்டு காங்கிரஸ் கட்சியுடன் உள்ள உறவை முறிக்க தி.மு.க. தயாரா என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி சவால் விடுத்திருக்கிறார்.

    எதற்கு எதை முடிச்சு போடுவது என்று தெரியாமல் அரசியல் உள்நோக்கத்தோடு கருத்துகளை திரித்து பேசுவது மோடியின் கை வந்த கலையாக இருக்கிறது. அதை ஒவ்வொரு கட்டத்திலும் காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்து முறியடித்து வருகிறது.

    இந்நிலையில் அமெரிக் காவில் வாழ்கிற சாம்பிட் ரோடா ஏற்கனவே தெரிவித்த ஒரு கருத்துக்கு காங்கிரஸ் கட்சி மறுப்பை வெளியிட்டது. அதேபோல, அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் இக் கருத்தை காங்கிரஸ் கட்சி ஏற்றுக்கொள்ளவில்லை என மறுப்பு கூறியிருக்கிறார்.

    இதைத் தொடர்ந்து அகில இந்திய காங்கிரசின் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரிவின் பொறுப்பிலிருந்து சாம்பிட்ரோடா விலகிக்கொண்டிருக்கிறார். இதன் மூலம் அவரது கருத்தை காங்கிரஸ் கட்சி முழுமை யாக நிராகரித்திருக்கிறது. இதற்கு பிறகும் இக்கருத்தின் அடிப்படையில் சவால் விடுவது அரசியல் நாகரீக மற்ற செயலாகும். இதை வன்மையாக கண்டிக்கிறேன்.

    அமெரிக்க குடியரசு தலைவராக பராக் ஒபாமா 2010-ல் இந்தியாவுக்கு வருகை புரிந்த போது, அன்றைய பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங்கை சந்தித்து இந்தியாவில் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த முஸ்லீம்களுக்கு எதிராக வளர்ந்து வருகிற அச்சுறுத் தலையும், அதன்மூலம் இந்து தேசியவாதத்தை பா.ஜ.க. வளர்ப்பதையும் கவலையோடு பகிர்ந்து கொண்டதை இங்கு நினைவு கூறுவது அவசியமாகும்.

    அன்று பராக் ஒபாமா எதை கண்டு அச்சம் தெரிவித்தாரோ அத்தகைய அச்சத்தை 10 ஆண்டுகால மோடி ஆட்சியின் மூலம் நாடு முழுவதும் தீய பிரசாரம் பரப்பப்பட்டு வருகிறது. மக்களவை தேர்தலில் தோற்பது உறுதியாகியதை முற்றிலும் உணர்ந்து விட்ட மோடி, மக்களை பிளவு படுத்துவதற்கு இல்லாததை எல்லாம் இட்டுக் கட்டி அப வாதங்களை கூறி வருகிறார்.

    10 ஆண்டுகால ஆட்சியின் மூலம் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் மக்கள் விரோத ஆட்சியினால் ஏற்பட்ட பாதிப்புகளை மூடி மறைப்பதற்கு வகுப்புவாத, நச்சு கருத்துகளை பரப்பி மக்களை பிளவுபடுத்தும் மோடியின் முயற்சியை காங்கிரஸ் கட்சியின் தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் களத்தில் நின்று போராடி மக்கள் மன்றத்தில் முறியடித்து வருகிறார்கள்.

    இவர்களது கடும் பரப்புரையினால் வகுப்புவாத மோடி ஆட்சி வீழ்த்தப்பட்டு, மத நல்லிணக்கத்தில் நம்பிக்கையுள்ள இந்தியா கூட்டணி வெற்றி பெறுவது உறுதியாகியிருக்கிறது. இதன்மூலம் மக்களவை தேர்தலுக்கு பிறகு அனைத்து மக்களையும் உள்ளடக்கிய நல்லாட்சியை இந்தியா கூட்டணி அமைப்பதை நரேந்திர மோடி உள்ளிட்ட எவராலும் தடுக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பிரதமர் மோடி பழங்குடியினரின் தண்ணீர், காடு, நிலம் ஆகியவற்றை 14 முதல் 15 தொழில் அதிபர்களிடம் ஒப்படைக்க விரும்புகிறார்.
    • மோடி கடந்த 10 ஆண்டுகளில் 22 பேரை கோடீஸ்வரர்களாக்கியுள்ளார்.

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான ராகுல் காந்தி காங்கிரஸ் வேட்பாளர்களையும், இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    இன்று ஜார்க்கண்ட் மாநிலம் சாய்பாசா என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    பிரதமர் மோடி பழங்குடியினரின் தண்ணீர், காடு, நிலம் ஆகியவற்றை 14 முதல் 15 தொழில் அதிபர்களிடம் ஒப்படைக்க விரும்புகிறார். மோடி கடந்த 10 ஆண்டுகளில் 22 பேரை கோடீஸ்வரர்களாக்கியுள்ளார்.

    வாக்குகள் பெற்று ஆட்சிக்கு வந்தால், ஏழை பெண்களுக்கு வருடத்திற்கு ஒரு லட்சம் வழங்கப்பட்டு, கோடிக்கணக்கானோரை லட்சாதிபதியாக்குவோம். டிப்ளமோ மற்றும் பட்டதாரி வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு ஒரு வருடம் பயிற்சி அளிக்கப்படும்.

    இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.

    • தி.மு.க. அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணியில் முக்கிய கட்சியாக உள்ள காங்கிரஸ்தான் கர்நாடகாவில் ஆட்சியில் உள்ளது.
    • தமிழகத்திற்கு ஆண்டுதோறும் குறிப்பிட்ட அளவு தண்ணீர் திறக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தி.மு.க. அரசால் செயல்படுத்த முடியவில்லை.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. பா.ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ளாமல் போட்டியிட்டாலும் இரு கட்சிகளும் திரைமறைவு நாடகம் நடத்தி வருவதாக தி.மு.க. குற்றம்சாட்டி வருகிறது.

    ஆனாலும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பா.ஜனதா எதிர்ப்பு நிலைப்பாட்டை தொடர்ந்து கடைபிடித்து வருகிறார்.

    தேர்தலுக்கு பிறகும் அ.தி.மு.க. தலைவர்கள் தொடர்ந்து பா.ஜனதாவை தாக்கி பேசி வருகின்றனர்.

    வடமாநில தேர்தல் பிரசாரத்தில் முஸ்லிம்கள் குறித்து பிரதமர் மோடி கூறிய கருத்துக்கு எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்து கண்டனம் தெரிவித்திருந்தார்.

    சமீபத்தில் சேலத்தில் நிருபர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, பா.ஜனதாவை விமர்சனம் செய்ததுடன் தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளையும் கடுமையாக சாடினார்.

    தி.மு.க. அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணியில் முக்கிய கட்சியாக உள்ள காங்கிரஸ்தான் கர்நாடகாவில் ஆட்சியில் உள்ளது. ஆனாலும் தமிழகத்துக்கு தேவையான காவிரி தண்ணீரை திறந்து விட மறுத்து வருகிறது.

    தமிழகத்தின் உரிமைகளை கேட்டுப்பெற உதவாத இந்தியா கூட்டணியில் தி.மு.க. இருந்து என்ன பயன் என்றும் எடப்பாடி பழனிசாமி கடுமையாக சாடினார்.

    அது மட்டுமின்றி மத்தியில் தப்பித்தவறி இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தாலும் தமிழக மக்களுக்கு அதனால் என்ன லாபம்? என்று கேள்வி எழுப்பினார்.

    தமிழகத்திற்கு ஆண்டுதோறும் குறிப்பிட்ட அளவு தண்ணீர் திறக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தி.மு.க. அரசால் செயல்படுத்த முடியவில்லை.

    காவிரியில் தமிழகத்தின் பங்கை கர்நாடகா விடுவிக்க வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை கூட தி.மு.க. அரசால் செயல்படுத்த முடியவில்லை. தமிழகத்துக்கான உரிமையை கேட்டுப் பெறவும் முடியவில்லை என்று அவர் தொடர்ந்து சாடி வருகிறார்.

    இதே கருத்தை தான் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாரும் தொடர்ந்து பேசி வருகிறார். மத்தியில் பா.ஜனதா அல்லது காங்கிரஸ் ஆட்சி ஏற்பட்டாலும் தமிழகத்திற்கு எந்த பலனும் இல்லை. காவிரி தண்ணீருக்காக போராட வேண்டி உள்ளது.

    எனவே மத்தியில் எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் அ.தி.மு.க. எம்.பி.க்கள் தொடர்ந்து தமிழக பிரச்சனைக்காக குரல் எழுப்புவார்கள் என்றார்.

    பா.ஜனதா கட்சியை அ.தி.மு.க. தாக்கி பேசுவதால் காங்கிரசை ஆதரிப்பதாக மக்கள் நினைக்க வேண்டாம். நாங்கள் இரு கட்சிகளுக்கும் எதிரானவர்கள். இரு தேசிய கட்சிகளிடம் இருந்தும் சமமான இடைவெளியை கடைபிடித்து வருவதாகவும் தமிழக நலனுக்கு எதிராக யார் செயல்பட்டாலும் அதை எதிர்த்து அ.தி.மு.க. தொடர்ந்து குரல் கொடுக்கும் என்றும் கூறி உள்ளார்.

    • நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் மூளையாக செயல்பட்ட அப்சல் குரு தூக்கிலிடப்பட்டபோது,
    • அவருக்கு ஆதரவாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) முழக்கங்கள் எழுப்பப்பட்டபோது, ராகுல் காந்தி அங்கே சென்றார்.

    குஜராத் மாநிலம் தஹோத் என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் கலந்து கொண்டு பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    சோனியா காந்தி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி உச்சநீதிமன்றத்தில் ஒரு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. அதில் கடவுள் ராமர் கற்பனையே. வரலாற்று ரீதியாக அல்லது அறிவியல்பூர்வமாக அவர் இருந்ததற்கான எந்த சான்றுகள் இல்லை எனக் குறிப்பிட்டிருந்தது.

    அவர்கள் தடைகளை ஏற்படுத்திய நிலையில், பிரதமர் மோடி கடவுள் ராமருக்கு கோவில் கட்டுவதற்கான வழியை ஏற்படுத்தினார். 10 நாட்கள் சடங்குகளுக்குப் பிறகு ராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி மாதம் 22-ந்தேதி நடைபெற்றது.

    நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் மூளையாக செயல்பட்ட அப்சல் குரு தூக்கிலிடப்பட்டபோது, அவருக்கு ஆதரவாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) முழக்கங்கள் எழுப்பப்பட்டபோது, அடுத்த நாளே அவர்களுக்கு ஆதரவாக ராகுல் காந்தி அங்கே சென்றார்.

    அப்சல் குருவுக்கு ஆதரவான துண்டாக்க விரும்பும் கும்பலுக்கு ஆதரவு தெரிவித்தார். அவருடைய கட்சி அந்த கும்பலைச் சேர்ந்த ஒருவருக்கு (கணையா குமார் வடகிழக்கு டெல்லி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார்) மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளது. அவர்கள் தேச விரோத சக்திகளுடன் இல்லையா? அவர்களுக்கு வாக்களிக்க வேண்டுமா?

    அம்பேத்கர் மதத்தின் பெயரால் இடஒதுக்கீடு வழங்கப்படமாட்டாது, சமூக நீதிக்காக இடஒதுக்கீடு எனக் கூறியதை பிரதமர் மோடி மிகவும் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

    எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி சமூகத்தினருக்கு இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு வழங்க அவர்கள் முயற்சி செய்கிறார்கள். இது நமது அரசியலமைப்ப சூறையாடுவதற்கு சமம். நாட்டை பலவீனப்படுத்தும் மற்றும் பிளவுபடுத்தும் சக்திகளை வலுப்படுத்த காங்கிரஸ் செயல்படுகிறது.

    இவ்வாறு ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.

    ×