search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்பனா"

    • கடந்த மார்ச் மாதம் 4-ந்தேதி அரசியல் பயணத்தை தொடங்கினார்.
    • டெல்லியில் நடைபெற்ற கண்டன கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனைவியுடன் கலந்து கொண்டார்.

    ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன். இவரது மனைவி கல்பனா. இவர் ஜார்க்கண்ட் மாநில சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    கந்தே சட்டமன்ற தேர்தலுக்கு மக்களவை தேர்தலுடன் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா சார்பில் போட்டியிட இருக்கிறார். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் எம்.ஏல்.ஏ. சர்பராஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில் கந்தே தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட இருக்கிறது.

    ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா, எம்டெக் மற்றும் எம்.பி.ஏ. படித்துள்ளார். ஒடிசாவின் மயூர்பாஞ்ச் மாவட்டத்தில் பள்ளி கல்வியை முடித்த அவர், இன்ஜினீயரிங் மற்றும் எம்.பி.ஏ. படிப்பை புவனேஸ்வரில் உள்ள கல்லூரிகளில் முடித்தார்.

    மார்ச் மாதம் 4-ந்தேதி ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தொடக்க தின விழா கொண்டாடப்பட்டது. அப்போது கல்பனா தனது அரசியல் பயத்தை தொடங்கினார். அப்போது, 2019-ல் ஹேமந்த் சோரன் தலைமையிலான கூட்டணி அரசு பதவிக்கு வந்ததில் இருந்தே எதிரிகளால் சதித் திட்டம் தீட்டப்பட்டது. ஜார்கண்ட் தனது கணவரை சிறையில் தள்ளிய சக்திகளுக்கு தகுந்த பதிலடி கொடுக்கும் என்றார்.

    ஹேமந்த் சோரன் பண மோசடி வழக்கில் கடந்த ஜனவரி மாதம் 31-ந்தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அதன்பின் கல்பனா டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற இந்தியா கூட்டணி சார்பில் நடைபெற்ற கண்டன கூட்டத்தில் கலந்து கொண்டார். அதேபோல் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் கலந்து கொண்டார்.

    அமலாக்கத்துறை சம்மனை எதிர்கொண்டபோது, ஹேமந்த் சோரன் அவரது மனைவியை முதல்வராக்க முயற்சிக்கிறார் என பா.ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின என்பது குறிப்பிடத்தக்கது.

    ×