search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வழக்கு"

    • கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு குடும்ப நல கோர்ட்டிலும் மனு தாக்கல் செய்தார்.
    • பெண் குழந்தைகள் தாழ்ந்தவர்கள் என்ற கருத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு, மூவாட்டுப்புழா பகுதியை சேர்ந்த ஒருவருடன் 2012-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. அந்த பெண்ணை ஆண் குழந்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று திருமணம் நடந்த நாளிலேயே கணவரின் குடும்பத்தினர் கூறியிருக்கின்றனர்.

    மேலும் ஆண் குழந்தை பிறக்க கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் என்று கூறி திருமணம் நடந்த நாளில் இருந்தே அந்த பெண்ணை, கணவரின் தாய் துன்புறுத்தியபடி இருந்துள்ளார். ஆனால் அந்த பெண்ணுக்கு 2014-ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்ததது.

    இதனால் அந்த பெண்ணிடம் கணவரின் குடும்பத்தினர் துன்புறுத்துவது போன்றே நடந்துள்ளனர். ஆனவே ஆண் குழந்தை பெற்றெடுக்க வேண்டும் என்று கூறி தனது மாமியார் துன்புறுத்தியதாக அந்த பெண், கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். மேலும் தனது கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு குடும்ப நல கோர்ட்டிலும் மனு தாக்கல் செய்தார்.

    இந்நிலையில் அந்த பெண்ணின் மனு ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தேவன் ராமச்சந்திரன், ஆண் குழந்தையை பிரத்யேகமாக பெற்றெடுக்க வேண்டும் என்று ஒரு பெண்ணை கோருவது ஒழுக்கக் கேடானது என்று கருத்து தெரிவித்தார்.

    மேலும் பெண் குழந்தைகள் தாழ்ந்தவர்கள் என்ற கருத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பெண்கள் தான் பூமிக்கு உயிர் கொடுக்கிறார்கள் என்று கூறிய அவர், சம்பந்தப்பட்ட பெண்ணின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் எதிர்மனுக்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

    இதையடுத்து இந்த வழக்கு விசாரணை அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

    • நீதிபதி கண்ணன் குழு பிரந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பாக பரிசீலனை.
    • பேராசிரியரை நீக்க வேண்டுமென்ற குழுவின் பரிந்துரை அமல்படுத்த வேண்டும்.

    பாலியல் தொல்லை அளித்த விவகாரம் தொடர்பாக கல்லூரி மாணவிகள் 7 பேர் கலாஷேத்ரா பவுண்டேஷன் மீது வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன் வந்தது.

    அப்போது, "மாணவிகள் அளித்த பாலியல் தொல்லை புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் கலாஷேத்ரா அறக்கட்டளை கொடும் பழிக்கு உள்ளாகியுள்ளது" என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

    மேலும், "நீதிபதி கண்ணன் குழு பிரந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பாக உடனடியாக பரிசீலிக்க வேண்டும்" என கலாஷேத்ரா அறக்கட்டளைக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சம்பவம் குறித்து விசாரித்த ஓய்வு பெற்ற நீதிபதி கண்ணன் தலைமையிலான குழுவின் அறிக்கை அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது என்றும், புகாருக்கு உள்ளான பேராசிரியரை நீக்க வேண்டுமென்ற குழுவின் பரிந்துரை உடனடியாக அமல்படுத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    • 2 தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் மாறி மாறி தாக்கிக் கொண்டனர்.
    • கிராமத்தில் பதற்றம் ஏற்படவே 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகே பூமிரெட்டிபட்டி கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. இந்த நிலையில் கோவிலில் சினிமா பாடல் ஒலிபரப்பப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரிடம் தட்டி கேட்டனர். இதையடுத்து 2 தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். இதனால் அந்த கிராமத்தில் பதற்றம் ஏற்படவே 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மோதலில் ஈடுபட்ட 2 தரப்பை சேர்ந்த 150-க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ததோடு ஒருவர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    மோதல் காரணமாக தொடர்ந்து பதற்றம் நீடித்து வரவே மேட்டூர் உதவி கலெக்டர் பொன்மணி தலைமையில் இரு தரப்பினருக்கும் இடையே விரைவில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இருப்பினும் இரு தரப்பினரும் மீண்டும் மோதலில் ஈடுபடாமல் இருக்க வேண்டி முன்எச்சரிக்கையாக போலீசார் பூமிரெட்டிபட்டி கிராமத்தில் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • 5 சம்மனுக்கும் கெஜ்ரிவால் ஆஜராகாமால் புறக்கணித்தார்.
    • அமலாக்கத்துறை டெல்லி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளது.

    புதுடெல்லி:

    டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக முன்னாள் துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா, உள்ளிட்டோர் கைதாகி ஜெயிலில் உள்ளனர். அவர்களுக்கு இதுவரை ஜாமின் கிடைக்கவில்லை.

    இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 5 சம்மன் அனுப்பப்பட்டது.

    நவம்பர் 2, டிசம்பர் 21, ஜனவரி 3, 19, பிப்ரவரி 2 ஆகிய தேதிகளில் ஆஜராக அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி இருந்தது. பண மோசடி தொடர்பான விசாரணைக்காக இந்த சம்மனை அனுப்பி இருந்தது. ஆனால் 5 சம்மனுக்கும் கெஜ்ரிவால் ஆஜராகாமால் புறக்கணித்தார்.

    இந்நிலையில் 5 முறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாததால் கெஜ்ரிவாலுக்கு எதிராக அமலாக்கத்துறை டெல்லி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளது.

    ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் பண மோசடி தடுப்பு சட்டத்தின் பிரிவு 63 (4)-ன் கீழ் வழக்கு தொடரப் பட்டுள்ளது. இந்த வழக்கு வருகிற 7-ந் தேதி விசாரணைக்கு வருகிறது.

    • இந்த சம்பவம் குறித்து மயங்கின் மேலாளர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
    • மயங்கின் மேலாளர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

    இந்திய கிரிக்கெட் வீரர் மயங்க் அகர்வால் தற்போது ரஞ்சி தொடரில் விளையாடி வருகிறார். கர்நாடக அணி கேப்டனான மயங்க் அகர்வால் தனது அணியினருடன் டெல்லி புறப்பட விமான நிலையம் சென்றார். அணியினருடன் விமானத்தில் ஏறிய மயங்க் அகர்வாலுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

    விமானத்தில் இருந்த படி சில முறை அவர் வாந்தி எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து விமானத்தில் இருந்து அவசரஅவசரமாக வெளியேறிய மயங்க் அகர்வால் உடனடியாக அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அவரு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இந்நிலையில் மயங்க் அகர்வாலின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து மயங்க் அகர்வால் குணமடைய வேண்டிக்கொண்ட அனைவருக்கும் நன்றி என எக்ஸ் தளத்தில் தனது புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

    அதில், நான் இப்போது நன்றாக உணர்கிறேன். மீண்டு வர தயாராகி வருகிறேன். குணமடைய வேண்டிக்கொண்ட அனைவருக்கும் நன்றி. பிரார்த்தனைக்கும், அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி, அனைவருக்கும்' என்று பதிவிட்டுள்ளார்.

    இருப்பினும், இந்த சம்பவம் குறித்து மயங்கின் மேலாளர் போலீசில் புகார் அளித்துள்ளார். விமானத்தில் அமர்ந்திருக்கும் போது தண்ணீர் என்று தவறாக நினைத்து மயங்க் அந்த திரவத்தை தனக்கு முன்னால் குடித்ததாக மேலாளர் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

    இதுகுறித்து மேற்கு திரிபுரா எஸ்பி கிரண் குமார் கூறுகையில், மயங்கின் மேலாளர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

    • அரசு போக்குவரத்து கழகத்தில் சேவியர் குமார் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்தார்.
    • மற்றவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    இரணியல்:

    திங்கள் சந்தை அருகே மைலோடு மடத்துவிளை பகுதியை சேர்ந்தவர் சேவியர் குமார் (வயது 42). இவர் கன்னியாகுமரி அரசு போக்குவரத்து கழகத்தில் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்தார். நாம் தமிழர் கட்சியின் தக்கலை ஒன்றிய தலைவராகவும் இருந்தார். மேலும் மைலோடு கிறிஸ்தவ ஆலய பங்கு பேரவையின் முன்னாள் பொருளாளராகவும் பணியாற்றியுள்ளார். இவரது மனைவி ஜெமிலா (40). இவர் மைலோடு ஆலய நிர்வாகத்திற்குட்பட்ட தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

    மைலோடு ஆலய பாதிரியராக இருப்பவர் ராபின்சன். இவர் பங்கு பேரவை தலைவராகவும் உள்ளார். தற்பொழுது பங்கு பேரவை நிர்வாகத்தினருக்கும், ஏற்கனவே பங்கு பேரவை நிர்வாகியாக இருந்த சேவியர் குமாருக்கும் இடையே நிர்வாக ரீதியாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்த பிரச்சனையை சமூக வலைதளங்களில் சேவியர் குமார் பதிவிட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் சேவியர் குமாரின் மனைவி ஜெமீலாவை பள்ளி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்ததாக தெரிகிறது. இதனால் ஜெமிலாவை மீண்டும் பள்ளியில் சேர முயற்சி மேற்கொண்டார். இது தொடர்பாக பாதிரியார் ராபின்சனை சந்தித்து சேவியர் குமார் பேசினார். நேற்று மதியமும் சேவியர் குமார் பாதிரியார் ராபின்சனை சந்தித்து பேச ஆலயத்தில் உள்ள பாதிரியார் இல்லத்திற்கு சென்றார்.

    இந்த நிலையில் ஆலய வளாகத்திற்குள் பாதிரியார் இல்லத்தில் சேவியர் குமார் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்ததும் ஜெமிலா மற்றும் அவரது உறவினர்கள், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளும் ஏராளமானோர் அங்கு திரண்டனர். இதனால் பதட்டமான சூழல் நிலவியது. குளச்சல் டி.எஸ்.பி. பிரவீன் கவுதம், தக்கலை டி.எஸ்.பி. உதய சூரியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    கொலை வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார் சேவியர் குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால் சேவியர் குமார் உடலை எடுக்க விடாமல் அவரது உறவினர்கள் தடுத்தனர். சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.

    நள்ளிரவு 1.45 மணிக்கு சேவியர் குமாரின் உடல் அங்கிருந்து எடுக்கப்பட்டது. சுமார் 11 மணி நேரத்துக்கு பிறகு போலீசார் சேவியர் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக அவரது மனைவி ஜெமீலா கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    மைலோட்டை சேர்ந்த ரமேஷ் பாபு, மைலோடு பங்குத்தந்தை ராபின்சன் மற்றும் மைலோட்டை சேர்ந்த ஜஸ்டிஸ் ரோக், சுரேஷ், எட்வின் ஜோஸ், சோனிஸ், அஜய், அர்வின், டெரிக், வினோ, வின்சென்ட், ஜெனிஸ், பெனிட்டோ மற்றும் கண்டால் தெரியும் 2 பேர் என 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதில் ரமேஷ் பாபு அரசு வழக்கறிஞர் ஆவார். தி.மு.க. ஒன்றிய செயலாளராக உள்ளார். ராபின்சன், பெனிட்டோ இருவரும் பங்கு தந்தைகள் ஆவார்கள். தலைமறைவாக உள்ள அவர்களை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் 2 பேரை பிடித்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மற்றவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    தொடர்ந்து அங்கு பதட்டமான சூழல் நிலவுவதையடுத்து போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கொலை செய்யப்பட்ட சேவியர் குமாரின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் நடக்கிறது. அங்கும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    இதற்கிடையில் கொலை செய்யப்பட்ட சேவியர் குமாரின் தரப்பிலிருந்து பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்த பிறகு உடலை பெற்றுக் கொள்வோம். ஜெமிலாவிற்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளனர்.

    • டிஜிட்டல் வடிவில் சுமார் 9.41 மில்லியன் சந்தாதாரர்கள் கொண்டது நியூயார்க் டைம்ஸ்
    • இத்தீர்ப்பு தங்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக டிரம்ப் வழக்கறிஞர் தெரிவித்தார்

    1851லிருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகரை மையமாக கொண்டு செயல்படும் பிரபல தின பத்திரிக்கை, தி நியூயார்க் டைம்ஸ் (The New York Times).

    உலகெங்கிலும் இணைய வடிவில் சுமார் 9.41 மில்லியன் சந்தாதாரர்களும், அச்சு வடிவில் சுமார் 6,70,000 சந்தாதாரர்களும் கொண்டது இந்த தின பத்திரிகை.

    2018ல், சுசன் க்ரெய்க் (Susanne Craig), டேவிட் பார்ஸ்டோ (David Barstow) மற்றும் ரஸ்ஸல் ப்யூட்னர் (Russell Buettner) எனும் அப்பத்திரிகையின் 3 புலனாய்வு செய்தியாளர்கள், அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சொத்துக்கள் மற்றும் வருமான வரி செலுத்துவதில் அவர்கள் பின்பற்றும் வழக்கங்கள் குறித்து ஒரு ஆய்வு கட்டுரையை பதிவிட்டனர்.

    2021ல் இதில் உள்ள கருத்துகள் தவறானவை எனும் புகாருடன் டொனால்ட் டிரம்ப் இந்நிறுவனத்திற்கு எதிராக வழக்கு பதிவு செய்தார்.

    ஆனால், அந்த 3 பேரையும், தி நியூயார்க் டைம்ஸையும், வழக்கிலிருந்து நீதிமன்றம் விடுவித்தது.

    நியூயார்க் நீதிமன்ற நீதிபதி ராபர்ட் ரீட் (Robert Reed) தனது தீர்ப்பில், டிரம்ப் $3,92,638 தொகையை வழக்கறிஞர் கட்டணமாக டிரம்ப் அப்பத்திரிகைக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

    குடும்ப தகராறில் தனது உறவுக்கார பெண் மேரி டிரம்ப், வாக்குறுதியை மீறி, அவர் வசம் வைத்திருந்த தனது வரி விவரங்களை செய்தியாளர்களுக்கு வழங்கியதாக டிரம்ப் குற்றம் சாட்டி வழக்கு தொடர்ந்தார். மேரி மீதான அந்த வழக்கு விசாரணை, நிலுவையில் உள்ளது.

    இத்தீர்ப்பு குறித்து டிரம்பின் வழக்கறிஞர் அலினா ஹப்பா (Alina Habba), "பத்திரிகையும், அதன் செய்தியாளர்களும் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது தங்கள் தரப்பிற்கு அதிர்ச்சி அளிக்கிறது" என தெரிவித்தார்.

    • நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததுடன், வீட்டு மனைகளாக மாற்றி விற்பனை செய்துவிட்டதாக கோவில் நிர்வாகம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.
    • இடைக்கால விசாரணை அறிக்கை சமர்பிக்க புதுச்சேரி சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு உத்தரவிட்டது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியின் புகழ் பெற்ற கோவில்களில் ஒன்றான காமாட்சி அம்மன் கோவிலுக்கு புதுச்சேரி ரெயின்போ நகரில் ரூ.50 கோடி மதிப்புள்ள 64,000 சதுரடி நிலம் உள்ளது.

    அந்த நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததுடன், வீட்டு மனைகளாக மாற்றி விற்பனை செய்துவிட்டதாக கோவில் நிர்வாகம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.

    இந்த புகாரின் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு செய்து நிலம் கிரயம் செய் யப்பட்ட காலகட்டமான 2021-ல் தாசில்தாராக இருந்த பாலாஜியும், நில அளவைத் துறையின் இயக்குனராக இருந்த ரமேஷ், சார் பதிவாளர் சிவசாமி உள்பட 17 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்த சொத்தினை தனது குடும்பத்தினருக்கு வாங்கிய விவகாரத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் ஜான்குமார், அவரது மகன் ரிச்சர்ட்ஸ் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண் டும் என தி.மு.க., - காங்., கம்யூனிஸ்டு உள்ளிட்ட எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தின.

    காமாட்சியம்மன் கோவில் சொத்துகளை பொருத்தவரை, ஜான்குமார் எம்.எல்.ஏ., குடும்பத்தினர் 4 பேர் உள்பட மொத்தம் 22 பேர் வாங்கி இருந்தனர்.

    கோர்ட்டு உத்தரவிட்டிருந்த நிலையில் வாங்கிய கோவில் இடங்களை யாரும் ஒப்படைக்கவில்லை.இதனையடுத்து கலெக்டர் வல்லவன் உத் தரவின்பேரில் காமாட்சி யம்மன் கோவில் சொத்துகளை கையகப் படுத்தி, இந்து அறநிலையத் துறை முன்னிலையில் கோவில் நிர்வாகிகளிடம் கடந்த ஆகஸ்டு மாதம் ஒப்ப டைக்கப்பட்டது.

    இதற்கிடையே காமாட்சியம்மன் கோவில் சொத்து தொடர்பான வழக்கு, கடந்த 13-ந் தேதி சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப் போது, கோவில் சொத்து விவகாரத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சம்பந்தப்பட்டவர்களின் விபரங்களுடன், இடைக்கால விசாரணை அறிக்கை சமர்பிக்க புதுச் சேரி சி.பி.சி.ஐ.டி. போலீ சாருக்கு உத்தரவிட்டது.

    இதனையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் காமாட்சியம்மன் கோவில் சொத்து சம்பந்தமாக இடைக்கால அறிக்கையை சீலிட்ட கவரில் சென்னை ஐகோர்ட்டில் சமர்ப்பித்துள்ளனர்.

    இதில் கோவில் சொத்துக்கள் அபகரிப்பில் மேலும் உழவர்கரை தாசில்தாரர்களாக பணியாற்றிய மேலும் சில அதிகாரிகள் சிக்குவார்கள் என தெரிகிறது. அந்த அதிகாரிகள் தற்போது தேர்தல் பணி மற்றும் வருவாய்த்துறை அலுவலக பணியில் உள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • வழக்கு விசாரணையை முடிப்பதில் தாமதப்படுத்தி வருவதால் தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்தார்.
    • கோர்ட்டு வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    நெல்லை:

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள வீராணம் கிராமத்தில் ஊத்துமலை செல்லும் சாலையில் வசித்து வருபவர் சுப்பையா. இவரது மகன் தமிழ்வாணன் (வயது 35).

    இவருக்கு மகேஸ்வரி (31) என்ற மனைவியும், 4 வயதில் பெண் குழந்தையும், 7 மாத ஆண் குழந்தையும் உள்ளது. தமிழ்வாணன் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2014-ம் ஆண்டு தூத்துக்குடியில் உள்ள ஒரு கெமிக்கல் நிறுவனத்தில் டேங்கர் லாரி டிரைவராக வேலை பார்த்தபோது லாரியில் இருந்து கெமிக்கலை இறக்கி கொண்டிருந்தபோது அவரது உடலில் கெமிக்கல் பட்டு காயம் அடைந்தார்.

    இதையடுத்து அவரால் மேற்கொண்டு லாரி ஓட்டும் தொழிலை செய்ய முடியவில்லை. இதனால் தமிழ்வாணன் விபத்து இழப்பீடு கேட்டு தொழிலாளர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை சுமார் 8 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது வழக்கு முடிவடையும் தருவாயில் உள்ளது. ஆனாலும் அதில் தாமதம் ஏற்பட்டு வந்ததால் வழக்கை விரைந்து விசாரித்து இழப்பீடு வழங்குமாறு தமிழ்வாணன் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தார்.

    இந்நிலையில் இன்று வழக்கு தொடர்பான விசாரணைக்காக தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் மோட்டார் சைக்கிளில் தமிழ்வாணன் கோர்ட்டுக்கு வந்தார். அப்போது அவர் வக்கீல்கள் செல்லும் நுழைவு வாயில் வழியாக கோர்ட்டுக்குள் வந்துள்ளார்.

    பின்னர் தண்ணீர் பாட்டிலில் பெட்ரோலை மறைத்து எடுத்து வந்த அவர் தனது 2 குழந்தைகளையும் ஓரமாக உட்கார வைத்து விட்டு கோர்ட்டு வளாகத்தில் மனைவியுடன் பெட்ரோலை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

    இதனை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் வக்கீல்கள் பார்த்து ஓடி வந்து 2 பேர் மீதும் தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர். அப்போது அவர், நான் வேலைக்கு செல்ல முடியாததால் ரூ.6 லட்சம் வரை கடனாளியாக உள்ளேன். வழக்கு விசாரணையை முடிப்பதில் தாமதப்படுத்தி வருவதால் தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்தார்.

    பின்னர் அவர்களை குழந்தைகளுடன் அழைத்துச் சென்று நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதனால் கோர்ட்டு வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • தாயார் இறந்துவிட்ட நிலையில் அங்கேயே இருந்து விட்டார்.
    • மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

     தருமபுரி ஒட்டப்பட்டி காமராஜர் நகரை சேர்ந்தவர் மாதன். இவரது மனைவி தீபா .இவர் சாமி செட்டி பட்டியில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த நிலையில் வீட்டில் தனியாக வசித்து வந்த ஆசிரியர் தீபா கடந்த 18-ம் தேதியன்று வெண்ணாம்பட்டி குடியிருப்பில் உள்ள உடல்நிலை சரியில்லாத தனது தாயாரை பார்க்கச் சென்றார். அங்கு அவரது தாயார் இறந்துவிட்ட நிலையில் அங்கேயே இருந்து விட்டார்.

    இந்நிலையில் கடந்த 18-ம் தேதியன்று இரவு தீபாவின் வீட்டின் கதவை உடைத்துக் மர்ம நபர்கள் வீட்டில் உள்ளே இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்து சுமார் 12 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்று விட்டனர். இது குறித்து மறுநாள் காலையில் பக்கத்து வீட்டில் இருந்த நபர்கள் தீபாவுக்கு தகவல் தெரிவித்தனர்.

    அவர் அங்கு வந்து பார்த்தபோது வீடு கதவுகள் உடைக்கப்பட்டு பீரோ உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சடைந்தார். தீபா தனது தாயார் இறந்து விட்டதால் வெண்ணாம்பட்டி குடியிருப்பில் இருந்து விட்ட நிலையில் அவர் தனது வீட்டில் நடந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசாரிடம் புகார் தெரிவிக்கவில்லை.

    தீபா நேற்று அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தங்க நகைகளை கொள்ளை அடித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கொள்ளை சம்பவம் நடந்து 17 நாட்களுக்குப் பிறகு தாமதமாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அதியமான் கோட்டை போலீசார் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளின் மதிப்பையும் குறைத்து 12 பவுன், ரூபாய் ஒரு லட்சத்து 20 ஆயிரம் என குறைத்து மதிப்பிட்டு வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சம்பவத்தன்று சகோதர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் 6-ம் வகுப்பு படிக்கும் சிறுவன் 7-ம் வகுப்பு படிக்கும் அண்ணனின் வகுப்பிற்கு சென்று அவரை அடித்ததாக கூறப்படுகிறது.
    • மாணவன் கதறி அழுத நிலையில் இதுகுறித்து யாரிடமும் சொல்லக் கூடாது என வகுப்பு ஆசிரியர் மிரட்டியுள்ளார்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே புளியம்பட்டியில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த சகோதரர்கள் 7 மற்றும் 6-ம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்த நிலையில் சம்பவத்தன்று சகோதர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் 6-ம் வகுப்பு படிக்கும் சிறுவன் 7-ம் வகுப்பு படிக்கும் அண்ணனின் வகுப்பிற்கு சென்று அவரை அடித்ததாக கூறப்படுகிறது.

    இதையடுத்து நேற்று பள்ளி யின் 7-ம் வகுப்பு ஆசிரியர் அன்புமணி 6-ம் வகுப்பிற்கு சென்று சம்பந்தப்பட்ட மாணவரின் சட்டையை கழற்ற வைத்து முதுகில் சரமாரியாக அடித்துள்ளார். மாணவன் கதறி அழுத நிலையில் இதுகுறித்து யாரிடமும் சொல்லக் கூடாது என மிரட்டியுள்ளார்.

    இந்த நிலையில் வீட்டிற்கு சென்ற மாணவரின் முதுகு வீங்கி இருந்ததை பார்த்த பெற்றோர் விசாரித்தபோது சிறுவன் நடந்தவற்றை கூறியுள்ளான். இதையடுத்து அவனை ஓமலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்த பெற்றோர் ஆசிரியர் அன்புமணி மீது ஓமலூர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதையடுத்து அரசு பள்ளி ஆசிரியர் அன்புமணி மீது தாக்குதல் நடத்துவது, கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.

    • சுதாகர் தலைமை தபால் நிலையம் நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றுக்கொண்டிருந்தார்.
    • இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மஞ்சக்குப்பத்தில் இருந்து ஆட்டோ டிரைவர் சுதாகர் (44) தலைமை தபால் நிலையம் நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றுக்கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த ஜீப் மோதி ஆட்டோ கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் சுதாகர் மற்றும் ஆட்டோவில் பயணம் செய்த பாபு (42), அமுதா (50) , சங்கர் ஆகியோர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×