search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீசார் வழக்கு"

    • 2 தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் மாறி மாறி தாக்கிக் கொண்டனர்.
    • கிராமத்தில் பதற்றம் ஏற்படவே 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகே பூமிரெட்டிபட்டி கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. இந்த நிலையில் கோவிலில் சினிமா பாடல் ஒலிபரப்பப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரிடம் தட்டி கேட்டனர். இதையடுத்து 2 தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். இதனால் அந்த கிராமத்தில் பதற்றம் ஏற்படவே 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மோதலில் ஈடுபட்ட 2 தரப்பை சேர்ந்த 150-க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ததோடு ஒருவர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    மோதல் காரணமாக தொடர்ந்து பதற்றம் நீடித்து வரவே மேட்டூர் உதவி கலெக்டர் பொன்மணி தலைமையில் இரு தரப்பினருக்கும் இடையே விரைவில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இருப்பினும் இரு தரப்பினரும் மீண்டும் மோதலில் ஈடுபடாமல் இருக்க வேண்டி முன்எச்சரிக்கையாக போலீசார் பூமிரெட்டிபட்டி கிராமத்தில் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • கடந்த ஜூன் மாதம் தங்கேஸ்வரனை வழக்கில் இருந்து கோர்ட்டு விடுவித்தது.
    • திலகவதியை திருமணம் செய்துகொண்ட தங்கேஸ்வரன் தனது வீட்டிற்கு அழைத்துச்சென்று குடும்பம் நடத்தினார்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்த ஏழாயிரம் பண்ணை அருகேயுள்ள சண்முகாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் திலகவதி (வயது 19, பெயர் மாற்றப்பட்டுள்ளது). அதே பகுதியைச் சேர்ந்தவர் தங்கேஸ்வரன்.

    இவர்களுக்கிடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 5 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு திலகவதி தங்கேஸ்வரனை வற்புறுத்தினார்.

    விரைவில் நம்முடைய திருமணம் நடக்கும் என்று நம்பிக்கை வார்த்தை கூறிய தங்கேஸ்வரன், அதனை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு திலகவதியுடன் பலமுறை உல்லாசம் அனுபவித்துள்ளார். தொடர்ந்து திருமணத்துக்கு காலம் தாழ்த்தியதால் ஏமாற்றம் அடைந்த திலகவதி சாத்தூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார்.

    அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார் திருமணம் செய்துகொள்வதாக கூறி பாலியலுக்கு உட்படுத்தியது என்பது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் தங்கேஸ்வரன் மீது வழக்குப்பதிவு செய்தனர். தற்போது அந்த வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது.

    இதற்கிடையே திலகவதியை சந்தித்து சமரசம் பேசிய தங்கேஸ்வரன், தான் வழக்கில் இருந்து விடுதலையாகும் வகையில் கோர்ட்டில் தனக்கு சாதகமாக சாட்சி சொன்னால் நாம் திருமணம் செய்துகொண்டு குடும்பம் நடத்தலாம் என்று கூறியுள்ளார். அதனை முழுமையாக நம்பிய திலகவதியும் நடந்துகொண்டார். அதன் மூலம் கடந்த ஜூன் மாதம் தங்கேஸ்வரனை வழக்கில் இருந்து கோர்ட்டு விடுவித்தது.

    இதையடுத்து திலகவதியை திருமணம் செய்துகொண்ட தங்கேஸ்வரன் தனது வீட்டிற்கு அழைத்துச்சென்று குடும்பம் நடத்தினார். திருமணத்தின்போது திலகவதி 1 பவுன் நகை மட்டுமே அணிந்து வந்தார். இதனை ஏற்க மறுத்த தங்கேஸ்வரனின் பெற்றோர் எதுவும் இல்லாதவளை திருமணம் செய்து வந்ததாக மகனை திட்டியதோடு, மருமகளை சித்ரவதைக்கு ஆளாக்கியுள்ளனர்.

    அத்துடன், உன் பிறந்த வீட்டில் இருந்து 10 பவுன் நகை வாங்கி வந்தால் மட்டுமே என் மகனுடன் குடும்பம் நடத்த முடியும் என்று கூறி திலகவதியை வீட்டை விட்டு துரத்தினர். வேறு வழியின்றி 10 பவுன் நகை வாங்கிவர அவரும் சம்மதித்தார். அப்போது தங்கேஸ்வரனிடம் சித்ரவதை குறித்து கூறி திலகவதி அழுது புலம்பினார்.

    அதனை காதில் வாங்கிக் கொள்ளாத தங்கேஸ்வரன், தான் வழக்கில் இருந்து விடுதலை ஆவதற்கே உன்னை திருமணம் செய்து கொண்டேன் என்று கூறினார். மேலும், வேலை விஷயமாக கோவை செல்வதாக தெரிவித்து விட்டு புறப்பட்டார்.

    ஒருசில நாட்களில் திலகவதியை செல்போனில் தொடர்பு கொண்ட தங்கேஸ்வரன், தான் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த சத்யா என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதாகவும், ஆண்டாள் கோவிலில் வைத்து மாலை மாற்றி தாலி கட்டியதாகவும், நீ உன் வீட்டிற்கு சென்றுவிடு என்றும் கூறி மிரட்டியுள்ளார்.

    இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த திலகவதி சாத்தூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நிலத்தகராறு முன் விரோதத்தில் இந்த தாக்குதல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
    • ரவுடிகள் பட்டியலிலும் அவரது பெயர் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    கன்னியாகுமரி :

    களியக்காவிளை அருகே உள்ள செம்மான்விளை பகுதியை சேர்ந்தவர் அபிலாஷ்ராஜ், தொழிலாளி. இவர், செம்மான்விளை சந்திப்பில் நின்ற போது அதே பகுதியைச் சேர்ந்த அங்கு வந்து தாக்கி உள்ளார். இதனை பார்த்த அபிலாஷ்ராஜ் தரப்பினர் விரைந்து வந்து ஈவின்ஜெறியை தாக்கினர். இந்த சம்பவத்தில் 2 பேரும் காயம் அடைந்தனர். நிலத்தகராறு முன் விரோதத்தில் இந்த தாக்குதல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

    சம்பவம் குறித்து இரு தரப்பினரும் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் களியக்காவிளை போலீசார் விசாரணை நடத்தி, ஈவின்ஜெறி மற்றும் அபிலாஷ்ராஜ் அவரது கூட்டாளிகள் மீதும் வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து அபிலாஷ்ராஜ் கைது செய்யப்பட்டார். ஈவின்ஜெறியை போலீசார் தேடி வருகின்றனர். இவர் மீது ஏற்கனவே போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன. ரவுடிகள் பட்டியலிலும் அவரது பெயர் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • வேலையனின் அண்ணன் முருகன். கொத்தனார் வேலை செய்து வருகிறார்.
    • கிரிஜா பலமுறை எச்சரித்தும், முருகனின் அத்துமீறல் தொடர்ந்தவன்ணம் இருந்தது.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி காலணி தெருவைச்சேர்ந்தவர் வேலையன். இவரது மனைவி கிரிஜா (வயது28). இவர்களுக்கு 4 வயதில் ஒரு குழந்தை உள்ளது. வேலையன் அடிக்கடி வெளியூருக்கு வேலைக்கு செல்வது வழக்கம். வேலையனின் அண்ணன் முருகன். கொத்தனார் வேலை செய்து வருகிறார். கிரிஜா வீட்டுக்கு பக்கத்து வீட்டில் மனைவியுடன் வசித்து வருகிறார்.

    வேலையன் வீட்டில் இல்லாத நேரத்தில், முருகன், கிரிஜா வீட்டுக்கு சென்று பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. கிரிஜா பலமுறை எச்சரித்தும், முருகனின் அத்துமீறல் தொடர்ந்தவன்ணம் இருந்தது. இந்நிலையில், கிரிஜா வீட்டில் தூங்கியபோது, விளக்கை அணைத்துவிட்டு, முருகன் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். கிரிஜா சப்தம் போட்டதும், இதை யாரிடமாவது சொன்னால், உன்னை கொலை செய்துவிடுவேன் என கொலை மிரட்டல் விடுதுவிட்டு முருகன் தப்பியோடிவிட்டார். இது குறித்து, கிரிஜா கோட்டுச்சேரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து முருகனை தேடி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி தனியார் ஊழியர் பலியானார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் அய்யனார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 29). இவர் சிவகாசி - ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில் உள்ள பிளாஸ்டிக் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இரவு பணிக்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். சாய்பாபா கோவில் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்புவதற்காக சென்றபோது பின்னால் வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சரவணன் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சரவணன் மனைவி கற்பகவல்லி ஆமத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 230 கோடி ரூபாய் செலவில் சாலை விரிவாக்க பணி நெல்லிக்குப்பம் பகுதியில் நடைபெற்று வருகிறது.
    • சாலை விரிவாக்க பணி மற்றும் கால்வாய் கட்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    கடலூர்:

    கடலூர் கோண்டூர் - மடப்பட்டு வரை 230 கோடி ரூபாய் செலவில் சாலை விரிவாக்க பணி நெல்லிக்குப்பம் பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அதிகாரிகள் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், சாலை விரிவாக்க பணி மற்றும் கால்வாய் கட்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இதனை கண்டித்து அரசியல் கட்சி நிர்வாகிகள், சமூக அமைப்பினர்கள் மற்றும் கவுன்சிலர்கள் பொதுமக்கள் வடிகால் வாய்க்கால் கட்டும் பணியை தடுத்து நிறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர். 

    இந்த நிலையில் நெல்லிக்குப்பம் கிராம நிர்வாக அலுவலர் தர்மராஜ் கொடுத்த புகாரின் நெல்லிக்குப்பம் போலீசார் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன் உட்பட 20 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் நெல்லிக்குப்பம் பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டு வருகிறது.

    • பாரதி (வயது 37). இவரது மனைவி இந்துமதி. இந்துமதியிடம் குடிப்பதற்கு பாரதி அடிக்கடி பணம் கேட்டு வந்துள்ளார். குடிக்க் பணம் தர மறுத்தார்,
    • பாரதி பேனா கத்தியால் மனைவி இந்துமதியை கிழித்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    கடலூர்:

    கடலூர் அடுத்த சித்திரப்பேட்டையை சேர்ந்தவர் பாரதி (வயது 37). இவரது மனைவி இந்துமதி. இந்துமதியிடம் குடிப்பதற்கு பாரதி அடிக்கடி பணம் கேட்டு வந்துள்ளார். அப்போது இந்துமதி கணவர் பாரதிக்கு மது குடிக்க பணம் தர மறுத்துள்ளார். இதனால் கோபம் அடைந்த பாரதி பேனா கத்தியால் மனைவி இந்துமதியை கிழித்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இதில் காயம் அடைந்த இந்துமதி கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கடலூர் துறைமுகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து உள்ளார்.
    • தனது மனைவியை உறவினர்கள் வீடுகளிலும், பல பகுதிகளிலும் தேடியும் காணவில்லை

    கடலூர்:

    சிதம்பரம் அருகே தியாகவள்ளி அருகே திருச்சோபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரமாதேவி (வயது 46) இவரது கணவர் கணேசன். ரமாதேவி சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து உள்ளார். இந்நிலையில் கடந்த 25ந் தேதி வீட்டிலிருந்த காணமல் போன தனது மனைவியை உறவினர்கள் வீடுகளிலும், பல பகுதிகளிலும் தேடியும் காணவில்லை என்பதால் புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். கணேசன் கொடுத்த புகாரின் பேரில் புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • வழக்கம் போல் தனது வீட்டில் இருந்து கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்றார். பின்னர் கல்லூரிக்கு சென்ற மாணவி மீண்டும் வீட்டிற்கு வரவில்லை.
    • கல்லூரி மாணவியையும், வாலிபரையும் வலைவீசி தேடி வருகின்றனர்

    கடலூர்:

    கடலூர் வண்டி ப்பாளையம் பகுதியை சேர்ந்த தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.எஸ்.சி படித்து வரும் மாணவி நேற்று காலை வழக்கம் போல் தனது வீட்டில் இருந்து கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்றார். பின்னர் கல்லூரிக்கு சென்ற மாணவி மீண்டும் வீட்டிற்கு வரவில்லைஅதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கல்லூரி மாணவியை எங்கும் தேடியும் கிடைக்கவில்லை. மேற்கொண்டு மாணவி எங்கு சென்றார் என விசாரித்த போது அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கல்லூரி மாணவி யை கடத்திச் சென்றதாக கூறப்படுகிறதுஇது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து கடத்தி செல்லப்பட்ட கல்லூரி மாணவியையும், வாலிபரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

    • வீட்டை பூட்டி விட்டு ஆரணியில் உள்ள உறவினர் திருமணத்திற்கு சென்றுள்ளார்கள்.
    • வீட்டின் வலது பக்க ஜன்னல் உடைந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    கடலூர்:

    வடலூர் மாருதி நகர் கோட்டக்கரை பகுதியை சேர்ந்த தேவநாதன் இவரது மனைவி சுமித்ரா (வயது 43). இவர்கள் கடந்த 9-ம்தேதி காலையில் வீட்டை பூட்டி விட்டு ஆரணியில் உள்ள உறவினர் திருமணத்திற்கு சென்றுள்ளார்கள். தொடர்ந்து திருமணம் முடிந்து நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு வீட்டிற்கு வந்தனர். வீட்டின் வலது பக்க ஜன்னல் உடைந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் வீட்டின் உள்ளே சென்று கதவை திறந்து பார்த்தபோது பீரோவில் இருந்த துணிகள் சிதறி கிடந்தன. பீரோவில் இருந்த 4 கிராம் கம்மல், 1 கிராம் மூக்குத்தி, 100 கிராம் வெள்ளி கொலுசு ஆகியவற்றை கொள்ளை யர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் வடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

    • இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு கடந்த 15 ஆண்டுகளாக மாத்திரை சாப்பிட்டு வந்தார்.
    • இவரை அக்கம், பக்கம் தேடியும் கிடைக்கவில்லை.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் மனைவி ஜெயகவுரி (வயது 60) இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு கடந்த 15 ஆண்டுகளாக மாத்திரை சாப்பிட்டு வந்தார். இவர் தினமும் சிறிது தூரம் நடந்து சென்று மீண்டும் வீட்டுக்கு வருவது வழக்கம். சம்பவத்தன்று நடந்து சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

    இவரை அக்கம், பக்கம் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது மகன் மணிகண்டன் கள்ளக்குறிச்சி போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து மூதாட்டியை தேடி வருகின்றனர்.

    • பேனர் மீது அதேபகுதியைச் சேர்ந்த சிகாமணி மகன் சந்தோஷ் (18) என்பவர் கல்லை எரிந்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
    • சந்தோஷ் அரிவாளால் மாயவனின் கழுத்து மற்றும் இடது கையில் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே தண்டலை கிராமத்தைச் சேர்ந்தவர் வேம்பு மகன் மாயவன் (வயது 42) இவர் விஜய் ரசிகர் மன்ற துணைத் தலைவராக உள்ளார். இந்நிலையில் இதே கிராமத்தில் மாரியம்மன் கோவில் அருகே விஜய் ரசிகர் மன்ற பேனர் வைத்துள்ளனர்    இந்த பேனர் மீது அதேபகுதியைச் சேர்ந்த சிகாமணி மகன் சந்தோஷ் (18) என்பவர் கல்லை எரிந்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனை மாயவன் தட்டி கேட்டபோது ஆத்திரம் அடைந்த சந்தோஷ் அரிவாளால் மாயவனின் கழுத்து மற்றும் இடது கையில் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.

    இதில் படுகாயம் அடைந்த மாயவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து மாயவன் கொடுத்த புகாரின் பேரில் சந்தோஷ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    ×