search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளக்குறிச்சியில்  மூதாட்டி மாயம்
    X

    கள்ளக்குறிச்சியில் மூதாட்டி மாயம்

    • இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு கடந்த 15 ஆண்டுகளாக மாத்திரை சாப்பிட்டு வந்தார்.
    • இவரை அக்கம், பக்கம் தேடியும் கிடைக்கவில்லை.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் மனைவி ஜெயகவுரி (வயது 60) இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு கடந்த 15 ஆண்டுகளாக மாத்திரை சாப்பிட்டு வந்தார். இவர் தினமும் சிறிது தூரம் நடந்து சென்று மீண்டும் வீட்டுக்கு வருவது வழக்கம். சம்பவத்தன்று நடந்து சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

    இவரை அக்கம், பக்கம் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது மகன் மணிகண்டன் கள்ளக்குறிச்சி போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து மூதாட்டியை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×