search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "woman cheating"

    • மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து உள்ளார்.
    • தனது மனைவியை உறவினர்கள் வீடுகளிலும், பல பகுதிகளிலும் தேடியும் காணவில்லை

    கடலூர்:

    சிதம்பரம் அருகே தியாகவள்ளி அருகே திருச்சோபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரமாதேவி (வயது 46) இவரது கணவர் கணேசன். ரமாதேவி சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து உள்ளார். இந்நிலையில் கடந்த 25ந் தேதி வீட்டிலிருந்த காணமல் போன தனது மனைவியை உறவினர்கள் வீடுகளிலும், பல பகுதிகளிலும் தேடியும் காணவில்லை என்பதால் புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். கணேசன் கொடுத்த புகாரின் பேரில் புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • தனியார் பள்ளியில் அலுவலக ஊழியராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டிலிருந்து வேலைக்கு செல்வதாக கூறி சென்ற இவர் வீடு திரும்பவில்லை.
    • டிரைவராக பணிபுரிந்து வரும் வழுதலம்பட்டு பாஸ்கர் (28) என்பவர் கடத்தியதாக தெரியவந்தது,

    கடலூா:

    பண்ருட்டி அருகே தோ ப்புக்கொல்லை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜதுரை. இவரது மகள் ஆஷா (எ) சுபா (வயது 23).   இவர்அ தேபகுதியிலுள்ள தனியார் பள்ளியில் அலுவலக ஊழியராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டிலிருந்து வேலைக்கு செல்வதாக கூறி சென்ற இவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் அக்கம்பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில்தேடினர்.எங்கும் கிடைக்கவில்லை

    . அதே பள்ளியில் டிரைவராக பணிபுரிந்து வரும் வழுதலம்பட்டு பாஸ்கர் (28) என்பவர் கடத்தியதாக தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவரது தந்தை சின்னையன் முத்தாண்டி க்குப்பம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் காடா ம்புலியூர் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.

    ஊத்துக்கோட்டை அருகே காதலித்துவிட்டு பெண்ணை திருமணம் செய்ய மறுத்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள அல்லிகுழி கிராமம் ராமர் கோவில் தெருவை சேர்ந்தவர் பூபாலன். அம்பத்தூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

    இவர் அதே கிராமத்தை சேர்ந்த 18 வயது இளம்பெண்ணை காதலித்தார். திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறினார். இந்த நிலையில் காதல் விவகாரம் தெரிந்ததும் பூபாலனின் பெற்றோர் அவருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதையடுத்து பூபாலன் கடந்த 2 மாதங்களாக காதலியை சந்திப்பதை தவிர்த்து வந்தார்.

    இதுபற்றி பூபாலனிடம் கேட்டபோது இளம்பெண்ணை தாக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து இளம்பெண் ஊத்துக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அனுராதா வாலிபர் பூபாலன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தார். ஊத்துக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவரை புழல் சிறையில் அடைத்தனர்.
    ×