search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரைக்கால் கோட்டுச்சேரியில்  தம்பி மனைவிக்கு பாலியல் தொல்லைகொத்தனார் மீது போலீசார் வழக்கு
    X

    காரைக்கால் கோட்டுச்சேரியில் தம்பி மனைவிக்கு பாலியல் தொல்லைகொத்தனார் மீது போலீசார் வழக்கு

    • வேலையனின் அண்ணன் முருகன். கொத்தனார் வேலை செய்து வருகிறார்.
    • கிரிஜா பலமுறை எச்சரித்தும், முருகனின் அத்துமீறல் தொடர்ந்தவன்ணம் இருந்தது.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி காலணி தெருவைச்சேர்ந்தவர் வேலையன். இவரது மனைவி கிரிஜா (வயது28). இவர்களுக்கு 4 வயதில் ஒரு குழந்தை உள்ளது. வேலையன் அடிக்கடி வெளியூருக்கு வேலைக்கு செல்வது வழக்கம். வேலையனின் அண்ணன் முருகன். கொத்தனார் வேலை செய்து வருகிறார். கிரிஜா வீட்டுக்கு பக்கத்து வீட்டில் மனைவியுடன் வசித்து வருகிறார்.

    வேலையன் வீட்டில் இல்லாத நேரத்தில், முருகன், கிரிஜா வீட்டுக்கு சென்று பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. கிரிஜா பலமுறை எச்சரித்தும், முருகனின் அத்துமீறல் தொடர்ந்தவன்ணம் இருந்தது. இந்நிலையில், கிரிஜா வீட்டில் தூங்கியபோது, விளக்கை அணைத்துவிட்டு, முருகன் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். கிரிஜா சப்தம் போட்டதும், இதை யாரிடமாவது சொன்னால், உன்னை கொலை செய்துவிடுவேன் என கொலை மிரட்டல் விடுதுவிட்டு முருகன் தப்பியோடிவிட்டார். இது குறித்து, கிரிஜா கோட்டுச்சேரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து முருகனை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×