search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kamachi Amman Temple"

    • நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததுடன், வீட்டு மனைகளாக மாற்றி விற்பனை செய்துவிட்டதாக கோவில் நிர்வாகம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.
    • இடைக்கால விசாரணை அறிக்கை சமர்பிக்க புதுச்சேரி சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு உத்தரவிட்டது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியின் புகழ் பெற்ற கோவில்களில் ஒன்றான காமாட்சி அம்மன் கோவிலுக்கு புதுச்சேரி ரெயின்போ நகரில் ரூ.50 கோடி மதிப்புள்ள 64,000 சதுரடி நிலம் உள்ளது.

    அந்த நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததுடன், வீட்டு மனைகளாக மாற்றி விற்பனை செய்துவிட்டதாக கோவில் நிர்வாகம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.

    இந்த புகாரின் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு செய்து நிலம் கிரயம் செய் யப்பட்ட காலகட்டமான 2021-ல் தாசில்தாராக இருந்த பாலாஜியும், நில அளவைத் துறையின் இயக்குனராக இருந்த ரமேஷ், சார் பதிவாளர் சிவசாமி உள்பட 17 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்த சொத்தினை தனது குடும்பத்தினருக்கு வாங்கிய விவகாரத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் ஜான்குமார், அவரது மகன் ரிச்சர்ட்ஸ் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண் டும் என தி.மு.க., - காங்., கம்யூனிஸ்டு உள்ளிட்ட எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தின.

    காமாட்சியம்மன் கோவில் சொத்துகளை பொருத்தவரை, ஜான்குமார் எம்.எல்.ஏ., குடும்பத்தினர் 4 பேர் உள்பட மொத்தம் 22 பேர் வாங்கி இருந்தனர்.

    கோர்ட்டு உத்தரவிட்டிருந்த நிலையில் வாங்கிய கோவில் இடங்களை யாரும் ஒப்படைக்கவில்லை.இதனையடுத்து கலெக்டர் வல்லவன் உத் தரவின்பேரில் காமாட்சி யம்மன் கோவில் சொத்துகளை கையகப் படுத்தி, இந்து அறநிலையத் துறை முன்னிலையில் கோவில் நிர்வாகிகளிடம் கடந்த ஆகஸ்டு மாதம் ஒப்ப டைக்கப்பட்டது.

    இதற்கிடையே காமாட்சியம்மன் கோவில் சொத்து தொடர்பான வழக்கு, கடந்த 13-ந் தேதி சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப் போது, கோவில் சொத்து விவகாரத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சம்பந்தப்பட்டவர்களின் விபரங்களுடன், இடைக்கால விசாரணை அறிக்கை சமர்பிக்க புதுச் சேரி சி.பி.சி.ஐ.டி. போலீ சாருக்கு உத்தரவிட்டது.

    இதனையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் காமாட்சியம்மன் கோவில் சொத்து சம்பந்தமாக இடைக்கால அறிக்கையை சீலிட்ட கவரில் சென்னை ஐகோர்ட்டில் சமர்ப்பித்துள்ளனர்.

    இதில் கோவில் சொத்துக்கள் அபகரிப்பில் மேலும் உழவர்கரை தாசில்தாரர்களாக பணியாற்றிய மேலும் சில அதிகாரிகள் சிக்குவார்கள் என தெரிகிறது. அந்த அதிகாரிகள் தற்போது தேர்தல் பணி மற்றும் வருவாய்த்துறை அலுவலக பணியில் உள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • பொங்கல் திருவிழாயொட்டி கணபதி பூஜை மற்றும் கொடியேற்று விழா நடைபெற்றது.
    • தொடர்ந்து பிரசாதம் வழங்குதலும், அன்னதானமும் நடைபெற்றது.

    கவுந்தப்பாடி:

    கவுந்தப்பாடி ஈரோடு ரோட்டில் உள்ள காமாட்சி அம்மன் கோவில் ஆடி மாதம் பொங்கல் திருவிழாயொட்டி கடந்த 3-ந் தேதி கணபதி பூஜை மற்றும் கொடியேற்று விழா நடைபெற்றது.

    அதைத்தொடர்ந்து பெருந்தலையூர் பவானி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு அம்மை அழைத்தல் நிகழ்ச்சியும், இரவு 8 மணி அளவில் சங்கு பூஜை நடைபெற்றது.

    தொடர்ந்து நேற்று காலை 7 மணி அளவில் பொங்கல் வைத்தலும், 8 மணிக்கு மகா அபிஷேகம் அதைத்தொடர்ந்து முளைப்பாரி மற்றும் மாவிளக்கு எடுத்து வருகிற நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    12 மணி அளவில் காமாட்சி அம்மனுக்கு வெள்ளிக்கவசம் அணிவித்து மகா தீபாரதனையும் தொடர்ந்து பிரசாதம் வழங்குதலும், அன்னதானமும் நடைபெற்றது.

    சுமங்கலிகளுக்கு மஞ்சள் குங்குமம் தாலிச் சரடு வழங்கப்பட்டது. மாலை 5 மணி அளவில் மஞ்சள் நீராட்டு விழாவும், மறு பூஜையும் நடைபெற்றது.

    விழாவில் ஈரோடு, பவானி, அந்தியூர், கணக்கம்பாளையம், கோபி, பெருந்துறை மற்றும் சுற்று வட்டாரங்களில் இருந்து நூற்றுக்கணக்கான கலந்து கொண்டு காமாட்சி அம்மனின் அருள் பெற்றார்கள். விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்திருந்தார்கள்.

    • கடந்த 24-ந்ேததி காலை 5 மணிக்கு கோ பூஜையுடன் விழா தொடங்கியது.
    • மங்கள இசை, நவகிரக ஹோமம், மாலை 5 மணிக்கு முதல் கால பூஜை நடைபெற்றது.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட நேருவீதியில் காமாட்சிஅம்மன் கோவில் உள்ளது.பழமை வாய்ந்த இந்த கோவிலில் கும்பா பிஷேக விழா நடத்துவது என பொதுமக்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டது.அதைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக புனரமை ப்பு பணிகள் நடைபெற்று வந்தது. பணிகள் நிறைவுற்ற நிலையில் இன்று காலை கும்பாபிஷேக விழா நடைபெற்றது.அதன் முதல் நிகழ்வாக கடந்த 24-ந்ேததி காலை 5 மணிக்கு கோ பூஜையுடன் விழா தொடங்கியது. மங்கள இசை, விநாயகர் வழிபாடு, கணபதி ஹோமம் உள்ளி ட்டவை நடைபெற்றது. 2 ம் நாள் நிகழ்வாக 25-ந்தேதி காலை 7 மணிக்கு மங்கள இசை, நவகிரக ஹோமம், மாலை 5 மணிக்கு முதல் கால பூஜை நடை பெற்றது. நேற்று காலை 6 மணிக்கு 2-ம் கால பூஜை , 10:30 மணிக்கு விமான கலசங்கள் ஸ்தாபன நிகழ்ச்சி, மாலை 5 மணிக்கு 3-ம் கால பூஜை நடைபெற்றது.இன்று காலை 9 மணிக்கு விமான கலசங்கள், மங்கள வாத்தியங்களுடன் மூலாலயம் எழுந்தருளலும், 9.30 மணிக்கு காமாட்சி யம்மன் மற்றும் பரிவார விமான ங்களுக்கு கும்பாபிஷேகம் நடை பெற்றது. அதை த்தொடர்ந்து மகாஅபிஷேகம் மற்றும் மகாதீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 9 மணிக்கு காமாட்சி அம்மன் ஏகாம்பரேஸ்வரர் திருக்கல்யா ணமும் அதைத் தொடர்ந்து திருவீதி உலாவும் நடைபெற உள்ளது.விழாவையொட்டி நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு தேவராட்டம், மங்கள வாத்தியங்கள் முழங்க முளைப்பாரிகை ஊர்வலமும், 6.30 மணிக்கு கலை நிகழ்ச்சிகளும் நடை பெற்றது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். விழாவில் பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், கவுமார மடாலயம் குமர குருபர சுவாமிகள், ததேவாநந்த சரஸ்வதி சுவாமிகள், 24 மனை தெலுங்கு செட்டியார்கள் சமூகம், தலைவர் ராமராஜ் செட்டியார், அறங்காவலர் குழு நவநீதன், ஆறுச்சாமி, கோவிந்தராஜன், துரை அங்குசாமி, ராமராஜ், ராஜேந்திரன், முருகன் , அய்யப்பன், காளிதாஸ், சசிகுமார், ஆறுமுகம், மெய்யப்பன், சண்முக சுந்தரம், சவுந்தர குமார் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், சண்முக சுந்தரம், மாரியம்மன் கோவில் அறங்காவலர் யு.எஸ்.எஸ். ஸ்ரீதர், டி.எஸ்.பி., தேன்மொழிவேல் மற்றும் உறுப்பினர்கள் மலையாண்டி, காமாட்சி குமார், கிருஷ்ணகுமார், தங்கவேல், அசோகன், கார்த்திக்கேயன், சாமிநாதன், நந்தகுமார், நவீன் பிரசாத், விஸ்வநாதன், பத்மநாபன், வெங்கடாசலம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×