என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
12 பவுன் நகைகள் கொள்ளை: 17 நாட்களுக்குப் பிறகு போலீசார் வழக்கு பதிவு
- தாயார் இறந்துவிட்ட நிலையில் அங்கேயே இருந்து விட்டார்.
- மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தருமபுரி ஒட்டப்பட்டி காமராஜர் நகரை சேர்ந்தவர் மாதன். இவரது மனைவி தீபா .இவர் சாமி செட்டி பட்டியில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த நிலையில் வீட்டில் தனியாக வசித்து வந்த ஆசிரியர் தீபா கடந்த 18-ம் தேதியன்று வெண்ணாம்பட்டி குடியிருப்பில் உள்ள உடல்நிலை சரியில்லாத தனது தாயாரை பார்க்கச் சென்றார். அங்கு அவரது தாயார் இறந்துவிட்ட நிலையில் அங்கேயே இருந்து விட்டார்.
இந்நிலையில் கடந்த 18-ம் தேதியன்று இரவு தீபாவின் வீட்டின் கதவை உடைத்துக் மர்ம நபர்கள் வீட்டில் உள்ளே இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்து சுமார் 12 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்று விட்டனர். இது குறித்து மறுநாள் காலையில் பக்கத்து வீட்டில் இருந்த நபர்கள் தீபாவுக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர் அங்கு வந்து பார்த்தபோது வீடு கதவுகள் உடைக்கப்பட்டு பீரோ உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சடைந்தார். தீபா தனது தாயார் இறந்து விட்டதால் வெண்ணாம்பட்டி குடியிருப்பில் இருந்து விட்ட நிலையில் அவர் தனது வீட்டில் நடந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசாரிடம் புகார் தெரிவிக்கவில்லை.
தீபா நேற்று அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தங்க நகைகளை கொள்ளை அடித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொள்ளை சம்பவம் நடந்து 17 நாட்களுக்குப் பிறகு தாமதமாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அதியமான் கோட்டை போலீசார் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளின் மதிப்பையும் குறைத்து 12 பவுன், ரூபாய் ஒரு லட்சத்து 20 ஆயிரம் என குறைத்து மதிப்பிட்டு வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்