search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    12 பவுன் நகைகள் கொள்ளை: 17 நாட்களுக்குப் பிறகு  போலீசார் வழக்கு பதிவு
    X

    12 பவுன் நகைகள் கொள்ளை: 17 நாட்களுக்குப் பிறகு போலீசார் வழக்கு பதிவு

    • தாயார் இறந்துவிட்ட நிலையில் அங்கேயே இருந்து விட்டார்.
    • மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தருமபுரி ஒட்டப்பட்டி காமராஜர் நகரை சேர்ந்தவர் மாதன். இவரது மனைவி தீபா .இவர் சாமி செட்டி பட்டியில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த நிலையில் வீட்டில் தனியாக வசித்து வந்த ஆசிரியர் தீபா கடந்த 18-ம் தேதியன்று வெண்ணாம்பட்டி குடியிருப்பில் உள்ள உடல்நிலை சரியில்லாத தனது தாயாரை பார்க்கச் சென்றார். அங்கு அவரது தாயார் இறந்துவிட்ட நிலையில் அங்கேயே இருந்து விட்டார்.

    இந்நிலையில் கடந்த 18-ம் தேதியன்று இரவு தீபாவின் வீட்டின் கதவை உடைத்துக் மர்ம நபர்கள் வீட்டில் உள்ளே இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்து சுமார் 12 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்று விட்டனர். இது குறித்து மறுநாள் காலையில் பக்கத்து வீட்டில் இருந்த நபர்கள் தீபாவுக்கு தகவல் தெரிவித்தனர்.

    அவர் அங்கு வந்து பார்த்தபோது வீடு கதவுகள் உடைக்கப்பட்டு பீரோ உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சடைந்தார். தீபா தனது தாயார் இறந்து விட்டதால் வெண்ணாம்பட்டி குடியிருப்பில் இருந்து விட்ட நிலையில் அவர் தனது வீட்டில் நடந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசாரிடம் புகார் தெரிவிக்கவில்லை.

    தீபா நேற்று அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தங்க நகைகளை கொள்ளை அடித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கொள்ளை சம்பவம் நடந்து 17 நாட்களுக்குப் பிறகு தாமதமாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அதியமான் கோட்டை போலீசார் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளின் மதிப்பையும் குறைத்து 12 பவுன், ரூபாய் ஒரு லட்சத்து 20 ஆயிரம் என குறைத்து மதிப்பிட்டு வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×