search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காங்கிரஸ்"

    • அகமதாபாத்தில் காந்திநகர் தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி தனது வாக்கினை செலுத்தினார்.
    • உள்துறை அமைச்சர் அமித்ஷா அகமதாபாத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

    உத்தரபிரதேசம், குஜராத், பீகார், அசாம், சத்தீஸ்கர், கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 10 மாநிலங்கள், 2 யூனிய பிரதேசங்களுக்கு உட்பட்ட 93 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.

    இந்நிலையில், இன்று மாலை 6 மணியோடு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மாலை 5 மணி நிலவரப்படி 60.19 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

    மாநில வாரியாக விவரங்கள்:

    அசாம்: 74.86 சதவீதம்

    பீகார்: 56.01 சதவீதம்

    சத்தீஸ்கர்: 66.87 சதவீதம்

    கோவா: 72.52 சதவீதம்

    குஜராத்: 55.22 சதவீதம்

    கர்நாடகா: 66.05 சதவீதம்

    மத்தியப் பிரதேசம்: 62.28 சதவீதம்

    மகாராஷ்டிரா: 53.40 சதவீதம்

    உத்தரப் பிரதேசம்: 55.13 சதவீதம்

    மேற்கு வங்காளம்: 73.93 சதவீதம் 

    • இன்று நாட்டின் எல்லா பகுதியிலும் உள்ள இளைஞர்கள் வேலைவாய்ப்பின்மையை எதிர்கொண்டு வருகிறார்கள்.
    • தலித்கள், பழங்குடியினர்கள், பிற்படுத்தப்பட்டோர்கள், சிறுபான்மையினர்கள் பயங்கரமான பாகுபாட்டை எதிர்கொண்டு வருகிறார்கள்.

    மக்களவை தேர்தலில் இன்று 3-வது கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், பாராளுமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சோனியா காந்தி வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில் கூறியிருப்பதாவது:-

    இன்று நாட்டின் எல்லா பகுதியிலும் உள்ள இளைஞர்கள் வேலைவாய்ப்பின்மையை எதிர்கொண்டு வருகிறார்கள். பெண்கள் அட்டூழியங்களை (கொடுமைகள்) எதிர்கொண்டு வருகிறார்கள். தலித்கள், பழங்குடியினர்கள், பிற்படுத்தப்பட்டோர்கள், சிறுபான்மையினர்கள் பயங்கரமான பாகுபாட்டை எதிர்கொண்டு வருகிறார்கள்.

    பிரதமர் மோடி மற்றும் பா.ஜனதா ஆகியவற்றின் நோக்கத்தால் இந்த சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. எந்த விலை கொடுத்தாவது அதிகாரத்தை பெற வேண்டும் என்பதுதான் அவர்களுடைய நோக்கம். அரசியல் ஆதாயத்திற்காக அவர்கள் வெறுப்புணர்வை வளர்த்துள்ளனர். அனைத்து வகையிலான வளர்ச்சிக்கும், உரிமைகள் பறிக்கப்பட்டவர்களின் நீதிக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும் காங்கிரஸ் மற்றும் நான் எப்போதுமே போராடி வருகிறோம்.

    அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை பாதுகாக்க காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி அர்ப்பணித்துள்ளது. அனைவருடைய சிறந்த எதிர்காலத்திற்காகவும், ஒன்றிணைந்து வலுவான மற்றும் ஒருங்கிணைந்த இந்தியாவை கட்டமைக்க காங்கிரஸ்க்கு வாக்களியுங்கள்.

    இவ்வாறு சோனியா காந்தி அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

    • அகமதாபாத்தில் காந்திநகர் தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி தனது வாக்கினை செலுத்தினார்
    • உள்துறை அமைச்சர் அமித்ஷா அகமதாபாத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்

    உத்தரபிரதேசம், குஜராத், பீகார், அசாம், சத்தீஸ்கர், கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 10 மாநிலங்கள், 2 யூனிய பிரதேசங்களுக்கு உட்பட்ட 93 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.

    இந்நிலையில், மூன்றாம் கட்ட பாராளுமன்ற தேர்தலில் மதியம் 3 மணி நிலவரப்படி 50.71 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

    மாநில வாரியாக விவரங்கள்:

    அசாம் - 63.08 சதவீதம்

    பீகார் - 46.69 சதவீதம்

    சத்தீஸ்கர் - 58.19 சதவீதம்

    கோவா - 61.39 சதவீதம்

    குஜராத் - 47.03 சதவீதம்

    கர்நாடகா - 54.20 சதவீதம்

    மத்தியப் பிரதேசம் - 54.09 சதவீதம்

    மகாராஷ்டிரா - 42.63 சதவீதம்

    உத்தரப் பிரதேசம் - 46.78 சதவீதம்

    மேற்கு வங்காளம் - 63.11 சதவீதம்

    • மக்களுக்கு ஏமாற்றத்தை தான் தி.மு.க. அரசு பரிசாக கொடுத்துள்ளது.
    • 3 ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் 300 ஆண்டுக்கான சுமைகளை மக்கள் மீது சுமத்தியுள்ளனர்.

    மதுரை:

    மதுரையில் இன்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இன்றைக்கு 3 ஆண்டுகள் முடிந்து 4-ம் ஆண்டு தொடக்க விழாவை தி.மு.க. அரசு காண்கிறது. கடுமையான மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி ஏற்றம் என இந்த மூன்று ஆண்டுகளில் 30 ஆண்டுக்கான சுமைகளை மக்கள் அனுபவித்து வருகின்றனர்

    தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. இந்த மூன்று ஆண்டுகளில் அதிகமான கடன் சுமை உள்ள மாநிலமாக தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மின் கட்டணத்தை உயர்த்த மாட் டோம் என்று கூறினார்கள். ஆனால் கடுமையாக மின் கட்டத்தை உயர்த்தி விட்டனர்.

    நீட் தேர்வு, கல்விக்கடன் ரத்து செய்வோம் என்று கூறினார்கள். அது கிணற்றில் போட்ட கல்லாக இருக்கிறது. கியாஸ் மானியம் 100 ரூபாய் தருவோம் என்று கூறினார்கள். அதுவும் அப்படியே இருக்கிறது. பெட்ரோல் விலையை கண்துடைப்பாக மட்டும் குறைத்து விட்டு டீசலுக்கான விலையை குறைக்கவில்லை. ஆயிரம் ரூபாய் அனைத்து குடும்பங்களுக்கு வழங்குவோம் என்று கூறினார்கள். தமிழகத்தில் 2 கோடியே 15 லட்சம் குடும்பங்கள் உள்ளது. ஆனால் ஒரு கோடி பேருக்கு கொடுத்துவிட்டு பாரபட்சம் பார்க்கிறார்கள்.

    மக்களுக்கு ஏமாற்றத்தை தான் தி.மு.க. அரசு பரிசாக கொடுத்துள்ளது. இனியும் இந்த 2 ஆண்டுகளில் அரசை மக்கள் நம்ப தயாராக இல்லை. மீண்டும் தமிழகத்தில் எடப்பாடியார் ஆட்சி அமைவதற்காக மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

    அம்மா அரசின் திட்டங்கள் அனைத்தையும் நிறுத்தி விட்டனர். இன்றைக்கு மக்கள் மனதில் மகிழ்ச்சி உள்ளதாக முதலமைச்சர் கூறுகிறார். மக்கள் மனதில் மகிழ்ச்சி இல்லை, வீழ்ச்சி தான் உள்ளது. அதுதான் உண்மையான கள நிலவரம். தி.மு.க. ஆட்சி எப்போதும் வருகிறதோ அப்போதெல்லாம் தமிழகத்தில் மின் தட்டுப்பாடு ஏற்படும்.

    நெல்லை காங்கிரஸ் தலைவர் கொலையா? தற்கொலையா? என்ற முடிவு கூட இன்னும் வரவில்லை. இது காவல்துறை மெத்தனமா? அரசியல் குறுக்கீடா? அழுத்தமா? என்று தெளிவாக தெரியவில்லை.

    புகார் கடிதம் கொடுக்கப்பட்டது என்று கூறுகிறார்கள். ஆனால் காவல்துறையில் கடிதம் கொடுக்கவில்லை என்று கூறுகிறார்கள். காவல்துறையை சுதந்திரமாக விட்டால் ஒரு மணி நேரத்தில் குற்றவாளிகளை கண்டுபிடித்து விடுவார்கள். அதற்கு நான் உத்தரவாதம் தருகிறேன். ஆனால் இன்றைக்கு காவல்துறை செயல் இழந்து உள்ளது.

    3 ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் 300 ஆண்டுக்கான சுமைகளை மக்கள் மீது சுமத்தியுள்ளனர். தமிழகம் மகிழ்ச்சி இல்லை வீழ்ச்சியில் தான் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பா.ஜ.க கடந்த தேர்தலைப் போலவே சாதிக்குமா? என பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    • காங்கிரஸ், பா.ஜ.க. இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

    திருப்பதி:

    குஜராத், கர்நாடகா மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று நடக்கிறது.

    குஜராத் மாநிலத்தை பொருத்தவரை 1995-ம் ஆண்டு முதல் பா.ஜ.க. ஆட்சியில் உள்ளது. கடந்த 2 பாராளுமன்ற தேர்தலிலும் மொத்தம் உள்ள 26 இடங்களிலும் பா.ஜ.க வெற்றி பெற்றது. கடந்த தேர்தலில் கர்நாடகாவில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் 25 இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றது.

    கோவாவில் உள்ள 2 தொகுதியில் ஒரு தொகுதியில் பா.ஜ.க. வெற்றி பெற்றது.

    இந்த தேர்தலில் பா.ஜ.க கடந்த தேர்தலைப் போலவே சாதிக்குமா? என பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    குஜராத் மாநிலத்தில் ராஜ்கோட் எம்.பி.யும் மத்திய மந்திரியுமான புருஷோத்தம் ரூபாலா ராஜபுத்திரர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்தார்.

    இந்த கருத்து அந்த மாநிலத்தில் பா.ஜ.க.வுக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட காரணமாக அமைந்தது. ராஜபுத்திர பெண்கள் ஒன்றாக பா.ஜ.க. அலுவலகத்திற்கு வந்து தீக்குளிக்க போவதாகவும் எச்சரித்தனர்.

    குஜராத் மாநிலத்தில் ராஜபுத்திரர்கள் 17 சதவீதம் வரை உள்ளனர். அவர்கள் எதிர்ப்பை பா.ஜ.க.வால் சமாளிக்க முடியாது என்பதால் பிரதமர் மோடி நேரடியாக அவர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார்.

    மேலும் பா.ஜ.க.வின் உள்ளூர் நிர்வாகிகளுக்கு எதிராகவும் சில வேட்பாளர்களை பா.ஜ.க தலைமை களமிறக்கி உள்ளது.

    கர்நாடக மாநிலத்தில் கடந்த முறை பா.ஜ.க. ஆட்சியில் இருந்தது. அப்போது 25 இடங்களில் வெற்றியை எட்டியது. தற்போது கர்நாடகாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது.

    அவர்கள் பெண்களுக்கு என பல்வேறு திட்டங்களை அறிவித்தும் தேர்தல் அறிக்கைகளையும் வெளியிட்டுள்ளனர். இது காங்கிரசுக்கு செல்வாக்கை அதிகரித்துள்ளது.

    கோவாவில் வடக்கு மற்றும் தெற்கு கோவா தொகுதிகள் உள்ளன. இந்த இரு இடங்களிலும் காங்கிரஸ், பா.ஜ.க. இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

    கடந்த தேர்தலில் ஆம் ஆத்மி இங்கு தனித்து போட்டியிட்டதால் பா.ஜ.க.வுக்கு நல்ல பலன் கிடைத்தது. இதனால் வடக்கு கோவாவில் பா.ஜ.க எளிதாக வெற்றி பெற்றது. தெற்கு கோவாவில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் வாக்குகள் அதிகம் இருப்பதால் காங்கிரஸ் அங்கு வெற்றியை தக்க வைத்துக் கொண்டது.

    இந்த முறை காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆம் ஆத்மி மற்றும் கோவா பார்வர்டு கட்சி ஆதரவளித்து உள்ளன.

    கோவாவில் உள்ள 2 தொகுதிகளில் பா.ஜ.க.வுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த 3 மாநிலங்களிலும் 3 அம்சங்கள் பா.ஜ.க.வுக்கு தொந்தரவாக மாறி உள்ளன. விறுவிறுப்பான வாக்குப்பதிவும் நடந்து வருகிறது.

    தேர்தல் முடிவுக்கு பிறகு தான் இந்த பிரச்சினைகளால் பா.ஜ.க.வுக்கு பின்னடைவு ஏற்பட்டதா என்பது தெரியவரும் என அரசியல் பிரமுகர்கள் தெரிவித்துள்ளனர்.

    • ஜெயக்குமாரின் குடும்பத்தினரிடமும் எஸ்.பி. தலைமையிலான போலீசார் இன்றும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • எரிந்த நிலையில் கிடந்த ஜெயக்குமாரின் வாயில் பாத்திரங்களை துலக்கும் இரும்பு பிரஸ் ஒன்று இருந்தது.

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் எரிந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் தலைமையில் 8 தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதுதொடர்பாக அவர் எழுதியதாக கூறப்படும் கடிதத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களிடமும், ஜெயக்குமாரின் குடும்பத்தினரிடமும் எஸ்.பி. தலைமையிலான போலீசார் இன்றும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்நிலையில் ஜெயக்குமார் மரண வழக்கில் புதிய தடயம் ஒன்று கிடைத்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எரிந்த நிலையில் கிடந்த ஜெயக்குமாரின் வாயில் பாத்திரங்களை துலக்கும் இரும்பு பிரஸ் ஒன்று இருந்தது. தற்போது போலீசார் ஜெயக்குமார் வீடு மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வரும் நிலையில் இரும்பு பிரசின் பிளாஸ்டிக் கவர் அவரது வீட்டின் உள்ளே உள்ள மாட்டுக்கொட்டகையில் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அதனை கைரேகை நிபுணர்கள் உதவியுடன் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நமது காவல்துறை உலகப்புகழ் பெற்ற காவல் துறை என்று பெயர் பெற்றது என்பது அனைவரும் அறிவோம்.
    • எனது அரசியல் அனுபவத்தில் எந்த காங்கிரஸ்காரர்களிடமும் நான் பணம் வாங்கியதும் கிடையாது. வாங்க வேண்டிய அவசியமும் எனக்கு கிடையாது என்றார்.

    தூத்துக்குடி:

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம் தொடர்பான வழக்கு விசாரணையில் ஆஜராக காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர் கே.வி. தங்கபாலு இன்று தூத்துக்குடி வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம் தொடர்பாக காவல்துறையினர் எனக்கு சம்மன் அனுப்பி உள்ளனர். அதற்காக வந்துள்ளேன். இப்போது இந்த வழக்கு தொடர்பாக எந்த கருத்தும் சொல்ல விரும்பவில்லை.

    நண்பர் ஜெயக்குமார் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர். அவருடைய மரணம் கொலை அல்லது தற்கொலை எதுவாக இருந்தாலும் அது வருத்தத்திற்குரியது. அவரது குடும்பத்திற்கு எனது அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த செயல் நடந்திருக்கக்கூடாது. இதைபற்றிய முழுமையான தகவல்களை காவல்துறை முழுமையாக விசாரித்து வருவதாக அறிகிறேன்.

    தமிழக காவல்துறை மிக சிறந்த முறையில் பணியாற்றக் கூடியது. நமது காவல்துறை உலகப்புகழ் பெற்ற காவல் துறை என்று பெயர் பெற்றது என்பது அனைவரும் அறிவோம். அவர்கள் உரிய முறையில் விசாரணை செய்வார்கள் என்று நாம் நம்புவோம்.

    விரைவில் குற்றவாளிகளை கண்டுபிடிக்கப்பட வேண்டும். உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பது எங்களுடைய கருத்து. காங்கிரஸ் கட்சியின் கருத்து.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது நீங்கள் பணம் கொடுக்க வேண்டும் என்று கடிதத்தில் இருப்பது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர், எனது அரசியல் அனுபவத்தில் எந்த காங்கிரஸ்காரர்களிடமும் நான் பணம் வாங்கியதும் கிடையாது. வாங்க வேண்டிய அவசியமும் எனக்கு கிடையாது என்றார்.

    • கடந்த 50 ஆண்டுகளாக நான் வாக்களித்து வருகிறேன்.
    • என்னுடன் நின்ற ஏழை மக்களுக்கு நன்றி உள்ளவனாக நான் அவர்களுடன் இருக்கிறேன்.

    பெங்களூரு:

    கர்நாடகா மாநிலத்தில் மொத்தம் 28 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் கடந்த 26-ந்தேதி 14 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. எஞ்சியுள்ள 14 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று நடந்தது.

    அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது மனைவி ராதாபாய் கார்கேவுடன் கலாபுர்கியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

    பின்னர் மல்லிகார்ஜூன கார்கே நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கடந்த 50 ஆண்டுகளாக நான் வாக்களித்து வருகிறேன். கர்நாடகாவில் பழமைவாய்ந்த கட்சியான நாங்கள் பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெறுவோம்.

    பெங்களூரு தொகுதி எங்களுக்கு கொஞ்சம் கடினமாக இருந்தது. ஆனால் எங்களுக்கு கூடுதல் ஆதரவு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

    மந்திரியான போதும், எதிர்க்கட்சித் தலைவராகவும், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராகவும், பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகவும் ஆனபோதும் பசவநகரை நான் என்றும் மறந்ததில்லை.

    இங்குள்ள மக்கள் எனக்கு அன்பையும் பாசத்தையும் கொடுத்துள்ளனர். அவர்கள் உண்மையில் எனது தலைமையை வளர்த்துள்ளனர். என்னுடன் நின்ற ஏழை மக்களுக்கு நன்றி உள்ளவனாக நான் அவர்களுடன் இருக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    கார்கேவின் மருமகன் ராதாகிருஷ்ண தொட்டா மணி குல்பர்கா (கலாபுர்கி) தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

    • உங்களின் ஒரு வாக்கு 500 வருட காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து பிரமாண்டமான ராமர் கோவிலை உருவாக்கியது.
    • காங்கிரசின் நோக்கம் எவ்வளவு ஆபத்தானது என்பதைப் புரிந்து கொள்ள, 20 முதல் 25 ஆண்டுகளாக அக்கட்சியில் இருந்து வெளியேறியவர்களைக் கேட்டு பாருங்கள்.

    போபால்:

    பிரதமர் மோடி இன்று மத்திய பிரதேச மாநிலம் கர்கோனில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-

    உங்கள் ஒரு வாக்கு இந்தியாவை 5வது பெரிய பொருளாதாரமாக மாற்றியது. இந்தியாவின் உலகளாவிய செல்வாக்கை அதிகரித்தது. 70 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது.

    ஆதிவாசி மகளை ஜனாதிபதியாக்கியது. பெண்களுக்கு இடஒதுக்கீடு அளித்தது. ஊழல்வாதிகளை சிறைக்கு அனுப்பியது. இலவச உணவு மற்றும் சிகிச்சைக்கு உத்தரவாதம் அளித்தது.

    இளைஞர்களின் எதிர்காலத்தை உயர்த்தியது. வரம்பற்ற வாய்ப்புகளை உருவாக்கியது. 25 கோடி மக்களை வறுமையில் இருந்து விடுவித்தது. உங்களின் ஒரு வாக்கு 500 வருட காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து பிரமாண்டமான ராமர் கோவிலை உருவாக்கியது.

    பாகிஸ்தானில், இந்தியாவுக்கு எதிராக ஜிகாத் செய்யப் போவதாக பயங்கரவாதிகள் மிரட்டி வருகின்றனர். மோடிக்கு எதிராக வாக்களிக்க சிலரையும் காங்கிரஸ் கேட்டுக் கொள்கிறது.

    குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்களிடம் மோடிக்கு எதிராக வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கின்றனர். அவர்கள் அவநம்பிக்கையால் சூழப்பட்டிருக்கிறார்கள். வாக்கு ஜிகாத் ஏற்கத்தக்கதா? இதை ஜனநாயகத்தில் அனுமதிக்க முடியுமா? காங்கிரஸ் எனக்கு எதிராக வாக்களிக்கும் ஜிகாத்துக்கு அழைக்கிறது. அவர்களை நான் அம்பலப்படுத்தியதால், எனக்கு எதிரான துஷ்பிரயோகங்களை செய்கி றார்கள்.

    வரலாற்றின் திருப்பு முனையில் இந்தியா உள்ளது, வாக்கு ஜிகாத் பலிக்குமா அல்லது ராம ராஜ்ஜியமா என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.


    காங்கிரசின் நோக்கம் எவ்வளவு ஆபத்தானது என்பதைப் புரிந்து கொள்ள, 20 முதல் 25 ஆண்டுகளாக அக்கட்சியில் இருந்து வெளியேறியவர்களைக் கேட்டு பாருங்கள். ராமர் கோவிலுக்கு சென்றதற்காக தான் மிகவும் துன்புறுத்தப் பட்டதாகவும், அதனால் காங்கிரசை விட்டு வெளியேறியதாகவும் ஒரு பெண் கூறினார்.

    காங்கிரசை முஸ்லீம் லீக் மற்றும் மாவோயிஸ்டுகள் அபகரித்துள்ளனர் என்று மற்றொருவர் கூறினார். இன்னொருவர் கூறும் போது, ஷா பானோ வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அவரது தந்தை மாற்றியது போல் ராமர் கோவில் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை காங்கிரஸ் இளவரசர் (ராகுல்காந்தி) மாற்ற விரும்புவதாக தெரிவித்தார்.

    மக்களின் நம்பிக்கை அல்லது தேச நலன் பற்றி காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கவலைப்படவில்லை. இவர்களுக்குள் தேச விரோத கருத்துக்களை வெளியிடுவதில் போட்டி நிலவுகிறது. ஒவ்வொரு கட்டமாக காங்கிரசுக்கு பாகிஸ்தான் மீதான அன்பு அதிகரித்து வருகிறது. காங்கிரஸ் முன்னாள் முதல்வர் ஒருவர், நமது ராணுவம் தீவிரவாத தாக்குதல் நடத்துகிறது என்றும் பாகிஸ்தான் அப்பாவி என்றும் கூறினார்.

    மும்பை தீவிரவாத தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் இல்லை என மற்றொரு காங்கிரஸ் தலைவர் கூறினார். பாகிஸ்தான் மீது அன்பையும், நமது ராணுவத்தின் மீது வெறுப் பையும் காங்கிரஸ் காட்டுகிறது. இது ஏன் என்று காங்கிரசை கேட்க விரும்புகிறேன்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    • எஸ்.சி, எஸ்.டி மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) ஒரு கூடையில் "முட்டை" போல் சித்தரிக்கப்பட்டுள்ளது
    • இந்த இட ஒதுக்கீட்டுக் கூடையில் முஸ்லிம் சமூகத்தின் மற்றொரு "முட்டையை" ராகுல் காந்தி போடுகிறார்

    கர்நாடகா பாஜகவின் எக்ஸ் பக்கத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக பகை, வெறுப்பு மற்றும் மத மோதல்களை உருவாக்கும் நோக்கில் அனிமேஷன் வீடியோ வெளியிட்டதாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, பாஜக சமூக ஊடகப் பொறுப்பாளர் அமித் மாளவியா, பாஜக மாநிலத் தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா ஆகியோருக்கு எதிராக, தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.

    அந்த அனிமேஷன் வீடியோவில், எஸ்.சி, எஸ்.டி மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) ஒரு கூடையில் "முட்டை" போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. இது இட ஒதுக்கீட்டைக் குறிக்கிறது. இந்த இட ஒதுக்கீட்டுக் கூடையில் முஸ்லிம் சமூகத்தின் மற்றொரு "முட்டையை" ராகுல் காந்தி போடுகிறார். காங்கிரஸ் தலைவர்கள் எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓபிசிக்களை விட முஸ்லிம் சமூகத்திற்கு ஆதரவாக அதிக நிதியை கொடுத்து, அவர்களின் இட ஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு கொடுத்து விடுவதாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

    இந்த வீடியோ தேர்தல் நடத்தை விதிகளை மீறுவது மட்டுமின்றி, 1989 ஆம் ஆண்டின் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமாகும் என்றும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

    குறிப்பாக கர்நாடகாவின் மீதமுள்ள 14 தொகுதிகளில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இதுபோன்ற செயல்கள் சமூகங்களிடையே வெறுப்பை தூண்டும் என்று காங்கிரஸ் கவலை தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, பாஜக சமூக ஊடகப் பொறுப்பாளர் அமித் மாளவியா, பாஜக மாநிலத் தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா ஆகியோர் மீது இரு பிரிவினர் இடையே மோதல், வெறுப்பை தூண்டுதல் போன்ற பிரிவுகளில் பெங்களூரு போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

    • செல்பி எடுப்பதற்காக அவரது தோள்களில் கைகளை வைக்க முயன்றார்.
    • டி.கே.சிவகுமார் காங்கிரஸ் தொண்டரை பளார் என அறைந்தார்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநில துணை முதல்-மந்திரி டி.கே.சிவகுமார் கடந்த சனிக்கிழமை தார்வாட் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வினோதா அசூட்டிக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

    அப்போது ஹாவேரி சவனூர் நகரில் பிரசார பேரணியில் பங்கேற்பதற்காக காரில் இருந்து இறங்கியபோது அவரை சூழ்ந்து கொண்டு காங்கிரஸ் தொண்டர்கள் வாழ்த்து கோஷங்கள் எழுப்பினர். கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால் டி.கே.சிவகுமாரால் அங்கிருந்து மெதுவாகதான் நகர முடிந்தது.

    அப்போது அந்த பகுதியை சேர்ந்த நகராட்சி உறுப்பினரும், காங்கிரஸ் தொண்டருமான அல்லாவுதீன் மணியார் என்பவர் ஆர்வத்தில் துணை முதல்-மந்திரி டி.கே.சிவகுமாருடன் செல்பி எடுப்பதற்காக அவரது தோள்களில் கைகளை வைக்க முயன்றார். இதனால் டி.கே.சிவகுமார் அந்த காங்கிரஸ் தொண்டரை பளார் என அறைந்தார்.

    இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அல்லாவுதீன் மணியாரை கூட்டத்தில் இருந்து ஒதுக்கி தள்ளி டி.கே.சிவகுமாரை காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இந்த காட்சி காமிராக்களில் பதிவானது. இது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    டி.கே.சிவகுமார் காங்கிரஸ் உறுப்பினரை அறைந்த சம்பவம் குறித்து பா.ஜனதா ஐ.டி.விங் தலைவர் அமித் மாளவியா எக்ஸ் சமூக வலைதளத்தில் ஒரு கருத்து பதிவிட்டுள்ளார்.

    அதில் டி.கே.சிவகுமார் ஒருவரை தாக்குவது இது முதல் முறையல்ல. டி.கே.சிவகுமாரின் தோளில் கை வைத்தது காங்கிரஸ் மாநகர உறுப்பினர் செய்த குற்றமா? காங்கிரஸ்காரர்கள் ஏன் காங்கிரசுக்கு வேலை செய்ய விரும்புகிறார்கள் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது? அவர்களின் தலைவர்கள் அவர்களை அறைகிறார்கள்.

    அவமானப்படுத்துகிறார்கள். போட்டியிட டிக்கெட் கொடுக்கவில்லை, ஒதுக்கப்படுகிறார்கள். அவர்கள் பக்கத்தில் சுயமரியாதை இல்லையா? என பதிவிட்டுள்ளார்.

    • ஜெயக்குமார் மரண வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வாய்ப்பு.
    • காவல்தறை உயர் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார், நேற்று முன்தினம் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

    நேற்று உடற்கூறு ஆய்வுக்கு பிறகு அவரது உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. இறப்பதற்கு முன்பு மரண வாக்குமூலம் என்ற பெயரில் 2 கடிதங்களை ஜெயக்குமார் எழுதியிருந்தார்.

    இந்நிலையில், ஜெயக்குமார் மரண வழக்கு வேகமெடுக்கிறது.

    நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரண வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஜெயக்குமார் எழுதிய கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

    அதன்படி, நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரன், மூத்த காங்கிரஸ் தலைவர் தங்கபாலு உள்ளிட்டோரிடமும் விசாரணை நடத்த காவல்துறை திட்டமிட்டுள்ளது.

    ஜெயக்குமார் மரண வழக்கு தொடர்பாக காவல்தறை உயர் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

    ஆலோசனை கூட்டத்தில், வழக்கு தொடர்பாக கிடைத்த முதற்கட்ட விவரங்களை கொண்டு, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    மேலும், இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே 7 தனிப்படை அமைத்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கூடுதலாக மேலும் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    ×