search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தனிப்படை அமைப்பு"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் மூலம் பள்ளிகளில் சோதனை.
    • மிரட்டல் விடுத்த கும்பலை கூண்டோடு பிடிக்க அறிவுறுத்தல்.

    சென்னையில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.

    முன்னதாக, பள்ளிகளுக்கு அனுப்பிய மிரட்டல் இமெயிலில், 2 பயங்கரமான வெடிகுண்டு வெடிக்க

    உள்ளதாகவும், உடனடியாக குழந்தைகளை அப்புறப்படுத்துங்கள். இது காமெடியல்ல எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் மூலம் பள்ளிகளில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

    வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக காவல்துறை ஆணையருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொலைபேசி வாயிலாக பேசினார்.

    அப்போது மிரட்டல் விடுத்த கும்பலை கூண்டோடு பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பணிப்பெண் இன்று அழைத்து வரப்பட்டார்.
    • திமுக எம்.எல்.ஏ. வீட்டில் அவரது மகனின் நண்பர்களிடமும் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

    சென்னை:

    பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள், தனது வீட்டில் சிறுமி ஒருவரை வீட்டு வேலைக்காக அழைத்துச் சென்று கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது.

    இதுதொடர்பாக திருவான்மியூர் மகளிர் காவல் நிலையத்தில் எஸ்.சி., எஸ்.டி. உட்பட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் தலைமறைவாகினர். இதையடுத்து இருவரையும் பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பணிப்பெண் இன்று அழைத்து வரப்பட்டார். அங்கு அவருக்கு 7 பேர் கொண்ட மருத்துவ குழு மருத்துவ பரிசோதனை மேற்கொள்கிறது. பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு பிரிவு மருத்துவர்கள் இளம்பெண்ணிடம் பரிசோதனை மேற்கொள்கின்றனர்.

    இதைத்தொடர்ந்து திமுக எம்.எல்.ஏ. வீட்டிலும் அவரது மகனின் நண்பர்களிடமும் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திமுக எம்.எல்.ஏ. மருமகள் மெர்லினாவின் தாய், தந்தையிடம் காவல் உதவி ஆணையர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது.
    • பெங்களூரு சென்றுள்ள தனிப்படை போலீசார் அவர்களது உறவினர் வீடுகளிலும் இரண்டு பேர் குறித்தும் விசாரணை நடத்தினர்.

    சென்னை:

    பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள், தனது வீட்டில் சிறுமி ஒருவரை வீட்டு வேலைக்காக அழைத்துச் சென்று கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது.

    இதுதொடர்பாக திருவான்மியூர் மகளிர் காவல் நிலையத்தில் எஸ்.சி., எஸ்.டி. உட்பட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் தலைமறைவாகினர். இதையடுத்து இருவரையும் பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து திமுக எம்.எல்.ஏ. மருமகள் மெர்லினாவின் தாய், தந்தையிடம் காவல் உதவி ஆணையர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. மெர்லினா எங்கே இருக்கிறார் என்பது குறித்தும், சிறுமியை தாக்கிய சம்பவம் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தினர்.

    தலைமறைவாக உள்ள ஆண்ட்ரோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மெர்லினாவின் செல்போன் சிக்னல் மூலம் இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    பெங்களூரு சென்றுள்ள தனிப்படை போலீசார் அவர்களது உறவினர் வீடுகளிலும் இரண்டு பேர் குறித்தும் விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக எம்.எல்.ஏ. மகன், மருமகள் அளித்த மனுவில், சரணடையும் நாளிலேயே ஜாமின் மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தனர்.

    இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், திமுக எம்.எல்.ஏ.வின் மகன், மருமகள் சரணடையும் நாளிலேயே ஜாமின் வழங்குவது குறித்து சட்டத்திற்குட்பட்டு பரிசீலிக்க வேண்டும் என்று சென்னை முதன்மை அமர்விற்கு உத்தரவிட்டனர்.

    மேலும் அனைத்து தரப்பிற்கும் போதிய வாய்ப்பளித்து முடிவெடுக்க உத்தரவிட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

    • திமுக எம்.எல்.ஏ.வின் மகன் மற்றும் மருமகள், தனது வீட்டில் சிறுமி ஒருவரை வீட்டு வேலைக்காக அழைத்துச் சென்று கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது.
    • வழக்குப்பதிவு செய்து 6 நாட்களாகி உள்ள நிலையில், தலைமறைவாக உள்ள இருவரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள், தனது வீட்டில் சிறுமி ஒருவரை வீட்டு வேலைக்காக அழைத்துச் சென்று கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக திருவான்மியூர் மகளிர் காவல் நிலையத்தில் எஸ்.சி., எஸ்.டி. உட்பட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் தலைமறைவாகினர்.

    இந்நிலையில் இருவரையும் பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. வழக்குப்பதிவு செய்து 6 நாட்களாகி உள்ள நிலையில், தலைமறைவாக உள்ள இருவரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    இருவரும் வழக்கறிஞர்கள் மூலம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் முன் ஜாமின் கோர முயன்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • சம்பவத்தன்று ராஜனின் மகள் பத்மா பெற்றோருக்கு போன் செய்துள்ளார்.
    • வயதான 2 பேரும் தனியாக வசித்து வருவதை நோட்டமிட்ட நபர்தான் இந்த படுகொலையை செய்திருக்க வேண்டுமென்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே உள்ள வளவனூர் கே.எம்.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜன் (வயது 68). இவரது மனைவி உமாதேவி (65) இவர்கள் இருவரும் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியர்களாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள்.

    இவர்களது மகன் சோழனுக்கு திருமணமாகி பெங்களூருவிலும், மகள் பத்மா திருமணம் ஆகி புதுச்சேரியிலும் வசித்து வருகின்றனர். தற்போது வளவனூரில் உள்ள வீட்டில் வயதான தம்பதி மட்டும் வசித்து வந்தனர். இதனிடையே சம்பவத்தன்று ராஜனின் மகள் பத்மா பெற்றோருக்கு போன் செய்துள்ளார்.

    நீண்ட நேரமாக போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்ததால் அக்கம்பக்கத்தினரிடம் போன் செய்து வீட்டிற்கு சென்று பார்க்குமாறு தெரிவித்துள்ளார். பக்கத்து வீட்டுக்காரர் சென்று பார்த்தபோது ராஜன்-உமாதேவி ஆகியோர் தனித்தனி அறைகளில் கழுத்து இறுக்கப்பட்டு உயிரிழந்து கிடந்தது தெரிய வந்தது.

    இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், பத்மாவிடமும், அருகில் உள்ள வளவனூர் போலீஸ் நிலையத்திலும் தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    மேலும் டி.ஐ.ஜி. ஜியாவுல் ஹக், போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் உள்ளிட்டவர்களும் நேரில் வந்து விசாரணை நடத்தினர்.

    ராஜன், உமாதேவி 2 பேரும் கழுத்து இறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருப்பதை போலீசார் உறுதி செய்தனர். அவர்கள் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், சம்பவத்தன்று காலை வழக்கம் போல் 2 பேரும் வெளியில் சென்று விட்டு மாலை 3 மணிக்கு வீட்டு சென்றுள்ளனர். வீட்டில் வேலை செய்த பெண்ணும் தனது பணியை முடித்து விட்டு சென்றுள்ளார்.

    அதன் பிறகு 2 பேரும் வெளியே வரவில்லை. 5 மணிக்கு பால்காரர் அவர்களை அழைத்துள்ளார். நீண்ட நேரமாக கதவு திறக்காததால் அவர் சென்று விட்டார். அதன்பிறகுதான் மகள் பத்மா, பெற்றோருக்கு நீண்டநேரமாக போன் செய்யவே 2 பேரின் போனும் சுவிட்ச் ஆப்பில் இருந்ததால் அருகிலிருந்தவர்களை தொடர்பு கொண்டு வீட்டிற்கு சென்று பார்க்குமாறு கூறியபோதுதான் 2 பேரும் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரிய வந்தது.

    வயதான 2 பேரும் தனியாக வசித்து வருவதை நோட்டமிட்ட நபர்தான் இந்த படுகொலையை செய்திருக்க வேண்டுமென்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

    மேலும் தனியொருவனாக வந்திருக்கலாம் என்றும், அவர்களை கொலை செய்து விட்டு அங்கிருந்த 4 அரை பவுன் நகை, செல்போன்களை திருடிச்சென்றிருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து ராஜன் மகள் பத்மா அளித்த புகாரின் பேரில் வளவனூர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர். குற்றவாளியை கண்டு பிடிக்க டி.எஸ்.பி. சுரேஷ் தலைமையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    விழுப்புரம் சுற்று வட்டார பகுதிகளிலும் மற்றும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள், செல்போன் சிக்னல்களை கொண்டு புதுச்சேரி, கடலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களிலும் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    நகைக்காக இந்த கொடூர கொலையை அரங்கேற்றிய குற்றவாளியை சுட்டு பிடிக்கும் வகையிலும் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

    • அம்மனின் கழுத்தில் கிடந்த 2 கிராம் எடையுள்ள தங்கத் தாலி செயினும் திருட்டுப் போயிருந்தது தெரிய வந்தது.
    • தடய அறிவியல் நிபுணர்களும்அங்கு வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளையும் பதிவு

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி அருகே உள்ள பழத்தோட்டம் பகுதியில் முருகன் குன்றம் வேல்முருகன் கோவிலில் உண்டியலில் இருந்த பணத்தை யாரோ திருடிச் சென்றனர். மேலும் அங்குள்ள புவனேஸ்வரி அம்மன் சன்னதியில் உள்ள கதவும் திறந்து கிடந்தது. அம்மனின் கழுத்தில் கிடந்த 2 கிராம் எடையுள்ள தங்கத் தாலி செயினும் திருட்டுப் போயிருந்தது தெரிய வந்தது.

    இது தவிர அங்குள்ள வேல் மண்டபத்தில் இருந்த வேலை திருடுவதற்காக வளைத்து இருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது. அந்த வேலை திருட முடியாததால் அதை அந்த மர்ம நபர் விட்டுச் சென்று உள்ளார். யாரோ மர்மநபர் கோவிலின் பின்பக்கம் உள்ள சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்து இந்த கைவரிசையை காட்டியது தெரியவந்தது.உடனே இது பற்றி கோவில் பூசாரி சத்தியசீலன் கோவில் நிர்வாகத்தினருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் கோவிலுக்கு வந்து பார்வையிட்டனர். பின்னர் இது குறித்து கோவில் நிர்வா கத்தினர் கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது அங்கு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை போலீசார் கைப்பற்றி விசாரணைநடத்தினார்கள்.

    அப்போது அந்த கண்காணிப்பு கேமராவில் மர்ம நபர் ஒருவர் நள்ளிரவு நேரத்தில் கோவிலுக்குள் நடமாடிய காட்சி பதிவாகி இருந்தது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் அந்த மர்ம நபரை அடை யாளம் காணும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுஉள்ளனர்.

    மேலும் தடய அறிவியல் நிபுணர்களும்அங்கு வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளையும் பதிவு செய்தனர். இது தவிர போலீஸ் துப்பறியும் நாயும் வரவழைக்கப்பட்டது. போலீஸ் மோப்பநாய் கோவிலில் மோப்பம் பிடித்துவிட்டு நான்கு வழி சாலை வரை ஓடி நின்றது. ஆனால் அந்த போலீஸ் மோப்பநாய் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதற்கிடையில் இந்த கோவிலில் கொள்ளை அடித்த மர்ம நபரை பிடிக்க போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையில் 5 போலீசார் கொண்ட தனிப்ப டையைஅமைக்கப்பட்டு உள்ளது. இந்த தனி போலீஸ் படையை நியமித்து கன்னி யாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. மகேஷ்குமார் உத்தர விட்டு உள்ளார்.

    • குறிப்பாக மனைவி பெயரில் டெபாசிட் செய்து வைத்திருந்த தொகை ரூ.20 லட்சத்தை சின்னத்துரை கேட்டதாக கூறப்படுகிறது.
    • கணவன் - மனைவி இடையே பண விவகாரம் தொடர்பாக மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி கிட்டம் பட்டியை சேர்ந்தவர் சின்னத்துரை (வயது 44). கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி கவுரி (41). இவர்களுக்கு விஜி என்ற மகனும், சத்யா, சினேகா என்ற 2 மகள்களும் உள்ளனர். விஜி ராணுவத்தில் லடாக்கில் பணிபுரிந்து வருகிறார்.

    மகள்கள் 2 பேருக்கும் திருமணம் ஆகி விட்டது. சின்னத்துரை-கவுரி தம்பதியினர் கடந்த 30 ஆண்டு களாக தேன்கனிக்கோட்டையில் வசித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு சொத்தை விற்று கிருஷ்ணகிரி அருகே உள்ள சின்னேப்பள்ளியில் இடம் ஒன்றை வாங்கினார்கள். மீதி பணத்தை கணவர்-மனைவி 2 பேர் பெயரில் டெபாசிட் செய்து வைத்திருந்தனர்.

    மேலும் கணவன் - மனைவி 2 பேரும் கிருஷ்ணகிரி அருகே அம்மன் நகர் 2-வது கிராசில் வீடு ஒன்றில் போகியத்திற்கு குடி போனார்கள். இந்த நிலையில் கடந்த 6 மாதங்களாக கணவன் - மனைவி இடையே குடும்ப தகராறு இருந்தது. குறிப்பாக மனைவி பெயரில் டெபாசிட் செய்து வைத்திருந்த தொகை ரூ.20 லட்சத்தை சின்னத்துரை கேட்டதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக இருந்த பிரச்சினையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கவுரி கிருஷ்ணகிரி அருகே மேலேரிகொட்டாயில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். அவரை கடந்த 2 நாட்களுக்கு முன்பு சின்னத்துரை சமாதானம் பேசி அழைத்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கணவன் - மனைவி இடையே பண விவகாரம் தொடர்பாக மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சின்னத்துரை அரிவாளால் மனைவியின் கழுத்து, கை, வாய், தாடை உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டினார். இதில் கவுரி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

    அவரை கொலை செய்ததும் சின்னத்துரை அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இந்த நிலையில் நேற்று காலை ரத்த வெள்ளத்தில் வீட்டில் கவுரி பிணமாக கிடந்ததை அக்கம் பக்கத்தினர் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்தனர். பின்னர் மனைவியை கொன்று விட்டு தலைமறைவாக சின்னத்துரையை பிடிக்க தனிப்படை போலீசார் பெங்களூரு விரைந்தனர்.

    • முகமூடி கொள்ளையனை பிடிக்க அந்தியூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது
    • அந்தியூர், வெள்ளி திருப்பூர், பர்கூர் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் இரவு ரோந்து பணிகளை துரிதப்படுத்தி உள்ளனர்

    அந்தியூர்

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த எண்ணமங்கலம் கோவிலூர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (55). இவரது மனைவி தங்கமணி (47).மளிகை கடை நடத்தி வருகிறார்கள். கடந்த 2 தினங்களுக்கு முன்பு கத்தி முனையில் தங்கமணி அணிந்திருந்த 5 பவுன் தங்க தாலியை முகமூடி அணிந்த மருமநபர் பறித்து சென்றார்.

    இதையடுத்து முகமூடி கொள்ளையனை பிடிக்க அந்தியூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் தனபால், திருநாவுக்கரசு ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

    அவர்கள் அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது அந்த பகுதியில் காலை முதல் நகை பறிப்பு சம்பவம் நடை பெற்றது வரை சுற்றித்திரிந்த நபர்கள் குறித்து ஆய்வு செய்தனர்.

    மேலும் இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்தியூர், வெள்ளி திருப்பூர், பர்கூர் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் இரவு ரோந்து பணிகளை துரிதப்படுத்தி உள்ளனர்.

    மேலும் அந்தியூர் பஸ் நிலைய பகுதிகளில் உள்ள கடைகளை இரவு 11 மணிக்கு மேல் மூடவும் போலீசார் அறிவுறுத்தி வருகின்றார்கள். ஏனெனில் திருட்டு சம்பவம் நடைபெற்ற உடன் டீ கடையில் டீ குடிப்பது போல் அங்கு சென்று அமர்ந்து விடுவதால் குற்றவாளிகளை பிடிப்பதற்கு போலீசாருக்கு சிரமம் ஏற்படுவதால் டீக்கடை உரிமையா ளர்களுக்கு இரவு 11 மணிக்கு மேல் கடையை திறக்க கூடாது என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    • கேசவன் ஓட்டி சென்ற மோட்டார்சைக்கிள் மீது மோதினார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சாந்தி நகரை சேர்ந்தவர் ராமதாஸ். இவரது மகன் கேசவன் (வயது45). ரியல் எஸ்டேட் அதிபர். மேலும் பைனான்ஸ் தொழில் நடத்தி வந்ததுடன், செங்கல் சூளையும் வைத்திருந்தார். இவர் ஓசூர், தேன்கனிக்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மாலை தளி அருகே உள்ள என்.கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மோகன் என்பவரிடம் பணம் வாங்குவதற்காக கேசவன் மோட்டார்சைக்கிளில் வந்தார். தளி அருகே கே.மல்லசந்திரம் அருகில் அவர் சென்ற போது அவரை பின்தொடர்ந்து கார் ஒன்று வந்தது. திடீரென்று அந்த காரை ஓட்டி வந்தவர், கேசவன் ஓட்டி சென்ற மோட்டார்சைக்கிள் மீது மோதினார்.

    இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த கேசவனை காரில் இருந்து இறங்கிய 8 பேர் கொண்ட கும்பல் வீச்சரிவாளுடன் சரமாரியாக வெட்டியது. அவர்களிடம் இருந்து தப்பிக்க கேசவன் ஓடினார். ஆனாலும் அந்த கும்பல் விடாமல் தாங்கள் வைத்திருந்த வீச்சரிவாளால் கேசவனை ஓட, ஓட சரமாரியாக வெட்டியது. இதில் அவரது தலை, கழுத்து என உடலில் பல இடங்களில் சரமாரியாக வெட்டு விழுந்தது.

    இதில் கேசவன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். அவரை கொலை செய்ததும் அந்த கும்பல் தாங்கள் வந்த காரில் ஏறி தப்பி சென்றது.

    இது குறித்து தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொலை செய்யப்பட்ட கேசவனின் செல்போன் சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்டது. அதில் 'ஆசிட்' ஊற்றப்பட்டதால் உருகி போய் காணப்பட்டது. அந்த செல்போனையும் ஆய்வுக்காக போலீசார் எடுத்து சென்றுள்ளனர். குற்றவாளிகளை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • சென்னிமலை இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
    • சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே ஈங்கூரில் தனியாருக்கு சொந்தமான இரும்பு தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையின் அலுவலக பணியாளராக பெருந்துறையில் உள்ள பெத்தாம்பாளையம் ரோட்டை சேர்ந்த சத்தியமூர்த்தி (47) என்பவர் பணியாற்றி வருகிறார்.

    இந்த தொழிற்சாலையின் மற்றொரு கிளை அதே பகுதியான ஈங்கூர் பாலப்பா ளையம் அருகே இயங்கி வருகிறது. தினமும் காலை நேரத்தில் ஈங்கூர் தொழிற்சா லையில் இருந்து அலுவலக ஊழியர்கள் பால ப்பா ளையம் தொழிற்சாலைக்கு பணம் கொண்டு சென்று அங்கு பண பரிவர்த்தனை முடிந்த பிறகு மீண்டும் மாலையில் தொழிற்சா லைக்கு சென்று வருவது வழக்கம்.

    அதன்படி நேற்று முன்தினம் மாலையில் வழக்கம் போல் நிறுவ னத்தின் அலுவலக பணி யாளர் சத்தியமூர்த்தி பாலப்பாளையம் தொழி ற்சாலையில் பணப்பரி வர்த்தனை முடிந்த பின்னர் மீதி உள்ள ரூ.23 லட்சத்தை எடுத்துக்கொண்டு நிறுவனத்திற்கு சொந்தமான காரில் ஈங்கூர் தொழிற்சா லைக்கு கிளம்பி சென்றார்.

    பாலப்பாளையம் பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென எதிரே ஒரு காரில் 2 மர்ம நபர்கள் வந்தனர். அவர்களை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் மேலும் 2 பேர் வந்தனர். அவர்கள் சத்தியமூர்த்தி ஓட்டி சென்ற காரை வழிமறித்தனர். அனைவரும் சேர்ந்து சத்தியமூர்த்தியை அதே காரில் கடத்தி சென்றனர்.

    பின்னர் ரங்கம்பாளையம் குறிஞ்சி நகர் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் அருகே காரை நிறுத்தி சத்தியமூர்த்தியின் கை கால்களை கட்டி போட்டு ரூ.23 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற னர்.

    இதுகுறித்து சென்னி மலை போலீ சாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்து க்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொ ண்டனர்.

    போலீசார் முதற்கட்ட விசாரணையில் கொள்ளையர்கள் நன்கு திட்டம் போட்டு இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    அதாவது பணம் கொண்டு செல்லப்பட்டது நன்கு தெரிந்து தான் இந்த துணிகர கொலையில் ஈடுபட்டு ள்ளனர். எனவே இந்த நிறுவனத்திற்கு நன்கு பழக்கமானவர்கள் இதில் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.

    இந்நிலையில் குற்றவாளி களை கண்டுபிடிக்கும் வகையில் கொள்ளை நடந்த இடத்தின் அருகே பொரு த்தப்பட்டிரு க்கும் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    மேலும் குற்றவாளிகளைப் பிடிக்க சென்னிமலை இன்ஸ்பெ க்டர் சரவணன் தலைமை யில் தனிப்படை அமைக்க ப்பட்டுள்ளது. போலீசார் ஊழியர் சத்திய மூர்த்திடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையிலும் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். 

    • ஆடைகள் எதுவும் இல்லாமல், நிர்வாண நிலையில் கிடந்தார்.
    • கொலை செய்யப்பட்டவர் தொழிலாளி என தெரியவந்தது. ஆனால் அவர் எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை.

    பென்னாகரம்,

    தருமபுரி மாவட்டம், ஏரியூர் அருகே உள்ளது சந்தைப்பேட்டை கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் வனப்பகுதிக்கு விறகு சேகரிக்கவும், ஆடு மேய்க்கவும் செல்வது வழக்கம். அதன்படி நேற்று சிலர் வனப்பகுதிக்கு ஆடு மேய்க்க சென்றனர். அப்போது அங்கு தொழிலாளி ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு நிர்வாண நிலையில் கிடந்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், உடனடியாக ஏரியூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று, விசாரணை நடத்தினர்.

    மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதமும், சம்பவம் நடந்த பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    கொலை செய்யப்பட்ட நபர் 45 வயது மதிக்கத்தக்கவர் ஆவார். அவர் தலையில் கல்லை தூக்கி போட்டும், மர்ம உறுப்பை அறுத்தும் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடலில் ஆடைகள் எதுவும் இல்லாமல், நிர்வாண நிலையில் கிடந்தார்.

    மேலும் அங்கு ரத்தக்கறைகள் காய்ந்த நிலையில் இருந்தன. இதனால் அவர் நேற்று முன்தினம் கொலை செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    மர்ம உறுப்பை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதால் அவர் கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டி ருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    கொலை செய்யப்பட்டவர் தொழிலாளி என தெரியவந்தது. ஆனால் அவர் எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை.

    கொலை செய்யப்பட்டவர் யார்? என தெரிந்தால் தான், அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்ற விவரங்கள் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அவருடைய உடலை கைப்பற்றி தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து கொலையாளிகள் யார்?, கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

    மேலும் இந்த கொலை குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காவேரிப்பட்டணம் போலீசார் 341, 302, 506 (2) ஆகிய 3 பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்து தேடி வந்தனர்.
    • 2 பேரை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது.

    காவேரிப்பட்டணம்,

    கிருஷ்ணகிரி அருகே உள்ள கிட்டம்பட்டியை சேர்ந்தவர் சின்னபையன். இவருடைய மகன் ஜெகன் (வயது 28). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவரும், கிருஷ்ணகிரி மாவட்டம் அவதானப்பட்டி அருகே உள்ள முழுக்கான் கொட்டாய் கிராமத்தை சேர்ந்த சங்கரின் மகள் சரண்யா (21) என்பவரும் காதலித்து வந்தனர்.

    இந்த காதல் விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்தது. இருவரும் ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்களாக இருந்த போதிலும் பெண்ணின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மேலும் அவசரஅவசரமாக மகளுக்கு வரன் பார்த்து திருமண ஏற்பாடு செய்தனர். இதனால் ஜெகன், சரண்யாவை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார்.

    இதனால் சரண்யாவின் குடும்பத்தினர் அவருடன் பேசுவதை தவிர்த்து வந்தனர். ஒரு கட்டத்தில் ஜெகனை அவருடைய மாமனார் சங்கர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் கொன்று விட திட்டம் போட்டதாக தெரிகிறது.

    இந்த நிலையில் நேற்று மதியம் 2 மணி அளவில் புதுமாப்பிள்ளை ஜெகன் வேலைக்கு செல்வதற்காக மோட்டார்சைக்கிளில் புறப்பட்டார். தருமபுரி-கிருஷ்ணகிரி சாலையில் அணைரோடு மேம்பாலம் அருகே இணைப்பு சாலையில் (சர்வீஸ் ரோடு) ஜெகன் சென்று கொண்டு இருந்தார்.

    இதை அறிந்த சரண்யாவின் தந்தை சங்கர் மற்றும் உறவினர்கள் 2 பேர் அங்கு 2 மோட்டார் சைக்கிள்களில் வந்தனர். அவர்கள் ஜெகனை வழிமறித்து மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே தள்ளினர். பின்னர் அவர்கள் தாங்கள் வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக ஜெகனை வெட்டினர்.

    மேலும் அரிவாளால் அவரின் கழுத்தை அறுத்தனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். அவரை கொலை செய்ததும் சங்கர் மற்றும் அவரது உறவினர்கள் 2 மோட்டார்சைக்கிள்களில் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    ஜெகன் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்த கொலையை அந்த வழியாக சென்றவர்கள் தங்களின் செல்போன்களில் தூரமாக இருந்தவாறு படம்பிடித்தனர்.

    ஜெகனை ஒருவர் கால்களை பிடித்துக் கொள்ள, 2 பேர் சேர்ந்து சரமாரியாக அரிவாளால் வெட்டும் அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. பல்வேறு வாட்ஸ்-அப் குழுக்களிலும், சமூக வலைதளங்களிலும் இந்த வீடியோக்கள் பகிரப்பட்டு வருகின்றன.

    இந்த கொலை குறித்து தகவல் அறிந்த காவேரிப்பட்டணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    ஜெகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இந்த ஆணவக்கொலை தொடர்பாக ஜெகனின் மாமனார் சங்கர் மற்றும் அவரது உறவினர்கள் 2 பேர் மீது காவேரிப்பட்டணம் போலீசார் 341, 302, 506 (2) ஆகிய 3 பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்து தேடி வந்தனர்.

    போலீசார் ேதடுவதை அறிந்த சங்கர் (45) நேற்று இரவு கிருஷ்ணகிரி கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

    இதையடுத்து தலைமறைவான உறவினர்கள் 2 பேரை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது. குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    இதையடுத்து மாமனார் சங்கர், ஜெகனை கொலை செய்து விட்டு நேரடியாக கோர்ட்டில் சரண் அடைந்துள்ளார். அதனால் கொலை குறித்த தகவல்களை சேகரிக்க அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளோம். அதற்காக இன்னும் ஒரிரு நாட்களில் கோர்ட்டில் மனுதாக்கல் செய்ய உள்ளோம் என போலீசார் தெரிவித்தனர்.

    ×