என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணகிரி அருகே ெதாழிலாளி ஆணவ கொலை: குற்றவாளிகளை பிடிக்க 2 தனிப்படை அமைப்பு
- காவேரிப்பட்டணம் போலீசார் 341, 302, 506 (2) ஆகிய 3 பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்து தேடி வந்தனர்.
- 2 பேரை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது.
காவேரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி அருகே உள்ள கிட்டம்பட்டியை சேர்ந்தவர் சின்னபையன். இவருடைய மகன் ஜெகன் (வயது 28). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவரும், கிருஷ்ணகிரி மாவட்டம் அவதானப்பட்டி அருகே உள்ள முழுக்கான் கொட்டாய் கிராமத்தை சேர்ந்த சங்கரின் மகள் சரண்யா (21) என்பவரும் காதலித்து வந்தனர்.
இந்த காதல் விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்தது. இருவரும் ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்களாக இருந்த போதிலும் பெண்ணின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் அவசரஅவசரமாக மகளுக்கு வரன் பார்த்து திருமண ஏற்பாடு செய்தனர். இதனால் ஜெகன், சரண்யாவை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார்.
இதனால் சரண்யாவின் குடும்பத்தினர் அவருடன் பேசுவதை தவிர்த்து வந்தனர். ஒரு கட்டத்தில் ஜெகனை அவருடைய மாமனார் சங்கர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் கொன்று விட திட்டம் போட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று மதியம் 2 மணி அளவில் புதுமாப்பிள்ளை ஜெகன் வேலைக்கு செல்வதற்காக மோட்டார்சைக்கிளில் புறப்பட்டார். தருமபுரி-கிருஷ்ணகிரி சாலையில் அணைரோடு மேம்பாலம் அருகே இணைப்பு சாலையில் (சர்வீஸ் ரோடு) ஜெகன் சென்று கொண்டு இருந்தார்.
இதை அறிந்த சரண்யாவின் தந்தை சங்கர் மற்றும் உறவினர்கள் 2 பேர் அங்கு 2 மோட்டார் சைக்கிள்களில் வந்தனர். அவர்கள் ஜெகனை வழிமறித்து மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே தள்ளினர். பின்னர் அவர்கள் தாங்கள் வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக ஜெகனை வெட்டினர்.
மேலும் அரிவாளால் அவரின் கழுத்தை அறுத்தனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். அவரை கொலை செய்ததும் சங்கர் மற்றும் அவரது உறவினர்கள் 2 மோட்டார்சைக்கிள்களில் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
ஜெகன் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த கொலையை அந்த வழியாக சென்றவர்கள் தங்களின் செல்போன்களில் தூரமாக இருந்தவாறு படம்பிடித்தனர்.
ஜெகனை ஒருவர் கால்களை பிடித்துக் கொள்ள, 2 பேர் சேர்ந்து சரமாரியாக அரிவாளால் வெட்டும் அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. பல்வேறு வாட்ஸ்-அப் குழுக்களிலும், சமூக வலைதளங்களிலும் இந்த வீடியோக்கள் பகிரப்பட்டு வருகின்றன.
இந்த கொலை குறித்து தகவல் அறிந்த காவேரிப்பட்டணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
ஜெகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த ஆணவக்கொலை தொடர்பாக ஜெகனின் மாமனார் சங்கர் மற்றும் அவரது உறவினர்கள் 2 பேர் மீது காவேரிப்பட்டணம் போலீசார் 341, 302, 506 (2) ஆகிய 3 பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்து தேடி வந்தனர்.
போலீசார் ேதடுவதை அறிந்த சங்கர் (45) நேற்று இரவு கிருஷ்ணகிரி கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.
இதையடுத்து தலைமறைவான உறவினர்கள் 2 பேரை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது. குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையடுத்து மாமனார் சங்கர், ஜெகனை கொலை செய்து விட்டு நேரடியாக கோர்ட்டில் சரண் அடைந்துள்ளார். அதனால் கொலை குறித்த தகவல்களை சேகரிக்க அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளோம். அதற்காக இன்னும் ஒரிரு நாட்களில் கோர்ட்டில் மனுதாக்கல் செய்ய உள்ளோம் என போலீசார் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்