என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஏரியூர் தொழிலாளி கொடூரக்கொலை: குற்றாவாளிகளை பிடிக்க தனிப்படை அமைப்பு
- ஆடைகள் எதுவும் இல்லாமல், நிர்வாண நிலையில் கிடந்தார்.
- கொலை செய்யப்பட்டவர் தொழிலாளி என தெரியவந்தது. ஆனால் அவர் எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை.
பென்னாகரம்,
தருமபுரி மாவட்டம், ஏரியூர் அருகே உள்ளது சந்தைப்பேட்டை கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் வனப்பகுதிக்கு விறகு சேகரிக்கவும், ஆடு மேய்க்கவும் செல்வது வழக்கம். அதன்படி நேற்று சிலர் வனப்பகுதிக்கு ஆடு மேய்க்க சென்றனர். அப்போது அங்கு தொழிலாளி ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு நிர்வாண நிலையில் கிடந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், உடனடியாக ஏரியூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று, விசாரணை நடத்தினர்.
மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதமும், சம்பவம் நடந்த பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
கொலை செய்யப்பட்ட நபர் 45 வயது மதிக்கத்தக்கவர் ஆவார். அவர் தலையில் கல்லை தூக்கி போட்டும், மர்ம உறுப்பை அறுத்தும் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடலில் ஆடைகள் எதுவும் இல்லாமல், நிர்வாண நிலையில் கிடந்தார்.
மேலும் அங்கு ரத்தக்கறைகள் காய்ந்த நிலையில் இருந்தன. இதனால் அவர் நேற்று முன்தினம் கொலை செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
மர்ம உறுப்பை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதால் அவர் கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டி ருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
கொலை செய்யப்பட்டவர் தொழிலாளி என தெரியவந்தது. ஆனால் அவர் எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை.
கொலை செய்யப்பட்டவர் யார்? என தெரிந்தால் தான், அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்ற விவரங்கள் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அவருடைய உடலை கைப்பற்றி தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து கொலையாளிகள் யார்?, கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
மேலும் இந்த கொலை குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்