search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "investigation"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ளது.
    • பாதிக்கப்பட்ட பெண்கள் அச்சமின்றி புகார் செய்யலாம்.

    பெங்களூர்:

    கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளியானதால் அவர் ஜெர்மனிக்கு தப்பி சென்றார். இதையடுத்து அவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்த ஆபாச வீடியோக்கள் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் எஸ்.ஐ.டி போலீசார் ஆபாச வீடியோவில் இருக்கும் பெண்களை அடையாளம் கண்டு அவர்களிடம் வாக்குமூலம் பெற நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதற்கிடையே எஸ்.ஐ.டி. குழுவில் இடம்பெற்றுள்ள மைசூரு போலீஸ் சூப்பிரண்டு சீமாலட்கர் தலைமையிலான போலீசார் ஹோலே நரசிப்பூர் தாலுகாவில் பல்வேறு இடங்களுக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    தொடர்ந்து படுவலஹிப்பே கிராமத்தில் உள்ள ரேவண்ணாவுக்கு சொந்தமான பண்ணை வீட்டிற்கு சென்று அங்கு இருந்த தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தி சில தகவல்களை சேகரித்தனர்.

    மேலும் ஆபாச வீடியோ எடுத்ததாக கூறப்படும் கன்னிகடா மற்றும் கமேன ஹள்ளி அருகே உள்ள மற்ற 2 பண்ணை வீடுகளுக்கும் சென்று எஸ்.ஐ.டி. போலீசார் அங்கும் விசார ணை மேற்கொண்டனர். ஆபாச வீடியோவில் உள்ள இடமும், இதுவும் ஒன்றா என்றும் விசாரணை நடத்தினர்.

    அங்கிருந்த ஊழியர்களிடம் சிலரின் போட்டோக்களை காட்டி எஸ்.ஐ.டி. போலீசார் இவர்களை பார்த்து உள்ளீர்களா என்று கேட்டனர். அதற்கு ஊழியர்கள் இல்லை என்று பதில் அளித்தனர்.

    பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு லுக்அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கு தொடர்பாக அமைக்கப்பட்ட சிறப்பு குழுவினரும், பிரஜ்வாலுக்கு எதிரான பல்வேறு ஆதாரங்களை திரட்டி வருகிறார்கள். மேலும் பாதிக்கப்பட்ட பெண்கள் அச்சமின்றி புகார் செய்யலாம் என்றும், அவர்களின் பெயர், விபரம் ரகசியமாக வைக்கப்படும் என்று சிறப்பு குழுவினர் அறிவித்து உள்ளனர்.

    • உடனடியாக பணம் கொண்டு வந்த 2 வாலிபர்களையும் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
    • வாலிபர்கள் கொண்டு வந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் வாலிபர்களை கைது செய்தனர்.

    தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் இருந்து நெல்லூருக்கு வந்தே பாரத் ரெயில் நேற்று இரவு வந்து கொண்டிருந்தது. ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ரெயில் பெட்டிகளில் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர்.

    2 வாலிபர்கள் வைத்திருந்த சூட்கேஸை போலீசார் சோதனை செய்தபோது அதில் கட்டு கட்டாக பணம் இருந்தது. உடனடியாக பணம் கொண்டு வந்த 2 வாலிபர்களையும் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். பணத்தை எண்ணிப் பார்த்ததில் ரூ.50 லட்சம் கொண்டு வந்தது தெரிய வந்தது.

    விசாரணையில் ஆந்திர மாநிலம் ஆத்மகூரு சட்டமன்றத் தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் எம்.எல்.ஏ. வேட்பாளராக போட்டியிடும் மேகவதி விக்ரம் ரெட்டிக்கு சொந்தமான பணம் என தெரிவித்தனர்.

    இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். வருமானவரித்துறை அதிகாரிகள் போலீஸ் நிலையத்திற்கு வந்து ரூ.50 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

    வாலிபர்கள் கொண்டு வந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் வாலிபர்களை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிறுவன் ஆகாஷ் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தான்.
    • போலீசார் வழக்குப்பதிந்து விபத்துக்கு காரணமான இரண்டு லாரிகளின் டிரைவர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரளா மாநிலம் காசர்கோடு மாவட்டம் சூரிக் காடு பீமநதி பகுதியை சேர்ந்தவர் சுதாகரன்(வயது 52). இவரது மனைவி அஜிதா(35). இவர்களுக்கு சவுரவ் என்ற மகன் இருக்கிறார். சவுரவ் கோழிக்கோட்டில் சி.ஏ படிப்பதற்கு, அங்குள்ள கல்லூரி ஒன்றில் சேர்ந்துள்ளார்.

    அவரை விடுதியில் விட்டுவிட்டு வருவதற்காக சுதாகரன், அவரது மனைவி, மாமனார் கிருஷ்ணன் (65) மற்றும் மனைவியின் அண்ணன் மகன் ஆகாஷ்(9) ஆகியோர் காரில் தலச்சேரியில் இருந்து காசர்கோடு நோக்கி சென்றனர்.

    காரை காசர்கோடு மாவட்டம் காளிச்சநடுக்கம் சாஸ்தம்பாறை பகுதியைச் சேர்ந்த பத்மகுமார் 59 என்பவர் ஓட்டிச் சென்றார். சவுரவ்வை விடுதியில் விட்டுவிட்டு சுதாகரன் உள்ளிட்ட மற்றவர்கள் காரில் திரும்பி வந்தனர். அவர்களது கார் கண்ணூர் செருக்குன்னு அருகே உள்ள புன்னச்சேரி பகுதியில் நேற்று இரவு வந்து கொண்டிருந்தது.

    அப்போது அவர்களுக்கு பின்னால் வந்த ஒரு லாரி, காரின் மீது மோதியதாக தெரிகிறது. இதனால் அவர்களது கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே கியாஸ் சிலிண்டர்கள் ஏற்றிக்கொண்டு வந்த லாரி மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் அவர்களது கார், லாரியின் முன்பதிக்குள் புகுந்தது.

    காருக்குள் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். இந்த கோரவிபத்து குறித்து கண்ணபுரம் போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    முதலில் அவர்கள் லாரிக்குள் சிக்கியிருந்த காரை வெளியே எடுத்தனர். பின்பு காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்தவர்களை மீட்டனர். அப்போது காரில் இருந்த சுதாகரன், அவரது மனைவி அஜிதா, மாமனார் கிருஷ்ணன், டிரைவர் பத்மகுமார் ஆகிய 4பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசங்கி பலியாகியிருப்பது தெரியவந்தது.


    மேலும் அந்த காரில் இருந்த சிறுவன் ஆகாஷ் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தான். அவனை போலீசார் மீட்டு பரியாரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரும் வழியிலேயே சிறுவன் பரிதாபமாக இறந்துவிட்டான். இதனால் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. காரில் இருந்த டிரைவர் உள்ளிட்ட 5பேருமே விபத்தில் பலியாகிவிட்டனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விபத்துக்கு காரணமான இரண்டு லாரிகளின் டிரைவர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோர விபத்தில் சிறுவன் உள்பட 5பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

    • சைபர் குற்றப்பிரிவு போலீசார் மோசடி செய்தவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க தொழில் நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டனர்.
    • தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண். 5-ல் ஆஜர்படுத்தி தூத்துக்குடி பேரூரணி சிறையில் அடைத்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு ஐ.எம்.ஓ. என்ற செயலி மூலமாக சொக்கநாதன் என்ற முகவரியில் இருந்து தொடர்பு கொண்டு ஒருவர் பேசினார்.

    அவர், மதம் மாறினால் ரூ.10 கோடி தருவதாக கூறி அதற்காக அமெரிக்காவில் வங்கி கணக்கு தொடங்க, வருமானவரி செலுத்த உள்ளிட்ட காரணங்களுக்காக பணம் கேட்டு உள்ளார்.

    அதனை நம்பிய இளைஞர் ரூ. 4 லட்சம் 88 ஆயிரத்து 159 பணத்தை 'ஜிபே' மூலம் அனுப்பி உள்ளார்.

    பின்னர் தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த இளைஞர் இதுகுறித்து தேசிய குற்ற ஆவண காப்பகத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்படி சைபர் குற்றப்பிரிவு போலீஸ் கூடுதல் கண்காணிப்பாளர் உன்னிகிருஷ்ணன் மேற்பார்வையில் சைபர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜோஸ்லின் அருள் செல்வி தலைமையிலான சைபர் குற்றப்பிரிவு போலீசார் மோசடி செய்தவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க தொழில் நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டனர்.

    இதில் தஞ்சாவூர் ரெட்டி பாளையம் ரோடு, ஆனந்தம் நகர் பகுதியை சேர்ந்த மீனாட்சி சுந்தரம் மகன் ராஜவேல் (வயது31) என்பவர், பாதிக்கப்பட்ட இளைஞரிடம் பண மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    இதனையடுத்து போலீசார் தஞ்சாவூர் சென்று ராஜவேலை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை தூத்துக்குடி அழைத்து வந்து தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண். 5-ல் ஆஜர்படுத்தி தூத்துக்குடி பேரூரணி சிறையில் அடைத்தனர்.

    மேலும் இதுகுறித்து சைபர் குற்றப்பிரிவு போலீ சார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சோதனை செய்யக் கூடிய பகுதிக்கு அருகில் இருந்த ஒரு குப்பை தொட்டியை சுத்தம் செய்த போது அதில் ஒரு பார்சல் இருந்தது.
    • 1,200 கிராம் எடை உள்ள தங்க கட்டிகளின் மதிப்பு ரூ.75 லட்சம் என கணக்கிடப்பட்டது.

    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தில் நள்ளிரவு முதல் அதிகாலை வரையில் அதிகளவில் விமானங்கள் வருவது வழக்கம். வெளிநாடுகளில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான பயணிகளின் உடமைகள், பாஸ்போர்ட் போன்றவற்றை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்வார்கள்.

    பரபரப்பாக காணப்படும் விமான நிலையத்தில் நேற்றிரவு தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்து கொண்டிருந்தனர். சோதனை செய்யக் கூடிய பகுதிக்கு அருகில் இருந்த ஒரு குப்பை தொட்டியை சுத்தம் செய்த போது அதில் ஒரு பார்சல் இருந்தது. அதனை எடுத்த ஊழியர் ஒருவர் அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

    பின்னர் இதுபற்றி சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் அந்த பார்சலை பிரித்து பார்த்த போது அதில் தங்க கட்டிகள் இருந்தன. 1,200 கிராம் எடை உள்ள தங்க கட்டிகளின் மதிப்பு ரூ.75 லட்சம் என கணக்கிடப்பட்டது.

    வெளிநாட்டில் இருந்து கொண்டு வந்த பயணி யாரோ ஒருவர் பரிசோதனையின் போது சிக்கி கொள்வோம் என பயந்து குப்பை தொட்டியில் போட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது.

    இதையடுத்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் உள்ள பதிவினை ஆய்வு செய்தனர். அதில் முகம் தெளிவாக தெரியவில்லை. அதனை தொடர்ந்து மற்ற கோணங்களில் பதிவான கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

    • டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 21-ந்தேதி கைது செய்யப்பட்டார்
    • கெஜ்ரிவால் கடந்த 10-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். மேல் முறையீடு மனுவை முன்கூட்டியே விசாரிக்க வேண்டும் என்று கெஜ்ரிவால் தரப்பில் முறையிடப்பட்டது

    டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக ஆம்ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 21-ந்தேதி கைது செய்யப்பட்டார். அவரது நீதிமன்ற காவல் இன்று (ஏப்ரல் 15) வரை நீடிக்கப்பட்டுள்ளது.

    திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கெஜ்ரிவால் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை கோர்ட்டு கடந்த 9-ந்தேதி தள்ளுபடி செய்தது.

    மேலும் கைது நடவடிக்கையில் சட்ட விதிகள் எதுவும் மீறப்படவில்லை என்றும், உரிய காரணங்களின் அடிப்படையில் தான் விசாரணை நீதிமன்றம் அமலாக்கத் துறை காவலுக்கு உத்தரவிட்டதாகவும் டெல்லி ஐகோர்ட்டு தெரிவித்தது.

    கைது செய்யப்பட்டதை உறுதி செய்த டெல்லி ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 10-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். மேல் முறையீடு மனுவை முன்கூட்டியே விசாரிக்க வேண்டும் என்று கெஜ்ரிவால் தரப்பில் முறையிடப்பட்டது.

    இந்த நிலையில் கெஜ்ரிவாலின் மனுவை இன்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனுசிங்வி, தற்போது இந்த கைது காரணமாக கேஜ்ரிவாலால் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட முடியவில்லை. ஆகவே விரைவாக இவ்வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும். குறிப்பாக வரும் 19-ம் தேதி இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்து கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

    இந்த கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம், கைதுக்கு எதிராக கெஜ்ரிவால் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு தொடர்பாக பதில் அளிக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டு இவ்வழக்கை ஏப்ரல் 29-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

    இந்நிலையில், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவலை ஏப்ரல் 23ம் தேதி வரை நீட்டித்து ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    • டெல்லி ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 10-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார்.
    • சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி மின்னஞ்சல் அனுப்புமாறு கெஜ்ரிவால் வக்கீல் அபிஷேக் சிங்வியுடன் கூறினார்.

    புதுடெல்லி:

    டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக ஆம்ஆத்மி ஒருங்கினைப்பாளரும், டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 21-ந்தேதி கைது செய்யப்பட்டார். அவரது நீதிமன்ற காவல் இன்று (ஏப்ரல் 15) வரை நீடிக்கப்பட்டுள்ளது.

    திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கெஜ்ரிவால் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை கோர்ட்டு கடந்த 9-ந்தேதி தள்ளுபடி செய்தது.

    மேலும் கைது நடவடிக்கையில் சட்ட விதிகள் எதுவும் மீறப்படவில்லை என்றும், உரிய காரணங்களின் அடிப்படையில் தான் விசாரணை நீதிமன்றம் அமலாக்கத் துறை காவலுக்கு உத்தரவிட்டதாகவும் டெல்லி ஐகோர்ட்டு தெரிவித்தது.

    கைது செய்யப்பட்டதை உறுதி செய்த டெல்லி ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 10-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். மேல் முறையீடு மனுவை முன்கூட்டியே விசாரிக்க வேண்டும் என்று கெஜ்ரிவால் தரப்பில் முறையிடப்பட்டது.

    இதை ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி மின்னஞ்சல் அனுப்புமாறு கெஜ்ரிவால் வக்கீல் அபிஷேக் சிங்வியுடன் கூறினார்.

    இந்த நிலையில் கெஜ்ரிவாலின் அப்பீல் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது.

    • வீட்டின் பூஜையறையில் டிராவல் பேக்கில் ரூ. 500 நோட்டுகள் கட்டு கட்டாக இருந்ததை கண்டனர்.
    • சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஒன்றரை மணி நேரமாக அந்த பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

    திருச்சி:

    பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுப்பதற்காக தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் வாகன சோதனைகள் நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள எட்டரை பகுதியைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் திவ்யா அன்பரசுவின் கணவர் அன்பரசு தனது காரில் கட்டு கட்டாக பணம் கொண்டு செல்வதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து ஜீயபுரம் துணை போலீஸ் பிரண்டு பாலசந்தர் தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் அந்தக் கார் எட்டறையில் உள்ள அவரது வீட்டுக்கு சென்ற அடுத்த சில நிமிடங்களில் அதிரடியாக வீட்டுக்குள் புகுந்து சோதனை நடத்தினர். அப்போது வீட்டின் பூஜையறையில் டிராவல் பேக்கில் ரூ. 500 நோட்டுகள் கட்டு கட்டாக இருந்ததை கண்டனர்.

    உடனே இது குறித்து வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் 5 பேர் கொண்ட வருமானத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஒன்றரை மணி நேரமாக அந்த பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இது ரூ.1 கோடி அளவுக்கு இருக்கும் என கூறப்பட்டது.

    பின்னர் அந்த பணத்தை வருமானவரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் அதன் பின்னர் ஊராட்சி மன்ற தலைவர் திவ்யா அன்பரசுவை விசாரணைக்காக அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனை அறிந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் ஊராட்சி மன்ற தலைவர் வீட்டு முன்பும் விசாரணைக்கு அழைத்துச் சென்ற முசிறி காவல் நிலையம் முன்பும் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் அன்பரசு அ.தி.மு.க. பிரமுகர் ஆவார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விசாரணையில் டெல்லி மதுபான கொள்கை வழக்கில் ரூ.100 கோடி வரை ஊழல் நடந்தது ஊர்ஜிதமாகி உள்ளது.
    • கவிதாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்த போவதாக சி.பி.ஐ. அறிவித்துள்ளது.'

    திருப்பதி:

    தெலுங்கானா மாநில முன்னாள் முதல் மந்திரி சந்திரசேகர ராவின் மகள் கவிதா டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டார். அவர் திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    கவிதா இடைக்கால ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். அதை கோர்ட்டு தள்ளுபடி செய்தது. சி.பி.ஐ. அதிகாரிகளும் இந்த வழக்கை விசாரித்து வருவதால் அவர்களும் கடந்த 6-ந் தேதி திகார் ஜெயிலில் இருக்கும் கவிதாவை சிறையிலேயே விசாரணை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இதற்கு கோர்ட்டு அனுமதி வழங்கியது.

    இதனைத் தொடர்ந்து ஒரு பெண் போலீஸ் மற்றும் கவிதாவின் வக்கீல் முன்னிலையில் திகார் ஜெயிலில் கவிதாவிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    இந்த விசாரணையில் டெல்லி மதுபான கொள்கை வழக்கில் ரூ.100 கோடி வரை ஊழல் நடந்தது ஊர்ஜிதமாகி உள்ளது.

    இதைத் தொடர்ந்து கவிதாவை ஜெயிலிலேயே சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். கவிதாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்த போவதாக சி.பி.ஐ. அறிவித்துள்ளது.

    • தங்க கட்டிகளை நடுக்கடலில் வீசுவதும், பின்னர் பல நாட்கள் போராடி போலீசார் அதனை மீட்பதும் தொடர்கதையாக உள்ளது.
    • கடலில் குறிப்பிட்ட இடத்தில் நேற்று நீச்சல் தெரிந்த கடலோர போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டத் தில் இருந்து அண்டை நாடான இலங்கை கடல் வழியாக 30 மைல் தொலைவில் உள்ளது. இதன் காரணமாக இருநாட்டில் இருந்தும் சமூகவிரோதிகள் படகு மூலம் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள், தங்கம், மஞ்சள், மருந்துகள், பீடி இலைகள் போன்றவற்றை சட்ட விரோதமாக கடத்துவது அடிக்கடி நடந்து வருகிறது.

    இதனை தடுக்க கடலோர காவல் படையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அண்மைக் காலமாக இலங்கையில் இருந்து தங்க கட்டிகள் கடத்தும் சம்பவம் அதிகரித்துள்ளது. தங்க கடத்தல் குறித்து தகவல் அறிந்து உடனே கடலோர காவல் படை போலீசாரும் நடுக்கடலிலேயே கடத்தல்காரர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கின்றனர். ஆனால் போலீசாரை கண்டதும் கடத்தல்காரர்கள் தாங்கள் கொண்டுவரும் தங்க கட்டிகளை நடுக்கடலில் வீசுவதும், பின்னர் பல நாட்கள் போராடி போலீசார் அதனை மீட்பதும் தொடர்கதையாக உள்ளது.

    இந்நிலையில் இலங்கையில் இருந்து ஒரு படகு மூலமாக ராமேசுவரத்துக்கு தங்கம் கடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே கடலோர போலீசார் ரோந்து கப்பலில் மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு சென்றனர். அப்போது மண்டபத்திற்கும், வேதாளைக்கும் இடையே ஒரு படகு சந்தேகத்திற்கிடமாக சென்றது. உடனே கடலோர போலீசார் அந்த படகை துரத்தி சென்று பிடிக்க முயன்றனர். இதை பார்தத கடலில் இருந்த கடத்தல்காரர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த தங்க கட்டிகளை கடலில் வீசியதாக தெரிகிறது. இந்த நிலையில் நடுக்கடலில் படகை மறித்த போலீசார் அதில் இருந்த 3 பேரை பிடித்து கரைக்கு கொண்டு வந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது தங்கம் கடலில் வீசியது தெரியவந்தது. ஆனால் அதன் அளவு எவ்வளவு என்பது தெரியவில்லை.

    கடத்தல்காரர்கள் கொடுத்த தகவலின்பேரில் கடலில் குறிப்பிட்ட இடத்தில் நேற்று நீச்சல் தெரிந்த கடலோர போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பல மணிநேரம் நடைபெற்ற தேடுதலில் எதுவும் கிடைக்கவில்லை. இதையடுத்து மாலையில் தேடும் பணி கைவிட்ட போலீசார் இன்று காலை அந்த பகுதியில் நீச்சல் வீரர்கள், கடலில் மூழ்கும் பயிற்சி பெற்ற ஸ்கூபா டை வீரர்கள் மற்றும் உள்ளூர் மீனவர்கள் மூலம் கடலில் குதித்து 2 நாளாக தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    கடலில் வீசப்பட்ட தங்க கட்டிகள் மதிப்பு எவ்வளவு? யாருக்காக தங்கம் கடத்தி வரப்பட்டது? மூளையாக செயல்பட்டது யார்? என பல்வேறு கோணங்களில் மத்திய வருவாய்துறை அதிகாரிகள், கடலோர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தர்மபுரியில் நடந்த அ.தி.மு.க. பொதுக்கூட்டத்திற்கு கலந்து கொள்வதற்காக விநாயக சரவணன் என்பவர் காரில் வந்தனர்.
    • விபத்து குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கடத்தூர்:

    கடத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ரத்தினம் பிள்ளை தெருவை சேர்ந்தவர் ராமன் (வயது 67). அ.தி.மு.க.வின் முன்னாள் அவை தலைவரான இவரும் கடத்தூரைச் சேர்ந்த விநாயகர் சரவணன் மற்றும் அ.தி.மு.க. கட்சியினர் சிலரும் தர்மபுரியில் நடந்த அ.தி.மு.க. பொதுக்கூட்டத்திற்கு கலந்து கொள்வதற்காக விநாயக சரவணன் என்பவர் காரில் வந்தனர். பின்னர் அவர்கள் கூட்டம் முடிந்து விடு திரும்பினர்.

    அப்போது மணியம்பாடி அருகே சாலை ஓரமாக காரை நிறுத்திவிட்டு இறங்கி பேசிக் கொண்டிருந்தனர்.

    அப்பொழுது அவ் வழியாக வந்த தனியார் பஸ் காரின் மீது மோதியதில் காரின் அருகில் நின்றிருந்த ராமன் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இந்த விபத்து குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • நில பிரச்சினை சம்பந்தமாக பழங்குடியினர் இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது.
    • இன்ஸ்பெக்டரை குறிவைத்து பழங்குடியின வாலிபர்கள் சிலர் தாக்கி கொண்டே இருந்தனர்.

    தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் சத்துப்பள்ளி மண்டலம் ராய பாலம் கிராமத்தில் பழங்குடியினர்கள் வசித்து வருகின்றனர்.

    நில பிரச்சினை சம்பந்தமாக பழங்குடியினர் இரு தரப்பினர் இடையே நேற்று தகராறு ஏற்பட்டது.

    இதனை அறிந்த சத்து பள்ளி போலீசார் பழங்குடியினருக்கு இடையே ஏற்பட்ட மோதலை தடுக்க அங்கு வந்தனர். இரு தரப்பினரையும் ஒருங்கிணைத்து பிரச்சினைக்கு தீர்வு காண முயன்றனர்.

    அப்போது ஆத்திரம் அடைந்த பழங்குடியினரின் ஒரு தரப்பினர் கம்புகளால் போலீசாரை தாக்கினர். அதிலும் குறிப்பாக இன்ஸ்பெக்டர் ஒருவரை பைக்கில் இருந்து கீழே இழுத்து தள்ளினர். அவரை கம்பு மற்றும் கைகளால் புரட்டி எடுத்தனர். அங்கிருந்த போலீசாரால் இதை தடுக்க முடியவில்லை.

    இன்ஸ்பெக்டரை குறிவைத்து பழங்குடியின வாலிபர்கள் சிலர் தாக்கி கொண்டே இருந்தனர்.

    இதனால் போலீசார் இன்ஸ்பெக்டரை மீட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதில் இன்ஸ்பெக்டர் உட்பட மேலும் சில போலீசார் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பழங்குடியினர் குறிப்பாக ஒரு இன்ஸ்பெக்டரை மட்டும் குறிவைத்து அதிக அளவில் தாக்கியது ஏன் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்ல. இன்ஸ்பெக்டரை குறி வைத்து தாக்கியதில் சதி செயல் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்ஸ்பெக்டரை பழங்குடியினர் விரட்டி தாக்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    ×