என் மலர்
நீங்கள் தேடியது "Car accident"
திருச்செந்தூர் மணல்மேடு பகுதியை சேர்ந்தவர் சந்தனகுமார் (வயது 55). இவர் உடன்குடியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணி செய்து வருகிறார்.
நேற்று இரவு சுமார் 9 மணி அளவில் திருச்செந்தூரில் இருந்து உடன்குடி வழியாக சாத்தான்குளத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது உடன்குடியில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு சென்ற தனியார் ஆம்னி பஸ் உடன்குடி அருகே வந்த போது சந்தனகுமார் மீது மோதியது. இதில் சந்தனகுமார் சம்பவ இடத்திலேயே பலியானார்.
பலியான சந்தன குமாரின் மனைவி ரவிகலா குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் நிலம் கையகப்படுத்தும் தாசில்தாராக பணி செய்து வருகிறார்.
இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இதுசம்பந்தமாக குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
தனியார் பஸ்சை ஓட்டி வந்த சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த டிரைவர் செந்தில்குமார்(38) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சங்கரன்கோவில் அருகே உள்ள கரும்பாட்டூரை சேர்ந்தவர் ராஜசேகரன் (வயது 30). சங்கரன்கோவில் என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் முகேஷ் (46). இவர்கள் 2 பேரும் காரில் நெல்லைக்கு பொருட்கள் வாங்க வந்தனர். பின்னர் மீண்டும் அவர்கள் ஊருக்கு புறப்பட்டனர்.
சுந்தரபாண்டியபுரத்தை சேர்ந்த வசந்தகுமார் (22), லீசா (23), ரோஷ்லின் (55), செல்வம் (40), திரவியம் (43), எலிசபெத் (65) ஆகிய 6 பேரும் தங்களது காரில் நெல்லைக்கு புறப்பட்டனர்.
இவர்கள் நேற்று நள்ளிரவு நெல்லை அருகே உள்ள அழகியபாண்டியபுரத்தில் வந்த போது 2 காரும் நேருக்கு நேர் மோதி கொன்டன.
இதில் பலத்த காயமடைந்த 8 பேரையும் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே முகேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 7 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
இது தொடர்பாக மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
- 10 மணி நேரத்திற்கு மேல் மின் தடை
ராணிப்பேட்டை:
ஆந்திர மாநிலம், சித்தூர் பகுதியை சேர்ந்தவர் திருக்குமரன் (50). இவர் குடும்பத்தினருடன் காரில் சென்னை வந்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தார்.
காரை அவரே ஓட்டிச்சென்றார். ராணிப்பேட்டை எம்.பி.டி சாலையில் நவல்பூர் அருகே சென்றபோது திடீரென நிலை தடுமாறிய கார் சாலையோரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதியது.
இதில் மின் கம்பம் சேதம் அடைந்து, காரின் மீது உடைந்து விழுந்தது. நல்லவேளையாக காரை ஓட்டி சென்ற திருக்கும ரன், மற்றும் அதில் பயணம் செய்த அவரது மனைவி, மகன், மகள் ஆகியோர் தப்பினர்.
மின் கம்பம் உடைந்து விழுந்ததில், மின்சாரம் தடை ஏற் பட்டது. சுமார் 10 மணி நேரத்திற்கு மேல் மின் தடை நீடித்தது. மின் ஊழியர்கள் கடுமையாக முயற்சி எடுத்து மின் வினியோகம் வழங்கும் பணியில் ஈடுபட்டனர்.
- சாலையை கடக்க முயன்ற போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
வாலாஜா:
வாலாஜாபேட்டை பகுதியை சேர்ந்தவர் பூபதி (வயது 60) பால் வியாபாரி. இவர் நேற்று தேனீர் அருந்திவிட்டு சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் பூபதி மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த வாலாஜா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உளுந்தூர்பேட்டை அருகே பு.மாம்பாக்கம் ரெயில்வே மேம்பாலத்தில் இன்று அதிகாலை 2 மணி அளவில் கார் வந்து கொண்டிருந்தது.
- கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடி மேம்பாலத்தில் தடுப்பு கட்டையில் மோதி 20 அடி பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது.
உளுந்தூர்பேட்டை:
சென்னை ராயப்பேட்டையை சேர்ந்தவர் உஷேன் அவரது மனைவி ஷமீம் (வயது 50). இவர் தனது மகன் அம்ரீன் (22), உறவினர் மகன் சுபேதா (21), உறவினர் நசீம் ஆகியோருடன் திருச்சியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
நேற்று இரவு அவர்கள் சென்னை நோக்கி காரில் புறப்பட்டனர். இந்த காரை சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த டிரைவர் ஏஜாஷ் ஓட்டினார்.
இந்த கார் இன்று அதிகாலை 2 மணி அளவில் உளுந்தூர்பேட்டை அருகே பு.மாம்பாக்கம் ரெயில்வே மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தது.
அப்போது கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. தறிகெட்டு ஓடிய அந்த கார் மேம்பாலத்தில் தடுப்பு கட்டையில் மோதி 20 அடி பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஷமீம், அம்ரீன், சுபேதா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள்.
இவர்கள் தவிர கார் டிரைவர் ஏஜாஷ், நசீம் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் வலியால் துடித்தனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடிவந்தனர். தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன், சப்-இன்ஸ்பெக்டர் அருள் செல்வம், ஏட்டு சரவணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
விபத்தில் பலியான 3 பேர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். விபத்தில் காயம் அடைந்த 2 பேரும் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
விபத்து குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஜெலன்ஸ்கிக்கு உடலில் எந்த இடங்களில் காயங்கள் ஏற்பட்டது என்ற எந்த விவரம் வெளியிடவில்லை.
- கார் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உக்ரைன் மீது ரஷிய படைகள் நடத்தி வரும் தாக்குதலில் பல நகரங்கள் சின்னாபின்னமாகிவிட்டது. இந்த போர் மூலம் ரஷிய படைகள் கைப்பற்றிய சில நகரங்களை உக்ரைன் மீண்டும் மீட்டுள்ளது.
இதையடுத்து மீட்கப்பட்ட உக்ரைன் வடக்கு பிராந்தியத்தில் உள்ள இசியம் நகருக்கு அதிபர் ஜெலன்ஸ்கி சென்று போரால் சேதமான பகுதிகளை பார்வையிட்டார்.
அதன் பிறகு அவர் கிவ் நகருக்கு காரில் திரும்பி கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் சென்ற கார் மற்றொரு வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் அதிபர் ஜெலன்ஸ்கி லேசான காயம் அடைந்ததாக அவரது செய்தி தொடர்பாளர் நிகிபோ ரோவ் தெரிவித்து உள்ளார்.
விபத்து நடந்ததும் அவருடன் சென்ற மருத்துவர்கள் ஜெலன்ஸ்கி மற்றும் அவரது கார் ஓட்டுனர் ஆகியோருக்கு முதல் உதவி சிகிச்சை அளித்துள்ளனர். பின்னர் 2 பேரும் ஆம்புலன்சில் அழைத்து செல்லப்பட்டுள்ளனர். ஆனால் ஜெலன்ஸ்கிக்கு உடலில் எந்த இடங்களில் காயங்கள் ஏற்பட்டது என்ற எந்த விவரமும் தெரியவில்லை.
இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ெபண் பலி
- 3 குழந்தைகள் உள்ளனர்
திருவண்ணாமலை:
கலசப்பாக்கம் அடுத்த பில்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அசோக் இவருடைய மனைவி கண்ணம்மா (வயது 32) அதே பகுதியைச் சேர்ந்த செல்வரசு என்பருடன் பைக்கில் பில்லூரில் இருந்து திருவண்ணாமலை அருகே உள்ள தனது தாய் வீடான மல்லவாடி கிராமத்திற்கு திருவண்ணாமலை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
நாயுடு மங்கலம் கூட்ரோடு அருகே பின்புறமாக வந்த கார் ஒன்று அதிவேகமாக மோதியதில் நிலைத்தலைமாறி கீழே விழுந்தனர்.
இதில் கண்ணம்மாவிற்கு தலையில் படுகாயம் ஏற்பட்டு கலசப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கண்ணம்மா பரிதாபமாக இறந்தார்.
அவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இது சம்பந்தமாக கலசப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி கார் விபத்தில் உயிரிழந்தார்.
- சைரஸ் மிஸ்திரி பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனத்தை நடத்தி வந்தவர்.
மும்பை :
டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி (வயது 54). இவர் நேற்று முன்தினம் மும்பை அருகே நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். அவருடன் பயணித்த மற்றொரு தொழில் அதிபர் ஜகாங்கிர் பண்டோலேவும் பலியானார். ஜகாங்கிர் பண்டோலேவின் சகோதரர் டாரியஸ் பண்டோலே (60), இவரது மனைவியான டாக்டர் அனகிதா (55) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். டாக்டர் அனகிதாதான் விபத்துக்குள்ளான காரை ஓட்டினார்.
பெண் டாக்டர் மற்றும் அவரது கணவர் குஜராத் மாநிலம் வாபி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்கள் நேற்று மும்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டனர்.
கார் விபத்தில் பலியான சைரஸ் மிஸ்திரி பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனத்தை நடத்தி வந்தவர். ரத்தன் டாடா பதவி விலகியதை அடுத்து 2012-ம் ஆண்டு டாடா குழுமத்தின் தலைவராக பதவி ஏற்று, அந்த பொறுப்பில் 2016-ம் ஆண்டு வரை நீடித்தார்.
பிரபல தொழில் அதிபரான அவர் கார் விபத்தில் உயிரிழந்தது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. விபத்து தொடர்பாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
சைரஸ் மிஸ்திரியுடன் காரில் உடன் பயணம் செய்தவர்கள் அவரது நண்பர்கள். இவர்கள் அனைவரும் பிரபல தொழில் அதிபர்கள். மேலும் அனகிதா மும்பையில் பிரபல மகப்பறு மருத்துவர் மற்றும் இயற்கை ஆர்வலர் ஆவார். இவர்கள் குஜராத் மாநிலம் உடவா பகுதியில் உள்ள ஒரு பார்சி கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தி விட்டு மும்பை திரும்பி உள்ளனர். காரை பெண் டாக்டரான அனகிதா ஓட்டி உள்ளார். அவரது கணவர் டாரியஸ் முன் இருக்கையில் இருந்துள்ளார். சைரஸ் மிஸ்திரியும், ஜகாங்கிரும் பின் இருக்கையில் அமர்ந்து பயணித்துள்ளனர்.
கார் மும்பையை நெருங்கி கொண்டு இருந்தபோது பால்கர் அருகே ஆற்றுப்பால தடுப்புச்சுவரில் மோதியபோதுதான் இந்த துயர சம்பவம் நேர்ந்தது.
இதற்கிடையே காரின் அதிவேகம், சீட் பெல்ட் அணியாதது, காரை ஓட்டிய பெண் டாக்டரின் தவறான கணிப்பு போன்ற காரணங்கள் சைரஸ் மிஸ்திரியின் உயிரை பறித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கார் அதிவேகமாக சென்று உள்ளது. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின்படி, கார் சரோட்டி சுங்கச்சாவடியில் இருந்து, விபத்து நடந்த பகுதிக்கு 20 கி.மீ. தூரத்தை 9 நிமிடங்களில் கடந்து உள்ளது. முன்னால் சென்ற காரை முந்த முயன்றபோது கார் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடுப்பு சுவரில் பயங்கர வேகத்தில் மோதி விட்டது.
மோதிய வேகத்தில், பின் இருக்கையில் இருந்த சைரஸ் மிஸ்திரி மற்றும் ஜகாங்கிர் ஆகிய 2 பேரின் தலையும் முன் இருக்கையில் மோதி உள்ளது. இவர்கள் 2 பேரும் சீட் பெல்ட் அணியவில்லை. மேலும் உடனடியாக ஏர் பலூனும் விரியவில்லை. இதனால் முன் இருக்கையில் தலை மோதி 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளனர்.
காரை ஓட்டிய பெண் டாக்டர் மற்றும் அவரது கணவர் சீட் பெல்ட் அணிந்து உள்ளனர். மேலும் முன் இருக்கையில் ஏர் பலூன் விரிந்ததால் அவர்கள் உயிர் தப்பி உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
விபத்தில் உயிரிழந்த சைரஸ் மிஸ்திரி பற்றி மராட்டிய முன்னாள் துணை கலெக்டரும், தொழில் அதிபருமான கணேஷ் ஜக்தாப் கூறியதாவது:-
சைரஸ் மிஸ்திரி எனக்கு மிகவும் நெருக்கமானவர். விமான பயண வசதிகள் இருந்தாலும் அவர் சாலை பயணத்தையே அதிகம் விரும்புவார். அவர் விரும்பிய சாலை பயணமே அவரது உயிரை பறித்துள்ளது.
பெரிய தொழில் அதிபராக இருந்தாலும் சாலையோர உணவு கடைகளில் விற்கப்படும் வடபாவ், பாவ் பாஜி ஆகியவற்றை வாங்கி சாப்பிடுவார். சாலையோர டீக்கடைகளில் டீ குடிப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- டிரைவருக்கு பொதுமக்கள் தர்ம அடி
- விரட்டி பிடித்தனர்
திருப்பத்தூர்:
ஜோலார்பேட்டையில் இருந்து நேற்று இரவு 8 மணி அளவில் ஜோலார்பேட்டை யில் இருந்து திருப்பத்தூர் நோக்கி அதி வேகமாக வந்த கார் நுகர்பொருள் வாணிபக்கழகம் அருகே ஒரு கார் மீது மோதியது.
பின்னர் அங் கிருந்து நிற்காமல் வேகமாக சென்ற கார் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே முதிய வர் மீது மோதியது . இதில் முதியவர் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார் . அப்போதும் கார் நிற்காமல் சென்றது . உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் துரத்தி சென்று திருப்பத்தூர் பஸ் நிலையம் அருகே காரை மடக்கி பிடித்த னர் .
அப்போது கார் டிரைவர்குடி போதையில் இருந்ததாக கூறப்படுகிறது . அவரை அடித்து வெளியே இழுத்த னர் . அதற்குள் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் பொதுமக்கள் காரை ஓரமாக எடுத்துச் சென்று நிறுத்தி பார்த்தபோது காரின் பின் சீட்டில் குடிபோதையில் ஒரு வர் மயங்கி கிடந்தார். அவ ரையும் வெளியே இழுத்துப் போட்டு அடித்தனர். அதற்குள் காரை ஓட்டி வந்த டிரைவர் அங்கிருந்து மோட்டார் சைக்கிள் தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தும்டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து காரை பறிமுதல் செய்து, குடி போதையில் இருந்தவரை திருப்பத்தூர் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய டிரைவர் மீது வழக்குப் பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள் . இந்த சம்பவம் திருப்பத்தூரில் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தி உள்ளது .
விழுப்புரம்:
கண்டாச்சிபுரம் அருகே திருவண்ணாமலை- சென்னை செல்லும் சாலையில் அடுக்கம் வன அலுவலர் அலுவலகம் அருகில் அடையாளம் தெரியாத சுமார் 70 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கார் மீது மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடனே கார் டிரைவர் வேட்டவலம் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
இது குறித்து கண்டாச்சிபுரம் சப்-இன்ஸ்பெக்டர் மருது மற்றும் காவல் துைறயைினர் சம்பவ இடத்துக்கு விரைந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை்ககாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.
- 2 பேர் படுகாயம்
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
சென்னை அருகே முகப்பேர் பகுதியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (வயது 65). இவரது மனைவி திலகவதி இவர்கள் இருவரும் கர்நாடக மாநில பெங்களூரில் இருந்து சென்னைக்கு காரில் சென்று கொண்டிருந்தனர்.காரை நாகராஜ் என்பவர் ஒட்டி சென்றார்.
அப்போது நாட்டறம்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் ஆத்தூர் குப்பம் பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருக்கும் ேபாது திடீரென கார் நிலை தடுமாறி அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் காரில் பயணம் செய்த டிரைவர் உள்பட 3 பேர் பலத்த படுகாயமடைந்தனர். படுகாயம் அடைந்த வர்களை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திலகவதி பரிதாபமாக இறந்தார். மேலும் சண்முகசுந்தரம் டிரைவர் நாகராஜ் ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து தகவ லறிந்ததும் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் வழக்கப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திலகவதி உடலை சப் இன்ஸ்பெக்டர் தானாக முன்வந்து ஸ்ட்ரச்சர் மூலம் உடலை தூக்கி பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.






