என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நெல்லை அருகே கார்கள் நேருக்குநேர் மோதி விபத்து- ஒருவர் பலி
Byமாலை மலர்26 May 2022 8:49 AM GMT (Updated: 26 May 2022 8:49 AM GMT)
நெல்லை அருகே கார்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில் ஒருவர் பலியானார். மேலும் 7 பேர் காயம் அடைந்தனர்.
நெல்லை:
சங்கரன்கோவில் அருகே உள்ள கரும்பாட்டூரை சேர்ந்தவர் ராஜசேகரன் (வயது 30). சங்கரன்கோவில் என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் முகேஷ் (46). இவர்கள் 2 பேரும் காரில் நெல்லைக்கு பொருட்கள் வாங்க வந்தனர். பின்னர் மீண்டும் அவர்கள் ஊருக்கு புறப்பட்டனர்.
சுந்தரபாண்டியபுரத்தை சேர்ந்த வசந்தகுமார் (22), லீசா (23), ரோஷ்லின் (55), செல்வம் (40), திரவியம் (43), எலிசபெத் (65) ஆகிய 6 பேரும் தங்களது காரில் நெல்லைக்கு புறப்பட்டனர்.
இவர்கள் நேற்று நள்ளிரவு நெல்லை அருகே உள்ள அழகியபாண்டியபுரத்தில் வந்த போது 2 காரும் நேருக்கு நேர் மோதி கொன்டன.
இதில் பலத்த காயமடைந்த 8 பேரையும் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே முகேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 7 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
இது தொடர்பாக மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சங்கரன்கோவில் அருகே உள்ள கரும்பாட்டூரை சேர்ந்தவர் ராஜசேகரன் (வயது 30). சங்கரன்கோவில் என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் முகேஷ் (46). இவர்கள் 2 பேரும் காரில் நெல்லைக்கு பொருட்கள் வாங்க வந்தனர். பின்னர் மீண்டும் அவர்கள் ஊருக்கு புறப்பட்டனர்.
சுந்தரபாண்டியபுரத்தை சேர்ந்த வசந்தகுமார் (22), லீசா (23), ரோஷ்லின் (55), செல்வம் (40), திரவியம் (43), எலிசபெத் (65) ஆகிய 6 பேரும் தங்களது காரில் நெல்லைக்கு புறப்பட்டனர்.
இவர்கள் நேற்று நள்ளிரவு நெல்லை அருகே உள்ள அழகியபாண்டியபுரத்தில் வந்த போது 2 காரும் நேருக்கு நேர் மோதி கொன்டன.
இதில் பலத்த காயமடைந்த 8 பேரையும் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே முகேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 7 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
இது தொடர்பாக மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X