search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    உடன்குடியில் விபத்து- தனியார் ஆம்னி பஸ் மோதி கல்லூரி பேராசிரியர் பலி

    தனியார் பஸ்சை ஓட்டி வந்த சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உடன்குடி:

    திருச்செந்தூர் மணல்மேடு பகுதியை சேர்ந்தவர் சந்தனகுமார் (வயது 55). இவர் உடன்குடியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணி செய்து வருகிறார்.

    நேற்று இரவு சுமார் 9 மணி அளவில் திருச்செந்தூரில் இருந்து உடன்குடி வழியாக சாத்தான்குளத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது உடன்குடியில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு சென்ற தனியார் ஆம்னி பஸ் உடன்குடி அருகே வந்த போது சந்தனகுமார் மீது மோதியது. இதில் சந்தனகுமார் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    பலியான சந்தன குமாரின் மனைவி ரவிகலா குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் நிலம் கையகப்படுத்தும் தாசில்தாராக பணி செய்து வருகிறார்.

    இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இதுசம்பந்தமாக குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

    தனியார் பஸ்சை ஓட்டி வந்த சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த டிரைவர் செந்தில்குமார்(38) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×