search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கார் விபத்தில் பெண் பலி
    X

    கார் விபத்தில் பெண் பலி

    • 2 பேர் படுகாயம்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    சென்னை அருகே முகப்பேர் பகுதியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (வயது 65). இவரது மனைவி திலகவதி இவர்கள் இருவரும் கர்நாடக மாநில பெங்களூரில் இருந்து சென்னைக்கு காரில் சென்று கொண்டிருந்தனர்.காரை நாகராஜ் என்பவர் ஒட்டி சென்றார்.

    அப்போது நாட்டறம்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் ஆத்தூர் குப்பம் பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருக்கும் ேபாது திடீரென கார் நிலை தடுமாறி அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இதில் காரில் பயணம் செய்த டிரைவர் உள்பட 3 பேர் பலத்த படுகாயமடைந்தனர். படுகாயம் அடைந்த வர்களை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திலகவதி பரிதாபமாக இறந்தார். மேலும் சண்முகசுந்தரம் டிரைவர் நாகராஜ் ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இது குறித்து தகவ லறிந்ததும் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் வழக்கப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திலகவதி உடலை சப் இன்ஸ்பெக்டர் தானாக முன்வந்து ஸ்ட்ரச்சர் மூலம் உடலை தூக்கி பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×