search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mechanic killed"

    எபின் மரணமடைந்து ஒன்றரை மாதங்கள் ஆகியும் அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்படவில்லை. இதனால் அவரது உறவினர்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர்.
    இரணியல்:

    நாகர்கோவில் ஊட்டுவாழ்மடம் இலுப்பையடிகாலனி பகுதியை சேர்ந்தவர் எபின் (வயது51). இவர் சவுதிஅரேபியா ரியாத்தில் உள்ள அல்கசாவில் மெக்கானிக் வேலை பார்த்து வந்தார்.

    இவர் கடந்த ஏப்ரல் மாதம் 14-ந் தேதி தொழிற்பேட்டை வளாகத்திற்குள் எதிர்பாராத விதமாக நடந்த கார் விபத்தில் எபின் படுகாயமடைந்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், ஏப்ரல் 16-ந் தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த நிலையில் எபின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர வேண்டி அவரது மனைவி புனிதாபாய் (47) ரியாத்தில் உள்ள இந்திய தூதரகத்திற்கும், கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் மற்றும் மாவட்ட, மாநில நிர்வாகத்திற்கும் மனுக்கள் அனுப்பி உள்ளார். அதில், விபத்தில் மரணமடைந்த தனது கணவர் உடலை மீட்டு இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுள்ளார்.

    எபின் மரணமடைந்து ஒன்றரை மாதங்கள் ஆகியும் அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்படவில்லை. இதனால் அவரது உறவினர்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர். இதனிடையே அவரது 2 மகன்களும் தந்தையை இழந்த சோகத்திற்கிடையில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வையும் எழுதியுள்ளனர். கடந்த ஒன்றரை மாதங்களாக வெளிநாட்டில் இருக்கும் எபின் உடலை மீட்டு இந்தியா கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது உறவினர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
    கப்பலூரில் மோட்டார் சைக்கிள் மீது மினி லாரி மோதிய விபத்தில் மெக்கானிக் பரிதாபமாக உயிரிழந்தார்.

    பேரையூர்:

    மதுரை, பைக்காராவைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் சரவணக்குமார் (வயது 38). இவர் கப்பலூர் சிப்கோவில் உள்ள தனியார் தொழிற்சாலையில் மெக்கானிக்காக பணியாற்றி வந்தார்.

    தினமும் சரவணக்குமார் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று வருவது வழக்கம். நேற்று காலை வழக்கம்போல் சரவணக்குமார் வேலைக்கு புறப்பட்டார்.

    கப்பலூர் 4 வழிச்சாலையை கடக்க முயன்றபோது மதுரையில் இருந்து வந்த மினிலாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சரவணக்குமார் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த திருமங்கலம் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சரவணக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தோப்பூரைச் சேர்ந்த கோடீஸ்வரன் (33) என்பவரை கைது செய்தனர்.

    ×