search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பைக் மீது கார் மோதி விபத்து
    X

    பைக் மீது கார் மோதி விபத்து

    • ெபண் பலி
    • 3 குழந்தைகள் உள்ளனர்

    திருவண்ணாமலை:

    கலசப்பாக்கம் அடுத்த பில்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அசோக் இவருடைய மனைவி கண்ணம்மா (வயது 32) அதே பகுதியைச் சேர்ந்த செல்வரசு என்பருடன் பைக்கில் பில்லூரில் இருந்து திருவண்ணாமலை அருகே உள்ள தனது தாய் வீடான மல்லவாடி கிராமத்திற்கு திருவண்ணாமலை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

    நாயுடு மங்கலம் கூட்ரோடு அருகே பின்புறமாக வந்த கார் ஒன்று அதிவேகமாக மோதியதில் நிலைத்தலைமாறி கீழே விழுந்தனர்.

    இதில் கண்ணம்மாவிற்கு தலையில் படுகாயம் ஏற்பட்டு கலசப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கண்ணம்மா பரிதாபமாக இறந்தார்.

    அவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இது சம்பந்தமாக கலசப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×