search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "old lady killed"

    • சண்முகம் லட்சுமி இருவரும் மோட்டார் சைக்கிளில் புதுவையை நோக்கி நேற்று சென்றனர்.
    • சாலையில் தடுப்புக்கட்டையில் மீது விழுந்த லட்சுமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    விழுப்புரம்:

    வானூர் அருகே அருவாப்பாக்கத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 60). இவரது மனைவி லட்சுமி (55). இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் புதுவையை நோக்கி நேற்று சென்றனர். அப்போது கிளியனூர் சாலையில் சென்ற போது, எதிரில் வந்த மோட்டார் சைக்கிள் இவர்கள் மீது நேருக்கு நேர் மோதியது.இதில் சண்முகம், லட்சுமி ஆகியோர் கீழே விழுந்தனர். அப்போது சாலையில் தடுப்புக்கட்டையில் மீது விழுந்த லட்சுமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் லட்சுமி, சண்முகத்தை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். லேசான காயங்களுடன் சண்முகம் உயிர் தப்பினார். இது குறித்த புகாரின் பேரில் கிளியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரை ஐகோர்ட்டு அருகே வாகனம் மோதி மூதாட்டி பலியானார்.
    • மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் 45 வயது மதிக்கத் தக்க ஒரு வாலிபர் இறந்து கிடந்தார்.

    மதுரை

    மதுரை ஐகோர்ட்டு அருகில் 4 வழிச்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி பரிதாபமாக இறந்தார். விபத்தில் அவரது தலை சிதைந்தது. இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து தல்லாகுளம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் 45 வயது மதிக்கத் தக்க ஒரு வாலிபர் இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அதிகாரி சமையன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தார். அதில் அந்த வாலிபர் குறித்த தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை. இது குறித்து திடீர் நகர் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வாலிபர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்து கிடந்த வாலிபர் யார்? அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஜாமான்களை வாங்கி கொண்டு சாலை ஓரமாக நடந்து சென்றார்.
    • அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி அருகே வெட்டுக்காடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜானகி (வயது 68). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று வீட்டிற்கு தேவையான ஜாமான்களை வாங்கி கொண்டு சாலை ஓரமாக நடந்து சென்றார். அப்போது திருக்கனூரிலிருந்து விழுப்புரம் நோக்கிச் சென்ற லாரி இவர் மீது மோதியது. இதில் பலத்த காயங்களுடன் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இது தொடர்பாக விக்கிர வாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    பனிமூட்டம் காரணமாக தங்கமணி ரெயில் வருவதை கவனிக்காமல் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

    கடலூர்:

    விருத்தாசலம் நாச்சியார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் நமச்சிவாயம் இவரது மனைவி தங்கமணி (65). இவர் இன்று அதிகாலை 5:30 மணியளவில் காலை வீட்டில் இருந்து குப்பைகளை கொட்டுவதற்காக நாச்சியார்பேட்டை ெரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது திருநெல்வேலியில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற அதிவிரைவு ெரயில் மோதி பலியானார்.

    பனிமூட்டம் காரணமாக தங்கமணி ரெயில் வருவதை கவனிக்காமல் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டார் என போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. உடலை கைப்பற்றி விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.

    விருத்தாசலம் ரெயில்வே போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திண்டிவனம் செஞ்சி பேருந்து நிறுத்தம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூதாட்டி பலியானார்.
    • பல்வேறு கோணங்களில் போலிசார் விசாரணை செய்து வருகின்றார்கள்.

    விழுப்புரம்:

    திண்டிவனம் செஞ்சி பஸ் நிறுத்தம் அருகே 75 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் அந்தப் பகுதியில் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்துள்ளார். இன்று அதிகாலை அந்த பகுதியில் உள்ள சாலையில் சென்று கொண்டிருக்கும் போது, மூதாட்டி மீது அடையாளம் தெரியாத வாகனம் பலமாக மோதியுள்ளது .

    இதில் தூக்கி வீசப்பட்ட அந்த மூதாட்டி சம்பவ இடத்தில் பலியானார். இது குறித்து தகவல் அறிந்த ரோசனை போலீசார் சம்பவத்திற்க்கு நேரில் வந்து பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு, இந்த மூதாட்டியின் மீது மோதிய வாகனம் குறித்து பல்வேறு கோணங்களில் போலிசார் விசாரணை செய்து வருகின்றார்கள்.

    • 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் ரெயில் மோதி இறந்து கிடந்தார்.
    • ரெயில் மோதி இறந்து கிடந்த மூதாட்டி யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து தெரியவில்லை

    கோவை,

    கோவை பீளமேடு-இருகூர் ரெயில்வே தண்டவாளத்தில் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் ரெயில் மோதி இறந்து கிடந்தார்.

    இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் இது குறித்து கோவை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.

    அவர் சிவப்பு நிற பூ போட்டு இருந்த சேலை அணிந்திருந்தார். பின்னர் போலீசார் மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ரெயில் மோதி இறந்து கிடந்த மூதாட்டி யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து தெரியவில்லை. அவர் ரெயில் தண்டவாளத்தை கடந்தபோது ெரயில் மோதி இறந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வருகின்றனர்.

    • அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூதாட்டி பலியானார்
    • மகள் வீட்டிற்கு செல்வதற்காக நடந்து சென்றுள்ளார்.

    திருச்சி:

    தா.பேட்டை சாராயக்கார தெரு பகுதியை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மனைவி மல்லிகா (வயது65). இவர் தா.பேட்டை அருகே மகாதேவி பகுதியில் வசிக்கும் தனது மகள் வீட்டிற்கு செல்வதற்காக நடந்து சென்றுள்ளார். தா.பேட்டை - நாமக்கல் செல்லும் மெயின்ரோட்டில் மகாதேவி உப்பாற்று பாலம் அருகே சாலையில் சென்ற போது, அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதியது. இதில் மல்லிகா பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தா.பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி மற்றும் போலீசார் மல்லிகாவின் உடலை கைப்பற்றி துறையூர் அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிந்து மூதாட்டி மீது மோதி நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    கண்டாச்சிபுரம் அருகே கார் மோதி மூதாட்டி பலி ஆனார்.

    விழுப்புரம்:

    கண்டாச்சிபுரம் அருகே திருவண்ணாமலை- சென்னை செல்லும் சாலையில் அடுக்கம் வன அலுவலர் அலுவலகம் அருகில் அடையாளம் தெரியாத சுமார் 70 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கார் மீது மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடனே கார் டிரைவர் வேட்டவலம் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

    இது குறித்து கண்டாச்சிபுரம் சப்-இன்ஸ்பெக்டர் மருது மற்றும் காவல் துைறயைினர் சம்பவ இடத்துக்கு விரைந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை்ககாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.  

    • சாலை விபத்தில் மூதாட்டி பலியானார்.
    • தனியார்பெட்ரோல்பங்க் அருகே, 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர்சாலையில் நடந்து சென்றார்.

    கடலூர்:

    விருத்தாசலம் வேப்பூர்சாலை, கோமங்கலம் பகுதி யில் உள்ள தனியார்பெட்ரோல்பங்க் அருகே, 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர்சாலையில் நடந்து சென்றார். பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம்அவர் மீது மோதியது. காயமடைந்த அவர், கடலுார் அரசு மருத்துவமனையில்சி கிச்சை பெற்று வந்த நிலையில், இறந்தார். கடலுார் அரசு மருத்துவ மனை சவகிடங்கில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. அவர் நீலநிறபுடவை அணிந்திருந்தார். அவர், யார் என, தெரியவில்லை. விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக் கின்றனர்.

    ×