விருத்தாசலத்தில் ெரயில் மோதி மூதாட்டி பலி

பனிமூட்டம் காரணமாக தங்கமணி ரெயில் வருவதை கவனிக்காமல் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்தில் பலியான தங்கமணி.
விபத்தில் பலியான தங்கமணி.
Published on

கடலூர்:

விருத்தாசலம் நாச்சியார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் நமச்சிவாயம் இவரது மனைவி தங்கமணி (65). இவர் இன்று அதிகாலை 5:30 மணியளவில் காலை வீட்டில் இருந்து குப்பைகளை கொட்டுவதற்காக நாச்சியார்பேட்டை ெரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது திருநெல்வேலியில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற அதிவிரைவு ெரயில் மோதி பலியானார்.

பனிமூட்டம் காரணமாக தங்கமணி ரெயில் வருவதை கவனிக்காமல் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டார் என போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. உடலை கைப்பற்றி விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.

விருத்தாசலம் ரெயில்வே போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com