search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆபாச வீடியோ விவகாரம்"

    • ஆபாச வீடியோக்களை வெளியிட 4 மந்திரிகள் குழுவாக செயல்பட்டனர்.
    • ரூ.100 கோடி கொடுப்பதாக என்னிடம் பேரம் பேசினார்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச படங்களை வெளியிட்டதாக அவரது முன்னாள் கார் டிரைவர் கார்த்திக் மற்றும் பா.ஜனதா பிரமுகர் வக்கீல் தேவராஜ்கவுடா ஆகியோர் மீது சிறப்பு விசாரணைக்குழுவினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இந்த நிலையில் ஒரு பெண் கொடுத்த பாலியல் புகாரின் அடிப்படையில் பா.ஜனதா பிரமுகர் வக்கீல் தேவராஜ் கவுடா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரை நேற்று போலீசார் கோர்ட்டுக்கு கொண்டு சென்று ஆஜர்படுத்தி மீண்டும் சிறைக்கு கொண்டு வந்தனர்.

    அப்போது போலீஸ் வாகனத்தில் இருந்தபடி வக்கீல் தேவராஜ்கவுடா பரபரப்பு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-

    ஆபாச வீடியோ வெளியானதில் மூளையாக செயல்பட்டதே கர்நாடக துணை முதல் மந்திரி டி.கே.சிவக்குமார் தான். ஆபாச வீடியோக்களை வெளியிட டி.கே.சிவக்குமார் தலைமையில் மந்திரிகள் கிருஷ்ண பைரேகவுடா, செலுவராயசாமி, பிரியங்க் கார்கே உள்பட 4 மந்திரிகள் குழுவாக செயல்பட்டனர்.

    ஆபாச வீடியோக்கள் அடங்கிய பென் டிரைவை வெளியிட ரூ.100 கோடி கொடுப்பதாக என்னிடம் முன்னாள் எம்.எல்.ஏ. சிவராமேகவுடா பேரம் பேசினார். மேலும் பவுரிங் கிளப்பில் ரூ.5 கோடி முன் பணமாக கொடுக்க வந்தனர். இதில் டி.கே.சிவக்குமாருக்கு தொடர்பு இருப்பதால் எந்த பிரச்சினையும் ஏற்படாது என்றும் தெரிவித்தார்.

    ஆபாச வீடியோக்களை வெளியிடுவது தொடர்பாக டி.கே.சிவக்குமார் என்னை அழைத்து பேசினார். அதில் பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான வீடியோக்கள் வெளியான விவகாரத்தில் குமாரசாமியை குற்றம் சாட்டும் திட்டத்துடன் என்னை தொடர்பு கொண்டு பேசினார். மேலும் நான் குமாரசாமி மீது இந்த விவகாரம் தொடர்பாக குற்றம் சாட்ட வேண்டும் என்று அவர்கள் விரும்பினர்.

    பிரஜ்வலின் முன்னாள் கார் டிரைவர் கார்த்திக்கிடம் பென் டிரைவ் பெறுவதற்கு டி.கே.சிவக்குமார்தான் காரணம். மேலும் பிரதமர் மோடிக்கு கெட்ட பெயர் கொண்டு வரவேண்டும் என்பதற்காக டி.கே.சிவக்குமார் சார்பில் என்னை அணுகி ரூ.100 கோடி பேரம் பேசினார்.

    டி.கே.சிவக்குமார் என்னிடம் பேசிய ஆடியோ உரையாடல் உள்ளது. நான் வெளியே வந்தால் என்னிடம் உள்ள அனைத்து ஆதாரங்களையும் வெளியிடுவேன். நான் வெளியே வந்தால் காங்கிரஸ் ஆட்சியே இருக்காது. இதனால் தான் என் மீது பொய்யான வழக்கை போட்டு சிறையில் வைத்துள்ளனர்.

    ஆபாச வீடியோ விவகாரத்தில் பிரதமர் மோடியின் பெயரை கலங்கப்படுத்த வேண்டும், குமாரசாமிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் டி.கே.சிவக்குமாரின் நோக்கம். நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். காங்கிரஸ் ஆட்சி கண்டிப்பாக கூடிய விரைவில் கவிழும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ளது.
    • பாதிக்கப்பட்ட பெண்கள் அச்சமின்றி புகார் செய்யலாம்.

    பெங்களூர்:

    கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளியானதால் அவர் ஜெர்மனிக்கு தப்பி சென்றார். இதையடுத்து அவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்த ஆபாச வீடியோக்கள் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் எஸ்.ஐ.டி போலீசார் ஆபாச வீடியோவில் இருக்கும் பெண்களை அடையாளம் கண்டு அவர்களிடம் வாக்குமூலம் பெற நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதற்கிடையே எஸ்.ஐ.டி. குழுவில் இடம்பெற்றுள்ள மைசூரு போலீஸ் சூப்பிரண்டு சீமாலட்கர் தலைமையிலான போலீசார் ஹோலே நரசிப்பூர் தாலுகாவில் பல்வேறு இடங்களுக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    தொடர்ந்து படுவலஹிப்பே கிராமத்தில் உள்ள ரேவண்ணாவுக்கு சொந்தமான பண்ணை வீட்டிற்கு சென்று அங்கு இருந்த தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தி சில தகவல்களை சேகரித்தனர்.

    மேலும் ஆபாச வீடியோ எடுத்ததாக கூறப்படும் கன்னிகடா மற்றும் கமேன ஹள்ளி அருகே உள்ள மற்ற 2 பண்ணை வீடுகளுக்கும் சென்று எஸ்.ஐ.டி. போலீசார் அங்கும் விசார ணை மேற்கொண்டனர். ஆபாச வீடியோவில் உள்ள இடமும், இதுவும் ஒன்றா என்றும் விசாரணை நடத்தினர்.

    அங்கிருந்த ஊழியர்களிடம் சிலரின் போட்டோக்களை காட்டி எஸ்.ஐ.டி. போலீசார் இவர்களை பார்த்து உள்ளீர்களா என்று கேட்டனர். அதற்கு ஊழியர்கள் இல்லை என்று பதில் அளித்தனர்.

    பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு லுக்அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கு தொடர்பாக அமைக்கப்பட்ட சிறப்பு குழுவினரும், பிரஜ்வாலுக்கு எதிரான பல்வேறு ஆதாரங்களை திரட்டி வருகிறார்கள். மேலும் பாதிக்கப்பட்ட பெண்கள் அச்சமின்றி புகார் செய்யலாம் என்றும், அவர்களின் பெயர், விபரம் ரகசியமாக வைக்கப்படும் என்று சிறப்பு குழுவினர் அறிவித்து உள்ளனர்.

    ×