search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரேவண்ணா"

    மோடி மீண்டும் பிரதமர் ஆகிவிட்டால் அரசியலில் இருந்து நான் விலக தயார் என்று தேவேகவுடா மகன் ரேவண்ணா சவால் விடுத்துள்ளார். #LokSabhaElections2019 #Revanna
    மைசூர்:

    கர்நாடகாவில் பொதுப்பணித்துறை மந்திரியாக தேவேகவுடாவின் மகன்களில் ஒருவரான ரேவண்ணா உள்ளார். நேற்று அவர் மைசூர் பகுதியில் காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    கர்நாடகாவில் காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி 22 தொகுதிகளில் நிச்சயம் வெற்றி பெறும். கர்நாடகாவில் எங்கள் கூட்டணிக்கு செல்வாக்கு இருப்பதை இதன் மூலம் நிரூபித்து காட்டுவோம்.

    எங்களுடைய கட்சிக்கு 6, 8, 22 ஆகியவை மிகவும் ராசி நம்பர்களாகும். எனவேதான் 22 தொகுதிகளில் எங்களுக்கு வெற்றி கிடைக்கும் என்கிறேன்.

    18 நம்பரும் எங்களுக்கு ராசிதான். எனவேதான் 2018-ல் குமாரசாமி முதல்-மந்திரி ஆனார்.

    2018-ல் வரும் ஒன்றையும் எட்டையும் கூட்டினால் 9 வருகிறது. 2019-ல் தேர்தல் வந்துள்ளது. இந்த எண்கள்படி பார்த்தால் மத்தியில் நிச்சயம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியை பிடிக்கும்.

    என் கையில் நான் எப்போதும் எலுமிச்சை பழம் வைத்திருப்பதை கிண்டல் செய்கிறார்கள். எலுமிச்சை சாதாரண கனி அல்ல. பல வி‌ஷயங்களுக்கு எலுமிச்சை பயன்படுகிறது.

    எங்களது குலதெய்வம் சிவபெருமான். எனவே சிவபெருமான் படத்துக்கு நான் தினமும் எலுமிச்சை மாலை அணிவித்து வழிபட்டு வருகிறேன்.

    இதனால்தான் நான் எங்கு சென்றாலும் எனக்கு எலுமிச்சை பழம் தருகிறார்கள். எடியூரப்பா விரும்பினால் அவருக்கும் நான் எலுமிச்சை பழம் கொடுக்க தயாராக இருக்கிறேன்.

    மோடியால் நிச்சயம் மீண்டும் பிரதமர் ஆக முடியாது. இதை நான் சவால் விட்டு சொல்கிறேன். அவர் மீண்டும் பிரதமர் ஆகிவிட்டால் அரசியலில் இருந்து நான் விலக தயார்.

    எனக்கும் என் சகோதரர் குமாரசாமிக்கும் எந்த தகராறும் இல்லை. அப்படி வரும் தகராறுகள் வதந்தி தான். வாழ்நாள் முழுக்க நாங்கள் ஒருபோதும் சண்டைப் போட்டுக் கொள்ள மாட்டோம். நாங்கள் சண்டை போடுவோம் என்று நினைத்தால் அது பகல் கனவாகி விடும்.

    இவ்வாறு ரேவண்ணா கூறினார். #LokSabhaElections2019 #Revanna

    நடிகை சுமலதா பற்றி மந்திரி ரேவண்ணா கூறிய கருத்துக்காக கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி மன்னிப்பு கேட்டு உள்ளார். #kumarasamy #Sumalatha

    பெங்களூரு:

    நடிகை சுமலதா பாராளுமன்ற தேர்தலில் மாண்டியா தொகுதியில் சுயேட்சையாக களம் இறங்க முடிவு செய்துள்ளார். இது பற்றி கருத்து தெரிவித்த கர்நாடக பொதுப்பணித்துறை மந்திரி ரேவண்ணா, “கணவர் இறந்து 6 மாதங்கள் கூட ஆகவில்லை, அதற்குள் அவரது மனைவி சுமலதா தேர்தலில் போட்டியிட வேண்டுமா?” என்று கூறினார்.

    மந்திரி ரேவண்ணா கூறிய இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு கர்நாடகத்தில் குறிப்பாக மாண்டியா தொகுதியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.


    ஜே.டி.எஸ். கட்சியை சேர்ந்தவர்களே, நடிகை சுமலதாவுக்கு ஆதரவாக ஓட்டு போடுவோம் என்று ஆவேசமாக கூறி வருகிறார்கள். இது ஜே.டி.எஸ். கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாண்டியா தொகுதியில் தனது மகன் நிகில் குமாரசாமி வெற்றிக்கு சிக்கல் ஏற்பட்டு விடுமோ என்று குமாரசாமி மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளார்.

    நடிகை சுமலதா பற்றி மந்திரி ரேவண்ணா கூறிய கருத்துக்காக முதல்-மந்திரி குமாரசாமி மன்னிப்பு கேட்டு உள்ளார்.

    இது குறித்து முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

    நடிகை சுமலதா பற்றி மந்திரி ரேவண்ணா கூறிய கருத்து, யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால், அதற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன். எங்கள் குடும்ப உறுப்பினர் என்ற முறையில் ரேவண்ணா சார்பில் நான் இந்த மன்னிப்பை கேட்கிறேன்.

    எங்கள் குடும்பம், சாமானிய மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு அவமரியாதை செய்யாது. ஏழை குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கு, நான் ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், உதவி செய்து வந்திருக்கிறேன்.

    இது பற்றி எங்கு வேண்டுமானாலும் விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன். மந்திரி ரேவண்ணா பேசும்போது, எச்சரிக்கையுடன் பேசி இருந்தால் சர்ச்சை ஏற்பட்டு இருக்காது. ஊடகங்கள் சென்று அவரிடம் கருத்து கேட்டபோது, அவர் வாய் தவறி கருத்து தெரிவித்து விட்டார்.

    மாண்டியா தொகுதி வி‌ஷயத்தில் இந்த அளவுக்கு முக்கியத்துவம் காட்டுவது ஏன்? என்று தெரியவில்லை. குதிரை பேர விவகாரத்தில் வெளியான ஆடியோ உரையாடல் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணை குழுஅமைக்கப்படும். 15 நாட்கள் தாமதமானால் என்ன ஆகிவிடும்.

    இந்த வி‌ஷயத்தில் அதிகாரிகள் உரிய முடிவு எடுப்பார்கள். ஆளுங்கட்சிகளின் எம்.எல்.ஏக்களை இழுக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த வி‌ஷயத்தில் சரியான நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    ரமேஷ் ஜார்கிகோளியை பா.ஜனதாவை சேர்ந்த சிவன்னகவுடா நாயக் சந்தித்து பேசியது பற்றி யாரும் கவலைப்பட தேவை இல்லை. எனக்கும், ரமேஷ் ஜார்கிகோளிக்கும் இடையே உள்ள நல்லுறவு நன்றாகவே உள்ளது.

    காங்கிரஸ் மற்றும் ஜே.டி.எஸ். கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும். நான் மாநிலத்தின் வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறேன்.

    இவ்வாறு குமாரசாமி கூறினார். #kumarasamy #Sumalatha

    ×