search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிமுக பிரமுகர்"

    • வருமான வரித்துறை அதிகாரிகள் லிங்கராஜிடம் ரூ.2 கோடியே 85 லட்சம் பணத்துக்கு கணக்கு கேட்டுள்ளனர்.
    • அடுத்த கட்ட விசாரணையை வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரசாரம் நேற்று மாலை முடிவுக்கு வந்துள்ளது.

    தேர்தலையொட்டி பண பட்டுவாடாவை தடுப்பதற்காக பறக்கும் படையினரும், வருமான வரித்துறை அதிகாரிகளும் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

    பிரசாரம் ஓய்ந்து தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. இந்த நிலையிலும் வருமான வரித்துறையினர் தங்களது சோதனையை தொடர்ந்து வருகிறார்கள். அமலாக்கத்துறை சோதனையும் நீடித்து வருகிறது.

    அந்த வகையில் சென்னை பல்லாவரத்தை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகரின் வீடு மற்றும் நிறுவனத்தில் நேற்று நள்ளிரவில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டுள்ளனர்.

    சென்னை பழைய பல்லாவரம் சாலையில் வசித்து வருபவர் லிங்கராஜ். அ.தி.மு.க. பிரமுகரான இவர் அப்பகுதியில் பிரபலமான நபராக விளங்கி வருகிறார். இவர் பள்ளிக்கரணை பகுதியில் ரேடியல் சாலையில் பி.எல்.ஆர். புளூமெட்டல் என்ற பெயரில் ஜல்லி, கிரஷர் மற்றும் ரெடிமிக்ஸ் விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

    நேற்று நள்ளிரவு 12.30 மணி அளவில் லிங்கராஜின் வீடு மற்றும் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர். வரி ஏய்ப்பு புகாரின் பேரில் சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த சோதனையில் லிங்கராஜின் 'ரெடிமிக்ஸ்' நிறுவனத்தில் ரூ.1 கோடி பணம் கைப்பற்றப்பட்டு உள்ளது. பழைய பல்லாவரத்தில் உள்ள லிங்கராஜின் வீட்டில் ரூ.1 கோடியே 85 லட்சம் பணம் இருந்தது. அதையும் வருமான வரித்துறை அதிகாரிகள் மொத்தமாக பறிமுதல் செய்தனர்.

    2 இடங்களிலும் நடைபெற்ற சோதனையில் ரூ.2 கோடியே 85 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பாராளுமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் அ.தி.மு.க. பிரமுகரான லிங்கராஜின் வீடு மற்றும் நிறுவனத்தில் ரூ.2 கோடியே 85 லட்சம் பணம் பிடிபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வரி ஏய்ப்பு புகாரின் பேரிலேயே வருமான வரி சோதனை நடத்தப்பட்டிருப்பதாக கூறப்பட்டாலும் தேர்தல் நேரம் என்பதால் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக இவ்வளவு பணமும் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததா? என்கிற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அது தொடர்பான விசாரணையும் முடுக்கி விடப்பட்டு உள்ளது.

    வருமான வரித்துறை அதிகாரிகள் லிங்கராஜிடம் ரூ.2 கோடியே 85 லட்சம் பணத்துக்கு கணக்கு கேட்டுள்ளனர். தேர்தல் நேரத்தில் இந்த பணத்தை எப்படி எடுத்துச் சென்றீர்கள்? அதற்குரிய கணக்கு உள்ளதா? என்பது போன்ற கேள்விகளை கேட்டு அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதன் முடிவிலேயே இந்த பணத்தின் பின்னணி என்ன? என்பது தெரியவரும்.

    லிங்கராஜின் வீடு மற்றும் நிறுவனத்தில் நேற்று இரவு 12.30 மணிக்கு தொடங்கிய வருமான வரி சோதனை இன்று காலை 6 மணி அளவில் நிறைவு பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்த பணத்துடன் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

    சுமார் 5½ மணி நேரம் நடத்திய சோதனையில் லிங்கராஜின் நிறுவனம் மற்றும் அலுவலகத்தில் இருந்த ஆவணங்களையும் அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இது தொடர்பாக அடுத்த கட்ட விசாரணையை வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர்.

    • தர்மபுரியில் நடந்த அ.தி.மு.க. பொதுக்கூட்டத்திற்கு கலந்து கொள்வதற்காக விநாயக சரவணன் என்பவர் காரில் வந்தனர்.
    • விபத்து குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கடத்தூர்:

    கடத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ரத்தினம் பிள்ளை தெருவை சேர்ந்தவர் ராமன் (வயது 67). அ.தி.மு.க.வின் முன்னாள் அவை தலைவரான இவரும் கடத்தூரைச் சேர்ந்த விநாயகர் சரவணன் மற்றும் அ.தி.மு.க. கட்சியினர் சிலரும் தர்மபுரியில் நடந்த அ.தி.மு.க. பொதுக்கூட்டத்திற்கு கலந்து கொள்வதற்காக விநாயக சரவணன் என்பவர் காரில் வந்தனர். பின்னர் அவர்கள் கூட்டம் முடிந்து விடு திரும்பினர்.

    அப்போது மணியம்பாடி அருகே சாலை ஓரமாக காரை நிறுத்திவிட்டு இறங்கி பேசிக் கொண்டிருந்தனர்.

    அப்பொழுது அவ் வழியாக வந்த தனியார் பஸ் காரின் மீது மோதியதில் காரின் அருகில் நின்றிருந்த ராமன் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இந்த விபத்து குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • ஒப்பந்ததாரர் பிரகாசுக்கு, கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி மீது கோபம் ஏற்பட்டது.
    • கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோர் சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தனர்.

    கோவை:

    கோவை ஒண்டிபு தூரை சேர்ந்தவர் கிருஷ்ண மூர்த்தி(வயது61). இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். மேலும் இவர் கோவை மாநகராட்சியின் 56-வது வார்டு கவுன்சிலராகவும் உள்ளார்.

    அதே பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ்(39). இவர் ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள பொதுக்கழிப்பிடத்தை சுத்தம் செய்யும் பணியை ஒப்பந்த அடிப்படையில் எடுத்திருந்தார்.ஆனால் இவர் அந்த பொதுக்கழிப்பிடத்தை சரியாக சுத்தம் செய்யவில்லை என்றும், பராமரிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

    இதுகுறித்து கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்திக்கு புகார் வரவே அவர், ஒப்பந்ததாரர் பிரகாசிடம், சுத்தம் செய்யுமாறு அறிவுறுத்தி உள்ளார். ஆனாலும் அவர் அதனை கண்டு கொள்ளாமல் இருந்து வந்தார்.

    இதையடுத்து கவுன்சிலர், மாநகராட்சி கமிஷனரிடம் புகார் அளித்ததோடு, மாமன்ற கூட்டத்தில் இதுதொடர்பாக புகார் வைத்தார். இதனை தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகம் சார்பில், ஒப்பந்ததாரர் பிரகாசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. இதனால் ஒப்பந்ததாரர் பிரகாசுக்கு, கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி மீது கோபம் ஏற்பட்டது.

    இதையடுத்து அவர் தனது நண்பரான மற்றொரு ஒப்பந்ததாரர் ராதாகிருஷ்ணன் என்பவரை அழைத்து கொண்டு கோவை ஒண்டிப்புதூர் சுங்கம் மைதானத்தில் அமைந்துள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தின் முன்பு மனித கழிவை வீசி சென்றார்.

    இதேபோல், சிங்காநல்லூர் மசக்காளிபாளையத்தில் உள்ள அ.தி.மு.க. கிளை செயலாளராக உள்ள பன்னீர்செல்வம் என்பவரது வீட்டின் முன்பு மனித கழிவை வீசியுள்ளனர்.

    இதுதொடர்பாக கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோர் சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தனர்.

    இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து காங்கிரஸ் கட்சி அலுவலகம் மற்றும் அ.தி.மு.க கிளை செயலாளர் வீட்டின் முன்பு மனித கழிவை வீசி சென்ற கழிவறை சுத்தம் செய்யும் ஒப்பந்ததாரர்களான பிரகாஷ் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    தொடர்ந்து பிரகாசிடம் மனித கழிவுகளை வீசியது குறித்து விசாரித்தனர். அப்போது, அ.தி.மு.க. கிளை செயலாளரான பன்னீர்செல்வத்திடம் நான் வேலை பார்த்தபோது அவர் தனக்கு முறையாக சம்பளம் தரவில்லை என்றும், காங்கிரஸ் கவுன்சிலர் தன் மீது புகார் தெரிவித்த ஆத்திரத்தில் தனது நண்பருடன் சேர்ந்து இதனை செய்ததாக தெரிவித்தார்.

    ×