search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Arrest"

    • கைது செய்யப்பட்ட 3 பேரும் தெரிவித்த கருத்துக்கள் இந்திய அரசியல் சட்டத்துக்கு எதிராக இருப்பதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் பின்னணியில் இருப்பவர்கள் யார்-யார்? என்பது பற்றிய விசாரணையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னையில் பயங்கரவாத அமைப்பு ஒன்றுக்கு ஆதரவு திரட்டும் வகையில் ராயப்பேட்டை பகுதியில் 3 பேர் செயல்பட்டு வருவதாக சென்னை மாநகர போலீசுக்கு தகவல் கிடைத்தது.

    இது தொடர்பாக போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இயங்கி வரும் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் ராயப்பேட்டை பகுதியில் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

    அப்போது "ஹிஸ்ப் உத் தகீர்" என்ற பெயரிலான பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக ராயப்பேட்டையை சேர்ந்த டாக்டர் அமீது உசேன், அவரது தந்தை அகமது அன்சூர், தம்பி அப்துல்ரகுமான் ஆகியோர் செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த சைபர் கிரைம் போலீசார் 3 பேரையும் வேப்பேரியில் உள்ள கமிஷனர் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

    இதில் 3 பேரும் பயங்கரவாத இயக்கத்துக்கு ஆதரவாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தது அம்பலமானது. ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் தங்களது யூடியூப் சேனல் மூலமாக பயங்கரவாத இயக்கம் தொடர்பான கருத்துக்களை பதிவிட்டு பிரசாரம் செய்து ஆட்களை சேர்த்து வந்ததும் வெளிச்சத்துக்கு வந்தது. இதைத் தொடர்ந்து 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

    இவர்கள் போலீசில் சிக்கியது எப்படி? என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை மாநகரில் சமூக வலைதளங்களில் மோதலை தூண்டும் வகையிலான கருத்துக்கள் வெளியிடப்பட்டுகிறதா? என்பதை கண்காணிப்பதற்கு தனிப்பிரிவு செயல்பட்டு வருகிறது.

    அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு யூடியூப்பில் பயங்கரவாத அமைப்பு ஒன்றுக்கு ஆதரவாக சிலர் கருத்துக்களை பதிவிட்டு வருவதை கண்டுபிடித்தனர். அப்போது ஹிஸ்ப் உத் தகிர் என்கிற பயங்கரவாத அமைப்பின் கொள்கைகளை தனது யூடியூப் சேனலில் பதிவு செய்து டாக்டர் ஹமீது உசேன் பரப்பியது தெரிய வந்தது.

    இவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி இருக்கிறார். 3 பேர் மீதும் உபா சட்டம் பாய்ந்துள்ளது.

    சென்னை போலீசார் 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாரும், என்.ஐ.ஏ. அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    உலகம் முழுவதுமே "கிலாபத்" என்கிற இஸ்லாமிய ஆட்சியை கொண்டு வரும் வகையில் பயங்கரவாத இயக்கம் செயல்பட்டு வந்துள்ளது. கைது செய்யப்பட்ட 3 பேரும் தெரிவித்த கருத்துக்கள் இந்திய அரசியல் சட்டத்துக்கு எதிராக இருப்பதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் பின்னணியில் இருப்பவர்கள் யார்-யார்? என்பது பற்றிய விசாரணையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    • போலீசார் 3 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
    • குடும்பத்துடன் அப்பகுதியில் சுற்றித்திரிந்து சிறுவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்து வந்ததும் தெரிய வந்தது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் கண்டமனூர் அருகே கணேசபுரம் மெயின்ரோடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கண்டமனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்படி சப்-இன்ஸ்பெக்டர் மலைச்சாமி தலைமையிலான போலீசார் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்கேத்திற்கிடமாக சுற்றித்திரிந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் கிடுக்கிபிடி விசாரணை மேற்கொண்டனர்.

    அதில் அவர்கள் கண்டமனூர் தெற்கு தெருவை சேர்ந்த பூவநாதன் மனைவி ரத்தினம்மாள் (70), அவரது மகன் பழனிச்சாமி, மருமகள் முருகேஸ்வரி என்பதும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் 3 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

    இவர்கள் குடும்பத்துடன் அப்பகுதியில் சுற்றித்திரிந்து சிறுவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்து வந்ததும் தெரிய வந்தது. மேலும் 90 வழக்குகள் நிலுவையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    • அரூர் காப்புக்காட்டில் புள்ளிமானை வேட்டையாடி அதன் கறியை விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டார்.
    • வனச்சிப்பந்திகள் ஆகியோர் அரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சிவனை ஆஜர்படுத்தினர்.

    தருமபுரி:

    தருமபுரி வனக்கோட்டம், மொரப்பூர் வனச்சரகம் அரூர் காப்புக்காடு புளியன்தோப்பு சரகத்தில் கடந்த 10-ந் தேதி கன்னிவலை களை கொண்டு புள்ளிமானை வேட்டையாடி தலைமறைவான சோலைக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சிவன் (வயது 48), கொளகம்பட்டி அடுத்த எருக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சேட்டு என்கிற பெருமாள் ஆகிய 2 பேரும் புள்ளிமானை வேட்டையாடி அதன் கறியை சோளக்கொட்டாய் பகுதியை சேர்ந்த அல்லி முத்து என்பவர் மூலம் பாப்பாரப்பட்டி பகுதியில் மான்கறி விற்பனை செய்த்தற்காக பாலக்கோடு வனச்சரகத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அல்லி முத்து என்பவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலும் மொரப்பூர் வனச்சரக எல்லைக்குட்பட்ட பகுதியில் சிவன் மற்றும் சேட்டு ஆகியோர் புள்ளிமானை வேட்டையாடி கறியினை விற்ற குற்றத்திற்காக விசாரணைக்கு அழைத்தபோது விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகி விட்டனர்.

    இதைதொடர்ந்து அவர்களை பிடிக்க வனப் பாதுகாப்புப்படை மற்றும் வனச்சரக பணியாளர்கள் இணைந்து குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் கடந்த 25-ந் தேதி சிவனை கைது செய்து, மொரப்பூர் வனச்சரக அலுவலகம் கொண்டுவரப்பட்டு விசாரணை செய்ததில் அரூர் காப்புக்காட்டில் புள்ளிமானை வேட்டையாடி அதன் கறியை விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டார்.

    பின்னர் சிவன் மீது வனக்குற்றத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் அறிவுரைப்படி, அரூர் உதவி வனப்பாதுகாவலர் சரவணன் ஆலோசனை படியும், சிவனை மொரப்பூர் வனச்சரக அலுவலர் ஆனந்தகுமார், வனப்பாதுகாப்பு படை வனச்சரக அலுவலர் ஆலயமணி, வனச்சிப்பந்திகள் ஆகியோர் அரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சிவனை ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிமன்ற ஆணைப்படி 15 நாட்கள் காவலில் வைக்கப்பட்டார்.

    • சோபா ராணி அணுகிய இளம் பெண் தன்னுடைய குழந்தையை விற்க உள்ளதாக தெரிவித்தார்.
    • டாக்டர், குழந்தையின் தாய் மற்றும் இடைத்தரகர் உட்பட 3 பேரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    தெலுங்கானா மாநிலம், மேட்சல் மாவட்டம், கொடூரை சேர்ந்தவர் 30 வயது இளம்பெண். இவருக்கு கடந்த 60 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது.

    குழந்தையை வளர்க்க போதிய வருமானம் இல்லாததால், குழந்தையை விற்க முடிவு செய்தார்.

    அதன்படி பீர்ஜாதி குடா மாநகராட்சி உட்பட்ட ராமகிருஷ்ண நகரில் சோபா ராணி என்ற ஓமியோபதி டாக்டர் ஆஸ்பத்திரி நடத்தி வருகிறார். சோபா ராணி அணுகிய இளம் பெண் தன்னுடைய குழந்தையை விற்க உள்ளதாக தெரிவித்தார்.

    இதையடுத்து இளம் பெண்ணிடம் டாக்டர் சோபா ராணி ரூ.10 ஆயிரத்தை முன்பணமாக கொடுத்தார்.

    நேற்று காலை இளம் பெண் தன்னுடைய பெண் குழந்தையை சோபா ராணி இடம் ஒப்படைத்தார்.

    தகவல் அறிந்த தன்னார்வளர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து டாக்டர் சோபா ராணி குழந்தையின் தாய் மற்றும் இடைத்தரகர் உட்பட 3 பேரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இரு அபுபக்கரின் தாய் மற்றும் தந்தையின் பெயர் ஒரே பெயராகும்.
    • தன்னை தவறுதலாக கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கோர்ட்டை அபுபக்கர் அணுக உள்ளார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வெளியங்கோடு பகுதியை சேர்ந்தவர் அபுபக்கர். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் வெளியங்கோட்டில் வசித்து வருகின்றனர். வெளிநாட்டில் வேலைபார்க்கும் அபுபக்கர் குடும்ப செலவுக்கு பணம் தராமல் இருந்ததாக கூறப்படுகிறது.

    ஆகவே அபுபக்கர் மீது அவரது மனைவி ஆயிஷாபி திரூர் குடும்பநல கோர்ட்டில் புகார் செய்தார். அவரது மனுவை விசாரித்த கோர்ட்டு, அபுபக்கருக்கு பிடிவாரண்டு பிறப்பித்தது. அது தொடர்பாக பொன்னானி போலீசார் விசாரணை நடத்தி அபுபக்கரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    அவர்கள் ஆயிஷாபியின் கணவர் அபுபக்கரை கைது செய்வதற்கு பதிலாக, பக்கத்து வீட்டில் வசித்து வரும் மற்றொரு அபுபக்கரை கைது செய்தனர். மனைவியுடன் தகராறு செய்தது தொடர்பாக இவர் மீது வழக்கு இருக்கிறது. அந்த வழக்கில் தான் தன்னை கைது செய்திருக்கின்றனர் என்று அந்த நபர் நினைத்துக் கொண்டார்.

    போலீஸ் நிலையத்துக்கு சென்றதும் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டதால் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீசார் அவரிடம் தெரிவித்தனர். அது தொடர்பான ஆவணங்களை அபுபக்கர் பார்த்தது, இது எனது மீதான வழக்கு இல்லை எனவும், தனது மீது பிடிவாரண்டு எதுவும் கிடையாது என்றும் தெரிவித்தார்.

    ஆனால் அவர் கூறியதை போலீசார் கேட்காமல், அவரை திரூர் குடும்பநல கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது ரூ. 4 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் தன்னால் அபராதம் செலுத்த முடியாது என்று அபுபக்கர் கூறினார். இதையடுத்து அவரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

    அதன்பேரில் அபுபக்கர் சிறையில் அடைக்கப்பட்டார். அபுபக்கர் சிறையில் அடைக்கப்பட்ட விவரம் அவரது குடும்பத்தினருக்கு தெரியவந்தது. அவர்கள் தலையிட்டு விசாரணை நடத்தியபோது ஆயிஷாபியின் கணவர் அபுபக்கருக்கு பதிலாக பக்கத்து வீட்டு அபுபக்கரை போலீசார் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டது தெரியவந்தது.

    இரு அபுபக்கரின் தாய் மற்றும் தந்தையின் பெயர் ஒரே பெயராகும். இதனால் உண்மையான நபருக்கு பதிலாக மற்றொரு நபரை போலீசார் கைது செய்து விட்டது தெரியவந்தது. இதுபற்றி தவறுதலாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அபுபக்கரின் உறவினர்கள் கோர்ட்டில் கூறினர். மேலும் அதற்கான ஆவணங்களை கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.

    இதையடுத்து அபுபக்கரை போலீசார் தவறுதலாக கைது செய்து சிறையில் அடைத்தது உறுதியானது. ஆகவே தவறுதலாக சிறையில் அடைக்கப்பட்ட அபுபக்கரை உடனடியாக விடுதலை செய்ய நீதிபதி உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் அபுபக்கர் 4 நாட்களுக்கு பிறகு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

    விசாரணை நடத்தியபோது அபுபக்கர், அந்த அபுபக்கர் நான் இல்லை என்று கூறியிருக்கிறார். ஆனால் அதனை போலீசார் கண்டுகொள்ளாமல் நடந்துகொண்டதே இந்த தவறுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. தன்னை தவறுதலாக கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கோர்ட்டை அபுபக்கர் அணுக உள்ளார்.

    • 5000 இந்தியர்கள் ஆள் கடத்தல் கும்பல்கள் மூலம் கம்போடியாவுக்கு கடத்தப்பட்ட சம்பவம் கடந்த மாதம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    5000 இந்தியர்கள் ஆள் கடத்தல் கும்பல்கள் மூலம் கம்போடியாவுக்கு கடத்தப்பட்ட சம்பவம் கடந்த மாதம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று கம்போடியாவில் 300 இந்தியர்கள் தங்கள் கையாள்களுக்கு எதிராக 'கிளர்ச்சி' செய்ததாக ஆந்திரப் பிரதேச காவல்துறை தெரிவித்துள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் வெளி நாட்டில் கைது செய்யப்பட்டனர்.

    ஆந்திராவைச் சேர்ந்த 150 இளைஞர்கள் கம்போடியாவில் =ஒரு வருடமாக சிக்கிக் கொண்டுள்ளனர், அங்கு சீன ஏஜெண்டுகளால் சிறைபிடிக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு மற்றும் டாஸ்க் கேம் மோசடி, பங்குச் சந்தை மோசடி உள்ளிட்டவற்றை செய்ய சீன ஏஜெண்டுகளால் வற்புறுத்தப் படுகிறார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

    விசாகப்பட்டினம் போலீஸ் கமிஷனர் ஏ ரவிசங்கர் கூறுகையில், இந்த கடத்தப்பட்ட இந்தியர்கள் கம்போடியாவில் உள்ள ஜின்பே மற்றும் கம்பவுண்ட், சிஹானூக்வில் ஆகிய இடங்களில் பெரிய அளவிலான கலவரங்களை ஏற்படுத்தினர். இது சைபர் குற்றங்களுக்கான மையமாக கூறப்படுகிறது.

    காவல்துறையின் எண்களுக்கு போன் செய்து அதுதொடர்பான வீடியோக்களை அனுப்பியுள்ளனர். நேற்று சுமார் 300 இந்தியர்கள் கம்போடியாவில் தங்கள் ஏஜெண்டுகளுக்கு எதிராக பெரிய அளவில் 'கிளர்ச்சி' செய்தனர் என்று தெரிவித்தார். மேலும் அவர்களை மீட்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    முன்னதாக சிங்கப்பூரில் டேட்டா என்ட்ரி வேலை வாங்கித்தருவதாக கூறி இந்தியாவைச் சேர்ந்த இளைஞர்களைக் கடத்துவதாக மே 18 அன்று, விசாகப்பட்டினம் காவல் துறையினர் சுக்கா ராஜேஷ், எஸ் கொண்டலா ராவ் மற்றும் எம் ஞானேஷ்வர் ராவ் ஆகியோரை மனித கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்தது குறிப்பிடத்தக்கது. 

    • சிறார் என்பதால் 15 மணிநேரத்தில் ஒரு சில நிபந்தனைகளை விதித்து ஜாமீன் வழங்கி உள்ளது நீதிமன்றம்.
    • குடிக்க அனுமதித்த அவன் பணக்கார தந்தைக்கு என்ன நிபந்தனை கொடுக்க போகிறதோ நம் நீதிமன்றங்கள்.

    மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் கல்யாணி நகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை போர்ச் கார் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த அஸ்வினி கோஸ்டா சம்பவ இடத்திலேயே இறந்தார். அனிஸ் துதியா மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். அந்த காரை 17 வயது சிறுவன் ஓட்டி வந்துள்ளார். விபத்தை ஏற்படுத்திய சிறுவன் புனேவை சேர்ந்த பிரபல கட்டுமான தொழிலதிபரின் மகன் என தெரிய வந்துள்ளது. அவரை விபத்து நிகழ்ந்த இடத்தில் பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். பின்னர் காவலர்கள் வசம் ஒப்படைத்தனர்.

    அந்த சிறுவன் மதுபோதையில் இருந்ததும், பார்ட்டி முடித்து வீடு திரும்பிய போது காரை வேகமாக இயக்கியுள்ளார் என்பதும், ஒரு கட்டத்தில் கார் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் முன்னாள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளார் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    சிறார் என்பதால் 15 மணிநேரத்தில் ஒரு சில நிபந்தனைகளை விதித்து ஜாமீன் வழங்கி உள்ளது நீதிமன்றம்.

    அவருக்கு விழிப்புணர்வு கொடுக்கும் வகையில் நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் கிடைத்துள்ளதாக அந்த சிறுவனின் வழக்கறிஞர் பிரசாந்த் பாட்டீல் தெரிவித்துள்ளார்.

    நிபந்தனையில் கூறியிருப்பதாவது,

    போக்குவரத்து காவலர்களுடன் 15 நாட்கள் பணியாற்ற வேண்டும், மனநல சிகிச்சை பெற வேண்டும், சாலை விபத்தின் விளைவு மற்றும் அதற்கான தீர்வு என்ற தலைப்பில் 300 வார்த்தைகளில் கட்டுரை எழுத வேண்டும், போதை ஒழிப்பு மையத்தில் கவுன்சிலிங் பெற வேண்டும், எதிர்காலத்தில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    வயது குறைந்த மகனை வாகனம் ஓட்ட அனுமதித்ததற்காக அவரது தந்தை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..

    17 வயது சிறுவனுக்கு வெறும் 15 மணி நேரத்தில் ஜாமீன் வழங்கப்பட்ட சம்பவம் பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது. அந்தச் சிறுவனுகு சமூக சேவை, போதை விழிப்புணர்வு கட்டுரைகள் எழுதுதல் போன்ற தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளதும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

    செய்தி வெளியாகி பூதாகரமானதால் சிறாரின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார், மகனுக்கே ஜாமீன் நிபந்தனை கட்டுரை எழுத வேண்டும் என்றால் சட்டவிரோதம் என தெரிந்தும் தன் மகனுக்கு காரை ஓட்ட கொடுத்த, அவன் குடிக்க அனுமதித்த அவன் பணக்கார தந்தைக்கு என்ன நிபந்தனை கொடுக்க போகிறதோ நம் நீதிமன்றங்கள்.

    சாமானிய, ஏழை மக்களுக்கு வழக்கு, தண்டனை என வழங்கும் இந்த நீதிமன்றங்கள், கோடி கணக்கில் ஊழல் செய்தவர்கள், கொலை செய்தவர்கள், கொள்ளை அடித்தவர்கள் என்று பல்வேறு வழக்குகளில் இருக்கும் பண படைத்தவர்களை இந்த சட்டமும், போலீஸூம் கண்டு காணாமல் இருக்கிறார்கள் என்ற விமர்சனம் சமூக வலைதளங்களில் எழுந்து வருகிறது.

    • குஜராத்தை சேர்ந்த பயங்கரவாத தடுப்பு பிரிவினர் சுற்றி வளைத்து கைது.
    • கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள் 4 பேரிடம் தீவிர விசாரணை.

    அகமதாபாத் விமான நிலையத்தில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இலங்கையை சேர்ந்த 4 பேரை குஜராத்தை சேர்ந்த பயங்கரவாத தடுப்பு பிரிவினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

    இந்நிலையில், கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள் 4 பேரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் நடந்த இந்த சம்பவத்தால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

    • அறையில் இருந்த போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    • போதை பொருட்கள் வியாபாரிகள் உள்ளிட்ட விவரங்களை போலீசார் சேகரித்துள்ளனர்.

    திருவனந்தபுரம்

    கேரள மாநிலம் கருகப்பள்ளி பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் அந்த லாட்ஜில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது ஒரு அறையில் கேரள மாநிலம் வரபுழாவை சேர்ந்த மாடல் அழகியான அல்கா போனி(வயது22), இடுக்கியை சேர்ந்த ஆஷிக் அன்சாரி(22), சூரஜ்(26), பாலக்காட்டை சேர்ந்த ரஞ்சித்(24), முகமது அசார்(18), திருச்சூரை சேர்ந்த அதுல்(18) ஆகிய 6 பேர் தங்கியிருந்தனர். அந்த அறையில சோதனை செய்தபோது கொக்கைன், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் இருந்தன.

    இதையடுத்து மாடல் அழகி உள்பட 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களின் அறையில் இருந்த போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட போது மாடல் அழகி உள்ளிட்ட 6 பேரும் போதையில் இருந்துள்ளனர். அவர்கள் போதை பொருட்களை பெங்களூருவில் இருந்து கொண்டு வந்து கேரளாவில் விற்பனை செய்து வந்திருக்கின்றனர்.

    அவர்களது செல்போன் மூலம் அவர்களுடன் தொடர்பில் இருந்த போதை பொருட்கள் வியாபாரிகள் உள்ளிட்ட விவரங்களை போலீசார் சேகரித்துள்ளனர். அதனடிப்பைடையில் இந்த வழக்கில் மேலும் சிலரை தேடி வருகின்றனர். 

    • கடந்த 2017-ம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடந்தது.
    • ஜாஸ்மின் போலீசில் புகார் அளித்தார்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் அடிலாபாத் கே.ஆர்.கே. காலனியை சேர்ந்தவர் அப்துல் அதீக் (வயது 32). இவருடைய மனைவி ஜாஸ்மின் கடந்த 2017-ம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடந்தது. 2 மகள்கள் உள்ளனர்.

    கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் அதீக் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதனை தொடர்ந்து ஜாஸ்மின் கணவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இதனால் ஆத்திரமடைந்த அதீக் வாட்ஸ் அப்பில் முத்தலாக் ஆடியோ பதிவு செய்து ஜாஸ்மினுக்கு அனுப்பி வைத்தார்.

    இது குறித்து ஜாஸ்மின் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அப்துல் அதீக்கை கைது செய்தனர்.

    • வியாபாரம் செய்த பணத்தை மாமூலாக கொடு என்று கூறி மிரட்டினான்.
    • பொதுமக்கள் உதவியுடன் வாலிபரை மடக்கிப் பிடித்தனர்.

    ராயபுரம்:

    பழைய வண்ணாரப் பேட்டை சிங்காரத்தோட்டம் 8-வது தெருவை சேர்ந்தவர் மேவாரம். இவர் அதே தெருவில் மொத்த ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். நேற்று இரவு இவரது கடைக்கு போதை

    யில் வந்த வாலிபர் ஒருவர் 4 ஜீன்ஸ் பேண்ட் வாங்கிவிட்டு பணத்தை கொடுக்கவில்லை. இதுபற்றி ஊழியர்கள் கேட்டபோது கத்தியை காட்டி மிரட்டி வியாபாரம் செய்த பணத்தை மாமூலாக கொடு என்று கூறி மிரட்டினான்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த கடைஊழியர்கள் அவரை கண்டித்தனர். இதற்கிடையே சத்தம் கேட்டு அருகில் உள்ள கடையில் இருந்த வியாபாரிகள் திரண்டு வந்தனர். உடனே அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தார். ஆனாலும் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் பின்தொடர்ந்து விரட்டி சென்ற வியாபாரிகள், பொதுமக்கள் உதவியுடன் அந்த வாலிபரை மடக்கிப் பிடித்தனர்.

    இதுகுறித்து ராயபுரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து மாமூல் கேட்டு மிரட்டிய வாலிபரை கைது செய்தனர். விசாரணையில் அவர், வியாசர்பாடி சர்மா நகரை சேர்ந்த சஞ்சய் (23) என்பது தெரிந்தது. அவர் மீது 4 அடிதடி வழக்குகள் உள்ளன. 

    • ஒரு ஆவணத்திற்கு ரூ.10 வசூலித்து ரூ.5ஐ கமிஷனாகவும் எடுத்துக் கொண்டுள்ளார்.
    • ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை.

    5 ரூபாய்க்கு இன்று எந்த மதிப்பும் இல்லை என்று நீங்கள் கருதுவீர்கள், ஆனால் அது ஜாம்நகரில் உள்ள மோர்கண்டா கிராமத்தைச் சேர்ந்த ஒரு கணினி ஆபரேட்டரை சிறையில் அடைத்துள்ளது. விவசாயிகளுக்கு அரசு வருவாய் ஆவணங்களை வழங்க ரூ.5 லஞ்சம் வாங்கியதாக நவீன்சந்திர நகும் என்பவதை லஞ்ச தடுப்புத் துறை கைது செய்துள்ளது.

    46 வயதான நகும், 2013ம் ஆண்டு முதல் கிராமத்தில் கணினி தொழில்முனைவோராக (VCE) இரண்டு மணி நேரம் மட்டும் பணியாற்றி வந்தார்.

    பொதுவாக ஒவ்வொரு ஆவணத்திற்கும், விண்ணப்பதாரரிடம் இருந்து ரூ. 5 பெறுவதாகவும், இதில், ரூ. 3 நகுமிற்கும் ரூ. 2 அரசாங்கத்திற்கும் கொடுக்கப்படுகிறது.

    ஆனால், நகும் ஒரு ஆவணத்திற்கு ரூ.10 வசூலித்து ரூ.5ஐ கமிஷனாகவும் எடுத்துக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக கிடைத்த புகாரை அடுத்து லஞ்ச தடுப்பு துறையினர் நகுமை கைது செய்துள்ளனர்.

    மேலும், நகும் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    டிஜிபி (சட்டம் மற்றும் ஒழுங்கு) மற்றும் ஏசிபி குஜராத் இயக்குனரான ஷம்ஷேர் சிங் கூறறுகையில், "லஞ்சத் தொகை சிறியதாக இருந்தாலும், கிராமப்புறங்களில் அன்றாடம் நடக்கும் ஊழல் நடவடிக்கைகளைத் தடுக்கும் முயற்சியை இது பிரதிபலிக்கிறது" என்றார்.

    ×