search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Article"

    • சிறார் என்பதால் 15 மணிநேரத்தில் ஒரு சில நிபந்தனைகளை விதித்து ஜாமீன் வழங்கி உள்ளது நீதிமன்றம்.
    • குடிக்க அனுமதித்த அவன் பணக்கார தந்தைக்கு என்ன நிபந்தனை கொடுக்க போகிறதோ நம் நீதிமன்றங்கள்.

    மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் கல்யாணி நகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை போர்ச் கார் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த அஸ்வினி கோஸ்டா சம்பவ இடத்திலேயே இறந்தார். அனிஸ் துதியா மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். அந்த காரை 17 வயது சிறுவன் ஓட்டி வந்துள்ளார். விபத்தை ஏற்படுத்திய சிறுவன் புனேவை சேர்ந்த பிரபல கட்டுமான தொழிலதிபரின் மகன் என தெரிய வந்துள்ளது. அவரை விபத்து நிகழ்ந்த இடத்தில் பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். பின்னர் காவலர்கள் வசம் ஒப்படைத்தனர்.

    அந்த சிறுவன் மதுபோதையில் இருந்ததும், பார்ட்டி முடித்து வீடு திரும்பிய போது காரை வேகமாக இயக்கியுள்ளார் என்பதும், ஒரு கட்டத்தில் கார் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் முன்னாள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளார் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    சிறார் என்பதால் 15 மணிநேரத்தில் ஒரு சில நிபந்தனைகளை விதித்து ஜாமீன் வழங்கி உள்ளது நீதிமன்றம்.

    அவருக்கு விழிப்புணர்வு கொடுக்கும் வகையில் நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் கிடைத்துள்ளதாக அந்த சிறுவனின் வழக்கறிஞர் பிரசாந்த் பாட்டீல் தெரிவித்துள்ளார்.

    நிபந்தனையில் கூறியிருப்பதாவது,

    போக்குவரத்து காவலர்களுடன் 15 நாட்கள் பணியாற்ற வேண்டும், மனநல சிகிச்சை பெற வேண்டும், சாலை விபத்தின் விளைவு மற்றும் அதற்கான தீர்வு என்ற தலைப்பில் 300 வார்த்தைகளில் கட்டுரை எழுத வேண்டும், போதை ஒழிப்பு மையத்தில் கவுன்சிலிங் பெற வேண்டும், எதிர்காலத்தில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    வயது குறைந்த மகனை வாகனம் ஓட்ட அனுமதித்ததற்காக அவரது தந்தை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..

    17 வயது சிறுவனுக்கு வெறும் 15 மணி நேரத்தில் ஜாமீன் வழங்கப்பட்ட சம்பவம் பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது. அந்தச் சிறுவனுகு சமூக சேவை, போதை விழிப்புணர்வு கட்டுரைகள் எழுதுதல் போன்ற தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளதும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

    செய்தி வெளியாகி பூதாகரமானதால் சிறாரின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார், மகனுக்கே ஜாமீன் நிபந்தனை கட்டுரை எழுத வேண்டும் என்றால் சட்டவிரோதம் என தெரிந்தும் தன் மகனுக்கு காரை ஓட்ட கொடுத்த, அவன் குடிக்க அனுமதித்த அவன் பணக்கார தந்தைக்கு என்ன நிபந்தனை கொடுக்க போகிறதோ நம் நீதிமன்றங்கள்.

    சாமானிய, ஏழை மக்களுக்கு வழக்கு, தண்டனை என வழங்கும் இந்த நீதிமன்றங்கள், கோடி கணக்கில் ஊழல் செய்தவர்கள், கொலை செய்தவர்கள், கொள்ளை அடித்தவர்கள் என்று பல்வேறு வழக்குகளில் இருக்கும் பண படைத்தவர்களை இந்த சட்டமும், போலீஸூம் கண்டு காணாமல் இருக்கிறார்கள் என்ற விமர்சனம் சமூக வலைதளங்களில் எழுந்து வருகிறது.

    • சர்வதேச தரத்தில் 100 கட்டுரைகள் எதிர்வரும் டிசம்பரில் உள்ளீடு செய்யப்படும்.
    • அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 28-ந் தேதி மாநாடு நடத்தப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக அறிவியல் தமிழ் மற்றும் தமிழ்வளர்ச்சித்துறையும் தமிழ் விக்கிப்பீடியாவும் இணைந்து கல்வியாளர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி ஒருநாள் பயிலரங்கு நடைபெற்றது.

    தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறைப் பேராசிரியர் முனைவர் இந்து வரவேற்றார்.

    வளர்தமிழ்ப்புல முதன்மையர் குறிஞ்சிவேந்தன் முன்னிலை வகித்தார்.

    இந்த பயிலரங்கை துணைவேந்தர் திருவள்ளுவன் தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசியதாவது;-

    விக்கிப்பீடியா என்னும் இணையப்பக்கத்தில் பொதிந்துள்ள தமிழ்க் கருத்து கருவூலங்களை இன்றைக்கு உலகின் எந்த மூலையில் வாழும் தமிழரும் வாசித்தறியும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இருபதாண்டுகளுக்கு முன்புவரை இத்தகைய வசதிகள் இல்லாத நாட்களில், ஒரு சிறு தகவலுக்காகக் கூட நூலகங்களைத் தேடி ஓடிக் கொண்டிருந்தோம். ஆனால் இன்றைக்கு உள்ளங்கையில் தகவல்கள் வந்து அமரும் சூழலை விக்கிப்பீடியா தமிழ்ப்பக்கம் உருவாக்கியுள்ளது.

    நாம் இத்தனை முன்னேற்றங்களைக் கொண்டிருந்தாலும், விக்கிப்பீடியாவின் ஆங்கிலப்பக்கத்துக்கு இணையாக, தமிழையும் கொண்டுச் செல்ல வேண்டிய கடமை உள்ளது.

    அதனை மேம்படுத்தும் வகையில், தமிழ்ப்பல்கலைக்கழக ஆய்வாளர்களைக் கொண்டு.

    தமிழில் இதுவரை வெளிவராத தகவல்களை மையப்படுத்தி, சர்வதேசத் தரத்தில் 100 கட்டுரைகள் எதிர்வரும் டிசம்பரில் உள்ளீடு செய்யப்படும்.

    விக்கிப்பீடியா தமிழ்த்தளத்தை வலிமையுடன் கட்டமைக்கும் வகையில், முதலாவது உலகத் தமிழ் விக்கிப்பீடியா மாநாட்டினை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 28-ந் தேதி தமிழ்ப் பல்கலைக்கழக அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை ஆகியவை இணைந்து தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக, அறிவியல் தமிழ் விக்கிப்பீடியா நிர்வாகப் பொறுப்பாளர் மூர்த்தி நோக்கவுரையையும், அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறைத் தலைவரும் பதிவாளருமான பேராசிரியர் தியாகராஜன் வாழ்த்துரையும் வழங்கினர்.

    இப்பயிலரங்கில் தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, நாமக்கல் மற்றும் கர்நாடக மாநில மைசூர் ஆகிய இடங்களில் உள்ள நிறுவனங்களில் இருந்து வந்திருந்த 80 கல்வியாளர்கள் மற்றும் 20 மாணவர்கள் உள்ளிட்டோருக்கு விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் உள்ளீடு செய்தல், புதிய தலைப்புகளில் வெளிவராக தரவுகளைச் சேர்த்தல் ஆகியவை குறித்துப் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைப் பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அலுவலர் முருகன் செய்திருந்தார்.

    விக்கிப்பீடியா சார்பில் பயிலரங்கினை முனைவர் மாரியப்பன் ஒருங்கிணைத்தார்.

    நிகழ்ச்சியின் நன்றியுரையை விக்கிப்பீடியா குழுமத்தைச் சேர்ந்த ஸ்ரீ பாலசுப்ரமணியன் கூறினார். 

    • ஆண், பெண் சொத்தில் சமபங்கு, சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் போன்றவற்றை விரிவாக எடுத்துக் கூறினார்.
    • சட்டத்தில் இருக்கும் சில ஆர்டிக்கிள் மற்றும் செக்சன்களை வரிசைபடுத்தி விளக்கினார்.

    மன்னார்குடி:

    மன்னார்குடி வட்ட சட்ட பணிகள் குழு மற்றும் ஏ.ஆர்.ஜெ. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியும் இணைந்து சட்ட விழிப்புணர்வு முகாமை கல்லூரியில் நடத்தியது. ஏ.ஆர்.ஜெ. கல்வி நிறுவனங்களின் துணை தலைவர் மற்றும் தாளாளர் டாக்டர் ஜீவகன் அய்யநாதன் முன்னிலை வகித்தார்.

    சிறப்பு விருந்தினராக மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி நீதித்துறை நடுவர் எண்:1 மன்னார்குடி அமிர்தீன் கலந்து கொண்டு இந்திய அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை ஒவ்வொரு மாணவரும் படிக்க வேண்டும். சட்டத்தில் இருக்கும் சில ஆர்டிக்கிள் மற்றும் செக்சன்களை வரிசைபடுத்தி விளக்கி கூறினார். சதி 'உடன்கட்டை ஏறுதல்' என்பது சட்டத்தால் உடைக்கப்பட்டது. குழந்தை திருமண ஒழிப்பு, ஆண், பெண் சொத்தில் சமபங்கு, சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் போன்றவற்றை விரிவாக எடுத்துக் கூறினார்.

    அனைத்து மாணவர்களும் போதை ஒழிப்பு உறுதி மொழியை நீதிபதி முன்பு எடுத்துக் கொண்டனர். முடிவில் மாணவர்கள் கேட்கும் சந்தேகங்களுக்கு தகுந்த விளக்கத்தை அளித்தார். இதில் மேலாண்மை கல்லூரி இயக்குநர் செல்வராஜ், அட்மிஷன் அலுவலர் துரை முருகன், என்.எஸ். ஒருங்கிணைப்பாளர் சந்துரு, துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக முதல்வர் முனைவர் வெங்கடேசன் வரவேற்புரை ஆற்றினார். துணை முதல்வர் முனைவர் மீனாட்சி சுந்தரம் நன்றி கூறினார்.

    ×