search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "legal awareness"

    • சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
    • பாதுகாப்பு சட்டத்தில் உள்ள சிக்கல்களை மாண வர்களுக்கு எடுத்துரைத்தார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் சட்ட விழிப்புணர்வு மன்றத்தின் சார்பில் டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டம் குறித்த கருத்தரங்கு நடந்தது.

    சட்ட விழிப்புணர்வு மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகபாண்டி வரவேற்றார். கணினி பயன்பாட்டுத் துறை பேராசிரியர் கணேஷ் பாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தனிநபர் தரவுகளை பாதுகாப்பாக பயன்படுத்துவது மற்றும் பாதுகாப்பு சட்டத்தில் உள்ள சிக்கல்களை மாண வர்களுக்கு எடுத்து ரைத்தார்.

    முடிவில் சட்ட விழிப்புணர்வு மன்ற ஒருங்கிணைப்பாளர் நிஷாந்த்குமார் நன்றி கூறினார்.

    • சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி தென்காசி மாவட்டம் ராமநாதபுரம் நாடார் கமிட்டி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
    • சட்டக் கல்லூரி மாணவ- மாணவிகள் இணையதள குற்றங்கள் பற்றி பள்ளி மாணவ- மாணவிகளிடம் எடுத்துக் கூறினர்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூரில் செயல்பட்டு வரும் எஸ். தங்கப்பழம் சட்டக் கல்லூரி சார்பில் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி தென்காசி மாவட்டம் ராமநாதபுரம் நாடார் கமிட்டி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    எஸ். தங்கப்பழம் கல்விக் குழுமங்களின் செயலாளர் எஸ்.டி. முருகேசன் ஆலோசனையின் பேரிலும் சட்டக்கல்லூரி முதல்வர் டாக்டர் ராஜலட்சுமி மற்றும் துணை முதல்வர் காளிச்செல்வி ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரிலும் நடைபெற்ற நிகழ்ச்சியில் உதவிப் பேராசிரியர் ஆரிபா தலைமையில் சட்டக் கல்லூரி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு மோட்டார் வாகனச் சட்டம், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், கல்வி பெறும் உரிமை பெண்களுக்கு எதிரான கொடுமைகள் மற்றும் இணையதள குற்றங்கள் பற்றி ராமநாதபுரம் நாடார் கமிட்டி மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகளிடம் எடுத்துக் கூறினர். முன்னதாக தலைமை ஆசிரியர் வரவேற்றார். முடிவில் தங்கப்பழம் சட்டக்கல்லூரி நிர்வாகம் சார்பில் உதவிப் பேராசிரியா ஆரிபா நன்றி கூறினார்.

    • அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு மாரத்தான் போட்டி இன்று நடந்தது.
    • முதல் பரிசாக ரூ.2 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.1500-ம், 3-ம் பரிசாக ரூ. ஆயிரமும் வழங்கப்பட்டது.

    காரைக்குடி

    தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழகம் (கும்ப கோணம்) லிட். காரைக்குடி மண்டலம் சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டம்-2005, விழிப்புணர்வு வாரத் தை முன்னிட்டு நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியை உதவி காவல் கண்காணிப் பாளர் ஸ்டாலின், அரசு போக்குவரத்துக் கழக காரை க்குடி பொது மேலாளர் சிங் காரவேலு ஆகியோர் காரைக்குடியில் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்து முதல் 3 இடங்களை பெற்ற மாணவர்களுக்கு ரொக்கப் பரிசுகளை வழங்கினர்.

    அக்டோபர் 5-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை தகவல் அறியும் உரிமைச் சட்ட விழிப்புணர்வு வார மாக கொண்டாடும் வகை யில் தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழகம் காரைக்குடி மண்டலம் சார் பில் தலைமை அலுவலகம் மற்றும் முக்கிய பேருந்து நிலையங்களில் தகவல் அறி யும் உரிமைச் சட்டம் குறித்து விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் மண்டல தலை மை அலுவலகத்திலும் கிளை அலுவலகங்களிலும் பணியாளர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று காலை 6 மணியளவில் மாரத்தான் போட்டி நடை பெற்றது.

    இந்த மாரத்தான் போட்டி யில் காரைக்குடி அழகப்பா உடற்கல்வியியல் கல்லூரி மாணவர்கள் , காரைக்குடி அரசு போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகத்தில் பயிற்சி பெறும் பணியாளர் கள் பங்கேற்றனர்.

    காரைக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள கண்ணதாசன் மணிமண்டபத்தில் இருந்து தொடங்கி சூடாமணிபுரம் , அழகப்பா பல்கலைக்கழகம், ஆரியபவன் உணவகம் வழியாக காரைக்குடி நக ராட்சி அலுவலகம் வரை மாரத்தான் போட்டி நடை பெற்றது.

    இந்த மாரத்தான் போட்டி யில் வெற்றி பெற்றவர் களுக்கு முதல் பரிசாக ரூ.2 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.1500-ம், 3-ம் பரிசாக ரூ. ஆயிரமும் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் துணை மேலாளர்கள் (வணிகம்) நாகராஜன், (தொழில்நுட்ப ம்) நலங்கிள்ளி , (நிர்வாகம்) தமிழ்மாறன், செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி சித்திர வேல் உள்பட போக்குவரத் துக் கழக அலுவலர்கள் மற் றும் பணியாளர்கள், காவல் துறை, மருத்துவத்துறை, அலுவலர்கள் பொதுமக்கள் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • தகவல் உரிமை சட்ட விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • சட்ட விழிப்புணர்வு பேரணி காந்தி மியூசியத்தில் தொடங்கியது.

    மதுரை

    இந்தியாவில் தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு வாரம் அக்டோபர் 5-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தமிழக அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மதுரையில் தகவல் அறியும் உரிமைச்சட்டம் விழிப்புணர்வு பேரணி நடந்தது.

    இதனை கலெக்டர் சங்கீதா கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடியும், விழிப்புணர்வு முழக்கங்களுடனும் பேரணியாக சென்றனர்.

    தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள்துறை சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்ட விழிப்புணர்வு பேரணி காந்தி மியூசியத்தில் தொடங்கியது. இந்த பேரணியை மதுரை மாவட்ட அலுவலர் வினோத்தொடங்கி வைத்தார்.உதவி மாவட்ட அலுவலர்கள் பாண்டி, சுரேஷ் கண்ணன், அனுப்பானடி, தல்லாகுளம், திருப்பரங்குன்றம், மீனாட்சி அம்மன் கோவில் தீயணைப்பு நிலைய அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் கல்லூரி மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • பெண்ணுரிமை பாதுகாப்புக்காக நிறைய சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.
    • சட்டப்பணிகள் ஆணைகள் குழு என்பது பாதிக்கப்பட்டவர்களுக்காக நீதித்துறையே இலவசமாக வக்கீலை நியமிக்கும்.

    நெல்லை:

    நெல்லை வண்ணார் பேட்டை எப்.எக்ஸ். என்ஜி னீயரிங் கல்லூரியில் இளை ஞர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.

    இதில் கல்லூரி முதல்வர் வேல்முருகன் கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்தார். உதவி பேராசிரியர் சதீஷ் குமார் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக நெல்லை முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் திரிவேணி கலந்து கொண்டு பேசியதாவது:-

    சட்டம் அனைவருக்கும் சமம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். பெண்ணுரிமை பாது காப்புக்காக நிறைய சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. பெண்களுக்கு வாய்ப்பு வழங்குவதற்காக 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க ப்பட்டு ள்ளது. பெண் குழந்தைகள் பாதுகாப்புக்காக போக்சோ போன்ற சட்டங்கள் உள்ளன.

    எனவே, சட்டத்தை பற்றி அனைவரும் தெரிந்து கொள்வது மிக அவசியம். குடும்ப நல சட்டம் பிரிவு -14 என்பதே பெண்ணுரிமை பாது காப்பதற்காக கொண்டு வரப்பட்டது. ஒரு பெண் தான் சார்ந்த முடிவுகளை தானே எடுப்பதற்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும். அதற்கு சட்டம் பாதுகாப்பு அளிக்கிறது. சமூகம் நன்றாக இருந்தால்தான் நாடு நன்றாக இருக்கும்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    அதனைத்தொடர்ந்து மூத்த வக்கீல் பிரபாகர் பேசுகையில், சட்டப்பணிகள் ஆணைகள் குழு என்பது பாதிக்கப்பட்டவர்களுக்காக நீதித் துறையே இலவசமாக வக்கீலை நியமிக்கும். இந்த அமைப்பில் எந்த பிரச்சி னையாக இருந்தாலும் இங்கு அணுகலாம்.

    அவர்கள் சமரச நடுவர் ஒருவரை நியமித்து இரு தரப்பினரையும் அழைத்து பேசி பிரச்சினையை சுமூகமாக தீர்வு காண்பார்கள். இதில் பெண்கள், பட்டியலினத்த வர், மாற்று திறனாளிகள் ஆகியோருக்கு இலவசமாக சட்ட உதவி வழங்கப்படும் என்றார்.

    நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் வேல்முருகன், வளாக மேலாளர் பேராசிரியர் சகாரியா காபிரியல், உதவி பேராசிரியர் சதீஷ்குமார் மற்றும் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை இளைஞர் செஞ்சிலுவை சங்க செயலாளர் டேவிட் ஐ லிங், அனைத்து சங்க பொறுப்பா ளர் சந்தியாகு ஸ்டீபன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • அமுதா பெண்களுக்கான சிறப்பு திட்டங்கள் மற்றும் சட்டங்கள் குறித்து பேசினார்.
    • சமூக நல அலுவலர் கார்த்திகா பெண்கள் தங்களை தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள் பற்றி கூறினார்.

    திருவாரூர்:

    மன்னார்குடியில் திருவாரூர் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில், முன்னாள் முதல்- அமைச்சர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி மகளிர் தையல் தொழில் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கான சமூக நலத் திட்டங்கள் மற்றும் சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    மாவட்ட சமூக நல அலுவலர் கார்த்திகா தலைமை தாங்கினார். திருச்சி மாவட்ட தொழில் கூட்டுறவு அலுவலர் சேதுராமன் முன்னிலை வகித்தார்.

    திருவாரூர் மாவட்ட தொழில் கூட்டுறவு அலுவலர் கவுதமன் வரவேற்றார். ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி சுமிதா திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பேசினார்.

    பாதுகாப்பு அலுவலர் அமுதா பெண்களுக்கான சிறப்பு திட்டங்கள் மற்றும் சட்டங்கள் குறித்து பேசினார்.

    மன்னார்குடி தலைமை ஆஸ்பத்திரி மனநல பிரிவு டாக்டர் புவனேஸ்வரி மன அழுத்தம் மற்றும் மனநல பாதிப்புகள் குறித்தும் அரசு ஆஸ்பத்திரிகளில் வழங்கப்படும் சிறப்பு மனநல சிகிச்சை குறித்தும் பேசினார்.

    மாவட்ட சமூக நல அலுவலர் கார்த்திகா பெண்கள் தங்களை தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள், பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் புதுமைப்பெண் திட்டம் குறித்தும் பேசினார்.

    • ஆண், பெண் சொத்தில் சமபங்கு, சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் போன்றவற்றை விரிவாக எடுத்துக் கூறினார்.
    • சட்டத்தில் இருக்கும் சில ஆர்டிக்கிள் மற்றும் செக்சன்களை வரிசைபடுத்தி விளக்கினார்.

    மன்னார்குடி:

    மன்னார்குடி வட்ட சட்ட பணிகள் குழு மற்றும் ஏ.ஆர்.ஜெ. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியும் இணைந்து சட்ட விழிப்புணர்வு முகாமை கல்லூரியில் நடத்தியது. ஏ.ஆர்.ஜெ. கல்வி நிறுவனங்களின் துணை தலைவர் மற்றும் தாளாளர் டாக்டர் ஜீவகன் அய்யநாதன் முன்னிலை வகித்தார்.

    சிறப்பு விருந்தினராக மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி நீதித்துறை நடுவர் எண்:1 மன்னார்குடி அமிர்தீன் கலந்து கொண்டு இந்திய அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை ஒவ்வொரு மாணவரும் படிக்க வேண்டும். சட்டத்தில் இருக்கும் சில ஆர்டிக்கிள் மற்றும் செக்சன்களை வரிசைபடுத்தி விளக்கி கூறினார். சதி 'உடன்கட்டை ஏறுதல்' என்பது சட்டத்தால் உடைக்கப்பட்டது. குழந்தை திருமண ஒழிப்பு, ஆண், பெண் சொத்தில் சமபங்கு, சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் போன்றவற்றை விரிவாக எடுத்துக் கூறினார்.

    அனைத்து மாணவர்களும் போதை ஒழிப்பு உறுதி மொழியை நீதிபதி முன்பு எடுத்துக் கொண்டனர். முடிவில் மாணவர்கள் கேட்கும் சந்தேகங்களுக்கு தகுந்த விளக்கத்தை அளித்தார். இதில் மேலாண்மை கல்லூரி இயக்குநர் செல்வராஜ், அட்மிஷன் அலுவலர் துரை முருகன், என்.எஸ். ஒருங்கிணைப்பாளர் சந்துரு, துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக முதல்வர் முனைவர் வெங்கடேசன் வரவேற்புரை ஆற்றினார். துணை முதல்வர் முனைவர் மீனாட்சி சுந்தரம் நன்றி கூறினார்.

    • வன்முறை ஒழிப்பு தின சட்ட விழிப்புணர்வு முகாம் மங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
    • முகாமில் பெண்களுக்கு எதிரான வன்முறை சார்ந்த சட்டங்களை பற்றி மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    மங்கலம் ;

    திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தின சட்ட விழிப்புணர்வு முகாம் மங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. முகாமிற்கு மங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கணேஷ்வரிநம்பி வரவேற்று பேசினார்.

    வழக்கறிஞர்கள் தினேஷ்குமார் ,தமிழழகன், சி.எம்.அருணாச்சலம், கோபிநாத்,ரேவதி கோபிநாத், மத்திய போலீஸ் நிலைய உதவி ஆய்வாளர் புனிதவள்ளி, மங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பைசல்ராஜா வாழ்த்தி பேசினர்.

    முகாமில் குற்றவியல் நீதித்துறை நடுவர் பழனிக்குமார் தலைமை தாங்கினார். முடிவில் முதுகலை ஆசிரியர் வாணீஸ்வரி நன்றி கூறினார். முகாமில் பெண்களுக்கு எதிரான வன்முறை சார்ந்த சட்டங்களை பற்றி மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    • நிகழ்ச்சியில், சிறைவாசிகளுக்கு மனநலம் பற்றிய கருத்துக்களும் மற்றும் சட்ட விழிப்புணர்வும் வழங்கப்பட்டது.
    • உடுமலை கிளைச்சிறையில் சிறைவாசிக்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.

    உடுமலை:

    உடுமலை கிளைச்சிறையில் சிறைவாசிக்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.உடுமலை வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவரும், சார்பு நீதிபதியுமான மணிகண்டன், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்-1 நீதிபதி விஜயகுமார், எண் -2 நீதிபதி மீனாட்சி, அரசு வக்கீல் சிவஞானம், வக்கீல் ஜூடுபிரபு மற்றும் கிளைச்சிறை கண்காணிப்பாளர் பாலச்சந்திரன உள்ளிட்டோர் பங்கேற்றனர்.நிகழ்ச்சியில், சிறைவாசிகளுக்கு மனநலம் பற்றிய கருத்துக்களும் மற்றும் சட்ட விழிப்புணர்வும் வழங்கப்பட்டது.

    • 75 சட்ட விழிப்புணர்வு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
    • சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    உடுமலை :

    உடுமலை வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் 75வது சுதந்திர தின அமுதப்பெருவிழா கொண்டாடும் வகையில் 75 சட்ட விழிப்புணர்வு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    கடந்த, 2ந் தேதி முதல் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. உடுமலை கச்சேரி வீதி நடுநிலைப்பள்ளி, மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி, காரத்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.மேலும், துங்காவி ஊராட்சி, சீலநாயக்கன்பட்டி, வஞ்சிபுரம், உடையார் பாளையம் கிராமங்களிலும் சிறப்பு முகாம்கள் நடந்தன. இதில் வக்கீல் சத்தியவாணி, வட்ட சட்ட பணிகள் குழு அலுவலர்கள், கிராம மக்கள், 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் பங்கேற்றனர்.

    • கோபால சமுத்திரம் கிராம உதயம் தலைமை அலுவலகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சட்டங்கள் குறித்து சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.
    • மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சார்பு நீதிபதி செந்தில் முரளி நன்றி கூறினார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் கிராம உதயம் சார்பில் கோபால சமுத்திரம் கிராம உதயம் தலைமை அலுவலகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சட்டங்கள் குறித்து சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.

    கருத்தரங்கை மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். கிராம உதயம் நிர்வாக இயக்குநர் சுந்தரேசன் முன்னிலை வகித்தார். நிர்வாக மேலாளர் மகேஷ்வரி வரவேற்று பேசினார். ஆலோசனை குழு உறுப்பினர் புகழேந்தி பகத்சிங், பகுதி பொறுப்பாளர்கள் ஜெபமணி, ஆறுமுகத்தாய் ஆகியோர் கருத்துரை ஆற்றினர். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சார்பு நீதிபதி செந்தில் முரளி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்கள் சார்பாக மனுஅளிக்கப்பட்டது. நிகழ்வில் கலந்து கொண்ட 500 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் மஞ்சப்பைகள் வழங்கப்பட்டது.

    பாலியல் குற்றங்கள் குறித்து பெண்கள் உடனுக்குடன் புகார் அளிக்க முன் வர வேண்டும் என்று நீதிபதி முத்து சாரதா அறிவுரை வழங்கினார்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில், ராஜபாளையத்தில் நடந்த பாலியல் தொந்தரவு தடுப்பு குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் 70 ஆசிரியைகள் மற்றும் 180 மாணவிகள் பங்கேற்றனர்.

    விருதுநகர் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் வட்ட சட்டப் பணிகள் குழு இணைந்து இந்த முகாமை நடத்தினர்.

    முடங்கியாறு சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற முகாமில் முதன்மை மாவட்ட நீதிபதி முத்துசாரதா உள்ளிட்ட நீதிபதிகள் மற்றும் வக்கீல்கள் பங்கேற்றனர்.

    இவர்களுக்கு, பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகள் குறித்தும், தொந்தரவு நடக்கும் இடம் மற்றும் சூழ்நிலைகள் குறித்தும், அதை தடுக்கும் வழி முறைகள் குறித்தும், குற்றம் புரிபவர்கள் மீது புகார் அளிக்க கூடிய இடங்கள் மற்றும் வழி முறைகள் குறித்தும், பாலியல் குற்றவாளிகள் மீது பதியப்படும் சட்டப் பிரிவுகள் மற்றும் அவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனைகள் குறித்தும் நீதிபதிகள் மற்றும் வக்கீல்கள் பேசினர்.

    சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முதன்மை மாவட்ட நீதிபதி முத்து சாரதா பேசும்போது, பாலியல் குற்றம் குறித்த சட்ட விழிப்புணர்வு பெண்களை விட ஆண்களுக்கு மிகவும் அவசியம். பாலியல் குற்றங்கள் குறித்து பெண்கள் அச்சப்பட்டு, தாமதமாக புகார் அளிக்கும் பட்சத்தில், அந்த தாமதமே குற்றவாளிக்கு சாதகமாக மாறிவிடும் வாய்ப்பு உள்ளது. எனவே பெண்கள் உடனுக்குடன் புகார் அளிக்க முன் வர வேண்டும். என்றார்.

    ×