தகவல் உரிமை சட்ட விழிப்புணர்வு பேரணி

தகவல் உரிமை சட்ட விழிப்புணர்வு பேரணி நடந்தது. சட்ட விழிப்புணர்வு பேரணி காந்தி மியூசியத்தில் தொடங்கியது.
தகவல் உரிமை சட்ட விழிப்புணர்வு பேரணி
Published on

மதுரை

இந்தியாவில் தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு வாரம் அக்டோபர் 5-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தமிழக அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மதுரையில் தகவல் அறியும் உரிமைச்சட்டம் விழிப்புணர்வு பேரணி நடந்தது.

இதனை கலெக்டர் சங்கீதா கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடியும், விழிப்புணர்வு முழக்கங்களுடனும் பேரணியாக சென்றனர்.

தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள்துறை சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்ட விழிப்புணர்வு பேரணி காந்தி மியூசியத்தில் தொடங்கியது. இந்த பேரணியை மதுரை மாவட்ட அலுவலர் வினோத்தொடங்கி வைத்தார்.உதவி மாவட்ட அலுவலர்கள் பாண்டி, சுரேஷ் கண்ணன், அனுப்பானடி, தல்லாகுளம், திருப்பரங்குன்றம், மீனாட்சி அம்மன் கோவில் தீயணைப்பு நிலைய அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் கல்லூரி மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com