search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளிகளில் சட்ட விழிப்புணர்வு முகாம்
    X
    கோப்புபடம்.

    பள்ளிகளில் சட்ட விழிப்புணர்வு முகாம்

    • 75 சட்ட விழிப்புணர்வு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
    • சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    உடுமலை :

    உடுமலை வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் 75வது சுதந்திர தின அமுதப்பெருவிழா கொண்டாடும் வகையில் 75 சட்ட விழிப்புணர்வு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    கடந்த, 2ந் தேதி முதல் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. உடுமலை கச்சேரி வீதி நடுநிலைப்பள்ளி, மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி, காரத்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.மேலும், துங்காவி ஊராட்சி, சீலநாயக்கன்பட்டி, வஞ்சிபுரம், உடையார் பாளையம் கிராமங்களிலும் சிறப்பு முகாம்கள் நடந்தன. இதில் வக்கீல் சத்தியவாணி, வட்ட சட்ட பணிகள் குழு அலுவலர்கள், கிராம மக்கள், 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் பங்கேற்றனர்.

    Next Story
    ×