search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Marathon competition"

    • கோவில் திருவிழாவில் போதை விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.
    • இந்த போட்டி யில் 400க்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீரா ங்கனைகள் கலந்து கொண்டனர்.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பத்தில் பகவதி அம்மன் கோவில் திருவிழா ஆண்டு தோறும் மிகவும் வெகு விமர்சையாக கொண்டா டப்பட்டு வருகிறது. நாளை நடைபெற உள்ள இந்த கோவில் திருவிழாவை முன்னிட்டு முதலாம் ஆண்டு போதை விழிப்புணர்வு குறித்த இரு பாலருக்கான மாரத்தான் போட்டி வெகு விமர்சையாக நடைபெற்றது.

    தற்போதைய கால கட்டத்தில் இளைஞர்கள் போதை பழக்கத்தில் இருந்து விடுபட வேண்டி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணமாக போதை விழிப்புணர்வு மாரத்தான் போட்டி தம்பிரான் கவுண்டர்கள் இளைஞர் அணி சார்பில் முதலாம் ஆண்டு போட்டி இன்று நடத்தப்பட்டது.

    இந்தப் போட்டியை சுரேஷ் என்ற சுருளிசாமி, நாட்டாமைக்காரர் மற்றும் ஒக்கலிகர் சமுதாய நிர்வாகிகள்ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ., தேனி தெற்கு விளையாட்டு மேம்பாட்டு அமைப்பாளர் வசந்தன், முன்னாள் கம்பம் நகர சேர்மன் சிவக்குமார் உள்ளிட்டோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த போட்டி யில் 400க்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீரா ங்கனைகள் கலந்து கொண்டனர்.

    கம்பம் வ. உ.சி. திடலில் தொடங்கி காமயகவு ண்ட ன்பட்டி, நாராயண த்தேவன்பட்டி, சுருளிப்பட்டி வழியாக மீண்டும் கம்பம் வ.உ.சி. திடலில் முடிவுற்றது. சுமார் 13 கி.மீ. தூரம் ஆண்களுக்கும், 5 கி.மீ. தூரம் பெண்களுக்கும் இந்த மாரத்தான் போட்டி நடைபெற்றது. போதை விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக நடைபெற்ற இந்த போட்டியில் வெற்றி பெற்று முதல் 10 இடங்களை பிடித்த வீரர்களுக்கு ரொக்க பரிசு மற்றும் கேடயம், சான்றிதழ்கள் வழங்க ப்பட்டது. போட்டியை ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்து வீரர், வீராங்கனைகளை உற்சாகப்படுத்தினர்.

    • அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு மாரத்தான் போட்டி இன்று நடந்தது.
    • முதல் பரிசாக ரூ.2 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.1500-ம், 3-ம் பரிசாக ரூ. ஆயிரமும் வழங்கப்பட்டது.

    காரைக்குடி

    தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழகம் (கும்ப கோணம்) லிட். காரைக்குடி மண்டலம் சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டம்-2005, விழிப்புணர்வு வாரத் தை முன்னிட்டு நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியை உதவி காவல் கண்காணிப் பாளர் ஸ்டாலின், அரசு போக்குவரத்துக் கழக காரை க்குடி பொது மேலாளர் சிங் காரவேலு ஆகியோர் காரைக்குடியில் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்து முதல் 3 இடங்களை பெற்ற மாணவர்களுக்கு ரொக்கப் பரிசுகளை வழங்கினர்.

    அக்டோபர் 5-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை தகவல் அறியும் உரிமைச் சட்ட விழிப்புணர்வு வார மாக கொண்டாடும் வகை யில் தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழகம் காரைக்குடி மண்டலம் சார் பில் தலைமை அலுவலகம் மற்றும் முக்கிய பேருந்து நிலையங்களில் தகவல் அறி யும் உரிமைச் சட்டம் குறித்து விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் மண்டல தலை மை அலுவலகத்திலும் கிளை அலுவலகங்களிலும் பணியாளர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று காலை 6 மணியளவில் மாரத்தான் போட்டி நடை பெற்றது.

    இந்த மாரத்தான் போட்டி யில் காரைக்குடி அழகப்பா உடற்கல்வியியல் கல்லூரி மாணவர்கள் , காரைக்குடி அரசு போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகத்தில் பயிற்சி பெறும் பணியாளர் கள் பங்கேற்றனர்.

    காரைக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள கண்ணதாசன் மணிமண்டபத்தில் இருந்து தொடங்கி சூடாமணிபுரம் , அழகப்பா பல்கலைக்கழகம், ஆரியபவன் உணவகம் வழியாக காரைக்குடி நக ராட்சி அலுவலகம் வரை மாரத்தான் போட்டி நடை பெற்றது.

    இந்த மாரத்தான் போட்டி யில் வெற்றி பெற்றவர் களுக்கு முதல் பரிசாக ரூ.2 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.1500-ம், 3-ம் பரிசாக ரூ. ஆயிரமும் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் துணை மேலாளர்கள் (வணிகம்) நாகராஜன், (தொழில்நுட்ப ம்) நலங்கிள்ளி , (நிர்வாகம்) தமிழ்மாறன், செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி சித்திர வேல் உள்பட போக்குவரத் துக் கழக அலுவலர்கள் மற் றும் பணியாளர்கள், காவல் துறை, மருத்துவத்துறை, அலுவலர்கள் பொதுமக்கள் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • கலெக்டர் தொடங்கி வைத்தார்
    • வெற்றி பெற்ற வர்களுக்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் பரிசு வழங்கினர்

    ராணிப்பேட்டை:

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ராணிப்பேட்டை மாவட்ட பிரிவின் சார்பில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு இன்று மாரத்தான் போட்டி நடைபெற்றது.

    ராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் போட்டியை மாவட்ட கலெக்டர் வளர்மதி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மாரத்தான் போட்டி 17 வயது முதல் 25 வயதிற்கு ட்பட்ட ஆண்கள் பிரிவிற்கு 8கி.மீ, பெண்கள் பிரிவிற்கு 5கி.மீ, 25 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் பிரிவிற்கு 10கி.மீ, பெண்கள் பிரிவிற்கு 5 கி.மீ என 4 பிரிவுகளில் தனித்தனியே நடைபெற்றது.

    ராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி முக்கிய பகுதிகள் வழியாக சென்று மீண்டும் அரசினர் மேல்நிலை ப்பள்ளியிலேயே முடிவும் வகையில் இந்த மாரத்தான் போட்டி நடைபெற்றது.

    மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களுடன் முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.3 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.2ஆயிரம், நான்காம் இடம் முதல் 10-ம் இடம் வரை பரிசுத் தொகை தலா ரூ.1000 வீதம் என அனைத்து பிரிவிற்கும் வழங்கப்ப ட்டது.

    இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ஞானசேகர், ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு , போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி உள்பட விளையாட்டு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    மாரத்தான் ஓட்டபோட்டி யில் வெற்றி பெற்ற வர்களுக்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் விஸ்வேஸ்வரய்யா, குமார் ஆகியோர் பரிசு வழங்கினர்.

    சுமார் 100 பேர் இந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடினர்.

    • 17 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் பிரிவில் ஆண்களுக்கு 8 கிலோ மீட்டர் தூரம் நடக்கிறது.
    • போட்டியில் பங்கேற்பவர்கள் விளையாட்டு சீருடையுடன் பங்கேற்க வேண்டும்

    திருப்பூர்:

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருப்பூர் பிரிவு சார்பில் அண்ணா மாரத்தான் போட்டிக்கு இணையான மாரத்தான் பொதுமக்கள், அரசு ஊழியர்கள், பள்ளி, கல்லூரி வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு 2 பிரிவுகளாக நடத்தப்பட உள்ளது. இந்த மாரத்தான் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி முன்பு வருகிற 7-ந் தேதி காலை 6.30 மணிக்கு தொடங்குகிறது.

    17 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் பிரிவில் ஆண்களுக்கு 8 கிலோ மீட்டர் தூரம் நடக்கிறது. சிக்கண்ணா அரசு கல்லூரி முன்பு தொடங்கி வஞ்சிப்பாளையம் ரோடு எஸ்.கே.எம். மகால் வரை சென்று திரும்பி சிக்கண்ணா அரசு கல்லூரி முன்பு முடிக்கப்படும். பெண்கள் பிரிவில் 5 கிலோ மீட்டர் தூரம், சிக்கண்ணா அரசு கல்லூரி முன்பு தொடங்கி வஞ்சிப்பாளையம் ரோடு கணேஷ் மகால் வரை சென்று திரும்பி சிக்கண்ணா அரசு கல்லூரி முன்பு முடியும்.

    25 வயதுக்கு மேற்பட்டவர்கள் பிரிவில் ஆண்களுக்கு 10 கிலோ மீட்டர் தூரம் போட்டி சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி முன்பு தொடங்கி வஞ்சிப்பாளையம் ரோடு இ.பி. அலுவலகம் வரை சென்று திரும்பி சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி முன் முடியும். பெண்கள் பிரிவில் 5 கிலோ மீட்டர் தூரம் சிக்கண்ணா அரசு கல்லூரி முன்பு தொடங்கி வஞ்சிப்பாளையம் ரோடு கணேஷ் மகால் வரை சென்று சிக்கண்ணா அரசு கல்லூரிக்கு முன் முடிவடையும்.

    இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.3 ஆயிரம், 3-வது பரிசாக 2 ஆயிரம், 4 முதல் 10 வரை வெற்றி பெறுபவர்களுக்கு தலா ரூ.1,000 அவரவர் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.

    போட்டியில் பங்கேற்பவர்கள் தங்களது வயது சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு எண் ஆகிய விவரங்களின் நகல் மற்றும் அசல் மருத்துவ சான்று ஆகியவற்றை சிக்கண்ணா அரசு கல்லூரி வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் அளிக்கலாம். மேலும் போட்டி நடக்கும் இடத்தில் அளிக்கலாம். அதன்பிறகே தனி எண் வழங்கப்படும். போட்டியில் பங்கேற்பவர்கள் விளையாட்டு சீருடையுடன் பங்கேற்க வேண்டும்.

    இந்த தகவலை திருப்பூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அதிகாரி ராஜகோபால் தெரிவித்துள்ளார்.

    • மாரத்தான் போட்டி 5 மற்றும் 10 கிலோ மீட்டர் என 2 பிரிவுகளாக நடைபெற்றது.
    • போட்டியில் மொத்தம் 5,000 பேர் முன்பதிவு செய்து கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    உலக இருதய தினம் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 29-ந் தேதி அனுசரிக்கப்படுகிறது. இருதய பாதுகாப்பை விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக காவேரி மருத்துவமனை சார்பில் நெல்லை மருத்துவக் கல்லூரி மைதானத்தில் மாரத்தான் போட்டி நடைபெற்றது.

    மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ேபாட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாநகர துணை மேயர் கே. ஆர். ராஜூ, நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் ரேவதி மற்றும் மாநகர போலீஸ் துணைகமிஷனர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    காவேரி மருத்துவமனை நிர்வாக மேலாளர் வைர முத்து வரவேற்று பேசினார். மாரத்தான் போட்டி 5 கிலோமீட்டர் மற்றும் 10 கிலோ மீட்டர் என 2 பிரிவுகளாக நடைபெற்றது.

    இப்போட்டி மருத்துவக் கல்லூரி மைதானத்தில் இருந்து தொடங்கி குறிப்பிட்ட பாதையை கடந்து பின்னர் மருத்துவக் கல்லூரி மைதானம் வந்தடையும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆண்கள் 2,300 பேர் மற்றும் பெண்கள் 2,700 பேர் என மொத்தம்5,000 பேர் முன்பதிவு செய்து கலந்து கொண்டனர்.

    10 கிலோ மீட்டர் போட்டி-ஆண்கள் பிரிவில் கலந்து கொண்டு முதல் பரிசை எஸ்.நிகில்குமார் ரூ.12,500, இரண்டாம் பரிசை எம். ரெங்கராஜ் ரூ. 10,000, மூன்றாம் பரிசை எம். அஜித்குமார் ரூ.7,500, 10 கிலோ மீட்டர்- பெண்கள் பிரிவு போட்டியில் முதல் பரிசை எஸ். ஐஸ்வர்யா ரூ. 12,500, இரண்டாம் பரிசை எஸ்.எம். ஹிதாயத் பவுசியா ரூ. 10,000, மூன்றாம் பரிசை சி.வேணிகா ரூ. 7,500-ஐ பெற்றனர்.

    5 கி.மீ போட்டி- ஆண்கள் பிரிவில் கலந்துகொண்டு முதல் பரிசை மூர்த்தி ரூ. 10,000, இரண்டாம் பரிசை ஸ்ரீனிவாசன் ரூ.7,500 மூன்றாம் பரிசை முத்து இசக்கி ரூ. 5,000 பெற்றனர்.

    5 கி.மீ. - பெண்கள் பிரிவில் முதல் பரிசை ஆர். ரம்யா ரூ.10,000, இரண்டாம் பரிசை எம்.சவுமியா ரூ. 7,500 மூன்றாம் பரிசை எம். பாக்கியவதி ரூ. 5,000. வெற்றி பெற்றவர்களுக்கு விழா மேடையிலேயே பரிசுத் தொகை வழங்கப் பட்டது. விழாவில் காவேரி மருத்துவமனை டாக்டர் மகபூப் சுபுகாணி, டாக்டர் லட்சுமணன், டாக்டர் டி.ஜே. பிரபாகர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை காவேரி மருத்துவமனை மருத்து வர்கள், ஊழியர்கள் செய்து இருந்தனர்.

    • போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
    • எய்ட்ஸ் கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் எய்ட்ஸ் விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி இன்று நடைபெற்றது.

    போட்டியை கூடுதல் கலெக்டர் சுகபுத்திரா கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொது மக்கள் 500-க்கும் மேற்பட்டவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு ஓடினர். திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் இருந்து தொடங்கிய மினி மாரத்தான் போட்டி, ஜெ.என் சாலை, சி.வி.நாயுடு சாலை வழியாக சென்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே நிறைவடைந்தது. போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் பிரேம்குமார், திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி டீன் சரஸ்வதி, சுகாதாரத்துறை இணை இயக்குனர் ஜவஹர்லால், சுகாதாரத்துறை துணை இயக்குனர் சேகர், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலர் மருத்துவர் கவுரிசங்கர் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • தேவகோட்டையில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடந்தது.
    • கண்டதேவி சென்று ராம் நகர் பேருந்து நிறுத்தம் சென்று முடிவடைந்தது.

    தேவகோட்டை

    தேவகோட்டை ரோட்டரி சங்கம் சார்பில் வீட்டுக்கு வீடு சோலார் திட்ட விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. பள்ளி மாணவர்கள், பள்ளி மாணவிகள், கல்லூரி மாணவர்கள் என மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியை காவல்துறை துணை கண்காணிப்பாளர் பார்த்திபன், தேவகோட்டை நகர் மன்ற தலைவர் சுந்தரலிங்கம் மற்றும் நகர் மன்ற முன்னாள் துணைத் தலைவர் பாலமுருகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். ரோட்டரி சங்கத் தலைவர் கதிரேசன் வரவேற்றார். மாரத்தான் தியாகிகள் பூங்கா தொடங்கி திருப்பத்தூர் சாலையில் வழியாக ராம் நகர் கண்டதேவி சென்று ராம் நகர் பேருந்து நிறுத்தம் முடிவடைந்தது. இப்போ போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மாணவிகள் சுமார் 1000 பேர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரொக்க பரிசுகளை மருத்துவர் சிவகுமார் மற்றும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்கள். ரோட்டரி சங்க நிர்வாகிகள் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.

    • விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது.
    • போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    கடலூர்:

    ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 11-ந்தேதி போதைப்பொருள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி போதைப் பொருள் ஒழிப்பு தினமான இன்று கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் மாரத்தான் போட்டியில் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் கலந்து கொண்டார்.

    இந்த போட்டியில் ஏராளமான பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு டவுன்ஹாலில் இருந்து பாரதி சாலை, பீச் ரோடு வழியாக சென்று கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் முடித்தனர். அப்போது கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு, போலீஸ் இன்ஸ்பெ க்டர்கள் குருமூர்த்தி, உதயகுமார் மற்றும் ஏராளமான போலீசார் கலந்து கொண்டனர்.

    • உலக சுற்றுச்சூழல் தினம் ஆண்டுதோறும் ஜூன் 5-ந்தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.
    • மராத்தான் போட்டி அண்ணா ஸ்டேடியத்தில் தொடங்கி ஆயுதப்படை மைதானம், பாளை பஸ் நிலையம் வழியாக மீண்டும் அண்ணா ஸ்டேடியத்தை வந்தடைந்தது.

    நெல்லை:

    உலக சுற்றுச்சூழல் தினம் ஆண்டுதோறும் ஜூன் 5-ந்தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நெல்லை மாவட்டத்தின் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி நதியை பாதுகாக்கவும், மாவட்டத்தின் மக்கள் அனைவரும் நம் மண்ணை பாதுகாக்க வேண்டும் என்றும் விழிப்புணர்வு வாசகங்களுடன் கூடிய சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மராத்தான் போட்டி பாளை அண்ணா விளையாட்டரங்கில் இன்று நடைபெற்றது.

    தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் இந்தியா சிமெண்ட்ஸ் சார்பில் நடந்த இந்த மராத்தான் அண்ணா ஸ்டேடியத்தில் தொடங்கி ஆயுதப்படை மைதானம், பாளை பஸ் நிலையம் வழியாக மீண்டும் அண்ணா ஸ்டேடியத்தை வந்தடைந்தது.

    சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபெற்ற இந்த போட்டியானது ஆண்கள், பெண்கள், மாணவ-மாணவிகள் என தனித்தனியாக பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டு நடத்தப்பட்டது. சிறியவர்கள் முதல் இளம் வயதினர், முதியவர்கள் வரையிலும் ஏராளமானோர் ஆர்வமுடன் கலந்து கொண்டு ஓடினர். இதில் முதல் இடத்தை பிடித்தவருக்கு ரூ. 5 ஆயிரமும், 2-ம் இடத்தை பிடித்தவருக்கு ரூ. 4 ஆயிரமும், 3-ம் இடத்தை பிடித்தவருக்கு ரூ. 3 ஆயிரமும் என ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டது.

    மேலும் 4 முதல் 50 இடங்கள் வரை பிடித்த வீரர்-வீராங்கனைகளுக்கு ரூ. 200 ஊக்க பரிசாக வழங்கப்பட்டது. மேலும் மராத்தான் போட்டிகளில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    • மாரத்தான் போட்டி பொதுப்பிரி வினர், திருநங்கைகள் என 4 பிரிவுகளாக தனித்தனி யாக நடைபெற்றது.
    • அனைத்து பிரிவினர்களுக்கும் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    விழுப்புரம், மே.2-

    விவிழுப்புரத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது மஞ்சப்ைப அவசியம்குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆகியவை சார்பில் மாவட்ட அளவி லான மினி மாரத்தான் போட்டி விழுப்புரத்தில் நடை பெற்றது. இப்போட்டி யை உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தொடங்கி வைத்தார். இந்த மாரத்தான் போட்டிகள், பள்ளி- கல்லூரி மாண வர்கள், பள்ளி- கல்லூரி மாணவிகள், பொதுப்பிரி வினர், திருநங்கைகள் என 4 பிரிவுகளாக தனித்தனி யாக நடைபெற்றது.

    விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடல் வளாகத்தில் இருந்து தொடங்கி திருச்சி நெடுஞ்சாலை, நான்கு முனை சந்திப்பு, மாம்பழப்பட்டு சாலை, கலெக்டர் அலுவலக பெருந்திட்டவளாக பின்புறம் உள்ள சாலை வழி யாக மாவட்ட காவல்துறை அணிவகுப்பு மைதானத்தில் முடி வடைந்தது. இப்போட்டி யில் பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகள், பொது மக்கள், திருநங்கை கள் என 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் ஒவ்வொரு பிரிவிலும் சிறப்பாக ஓடி இலக்கை அடைந்தவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரமும், 3-ம் பரிசாக ஆயிரம் மற்றும் 4 முதல் 10 வரை ரூ.500 வீதம் அனைத்து பிரிவினர்களுக்கும் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப் பட்டது. இதனை அமைச் சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் ஆகியோர் வழங்கி னார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர்பழனி, டாக்டர் பொன்.கவுதமசிகா மணி எம்.பி., எம்.எல்.ஏ. க்கள் புகழேந்தி, டாக்டர் லட்சு மணன், உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

    • மாரத்தான் ஓட்டம் 9 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று நிறைவு பெற்றது.
    • போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தகுதி சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் மீண்டும் மஞ்சப்பை இயக்கம் தொடர்பான மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரணடு மோகன்ராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி மராத்தான் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஏர்வாய்பட்டினத்தில் உள்ள ஸ்ரீ விவேகானந்தா மேல்நிலைப்பள்ளியில் இருந்து தொடங்கிய மாரத்தான் ஓட்டம் 9 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று நிறைவு பெற்றது. இதில் 206 ஆண்களும், 115 பெண்களும் என மொத்தம் 321 பேர் பங்கேற்றனர்.

    ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியே 9 கிலோ மீட்டர் தூரம் வரை நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு தனித்தனியே முதல் பரிசாக ரூ.4000-ம், 2-வது பரிசாக ரூ.3000-ம், 3-ம் பரிசாக ரூ.2000-ம், 4-ம் பரிசாக ரூ.1000-ம், 5-ம் பரிசாக ரூ.1000.ம், 6 மற்றும் 7-ம் பரிசாக ரூ.500-ம் வழங்கப்பட்டது. மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்டு நெகிழி பயன்பாடு தடை மற்றும் மாற்றுப்பொருட்கள் பயன்படுத்துவது மீண்டும் மஞ்சள்பை இயக்கம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்திய நபர்களுக்கு பங்கேற்பு சான்றிதழ்களும், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தகுதி சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் காமராஜ், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ஜெயகுமாரி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் செல்வகுமார், சுற்றுச்சூழல் உதவி பொறியாளர்கள் இளையராஜா, ராம்குமார், பிரபாகரன், உடற்கல்வி இயக்குநர்கள் பாலாஜி, ஹரிகரன், பாலுசாமி சுற்றுச்சூழல்த்துறை அலுவலர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

    • திருநங்ககைள் ஒரு பிரிவாக 3 கிலோமீட்டர் ஓட்டப்போட்டியும் நடத்தப்படவுள்ளது.
    • போட்டி தூரத்தை நிறவைு செய்யும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.

    விழுப்புரம்:

    விழுப்புரத்தில் தடை செய்யப்பபட்ட பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மாவட்ட அளவிலான மாரத்தான் போட்டி நடக்கிறது. இப்போட்டியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் நேற்று மாலை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கி பேசுகையில் விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள தளபதி திடல் வளாகத்தில் நாளை மறுநாள் மாலை 3.30 மணியளவில் நடைபெறும் மாரத்தான் போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

    இப்போட்டிகள் பள்ளி பொதுப்பிரிவினர் மற்றும் மாணவ- மாணவிகள் ஆண்கள் பெண்கள் என 4 பிரிவாக 5 கிலோ மீட்டர் தூரமும் திருநங்ககைள் ஒரு பிரிவாக 3 கிலோமீட்டர் ஓட்டப்போட்டியும் நடத்தப்படவுள்ளது. போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம் 2ம் பரிசாக ரூ.3 ஆயிரமும் 3ம் பரிசாக ரூ.1,000 மற்றும் 4 முதல் 10 வரை ரூ.500 வீதம் 5 பிரிவினர்களுக்கும் பரிசளிக்கப்படும். போட்டி தூரத்தை நிறவைு செய்யும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். இப்போட்டியில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவ- மாணவிகள் பொதுப்பிரிவினர்கள் திருநங்கைகள் பெருமளவில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டியும் மற்றும் சுற்றுச்சூழலை மாசுபடுமதும பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். போட்டியில கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களது பெயரை எம்.ஜி.ஆர் உள்விளையாட்டரங்கில் பதிவு செய்திடலாம். இவ்வாறு அவர் கூறினார். இக்கூட்டத்தில் நா.புகழேந்தி எம்.எல்.ஏ மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், கூடுதல் கலெக்டர் சித்ரா விஜயன் முன்னாள் நகரமன்ற தலைவர் ஜனகராஜ் மற்றும் வாலிபால் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×