search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jayendra school"

    • மாரத்தான் ஓட்டத்தில் 500- க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
    • போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு டாக்டர் காயத்ரி பரிசுகளை வழங்கினார்.

    நெல்லை:

    நெல்லை மகாராஜநகர் ஸ்ரீ ஜெயேந்திரா கல்விக் குழுமங்களின் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி சிறப்பு மாரத்தான் போட்டி நடைபெற்றது. ஜெயேந்திரா கல்விக் குழுமங்களின் இயக்குனர் ஜெயேந்திரன் மணி தலைமை தாங்கினார். பள்ளியின் முதல்வர் ஜெயந்தி ஜெயேந்திரன் முன்னிலை வகித்தார்.

    மாவட்ட உடற்கல்வி அலுவலர் கிருஷ்ண சக்ரவர்த்தி சிறப்பு விருந்தி னராக கலந்து கொண்டு சிறப்பு மாரத்தான் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    500- க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்ட இந்த மாரத்தான் ஓட்டம் ஜெயேந்திரா பள்ளியில் தொடங்கி அன்புநகர், பெருமாள்புரம் கார்த்திக் நர்சிங் ஹோம் வழியாக சென்று,பெருமாள்புரம் தபால்நிலையம், பெருமாள்புரம் ரெயில்வே பீடர் ரோடு வழியாக மீண்டும் பள்ளியை வந்த டைந்தது.

    சிறப்பு விருந்தினராக சுதர்சன் மருத்துவமனையை சேர்ந்த டாக்டர் காயத்ரி கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ்களை வழங்கினார். ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் ஜெயந்தி ஜெயேந்திரன், ஆசிரியர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • சுரண்டை ஸ்ரீ ஜெயேந்திரா பள்ளி மாணவிகள் முதலிடம் பெற்று மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.
    • வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளி டிரஸ்டி, தாளாளர், முதல்வர் ஆகியோர் பாராட்டினர்.

    சுரண்டை:

    வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள் பாவூர்சத்திரம் த.பி.சொக்கலால் பள்ளியில் நடைபெற்றது. போட்டியில் வட்டாரத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் கலந்து கொண்டன. அதில் கைப்பந்து போட்டியில் சுரண்டை ஸ்ரீ ஜெயேந்திரா பள்ளி மாணவிகள் முதலிடம் பெற்று மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.

    தொடர்ந்து கடந்த 21-ந்தேதி நடைபெற்ற மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில் வட்டார அளவில் வெற்றி பெற்ற அனைத்து பள்ளிகளும் கலந்து கொண்டன. அதிலும் ஜெயேந்திரா பள்ளி மாணவிகள் தனது முழுத்திறமையை வெளிப்படுத்தி முதலிடம் பெற்றனர்.இதன் மூலம் ஜெயேந்திரா பள்ளி மாணவிகள் தென்காசி மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவிகளையும், உடற்கல்வி ஆசிரியர்களையும் பள்ளியின் டிரஸ்டி, தாளாளர், முதல்வர் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் மாணவர்கள் பாராட்டினர்.

    • செங்கோட்டை ஜெயேந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி–யில் ஓசோன் தினவிழா கொண்டாடப்பட்டது.
    • பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஓசோன் படல பாதுகாப்பு என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி, ஓவியப் போட்டி, ரங்கோலி போட்டிகள் நடந்தது.

    செங்கோட்டை:

    செங்கோட்டை ஜெயேந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி–யில் ஓசோன் தினவிழா கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளா் ராம்மோகன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வா் ராணிராம்மோகன் முன்னிலை வகித்தார். பள்ளி ஆசிரியா் சம்ஸியா வரவேற்று பேசினார்.

    அதனைத்தொடா்ந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஓசோன் படல பாதுகாப்பு என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி, ஓவியப் போட்டி, ரங்கோலி போட்டிகள் நடந்தது. ஆசிரியர்களுக்கு பயர்லெஸ் குக்கிங் என்ற தலைப்பில் இயற்கை முறையில் சமையல் போட்டி நடந்தது. பேச்சு போட்டியில் 7-ம் வகுப்பு மாணவி பாலதண்யாவும், ஓவியப்போட்டியில் 9-ம் வகுப்பு மாணவா் ரபீக், ரங்கோலி போட்டியில் 10-ம் வகுப்பு மாணவி சமீரா, சண்முகப்பிரியா குழு முதல் பரிசுகளை பெற்றனா். சமையல் போட்டியில் ஆசிரியை செல்வக்குமாரி முதல் பரிசு பெற்றார்.

    ஆசிரியா் முருகன் சிறப்பு பரிசு பெற்றார். போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்கள், ஆசிரியா்களுக்கு பள்ளி தாளாளா் ராம்மோகன் பரிசுகள் வழங்கி வாழ்த்தி பேசினார். அதனைத்தொடா்ந்து பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவியா், ஆசிரியர்கள் மூலிகை மரக்கன்றுகளை நட்டு வைத்தனா்.

    விழாவில் பள்ளி தலைமைஆசிரியா் கார்த்திக் தொகுத்து வழங்கினார். விழா ஏற்பாடுகளை பள்ளி சுற்றுசூழல் ஒருங்கிணைப்பாளா் முருகன் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனா். ஆசிரியை ஜான்சி நன்றி கூறினார்.


    ×