search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வட்டார அளவிலான விளையாட்டு போட்டி: சுரண்டை ஜெயேந்திரா பள்ளி மாணவிகள் சாதனை
    X

    வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.


    வட்டார அளவிலான விளையாட்டு போட்டி: சுரண்டை ஜெயேந்திரா பள்ளி மாணவிகள் சாதனை

    • சுரண்டை ஸ்ரீ ஜெயேந்திரா பள்ளி மாணவிகள் முதலிடம் பெற்று மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.
    • வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளி டிரஸ்டி, தாளாளர், முதல்வர் ஆகியோர் பாராட்டினர்.

    சுரண்டை:

    வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள் பாவூர்சத்திரம் த.பி.சொக்கலால் பள்ளியில் நடைபெற்றது. போட்டியில் வட்டாரத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் கலந்து கொண்டன. அதில் கைப்பந்து போட்டியில் சுரண்டை ஸ்ரீ ஜெயேந்திரா பள்ளி மாணவிகள் முதலிடம் பெற்று மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.

    தொடர்ந்து கடந்த 21-ந்தேதி நடைபெற்ற மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில் வட்டார அளவில் வெற்றி பெற்ற அனைத்து பள்ளிகளும் கலந்து கொண்டன. அதிலும் ஜெயேந்திரா பள்ளி மாணவிகள் தனது முழுத்திறமையை வெளிப்படுத்தி முதலிடம் பெற்றனர்.இதன் மூலம் ஜெயேந்திரா பள்ளி மாணவிகள் தென்காசி மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவிகளையும், உடற்கல்வி ஆசிரியர்களையும் பள்ளியின் டிரஸ்டி, தாளாளர், முதல்வர் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் மாணவர்கள் பாராட்டினர்.

    Next Story
    ×