search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜெயேந்திரா கல்விக் குழுமங்களின் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி சிறப்பு மாரத்தான் போட்டி
    X

    சிறப்பு மாரத்தான் போட்டியை மாவட்ட உடற்கல்வி அலுவலர் கிருஷ்ணசக்ரவர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்த காட்சி.

    ஜெயேந்திரா கல்விக் குழுமங்களின் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி சிறப்பு மாரத்தான் போட்டி

    • மாரத்தான் ஓட்டத்தில் 500- க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
    • போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு டாக்டர் காயத்ரி பரிசுகளை வழங்கினார்.

    நெல்லை:

    நெல்லை மகாராஜநகர் ஸ்ரீ ஜெயேந்திரா கல்விக் குழுமங்களின் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி சிறப்பு மாரத்தான் போட்டி நடைபெற்றது. ஜெயேந்திரா கல்விக் குழுமங்களின் இயக்குனர் ஜெயேந்திரன் மணி தலைமை தாங்கினார். பள்ளியின் முதல்வர் ஜெயந்தி ஜெயேந்திரன் முன்னிலை வகித்தார்.

    மாவட்ட உடற்கல்வி அலுவலர் கிருஷ்ண சக்ரவர்த்தி சிறப்பு விருந்தி னராக கலந்து கொண்டு சிறப்பு மாரத்தான் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    500- க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்ட இந்த மாரத்தான் ஓட்டம் ஜெயேந்திரா பள்ளியில் தொடங்கி அன்புநகர், பெருமாள்புரம் கார்த்திக் நர்சிங் ஹோம் வழியாக சென்று,பெருமாள்புரம் தபால்நிலையம், பெருமாள்புரம் ரெயில்வே பீடர் ரோடு வழியாக மீண்டும் பள்ளியை வந்த டைந்தது.

    சிறப்பு விருந்தினராக சுதர்சன் மருத்துவமனையை சேர்ந்த டாக்டர் காயத்ரி கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ்களை வழங்கினார். ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் ஜெயந்தி ஜெயேந்திரன், ஆசிரியர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×