search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    நெமிலியில் மாரத்தான் போட்டி
    X

    நெமிலியில் மாரத்தான் போட்டி

    • பிளாஸ்டிக் மற்றும் போதை பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு
    • 5 கி.மீ. வரை நடந்தது

    நெமிலி:

    நெமிலியில் உள்ள நேரு யுகேந்திரா சங்கத்தின் சார்பில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் மற்றும் போதை பொருள் ஒழிப்பு குறித்து மினி மாரத்தான் போட்டிநடைபெற்றது.

    இதில் நெமிலி ஒன்றிய தலைவர் பெ.வடிவேலு, அரக்கோணம் போலீஸ் துணைசூப்பிரண்டு கிரிஷ் யாதவ் அசோக்ஆகியோர் நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து, பின்னர் மினி மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்து மினி மாரத்தான் போட்டியிலும் கலந்து கொண்டனர்.

    சுமார் 5 கிலோ மீட்டர் வரை நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்டனர்.

    வெற்றி பெற்றவர்களுக்கு நெமிலி மேற்கு ஒன்றிய தி.மு.க மாவட்ட பிரதிநிதி, காட்டுப்பாக்கம். தணிகைவேல் பரிசை வழங்கினார்.

    நிகழ்ச்சியில், நெமிலி ஒன்றிய துணைப் பெருந்த லைவர் ச.தீனதயாளன், சயனபுரம் ஊராட்சி மன்ற தலைவர், பவானி வடிவேலு, அசநெல்லிக்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர்சேகர், ஒன்றிய குழு உறுப்பினர்சங்கீதா கதிரவன், நெமிலி பேரூராட்சி மன்ற தலைவர்ரேணுகாதேவி சரவணன், நெமிலி பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் சந்திரசேகர், ஆசிரியர்.வேதையா, கவுன்சிலர்.சேகர், எம்.பி.பாபு, அப்துல் நசீர் ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×