search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    தேசிய ஒற்றுமை தின மராத்தான் போட்டி
    X

    தேசிய ஒற்றுமை தின மராத்தான் போட்டி

    • சிங்கம்புணரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மராத்தான் போட்டி நடந்தது.
    • சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினமான நேற்று தேசிய ஒற்றுமை தினம் கொண்டாடப்பட்டது.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினமான நேற்று தேசிய ஒற்றுமை தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி சிங்கம்புணரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மினி மராத்தான் நடந்தது. வட்டாட்சியர் சாந்தி முன்னிலை வகித்தார். தலைமையாசிரியை கலாநிதி தலைமை தாங்கினார். உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர். அதேபோல் சிங்கம்புணரி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழியை வட்டாட்சியர் சாந்தி தலைமையில் அலுவலக பணியாளர்கள் எடுத்துக்கொண்டனர். இதில் அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×