search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாரத்தான் போட்டி நாளைக்குள் பதிவு செய்ய அழைப்பு
    X

    மாரத்தான் போட்டி நாளைக்குள் பதிவு செய்ய அழைப்பு

    • நிதி திரட்ட வருகிற 8-ந்தேதி திருப்பூரில் பல்லாயிரம் பேர் பங்கேற்கும் வகையில் வாக்கத்தான், மாரத்தான் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • அதிகாலை 5:30 மணிக்கு வாக்கத்தான் மற்றும் 6 மணிக்கு மாரத்தான் ஆகியன நடைபெறுகிறது.

    திருப்பூர்:

    கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் புற்று நோய் சிகிச்சைக்கான அதி நவீன மையம் அமைக்கப்படவுள்ளது. இது 60 கோடி ரூபாய் மதிப்பில் நமக்கு நாமே திட்டத்தில் பொதுமக்கள் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படுகிறது.இதற்காக நிதி திரட்ட வருகிற 8-ந்தேதி திருப்பூரில் பல்லாயிரம் பேர் பங்கேற்கும் வகையில் வாக்கத்தான், மாரத்தான் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பல்வேறு தரப்பினரும் இதில் கலந்து கொள்ள ஆர்வத்துடன் பதிவு செய்து வருகின்றனர்.வருகிற 3-ந் தேதி வரை ஆன்லைன் வாயிலாகவும், கியூஆர் கோடு மூலமாக, புக் மைஷோ செயலியிலும் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.வாக்கத்தான் - மாரத்தான் நடைபெறும் 8ந் தேதி சிக்கண்ணா கல்லூரி மைதானத்தில் புற்று நோய் விழிப்புணர்வு கண்காட்சி அமைக்கப்படுகிறது. அன்றைய தினம் அதிகாலை 5:30 மணிக்கு வாக்கத்தான் மற்றும் 6 மணிக்கு மாரத்தான் ஆகியன நடைபெறுகிறது.

    Next Story
    ×