என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
உலக இருதய தினத்தையொட்டி மாரத்தான் போட்டி
- உலக இருதய தினத்தை முன்னிட்டு மணப்பாறையில் நடந்த மாரத்தான் போட்டியில் மழலையர் முதல் முதியோர்கள் வரை கலந்து கொண்டனர்
- 21 கிலோ மீட்டர் ஆண்கள் பிரிவில் ஊட்டியைச் சேர்ந்த நிகில் குமார் என்பவர் முதலிடம் பிடித்தார். இதே போல் 10 கிலோ மீட்டர் பெண்கள் பிரிவில் மனப்பாறையை சேர்ந்த யுவா முதலிடம் பிடித்தார்
திருச்சி:
இயங்க மறுக்கம் இதயத்திற்கு உற்சாகம் தருவதே ஓட்டமும், நடைபயிற்சியும் தான். மனித உடலை சீராக வைத்து கொள்வதற்கு உடற்பயிற்சி நல்துணையாக இருக்கும் என்று அனைவரும் கூறி வரும் நிலையில் மழலைகள் முதல் முதியவர்கள் வரை கலந்து கொண்டு ஓடி அசத்திய மராத்தான் போட்டி அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உலக இருதய தினத்தை முன்னிட்டு சிந்துஜா மருத்துவ மனை மற்றும் தியாகேசர் ஆலை முன்னாள் மாணவர்கள் சார்பில் "மணவை மராத்தான்" என்ற தலைப்பில் மராத்தான் போட்டி பள்ளியின் தலைமை ஆசிரியர் அருளரசன், செயலாளர் அசோக்குமார், ஆலை பொது மேலாளர் சதீஸ் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது.
ஆண்களுக்கு 21 கிலோ மீட்டரும், பெண்களுக்கு 10 கிலோ மீட்டரும் ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியே 5, 3 கிலோ மீட்டர் ஓட்டமும் நடைபெற்றது. டாக்டர் கலையரசன் மற்றும் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் போட்டியை தொடங்கி வைத்தனர்.
21 கிலோ மீட்டர் ஆண்கள் பிரிவில் ஊட்டியைச் சேர்ந்த நிகில் குமார் என்பவர் முதலிடம் பிடித்தார். இதே போல் 10 கிலோ மீட்டர் பெண்கள் பிரிவில் மனப்பாறையை சேர்ந்த யுவா முதலிடம் பிடித்தார்.
5 கிலோ மீட்டர் ஆண்கள் பிரிவில் பொள்ளாச்சியை சேர்ந்த கனிராஜா என்பவரும், பெண்கள் பிரிவில் மணப்பாறை ஏ.பி.ஜே. விளையாட்டு அகாடமியை சேர்ந்த கனிஷா என்பவரும், 3 கிலோ மீட்டர் ஆண்கள் பிரிவில் நத்தம் பகுதியை சேர்ந்த ராம்பிரதி,
பெண்கள் பிரிவில் மணப்பாறை ஏ.பி.ஜே. விளையாட்டு அகாடமியை சேர்ந்த சாதனா பாரதி ஆகியோர் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றனர். ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
ஒவ்வொரு பிரிவாக நடைபெற்ற போட்டியில் மழலைகளுக்கு 500 மீட்டர் ஓட்டம் நடைபெற்றது. இதில் குழந்தைகள் கலந்து கொண்டு போட்டி போட்டு ஓடியது அனைவரின் கவனங்களையும் வெகுவாக ஈர்த்தது.
இந்த மராத்தான் போட்டியை தொடங்கி வைத்த போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் தங்கள் குழுவினருடன் 21 கிலோமீட்டர் முழுமையாக ஓடி ஓட்டத்தை நிறைவு செய்தார். தொழிலதிபர் காந்திராஜன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த மராத்தான் போட்டியில் சுமார் நான்காயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஓடிய போது வழிநொடுகிளும் கிராம மக்கள் சாலை ஓரங்களில் நின்று அனைவரையும் கைத்தட்டி உற்சாகமூட்டினார்.
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஆணழகன்கள் மேடையில் அனைவகுத்து நின்று தங்களின் கட்டலகை காண்பித்தனர். மழலைகள் முதல் முதியவர்கள் வரை கலந்து கொண்ட பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற மராத்தான் போட்டி மக்களின் கவனங்களை வெகுவாக இருப்பதுடன் பாராட்டையும் பெற்றது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்