search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கட்டுரை"

    • பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை போட்டி, பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டது.
    • இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    தேனி:

    தேனி தி.மு.க. வடக்கு மாவட்ட மாணவர் அணி சார்பில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாநில அளவிலான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு மற்றும் கட்டுரை போட்டி தேனி அருகே உள்ள வீரபா ண்டியில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மாநில மாணவரணி துணை செயலாளர்கள் மதளை செந்தில்குமார், கோகுல் ஆகியோர் தலைமை தாங்கினர். பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணகுமார், தேனி தெற்கு ஒன்றிய செயலாளர் ரத்தின சபாபதி, தேனி வடக்கு ஒன்றிய செயலாளர் சக்கரவர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேனி வடக்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் ஸ்டீபன் வரவேற்றார். தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்செல்வன் போட்டியை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பொன். முத்துராமலிங்கம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியில் வீரபாண்டி பேரூராட்சி தலைவர் கீதா சசி உள்பட தி.மு.க. நிர்வாகிகள், மாணவரணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் போது நீட் விலக்கு நம் இலக்கு என்ற தலைப்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. அப்போது பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் நீட் விலக்கு கோரும் தபால் அட்டையை ஜனாதிபதிக்கு கடிதம் வழியாக அனுப்ப கையெழுத்து அட்டைகள் சேகரிக்கப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை போட்டியில் கலைஞர் பெற்று தந்த உரிமைகள், மாணவர் நலனில் கலைஞர் மற்றும் பேச்சு போட்டியில் கலைஞர் காத்த மனிதநேயம், கலைஞர் ஆட்சியில் கல்வி புரட்சி, ஏழையின் சிரிப்பில் இறைவனை கண்ட கலைஞர், பெரியார் அண்ணா வழியில் கலைஞர் என்ற தலைப்பில் போட்டிகள் நடத்தப்பட்டது.

    அதேபோல கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரை போட்டியில் வள்ளுவம் போற்றிய கலைஞர், திராவிடத்தின் எழுச்சி கலைஞர் மற்றும் பேச்சு போட்டியில் இந்திய ஜனநாயகத்தில் கலைஞர் பங்கு, நவீன தமிழ்நாட்டின் சிற்பி கலைஞர், மகளிர் மாண்பு காத்த கலைஞர், கலைஞரும் சுயமரியாதையும் என்ற தலைப்புகளில் நடத்தப்பட்டது.

    இந்த போட்டிகளுக்கு நடுவர்களாக தலைமை ஆசிரியர் இளம்பரிதி, பட்டதாரி ஆசிரியர் மணிமேகலை, முதுகலை ஆசிரியர்கள் முத்துக்குமார், செல்வம் ஆகியோர் செயல்பட்டனர். இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முடிவில் வீரபாண்டி பேரூர் தி.மு.க. செயலாளர் செல்வராஜ் நன்றி கூறினார்.

    • பேரணிக்கு துறை நிலைய அலுவலர் ஜோதி தலைமை வகித்தார்.
    • தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டது.

    சீர்காழி:

    சீர்காழி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    பேரணியில் பெஸ்ட் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். பேரணிக்கு துறை நிலைய அலுவலர் ஜோதி தலைமை வகித்தார்.

    கல்லூரி நிர்வாக குழு துணை தலைவர் விசாகர், நிதி செயலாளர் ராஜ்கமல் , கல்லூரி முதல்வர் அருள் செல்வன், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் முத்து குமாரசாமி, சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தொடர்ந்து, தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டது.

    • சர்வதேச தரத்தில் 100 கட்டுரைகள் எதிர்வரும் டிசம்பரில் உள்ளீடு செய்யப்படும்.
    • அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 28-ந் தேதி மாநாடு நடத்தப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக அறிவியல் தமிழ் மற்றும் தமிழ்வளர்ச்சித்துறையும் தமிழ் விக்கிப்பீடியாவும் இணைந்து கல்வியாளர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி ஒருநாள் பயிலரங்கு நடைபெற்றது.

    தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறைப் பேராசிரியர் முனைவர் இந்து வரவேற்றார்.

    வளர்தமிழ்ப்புல முதன்மையர் குறிஞ்சிவேந்தன் முன்னிலை வகித்தார்.

    இந்த பயிலரங்கை துணைவேந்தர் திருவள்ளுவன் தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசியதாவது;-

    விக்கிப்பீடியா என்னும் இணையப்பக்கத்தில் பொதிந்துள்ள தமிழ்க் கருத்து கருவூலங்களை இன்றைக்கு உலகின் எந்த மூலையில் வாழும் தமிழரும் வாசித்தறியும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இருபதாண்டுகளுக்கு முன்புவரை இத்தகைய வசதிகள் இல்லாத நாட்களில், ஒரு சிறு தகவலுக்காகக் கூட நூலகங்களைத் தேடி ஓடிக் கொண்டிருந்தோம். ஆனால் இன்றைக்கு உள்ளங்கையில் தகவல்கள் வந்து அமரும் சூழலை விக்கிப்பீடியா தமிழ்ப்பக்கம் உருவாக்கியுள்ளது.

    நாம் இத்தனை முன்னேற்றங்களைக் கொண்டிருந்தாலும், விக்கிப்பீடியாவின் ஆங்கிலப்பக்கத்துக்கு இணையாக, தமிழையும் கொண்டுச் செல்ல வேண்டிய கடமை உள்ளது.

    அதனை மேம்படுத்தும் வகையில், தமிழ்ப்பல்கலைக்கழக ஆய்வாளர்களைக் கொண்டு.

    தமிழில் இதுவரை வெளிவராத தகவல்களை மையப்படுத்தி, சர்வதேசத் தரத்தில் 100 கட்டுரைகள் எதிர்வரும் டிசம்பரில் உள்ளீடு செய்யப்படும்.

    விக்கிப்பீடியா தமிழ்த்தளத்தை வலிமையுடன் கட்டமைக்கும் வகையில், முதலாவது உலகத் தமிழ் விக்கிப்பீடியா மாநாட்டினை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 28-ந் தேதி தமிழ்ப் பல்கலைக்கழக அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை ஆகியவை இணைந்து தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக, அறிவியல் தமிழ் விக்கிப்பீடியா நிர்வாகப் பொறுப்பாளர் மூர்த்தி நோக்கவுரையையும், அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறைத் தலைவரும் பதிவாளருமான பேராசிரியர் தியாகராஜன் வாழ்த்துரையும் வழங்கினர்.

    இப்பயிலரங்கில் தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, நாமக்கல் மற்றும் கர்நாடக மாநில மைசூர் ஆகிய இடங்களில் உள்ள நிறுவனங்களில் இருந்து வந்திருந்த 80 கல்வியாளர்கள் மற்றும் 20 மாணவர்கள் உள்ளிட்டோருக்கு விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் உள்ளீடு செய்தல், புதிய தலைப்புகளில் வெளிவராக தரவுகளைச் சேர்த்தல் ஆகியவை குறித்துப் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைப் பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அலுவலர் முருகன் செய்திருந்தார்.

    விக்கிப்பீடியா சார்பில் பயிலரங்கினை முனைவர் மாரியப்பன் ஒருங்கிணைத்தார்.

    நிகழ்ச்சியின் நன்றியுரையை விக்கிப்பீடியா குழுமத்தைச் சேர்ந்த ஸ்ரீ பாலசுப்ரமணியன் கூறினார். 

    • ஆண்டு தோறும் மாவட்ட, மாநில அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
    • மாணவ, மாணவிகளுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் வருகிற 24-ந் தேதி நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நடைபெற உள்ளது.

    நாமக்கல்:

    பள்ளி, கல்லூரி மாண வர்களிடையே பேச்சாற்ற லையும், படைப்பாற்ற லையும் வளர்க்கும் நோக்கத்தில் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டு தோறும் மாவட்ட, மாநில அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    அதன்படி, நாமக்கல் மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 2022 - 2023-ம் ஆண்டுக்கான, மாவட்ட அளவில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் வருகிற 24-ந் தேதி நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நடைபெற உள்ளது.

    இப்போட்டிகளில், நாமக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம். ஒவ்வொரு கல்லூரியிலிருந்தும் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் போட்டிக்கு ஒருவர் வீதம் 3 மாணவர்கள் மட்டும் கலந்து கொள்ளலாம். போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களை அந்தந்த கல்லூரி முதல்வரே தேர்ந்தெடுத்து அனுப்ப வேண்டும்.

    இப்போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெறும் கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.10 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.7 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.5 ஆயிரம் வீதம் வழங்கப்படும். போட்டிக ளில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ மாணவி கள், அந்தந்த கல்லூரி முதல்வரிடமிருந்து உரிய படிவத்தை பெற்று நிறைவு செய்து போட்டி தொடங்கும் முன்பு தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரிடம் வழங்குதல் வேண்டும். மேலும் விவ ரங்களுக்கு நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலு வலக வளாகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் அலுவல கத்தை தொடர்பு கொள்ள லாம் என்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளார்.

    • மாணவா்களின் செயல்பாடுகளை அதிகரிக்க வேண்டுமென அரசு அறிவித்துள்ளது.
    • போட்டிக்கான ஏற்பாடுகளை பள்ளிக் கல்வித் துறை ஆய்வாளா் ரவி செய்திருந்தாா்.

    திருப்பூர் :

    தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் புத்தக கல்வியோடு சிறந்த பண்புகளையும், சமூக சிந்தனையை மேம்படுத்தவும் இணை செயல்பாடு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. நடப்பு கல்வியாண்டில் மன்றங்களை மீண்டும் புதுப்பித்து மாணவா்களின் செயல்பாடுகளை அதிகரிக்க வேண்டுமென அரசு அறிவித்துள்ளது.

    இதன்படி திருப்பூா் மாவட்ட அளவிலான 6 முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கான கட்டுரை, பேச்சுப் போட்டி ஜெய்வாபாய் மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தப் போட்டிகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் திருவளா்செல்வி தொடங்கிவைத்தாா்.

    பேச்சுப் போட்டியில் 50 மாணவ, மாணவிகள், கட்டுரைப் போட்டியில் 50 மாணவ, மாணவிகள் என மொத்தம் 100 மாணவா்கள் பங்கேற்றனா். பேச்சுப் போட்டியில் முதலிடம் பிடிக்கும் மாணவா், மாணவி, கட்டுரைப் போட்டியில் முதலிடம் பிடிக்கும் மாணவா், மாணவி என மொத்தம் 4 போ் மாநில அளவிலான போட்டிக்குத் தோ்வு செய்யப்பட உள்ளனா்.

    இதில் இலக்கிய மன்ற ஒருங்கிணைப்பாளா்கள் செங்கப்பள்ளி தலைமை ஆசிரியா் உதயகுமாா், பிச்சம்பாளையம் தலைமை ஆசிரியா் லட்சுமிபதி ஆகியோா் கலந்து கொண்டனா். போட்டிக்கான ஏற்பாடுகளை பள்ளிக் கல்வித் துறை ஆய்வாளா் ரவி செய்திருந்தாா்.

    • தஞ்சாவூர் பள்ளியை சேர்ந்த ஜூனியர் ரெட் கிராஸ் மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டிகள் நடைபெற்றது.
    • சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்து மேற்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சந்திரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் பள்ளி கல்வித்துறை ஜூனியர் ரெட் கிராஸ் சார்பில் தஞ்சை அரசர் மேல்நிலைப் பள்ளியில் ஜெனிவா ஒப்பந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

    இந்த விழாவை தஞ்சை மாவட்ட கல்வி அலுவலர் குழந்தைராஜன் தொடங்கி வைத்தார். ரெட் கிராஸ் நிறுவனர் படத்தை அரசர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வேலாயுதம் திறந்து வைத்தார்.

    தஞ்சை சுழற்சங்கம் கிரானரி செயலர் ராமமூர்த்தி, தலைவர் ஆல்பர்ட், கொடையாளர் வேலுசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    இவ்விழாவில் தஞ்சாவூர் பள்ளியை சேர்ந்த ஜூனியர் ரெட் கிராஸ் மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகள் நடைபெற்றது.

    பள்ளிகளில் சிறப்பாக ஜே.ஆர்.சி. செயல்பாடுகளை செய்த ஊராட்சி நடுநிலைப்பள்ளி கூத்தூர் தமிழ்மாறன், வளம்பகுடி பாலகிருஷ்ணன், செம்மங்குடி ராணி, திருப்பழனம் உக்கடை அம்மாள் உயர்நிலைப்பள்ளி லதா, அருள்நெறிஉயர்நிலை ப்பள்ளி முருகன் ஆகியோருக்கு சிறந்த கவுன்சிலர் விருதை மாவட்ட கல்வி அலுவலர் குழந்தைராஜன் வழங்கினார்.

    முன்னதாக இணை கன்வீனர் பாலமுருகன் வரவேற்றார்.

    இதில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி செயலர் ரவிச்சந்திரன், பொருளாளர் முத்துக்குமார், கௌரவ ஆலோசகர் ஜெயக்குமார், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்த மேற்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சந்திரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இணை கன்வீனர்கள் அமர்நாத் ,தமிழன்பன் ஆகியோர் நன்றி கூறினர்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை மாவட்ட கன்வீனர் பிரகதீசு செய்திருந்தார்.

    • கட்டுரை, பேச்சு போட்டிகள் நடத்த ஏற்பாடு.
    • கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தகவல்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    தமிழ்நாடு முதல்-அமைச்சரால், தாய்த் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு எனப் பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18-ந் தேதி 'தமிழ்நாடு நாள் விழா' என கொண்டாடப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    அதனடிப்படையில் தமிழ் வளர்ச்சி இயக்குநரின் கடிதத்தில் மாவட்ட அளவில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்க ஆணை யிடப்பட்டுள்ளது.

    போட்டியின் தலைப்புகளாக தமிழ்நாடு உருவான வரலாறு, மொழிவாரி மாகாணமும் தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டங்களும், தமிழ்நாட்டிற்காக உயிர்கொடுத்த தியாகிகள். பேரறிஞர் அண்ணா பெயர்சூட்டிய தமிழ்நாடு, சங்கரலிங்கனாரின் உயிர் தியாகம். மொழிவாரி மாநிலம் உருவாக்கத் தில் தந்தை பெரியார், மொழிவாரி மாநிலம் உருவாக்கத்தில் மா.பொ.சி. சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்நாடு. எல்லைப்போர்த் தியாகிகள், முத்தமிழறிஞர் கலைஞர் உருவாக்கிய நவீன தமிழ்நாடு ஆகியவை உள்ளது.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசுத் தொகை ரூ.10,000, இரண்டாம் பரிசுத் தொகை ரூ,7000, மூன்றாம் பரிசுத் தொகை ரூ.5000 வழங்கப்படுகிறது. மேலும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படுகிறது.

    பள்ளி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி மற்றும் பேச்சுப்போட்டிகள் கன்னியாகுமரி மாவட்டத்தில் 07-07-2022 அன்று நாகர்கோவில் டதி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது. கட்டுரை போட்டி காலை 10 மணிக்கும், பேச்சுப்போட்டி பகல் 12 மணிக்கும் நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட உள்ளன.
    • ஈரோடு மாவட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் இப்போட்டிகளில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கேட்டுக்கொண்டுள்ளார்.

    ஈரோடு:

    பேரறிஞர் அண்ணா அவர்களால் தாய்த்தமிழ் நாட்டிற்குத் தமிழ்நாடு எனப் பெயர் சூட்டிய நாளான ஜூலை 18-ம் நாள் இனிய தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படும் என தமிழ்நாடு முதல்-அமைச்சரால் அறிவிக்கப்பட்டது.

    இந்த அறிவிப்பின்படி தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட உள்ளன.

    இதன்படி வருகின்ற 18-ந் தேதி தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் வரும் 6-ந் தேதி (புதன்கிழமை) கலைமகள் கல்வி நிலையத்தில் காலை 10 மணி முதல் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

    இப்போட்டிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகள் மட்டும் கலந்து கொள்ளலாம். கலந்து கொள்ள விரும்பும் மாணவ, மாணவிகள் தாங்கள் பயிலும் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் பரிந்துரை கடிதம் பெற்று வர வேண்டும். ஒரு பள்ளியில் இருந்து ஒரு போட்டிக்கு 2 மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

    போட்டிக்கள் தமிழ்நாடு உருவான வரலாறு, மொழிவாரி மாகாணமும் தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டங்களும், தமிழ்நாட்டிற்காக உயிர்கொடுத்த தியாகிகள், பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய தமிழ்நாடு, சங்கரலிங்கனாரின் உயிர்தியாகம், மொழிவாரிமாநிலம் உருவாக்கத்தில் தந்தைபெரியார், மொழிவாரிமாநிலம் உருவாக்கத்தில் மா.பொ.சி, சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்நாடு, எல்லைப்போர்த் தியாகிகள், முத்தமிழறிஞர் கலைஞர் உருவாக்கிய நவீன தமிழ்நாடு என்ற தலைப்புகளில் நடைெபறுகிறது.

    இப்போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.10 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.7 ஆயிரம் மற்றும் 3-ம் பரிசு ரூ.5 ஆயிரம் என்ற வகையில் வழங்கப்பட உள்ளது.

    போட்டிகள் நடத்தப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும், ஈரோடு மாவட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் இப்போட்டிகளில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கேட்டுக்கொண்டுள்ளார்.

    ×