search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜெனிவா ஒப்பந்த நாள் விழா
    X

    ஜெனிவா ஒப்பந்த நாள் விழா நடந்தது.

    ஜெனிவா ஒப்பந்த நாள் விழா

    • தஞ்சாவூர் பள்ளியை சேர்ந்த ஜூனியர் ரெட் கிராஸ் மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டிகள் நடைபெற்றது.
    • சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்து மேற்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சந்திரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் பள்ளி கல்வித்துறை ஜூனியர் ரெட் கிராஸ் சார்பில் தஞ்சை அரசர் மேல்நிலைப் பள்ளியில் ஜெனிவா ஒப்பந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

    இந்த விழாவை தஞ்சை மாவட்ட கல்வி அலுவலர் குழந்தைராஜன் தொடங்கி வைத்தார். ரெட் கிராஸ் நிறுவனர் படத்தை அரசர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வேலாயுதம் திறந்து வைத்தார்.

    தஞ்சை சுழற்சங்கம் கிரானரி செயலர் ராமமூர்த்தி, தலைவர் ஆல்பர்ட், கொடையாளர் வேலுசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    இவ்விழாவில் தஞ்சாவூர் பள்ளியை சேர்ந்த ஜூனியர் ரெட் கிராஸ் மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகள் நடைபெற்றது.

    பள்ளிகளில் சிறப்பாக ஜே.ஆர்.சி. செயல்பாடுகளை செய்த ஊராட்சி நடுநிலைப்பள்ளி கூத்தூர் தமிழ்மாறன், வளம்பகுடி பாலகிருஷ்ணன், செம்மங்குடி ராணி, திருப்பழனம் உக்கடை அம்மாள் உயர்நிலைப்பள்ளி லதா, அருள்நெறிஉயர்நிலை ப்பள்ளி முருகன் ஆகியோருக்கு சிறந்த கவுன்சிலர் விருதை மாவட்ட கல்வி அலுவலர் குழந்தைராஜன் வழங்கினார்.

    முன்னதாக இணை கன்வீனர் பாலமுருகன் வரவேற்றார்.

    இதில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி செயலர் ரவிச்சந்திரன், பொருளாளர் முத்துக்குமார், கௌரவ ஆலோசகர் ஜெயக்குமார், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்த மேற்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சந்திரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இணை கன்வீனர்கள் அமர்நாத் ,தமிழன்பன் ஆகியோர் நன்றி கூறினர்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை மாவட்ட கன்வீனர் பிரகதீசு செய்திருந்தார்.

    Next Story
    ×